Sunday, August 8, 2010

வாழும் வள்ளுவம் இதழ் திறனாய்வு


வாழும் வள்ளுவம் இதழ் திறனாய்வு
கவிமுரசு.வா.மு.சே.திருவள்ளுவர்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 7-8-2010 அன்று அருள்மாமுனிவர் கு.மோகன்ராசு அவர்கள் நடத்திய மநாட்டில் வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை

திருக்குறள் திருத்தொண்டர்கள் வரலாற்று மூன்றாவது மாநாடு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுவது பொன்னொழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும். திருக்குறள் பணிக்காகவே தன்னை ஒப்புவித்துள்ள அருள்மாமுனிவர் மோகன்ராசு அவர்களின் பணி இந் நூற்றாண்டின் செம்மாந்த பணியாகும். அவரின் பணிபற்றி தொண்டாற்றும் அனைத்து உள்ளங்களையும் நெஞ்சார[ப் பொற்றுகிறேன்.

அருள்மாமுனிவர் அவர்கள் ஆன்மீகத்தைப் பர்ப்பும் அருட்தொண்டர்கள் போன்றே அனைவரையும் இணைத்து திருக்குறள் அருட் தொண்டர்ளை உருவாக்கி செயலாற்றும் திருக்குறள் தொண்டு தமிழர்களை தலை நிமிரச் செய்யும் பணியாகும்.

திருக்குறள் அறக்கட்டளைகள் 8 தொடங்கியுள்ளார்கள்.திருக்குறள் முனைவர் பட்ட படிப்பைத் தொடங்கியுள்ளார்கள்.திருக்குறள் 6 அமர்வுகளை இன்றும் நாளையும் நடத்துகிறார்கள். இறுதியாக திருக்குறள் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.இம்மாநாடு திருக்குறளை தேசிய நூலாக நாம் வேண்டுவதற்கு அரும்பெரும் செயலாக இம்மாநாடு அமைகிறது.

உலகளாவிய பல்வேறு மாநாடுகளில் பங்கேற்றிருக்கிறேன். மலேசியாவில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டிற்கு இந்தியச் செயலாளராகப் பணியாற்றி திருவள்ளுவரின் திருஉருவச்சிலையை வி.சி.சந்தோசப் பெருமகனார் வழங்க இசுலாமிய நாட்டில் மலேசியத் தலைவர் டத்தோசிறி சாமிவேலு அவர்கள் திறந்துவைத்தார்கள்.தமிழ் மறவர் பெ.அ. தமிழ்மணி அம் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தினார். ஆயிரம் பக்க அளவில் உலகத் தரத்தில் மலர் வெளியிடப்பட்டது 160 பெருமக்களை தமிழகத்திலிருந்து அழைத்துச் சென்றோம்.

மியான்மாரில் தட்டோன் நகரில் உள்ள வள்ளூவள்ளுவர் கோட்டத்தில் பங்கேற்று உரையாற்றியுள்ளேன்.தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கிடையில் துரத்தப் பட்டாலும் திருக்குறள் உணர்வு மங்காத் தமிழர்கள் திருககுறள் பணியை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். கோட்டம் உருவாக்கிய மாரிமுத்து காலமாகிவிட்டார். ஆனால் திருக்குறள் ஓதுவார் குருசாமி,சேகர் போன்ற உணர்வாளர்கள் இன்றும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள்

சுவிட்ச்ர்லாந்து நாட்டின் பெர்ன் நகரில் ஈழத் தமிழர் முருகவேள் வள்ளுவன் பாடசாலை என்ற பெயரில் தமிழ்ப் பள்ளி நடத்திவருகிறார். திருவள்ளுவர் ஆண்டை ஆண்டுதோரும் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.பாடசாலையில் பங்கேற்று உரையாற்றியுள்ளேன்.
கனடா நாட்டில் அறிஞர் செல்லையா போன்றோர் டொரண்டோ நகரில் திருக்குறள் மாடாட்டை மிகச் சிறப்பாக நடத்தி அருமைத் தந்தயார் பெருங்கவிக்கோவை சிறப்பு அழைப்பாளராக அழைத்துள்ளனர்.

யான் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இயக்குநராகப் பொறுப்பேற்று நடத்தியுள்ள 6 மாநாடுகளிலும் திருக்குறள் அமர்வுகளும் மலரில் கட்டுரைகளும் முதன்மையாக இடம் பெறும்.உலகளாவிய பெருமக்கள் பங்கேற்று கருத்துரை வழ்ங்கியுள்ளனர்.அருமைத் தந்தையார் பெருங்கவிகோ அவ்ர்களின் திருக்குறள் செம்மொழிஉரையை வெளியிட்டு உலகம் முழுமையும் வழங்கி வருகிறோம்.

