Tuesday, April 15, 2025

 

 

அருளாளர் இராம வீரப்பன் முதலாமாண்டு நினைவு நாளும் நடைப்பயண அரிமா நெல்லை இராமச்சந்திரன் நினைவேந்தலும்

 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 ஆசிரியர் தமிழ்ப்பணி

 இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

 சிலம்பொலி தமிழ்த் தரணி மன்றம் சார்பில் தம்பி கவிஞர் வீரமுத்து நன்றி உணர்ச்சியின் சிகரமாக ஐயா இராம் வீரப்பன் முதலாமாண்டு நினைவு நாளும் நடைப்பயண அரிமா நெல்லை இராமச்சந்திரன் நினைவேந்தலும் நட த்துவது மிகச் சிறந்த தொண்டறப் பணியாகும்..

நடைப்பயண் அரிமா நெல்லை இராமச்சந்திரன் மிகச்சிறந்த தலையாய கவிஞர்.கவிதைகள் உவமைக் கவிஞர் சுரதாவி கவிதைகள் போன்றே இருக்கும். சுரதா அவர்களுக்கு துணையாக தொண்டறம புரிந்தவர். அவர் கவிதைகளில் சுரதாவின் தாக்கத்தைக் காணலாம்.

1993ஆம் ஆண்டு குமரி சென்னை நடைப்பயணத்தில் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கொள்கைக்காக நடந்த நற்றமிழ் நாயகர் நம் இரமச்சந்திரன். தமிழா சாதியை மற தமிழி நினை தமிழா மத்த்தை மற தமிழை நினை தமிழா கட்சியை மற தமிழை நினை என்று முழக்கமிட்டு நடந்த நடைப்பயண அரிமா கவிஞர் இரமாச் சந்திரன்.. நாங்கள் கன்னியா குமரியிலிருந்து நட்ந்து கொண்டிருந்தபோது நாங்கள் எங்கு வந்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் காலையில் அரசுப்  பேருந்தில் நாங்கள் நட்ந்து கொண்டிருக்கும்போது ஒரு அம்மையார் இறங்கினார். நெல்லை இராமச்சந்திரனை வினவி அழுதார் அந்த அம்மையார். அவர் நெல்லை இராமச்சந்திரனின் துணைவியார். என்ன பதற்றம் என் வினவியபோது நடைப்ப்யணத்தில் ஒருவர் இறந்துவிடார் என்ற செய்தி செய்தித் தாளிள் வெளியானதைக் கூறி பதற்றத்துடன்  என்னவோ ஏதோ என்று பதறி வந்தேன் என்றார்.பின் அம்மையாரை அமைதிப்படுத்தி அனுப்பிவைத்தோம். தன் குடும்பம் அனைத்தையும் துறந்து தமிழுக்காக நடந்துவந்தவர் நம் கவிஞர் இராமச்ச்ந்திரன். ஒவ்வொறு நாளும் தந்தையார் பெருங்கவிக்கோவும்  கவிஞர் நெல்லையாறும் பாடல்கள் போட்டி போட்டுக் கொண்டு பாடுவர். அனைவரும் கவிதை பாடும் நிகழ்வாக தொடர்ந்து தமிக்கவிதை நடைப்யணத்தில் வலம் வரும்..ஒரு மகத்துவமான கவிஞனை இன்று இழ்ந்து நிற்கிறோம்.. எங்கள் சேது அறக்கட்டளையின் விருது பெற்ற பெருமைக்குரிய கவிஞர் நெல்லை இராமச் சந்திரன்.

 கவிஞர் நெல்லை இராமச்ச்ந்திர்ன் கவிப்பேர ரசு வைரமுத்துவின் பேரன்பைப் பெற்றவர். வெற்றித் தமிழர் பேரவையின் விருதுபெற்ற கவிஞர்.

கவிஞர் மறைவை தம்பி ஆண்டவர் தொலைபேசியில் கூற்யவுடன் நெஞ்சம் நெகிழ்ந்தேன். அவரது இறுதி நிகழ்வில் பங்கேற்று அவர் உடலை நால்வரில் ஒருவராகத் தாங்கி ஊர்தியில் ஏற்றி பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் இரங்களைப் பதிவிட்டேன். நெல்லையார் புகழ் ஓங்குக.

இன்று தமிழகத்தின் திரைப்பட அரசியல் ஆளுமை அருளாளர் இராம் வீரப்பன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தலும் நடைபெறுகிறது. 98 ஆண்டுகள் வாழ்ந்த மனிதநேயச் செம்மல் தலைவர் இராம வீரப்பன். நடைப்பயண சென்னை சைதாப்பேட்டை தேரடித்தெருவில் நடந்த வரவேற்பு விழாவில் செயல லிதா அமைசரவையில் அமைச்சராக இருந்த அருளாளர் பங்கேற்று நடைப்ப்யண் அரிமாக்கள் அனைவருக்கும் பட்டாடை போர்த்தி சிற்ப்பித்தார். அடுத்த நாள் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப் பட்டார். இறுதிக் காலத்தில் கலைஞரின் பேரன்பிற்குரியவராக இருந்தார். பிறந்த நாட்களில் நம்து முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று ஆண்டுதோறும் வாழ்த்திய பெருமைக்குரிய்வர். 2002ஆம் ஆண்டு எனது நெருப்புநதி என்ற நூலை வெளியிட்டு பெருமைசேர்த்த பெருமைக்குரிய பண்பாளர் இராம்வீரப்பன். தமிழக அரசியலில் பலரை வளர்த்த பேரன்புச் சிகரம்

 

அருளாளர் அவர்கள். கம்பன் கழகத் தலைவராகப் பொறுப்பேற்று சென்னையில் உலகெங்கும் வாழும் தமிழ் அறிஞர்களை வரவழைது கம்பன் விழா நட த்திய கம்பன் கவி நயசெல்வர். நம் ஆழ்வார் மைய தலைவர் செகத்ரட்சகன் பெறாப் பிள்ளை. அருளாளரை போற்றிப் புகழ்ந்த பெருமகன்.கம்பன் விழாவிற்கு மலேசியாவிலிருந்து மேனாள் அமைசர் ம.இ.க தலைவர் ட த்தோ சரவணன் இலங்கையிலிருந்து கம்பவாரிதி செயராசு ஆகியோரை சிறப்பித்த பெருமகன்.. கம்பன் விழாக்களில் அவர் திருக் கரங்களால கம்பன் விருதுபெறாத பெருமக்கள் இல்லை எனும் அளவிற்கு விருது வழங்கியவர். தம் பிறந்த நாளில் வாழும் வரை தமிழ் சான்றோர்களுக்கு சாதனை விருது வங்கிய சாதனைச் செல்லவர் அருளாளர். அருளாளர் புகழ் ஓங்குக .

 

நம்ஏவுகனைக்க்   கவிஞர் வீரமுத்து அவர்களின் காதல் ஓட்டு போட வா பாடல் கேட்டு மெய்மறந்தென். மிகச் சிறந்த பாடலை இசையோடு தந்துள்ளார், திரைப்பட த்துறையில் முத்திரை வீரமுத்து பதிப்பார் என்பதை பாட்டை கேட்போர் உணர்வர். வாழக வீரமுத்து பணி .

No comments:

Post a Comment