Saturday, March 31, 2012

திருக்குறள் திருத்தொண்டர் அவையம்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(11-3-2012 அனறு சென்னையில் கிராமபந்து கோட்டை சு முத்து நடத்திய திருக்குறள் திருத்தொண்டர் அவையம் நிகழ்ச்சியில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

திருக்குறள் திருத்தொண்டர் அவையம் என்ற அமைப்பை நிறுவி திருகுறளிற்காக அயராது பாடுபடும் கிராமபந்து கோட்டை சு முத்து அவர்களின் அழைப்பை ஏற்று உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி யடைகின்றேன். வருகை தந்திருக்கும் திருக்குறள் ஏழுமலை எனது ஆசான் சேச. இராசகோபாலன் நடைப்பயண அரிமா சி.மா.துரைராசு மற்றும் அனைவருக்கும் என் வணக்கத்தைக் தெருவித்துக் கொள்கிறேன்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் (466)

என்ற வள்ளுவர் வாய்மொழியை பின் பற்றாததாலேயே திருக்குறளே பைபில் குரானைப் போன்று தமிழர்கள் மறையாக நடைமுறைபடுத்த இயலாமல் உள்ளோம்.

பெருமக்களே அதைப் போக்கவே திருக்குறள் திருத்தொண்டர் அவையம் என்ற அமைப்பின் பெயரே மிகச் சிறந்த தொடராக உள்ளது. ஐயா கோட்டை சு முத்து மிகச் சிறந்த திருத்தொண்டர். தன் முதிர்ந்த நிலையிலும் எதையும் எதிர்பராது திருக்குறளிற்காக பாடுபடுகின்றார். இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் திருக்குறள் திருத்தொண்டர்களே. கிறித்தவர்கள் பங்குத்தந்தையாக உலகம் முழுமையும் உள்ளனர். மாவட்டம் வட்டம் என அனைத்துப் பகுதியிலும் முறையாக விவிலியத்தைப் பரப்புகின்றனர். அதைப் போன்று உலகம் முழுமையும் உள்ள திருக்குறள் திருத்தொண்டர்கள் ஒருங்கிணைந்து ஒரே சிந்த்னையாக திருக்குறளை பரப்பும் வழியைக் காணவேண்டும்.அதற்கு சரியான காலகட்டம் இதுவே.

செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்
செயற்கரிய செய்கலா தார் (26)

என்ற வள்ளுவப்பெருமானின் குறளிற்கேற்ப குறளிற்கே பெருமுயறசி கொண்டு உலகம் முழுமையும் பாடுபடுகின்றனர்.

அவ்வழியில் அமெரிக்காவில் வாழும் இராம் மோகன் அவர்கள் திருக்குறள் பதிப்பு 2000ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். மிகச்சிறந்த பதிப்பு பைபிளைப் போன்று வெளியிட்டுள்ளார். திருக்குறள் மூலம், உரை, ஆங்கில ஆக்கம், ஆங்கில் மொழியாக்கம், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் படங்கள் என உலகத் தரத்தில் வெளியிட்டுள்ளார்.. 1820 பக்கங்கள் கொண்ட தொகுப்பாகும். அப்பெருமகனும் அதற்கு துணைநின்ற அனைவரும் திருக்குறள் திருத்தொண்டர்களே.

மலேசியத்திருநாட்டில் ஐயன் திருவள்ளுவர் சிலையை நிறுவி திருமறை மாநாட்டை நடத்தி 1200 பக்க உலகளாவிய அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரை மலரை வெளியிட்ட முனைவர் பெரு.அ. தமிழ்மணி மிகச் சிறந்த திருக்குறள் திருத்தொண்டர். நான் மாநாட்டின் செயலராகப் பணியாற்றினேன். திருவள்ளுவர் சிலையை கொடை வழங்கியவர் செவாலியர் வி.சி சந்தோசம்.தமிழகத்திலிருந்து 160 பெருமக்கள் பங்கேற்றனர். பெருமக்கள் அனைவரும் திருத்தொண்டர்களே.

மலேசியத்திருநாட்டில் பத்துமலையைச் சுற்றி திருக்குறளை சலவைக் கல்லில் பதிய வைத்துள்ளனர். அந்நாட்டில் தமிழ் தமிழர் மேன்மையைப் போற்றும் டத்தொசிறி சாமி வேலு, கூட்டுறவுக்கழக டான்சிறி சோம சுந்தரம், மற்றும் அனைத்துப் பெருமக்களும் திருக்குறள் திருத் தொண்டர்களே. திருக்குறள் தொண்டர் மலேசியக் கவிஞர் செங்குட்டுவன் திருக்குறள் பாடல் திரட்டு என்ற பெரும் நூலை வெளியிட்டுள்ளார்

சுவிட்டசர்லாந்தில் பெர்ன் நகரில் வள்ளுவன் பாடசாலை என்ற அமைப்பை நிறுவி திருவள்ளுவர் ஆண்டை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார் முருகவேள் நந்தினி இணையர். அவருக்கு துணையாக உள்ளார் கருணாகரமூர்த்தி மற்றும் பெருமக்கள்.சுவிட்சர்லாந்தில் திருக்குறள் தொண்டாற்றும் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