திருக்குறள் தொண்டின் தொடர் பணியில் இம் மாநாட்டில் பங்கேற்பதையும் பெரும்பேறாகக் கருதுகிறேன், வாழும் வள்ளுவம் இதழை திறனாய்வு செய்வதில் பேருவகை கொள்கின்றேன்.
ஒரு இயக்கமாயின் ஓர் இதழ் அவசியமான ஒன்றாகும்.அவசியத்தின் தேவையை உணர்ந்த ஐயா மோகன்ராசு அவர்கள் வாழும் வள்ளுவம் என்ற இதழைத் தொடங்கி இரண்டாம் ஆண்டாக மிகப் பொழிவோடும் தெளிவோடும் நடத்திவருவது அவரது செயற்பாட்டின் மகுடமாகும்.

அட்டைப்படத்துடன் நூறு பக்கங்களைக் கொண்ட அறிவுச் சுரங்கம் இவ்விதழ்.அட்டையின் முன் திருவள்ளுவர் திருக்கோயிலில் உள்ள திருச்சிலையின் வடிவம் பல்வண்ண வடிவில் அச்சாகியுள்ளது. இரண்டாம் பக்கம் நீண்ட காலம் மூடிவைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர்சிலையை வாழும் வள்ளுவ வாழ்வறிஞர் தமிழினத் தலைவர் மாண்பமை முதல்வர் அவர்களின் பெருமுயற்சியால் திறக்கப்பட்ட பெங்களூரு சிலையும், மயிலை சிலையும் அச்சிடப்பட்டுள்ளது. முறையே மூன்று நான்கு பக்கங்களில் திருக்குறள் நெறிபரப்பும் அறிஞர் பெருமக்கள் இரா.இராதாகிருட்டிணன், அ.ம.வேணுகோபாலனார் படங்கள் எழில்பொங்க அச்சிடப் பட்டுள்ளது.

பக்கம்1,2:
தலையங்கப் பகுதியில் ஆசிரியரின் கருத்து சைவ, சமன, பெளத்த, இசுலாமிய, கிருத்தவப் பெருமக்களாகிய தமிழர்கள் அனைவரும் திருவள்ளுவரை வணங்காமல் திருக்குறளை வாழ்வியலாக்க முடியாது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறார்.


பக்கம் 3-12:
வள்ளுவர் கோட்டத்தை வாழ்வியல் கோட்டமாக்க எனும் தலைப்பில் 1.திருக்குறள் ஆய்வகம், திருக்குறள் ஆய்வரங்கம்,3.திருக்குறள் நூலகம் 4.திருக்குறல் வாழ்வியலாக்க அரங்குகள் என தலைப்பிட்டு செறிவான திட்டங்களை பதிவு செய்துள்ளார்.

பக்கம்13-17:
திருவள்ளுவர் யார் எவர் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு அவரவர் போக்கிற்கு கூறியுள்ளதை மறுத்து திருக்குறளில் உள்ள கருத்துக்களை வாழ்வியலாக்காமையை குறிபிடப்பட்டுள்ளது.

பக்கம் 18-24:
திருக்குறள் பேரொளி தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் திருக்குறள்பணிகளை நெஞ்சாரப் போற்றுகிறார். இன்னும் செய்யவேண்டிய திட்டங்களை நடுநிலையுடன் கூறுகிறார்.

பக்கம் 25-30:
பெங்களூர் திருக்குறள் தொண்டர் அ.ம.வேணுகோபாலன் பற்றி திருக்குறள் வே அரசு அவர்கள் திருக்குறள் வாழ்க்கைப்பயணத்தை மிகச் சிறப்பாக தொகுத்துத் தந்துள்ளார்,பெங்களூருவில் திருக்குறள் பரப்புரை மாநாடு,இதழ், ஆசிரியப் பணி நிலையப் பணி என அமரர் வேணுகோபலனாரின் பணிகளை படம்பிடித்துள்ளார்.

பக்கம் 31-38:
வரலாறுபடைத்த திருக்குறள் ஆய்வாளர் எனும் தலைப்பில் திருக்குறள் சாந்தி மோகன்ராசு அவர்கள் உலகத்திருக்குறள் மையத்தின் தோற்றம் வளர்ச்சியை பட்டியலிட்டுள்ளார். திருக்குறள் மக்கள் உரை வெளியான வரலாற்றையும் பேராசிரியர் முனைவர் மோகன்ராசு அவரிகளின் ஈகத்தையும் பதிவு செய்துள்ளார்.`தற்போது மக்கள் உரை 20 பதிப்புகள் கண்டு 1 இலக்கத்தைத் தாண்டி வெற்றிகொடி நாட்டியுள் சாதனையை குறிப்பிட்டுள்ளார்.

