Wednesday, March 28, 2012

கொடும் பாதக இலங்கை வீழ்க!

கவிமுரசு. வா.மு.சே.திருவள்ளுவர்

மனித உரிமை மன்றம்
மதிப்பாய் ஐ.நா தன்னில்
துணிந்து அமெரிக்கா நன்றாய்
தூக்கி நிறுத்தும் வாய்ப்பை
இனிது இந்தியா தம்மை
இளித்த வாயோர் நம்மோர்
பணிய இலங்கை இன்றே
பதமாய் இணைந்தே வெல்க!

போரின் நாசச் செய்கை
பொதியாய் மக்கள் கொன்றார்
வேரின் இந்தியா இங்கோ
வேதனை ஏதும் இல்லை
பாரில் நாடுகள் கூடும்
பயங்கரச் செயலை எண்ணி
பாரே கண்டனம் செய்யும்
பாதக இலங்கை வீழ்க!

படுகொலை கண்டும் பதறா
பாவியர் வாழும் மண்ணாய்
கெடுமதி நன்றே செய்த
கேடும் விதைத்த மோசம்
நடுங்கும் கொலைகள் செய்த
நாச இலங்கை நேயம்
விடுக இந்தியத் தாயே
விரைந்து கொலைக்களம் ஏற்று!

மனித நேயம் காக்க
மாண்பாய் தீர்மானம் வெல்க
துணிந்து நாடுகள் ஏற்று
திறமாய் கண்டனம் செய்க!
பிணியாம் இராச பக்சே
பிடறி தெறிக்க ஓட
கனியும் அந்த நாளை
காலம் இணைந்தே வெல்க!

No comments:

Post a Comment