Saturday, July 17, 2010

உயிர்த்தமிழ் முதல்வா வாழி


உயிர்த்தமிழ் முதல்வா வாழி
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

எத்திக்கும் தமிழர் கூட்டம்
ஏற்றமாய் செம்மொழி வெற்றி
தித்திக்கும் அறிஞர் ஆற்றல்
தேர்ந்திட்ட மாநாட்டு வெற்றி
பத்தியம் காப்பது போல்
பார்புகழ் தமிழர் கூட்டி
வித்தக மாநாடு கண்ட
வெற்றியின் முதல்வா வாழ்க


சாத்திரம் சடங்கை ஓட்டி
சரித்திர நம்மின் பாங்கை
சூத்திரம் காண்பது போல்
சுழழ் கண்காட்சி காட்டி
தீத்திற கவிஞர் சான்றோர்
தீந்தமிழ் முழக்கம் காண
காத்த நம்தமிழர் ஒன்றாய்
கூட்டிய மாண்பே வாழி

பழந்தமிழ் சான்றோர் போற்றி
புத்தொளிர் ஆய்வு மன்றம்
களம்பல தலத்தில் கண்ட
கவின்மிகு அறிஞர் கூட்டி
உலகலாம் போற்றும் வண்ணம்
உன்னதத் தமிழின் மாட்சி
பலமெலாம் ஒன்றாய்க் காட்டும்
பைந்தமிழ் வேந்தே வாழி

கட்சியின் வாசம் இல்லை
கவின்மிகு தமிழர் ஒன்றாய்
கூட்டிய தாயின் பாசம்
குழுமிய அரங்கில் கண்டோம்
நாட்டமாய் தமிழில் கற்றோர்
நல்கிடும் அரசின் வேலை
ஊட்டமாய் நூறு கோடி
ஊட்டிய தலைவா வாழி

“கட்டளை இடுக என்றே
கவின்மிகு அறிஞர் மக்காள்”
தட்டுக கதவை என்றே
தூய்மையர் ஏசுவைப் போல்
மொட்டது மலரும் பூவாய்
மொய்த்துள யாங்கள் எல்லாம்
உட்பூசல் கலைந்த எங்கள்
உயிர்த்தமிழ் அறிஞா வாழி

No comments:

Post a Comment