பக்கம் 39-44:
திருக்குறள் மூதறிஞர் இரா.இராதாகிருட்டிணனின் பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கவிஞராகவும், பேச்சாளராகவும், கிராமம்தோரும் திருக்குறள் பரப்புனராகவும் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்த செயல்வீர்ராககவும் வாழும் வள்ளுவம் பதிவு செய்துள்ளது.

பக்கம் 45-47:
திருக்குறள் வினா விடைப் போட்டி வெளியிட்டு திருக்குறள் குறித்த பல செய்திளை வாழும் வள்ளுவம் வழங்குகிறது.தந்தை பெரியாருக்கு திருக்குறள் மீது பற்று வர துணைநின்றவர் பா.வே.மாணிக்கனார் என்றும்.வள்ளுவர் கோட்டம் உருவாக்கம் பெற முத்தமிழறிஞர் கலைஞர் நெஞ்சில் தோன்றிய நாள்1974 ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் சிலை திறப்புவிழாவில் என பல் நுட்பமான செய்திகளைக் காண முடிகிறது.

பக்கம் 49-57:
வள்ளுவர் கோட்டத்தில் பங்கேற்ற உயர்வாய்வரங்குகள் 5-3-2005 முதல் 10-2-2007 நூறு அரங்குகளில் உரையாற்றியோர் தலைப்பு விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பக்கம் 58-79:
திருக்குறள் அனுக்கக் கட்டுரையில் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் என்ற தலைபில் பார்ப்பான் என்ற சொல் வந்திருக்கும் குறளும் பல்வேறு உரையாசிரியர்களின் விளக்கமும் சங்க இலக்கியங்களில் காணப்பபெறும் பதிவுகளும் ஆழ்ந்த ஆய்வின் திறத்தைப் .புலப்படுத்துகிறது.

பக்கம் 80:
பன்னெடுங்காலம் ஐயாவுடன் இணந்து தொண்டாற்றும் திருக்குறள் தூதர் கவிஞர் சோ.பத்மநாபனின் வள்ளுவத்தை வாழ்விக்க வா எனும் இசைப்பாடல் தேனாக இனிக்கிறது.”உள்ளத்தூய்மை இல்லாத உரைஒன்றும் உதவாது” என்ற வரி சாட்டை அடியாக உள்ளது.

பக்கம் 80-89:
பேராசிரியரின் உலக ஒருமைப்பாட்டுச் சிந்தனையில் தற்கால சமுகத்திற்குத் தேவையான் சிந்தனைப் பிழிவுகள் உள்ளன.
”மக்களைப் பிரிப்பவன் கட்வுளேயானாலும் கயவந்தான்”
“சாதியைத் தொட்டுப்பார்த்தால் நீதி பட்டுப்போகும்”
“மண்ணில் மதிக்கவேண்டியது மத தர்மங்களல்ல மனிததர்மங்கள்”
“எல்லைக்கோடுகள் எழுத்துப் படிவுகள் ஆகலாம் எண்ணப்பதிவுகள் ஆகக்கூடாது”
அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் உல்கச் செம்மொழி மாநாட்டுக் கவியரங்கில்
”எல்லைக்கோடுகள் இல்லாத – உலகம்
இனியதோர் உலகம் செய்வோம்” என்ற வரிகளை சிந்திக்கவைக்கிறது.

பக்கம் 90-96:
வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற 2010 ஆண்டிற்கான பொதுக்குழுக் கூட்டச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

பக்கம் 95-9:
அருள் மாமுனிவர் பங்கேற்ற நிகழ்ச்சி விபரங்கள் தரப்பட்டுள்ளன.

கருத்துகள்:
தமிழகத்துப் பெருமக்களைமட்டும் குறிப்பிடாமால் மாதம் ஒரு வெளிநாட்டில் திருக்குறள் தொண்டு செய்வோரை பற்றி எழுதுதல்.
திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட அந்தந்த பதிவுகளை இதழில் பதிவு செய்தல்.
தாளின் தரத்தைக் குறைத்து மலிவுப் பதிப்பாக அனைவும் வாங்கிப் படிக்கும் வண்ணம் விலையை குறைத்து வெளீயிடல்

வாழும் வள்ளுவம் தமிழர்க்கு வழிகாட்டி

வாழும் வள்ளுவம் திருக்குறள் தேனூற்று

வாழும் வள்ளுவம் திருக்குறள் தொண்டர், அறிஞர், தூதர்களின் பாசறை.

No comments:

Post a Comment