Wednesday, April 7, 2010

இலங்கை தேர்தல் பற்றி சுவிசு முருகவேள்

யாழ்தேர்தல் மாவட்டத்தில் கிளிநொச்சித்தொகுதிக்கு .த.தே.கூட்டமைப்பு நிறுத்தியிருக்கும் வேட்பாளர் திரு.சிவஞானம்.சிறிதரன் (அதிபர்.கிளி.மகாவித்தியாலயம்.)அவர்களை தெரிவு செய்வதன் மூலமே பொது எதிரியின் கைக்குள் கிளிநொச்சி பறிக்கப்படுவதை தடுக்கலாம். கிளிநொச்சித் தொகுதி மக்கள் வீட்டுச்சின்னத்திற்கும் முதல் விருப்புவாக்கை 10ஆம் இலக்கத்திற்கும் வழங்கவேண்டும். யாழ்ப்பாணத் தொகுதிகளிலும் வீட்டுச்சின்னத்திற்கும் உங்கள் தொகுதிவேட்பாளருக்கும் கொடுப்பதுடன் இன்னும் இரண்டு விருப்பு வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கலாம் .அதில் ஒன்றை 10ஆம் இலக்கத்திற்கு இடுவதின் மூலம் கிளிநொச்சி பறிபோவதை தடுக்கலாம்.
இதை செய்யாது விடுவோமேயாயின் அங்கே சக்கரைப் பொங்கலுக்குப் பதிலாக அடுத்தபொங்கலுக்கு பால்பொங்கலே(கிரிபத்) பொங்கலாம். இது உண்மை யாழின் உணவுக்களஞ்சியமாக விளங்கிய நிலங்கள் பறிபோவதை நீங்கள் விரும்புகின்றீர்களா? கண்டாவளை பரந்தன் கிளிநொச்சி கரச்சி பளை பூநகரி போன்ற இடங்களில் குடியேறிய மக்கள் எல்லோருக்கும் வாக்காளர் அட்டைகள் முழுமையாகக் கிடைக்கவில்லை ஆகையால் மீதிவாக்குகளையும் அரசஅதிகாரிகளால் வெற்றிலைக்கு கிடைக்க ஏற்பாடாக பிரச்சாரங்கள் நிகழ்ந்துள்ளது. அமைச்சர் டக்ளசு தேவானந்தாவும் ஆனந்தசங்கரி அவர்களும் பழையசெல்வாக்கைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதனால் மிகச்சொற்பமான வாக்குகளும் பிரிக்கப்படவிருப்பதை உணரவேண்டும்.

திரு .சி.சிறிதரன்அவர்களின் தெரிவு தடைப்பட்டு கிளிநொச்சியில் தாம்விரும்பியதைச் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகுவதைத் தடுக்கவேண்டும். இது அந்தமண்ணில் பிறந்ததற்காக கற்ற தற்காக தேசப்பற்றோடு நாம் செய்யவேண்டிய கடமையாகும்.மிகவும் நொந்தமக்கள் மீளவாழ முடியாத மக்களாக இருப்பதால் வெறுப்போடு எமக்கு தேர்தல் வேண்டாம் என்று இருப்பார்கள். அதிகாரத்திற்க்கு பயந்து இருப்பார்கள். இவர்களை வாக்களிக்குமாறு உற்சாகப்படுத்துவது உங்கள்
தொலைபேசிகளும் குறுந்தகவல் செய்திகளுமாகும். வட்டக்கச்சி கிளிநொச்சி பரந்தன் பளை பூநகரி கண்டாவளையைச் சேர்ந்த மக்கள் புலம் பெயர்ந்தநாடுகளிலிருந்து செய்யக்கூடிய முதல்கட்டாய கடமையாகும். அதன்பின் அங்குள்ள மக்களுக்கும் சிறுசிறு உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். இது எமிடையே ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்தும். உங்கள் பிரதிநிதியை நீங்களே தெரிவு செய்யவேண்டும்.
எமக்கெதிரான குடியேற்றத்தை நாமே தடுக்க வேண்டும். சில அரச அதிகாரிகள் தமது உறவினர்கள் மூலம் பூநகரியில் இருக்கின்ற சில ஊர்களிலுள்ள குமுழமுனை விநாசியோடை தட்டுவங்கொட்டித் தமது உறவினர்கள் மூலம் அரசுக்குவாக்களிக்க வேண்டுமென்ற திட்டத்தை முடுக்கியுள்ளார்கள். ஆகையால் கிளிநொச்சித்தொகுதி மக்களும் யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்துத்தொகுதி மக்களும் தமது மூன்று வாக்குகளையும் பயன்படுத்தும் போது கிளிநொச்சித்தொகுதி வேட்பாளரான திரு.சி.சிறிதரனின் 10 ஆம் இலக்கத்தை கவனத்தில் கொள்ளவேண்டிய சாணக்கியம் வேண்டும்.

பொ.முருகவேள் ஆசிரியர் - பூநகரி

No comments:

Post a Comment