மியான்மரில் யான் சென்றிருந்த போது தட்டோன் நகரில் மாரிமுத்து அவர்கள் முயற்சியால் கட்டிய வள்ளுவர் கோட்டத்தைக் கண்டேன். இப்போது அவர் காலமாகிவிட்டார். கோட்டத்தில் திருவள்ளுவர் சிலை முன் திருக்குறள் ஓதி வரவேற்றார் ஓதுவார் குருசாமி. .தட்டோனில் வள்ளுவர் கோட்டம் கட்ட முனைந்த பெருமக்கள், இன்றும் காத்து வரும் மியான்மார் தமிழர்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (50)

என்றா குறள் வழி வாழ்ந்த பெருமகன் அமரர் வேலா. அரசாமாணிக்கம் குறாளயம் என்ற அமைப்பின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறந்த திருக்குறள் தொண்டாற்றியவர் திருக்குறள் வேலா அரசமாணிக்கம். குறளியம் என்ற இதழ் மூலமும் பல்வேறு மாநாடுகளையும் கூட்டங்களையும் நடத்தி பெருந்தொண்டாறியவர். ஒரு பெரும் பொருட்செலவில் அவரோடு இணந்து தொண்டாற்றிய அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

திருகுறளிற்காகவே தம் வாழ்நாளை ஒப்புவித்து வாரந்தோறும் வள்ளுவர் கோட்டத்தில் கூட்டங்கள் மாநாடுகள் நடத்தி தம் இல்லத்தில் திருவள்ளுவர் திருக்கோயில் கட்டி பெருந் தொண்டாற்றும் குறள்ஞானி மோகன்ராசு அவர்கள் அவரோடு இணைந்து தொண்டாற்றும் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

தமிழ் அறிஞர் பெருமக்களை அழைத்துச் சென்று அலகாபாத்தில் செவாலியர் வி.சி ச்ந்தோசம் அருமைத்தந்தையார் அவர்களோடு திருவள்ளுவர் சிலையை நிறுவிய பவள விழாக் காணும் தமிழாகர் ஆறு அழகப்பன் அவருக்குத் துணைநின்ற அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

தம் இல்லத்தின் முன் சிலையை நிறுவி தனி ஒரு பெண்ணாக சாதனை படைக்கும் செல்லம்மாள், ஆண்டுதோரும் திருவள்ளுவராண்டை கொண்டாடும் இலலிதாசுந்தரம், மார்கழி மாதாம் திருக்குறள் வீதி உலா வரும் வரலட்சுமி போன்ற மகளிர் பெருமக்கள் அவருக்குத் துணைநிற்கும் பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

அமிரிக்கா வாசிங்டனில் திருவள்ளுவர் சிலையை நிறுவி பெருந்தொண்டாற்றிய பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

கனடாவில் திருக்குறள் மாநாடு நடத்தி சிறப்புக் கண்ட செல்லையா வேலுபிள்ளை மற்றும் ஆதரவீந்த அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

அந்தமானில் தமிழர் சங்கத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவி அருந் தொண்டாற்றும் பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

என் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள். எனக்குத் திருவள்ளுவர் என்ற பெயரை வைத்து உங்கள் முன்நிற்கிறேன், தம் வாழ்நாள் திருக்குறள் நெறி வாழ்ந்து சாதனை படைத்து திருக்குறள் செம்மொழிஉரை தந்த பெருமகன் அவரைச் சார்ந்து உலகளாவிய பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

பெருமக்களே யான் அமெர்க்காவில் நீயூயார்க் ஃகட்சன் நதியில் சுதந்திரதேவி சிலையைக் காணும்போது என் நினைவில் வந்தது முத்தமிழறிஞர் கலைஞர் முக்கடல் சங்கமிக்கும் குமரியில் நிறுவிய ஐயன் திருவள்ளுவர் சிலையே. வள்ளுவர்கோட்டம் குறளோவியம் என் வள்ளுவத் தொண்டுக்கு சிகரம் கண்டபெருமகன் கலைஞர். பெங்களூரில் மூடியே வைத்திருந்த திருவள்ளுவர் சிலையை திறந்த சாதனைத் தலைவர்.

பெருமக்களே யான் சிந்தையில் தோன்றிய பெருமக்களையெல்லாம் கூறெனேன். தற்போது திருக்குறள் சிந்தனை உலகம் முழுமையும ஆட்கொள்வதை உணரலாம். யான் முன்னமே குறிப்பிட்டது போன்று அனைவரும் இணைந்து திருக்குறள் மாவாட்டங்களாக வட்டங்களாக பிரித்து அனைவரும் பங்குத் தந்தைகள் விவிலியத்தை பர்ப்புவதைப் போல் பரப்பவேண்டும் என்ற வேணாவாவைக் கூறி விடைபெறுகிறேன்.

No comments:

Post a Comment