Thursday, December 7, 2023

 

 

புலவர்க்கரசர் பொன்னரசன்  சு சந்திரா இணையரின் திருமணப் பொன்விழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்



புலவர்க்கரசர் பொன்னரசன்  சு சந்திரா இணையரின்திருமணப் பொன்விழா இன்று சிறப்பாக நடைபெறுகிறது. நிகழ்வுக்க்கு இணையர் மக்கள் பொறியாளர் அமுதா நடேசன் வரவேற்புரை வழங்கினார். தம் தந்தை தாயின் சிறப்பகைக் கூறி அனைவரையும் வரவேற்றார். வாழ்த்துகள். அமரிக்காவில் வாழும் மகன் அருளரசு தம் பெற்றோரின் பெருமையையும் அமெரிக்க தமிழகத் தமிழர்களில்  நிலையையும் ஆற்றொழுக்காகப் பேசினார் வாழ்த்துகள். மருத்துவர் செய்கணேசு தம் பெற்றோருக்குத் தெரியாமலேயே இந்த நிகழ்வை நட த்தி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார் சிறப்பு.

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மண்ணுயிர்க் கெல்லாம் இனிது

            என்ற வள்ளுவப் பேராசான் வாக்குப்படி இந்த இணையர் தம்பெருமையையும் காத்து உலகிற்கு நன் மக்களை ஈன்று சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். தங்களின் பலத்த கரவொலிக்கிடையில் பொன்விழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொன்னரசனின் தம்பி இராசேந்திரன் தொடக்கம் முதல் இன்று வரை எம்மையெல்லாம் அழைத்து விழாவை சிறப்பாக நட த்திவருகிறார். இப்படி ஓர் தம்பி பவள விழா நேரத்தில் அமைவது சிறப்பு தம்பி உடையான் படைகஞ்சான் என்பது உண்மை போலும்.  வாழ்த்துகள். அனைவரும் அம்மா சந்திரா அவர்களின் பெருமையைப் பேசினீர்கள் மக்கள் உட்பட பேசினார்கள். யான் புலவர்கரசரின் ஈகத்தை பதிவிட விரும்புகிறேன், எந்த சராசரி மனிதனுக்கு பிள்ளையை முறையாக  வளர்க்கும் பெற்றோரும் பொறாமை வஞசனைஇல்லா உறவுகளும் இருந்தால் இயல்பாக பொன்விழா நட்த்துவார்கள். தங்களைச் சார்ந்த உறவுகள் கூடுவார்கள்.

ஆனார் தெய்வத் தமிழ்ச்சங்கம் மருத்துவர் பாரி தகுதி திவாகர் பொறிஞர் சிறீதார் முனைவர் மல்லிகா எதிரில் அமர்ந்திருக்கும் கவிக்கோ வசந்தராசன் புலவர்குழு முனைவர் சோ. கருப்பாசாமி எண்ணற்ற தமிழ் உறவுகள் கூட முடியுமா. புலவர்க்கரசரின் தமிழ்த்தொண்டிற்காகவே அவருடை உலகளாவிய தமிழ் உரைகளுக்காகவே நாமெல்லம் கூடி வாழ்த்துகிறொம் . பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பிலும்  புலவரின் இளைமைக்க்கால நண்பர் பெரும்புலவர் செந்தமிழ்ச்செழியானார் சார்பிலும் பொன்விழா இணையரை வாழ்த்துகிறேன்

  புலவர்க்கரசர் தம் வாழ்வை தமிழுக்காகா வாழ்ந்து ஆற்றியுள்ள சிறப்பை நம் மருத்துவர் பாரி மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். தமது மருத்துவ்ப் பணிகளுக்கிடையில் எண்ணற்ற் உலகக் குறிப்புகளையெல்லாம் வழங்கி நம்மை சிந்திக்க வைத்துள்ளார். படிக்கும் காலத்திலேயே மாணவர் மன்ற தமிழ்த் தேர்வுகளிலேயெ மிகச் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் வேலை தேடி சென்னை வரும்ப்பொது மாணவர் மன்ற ஆட்ட்சிக்குழு உறுப்பினராக இருந்த புலவர் கோ, வில்வபதி புலவர் தணிகை உலகநாதன் இந்து தியாலசிகள் பள்ளியில் இருந்தபோது இரவது தமிழ்ப்பற்றை அறிந்து இவருக்கு தமிழாசிரியராக நியமித்துள்ளனர். அதே பள்ளியில் தலைமையாசிரியர் வரை சென்று சிறந்த நன்மாணாக்கர்களை உருவாக்கிய பெருமைக்குரிய ஆசிரியப் பெருமகன் தம் துணைவியாரையும் தமிழாசிரியராக உருவாக்கி   அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றியுள்ளனர். இவர் தொடக்க காலத்திலிருந்தே இதழாசிரியர். புன்னகை என்ற இதழை நட த்திய பெருமைக்குரியவர். .

 இலக்கியச் சோலை இதழின் ஆசிரியர் தமிழினியன் தம் இதழில் ஒரு செய்திவெளிய்ட்டுள்ளார். பொன்னரசன் பொங்கல்  மூன்று நாள் பள்ளி வ்டுமுறையில் கர்நாடாககோலர் தங்கவயல் பகுதிக்கு பட்டிமன்றப் பேச்சுக்காக சென்றுள்ளார் இவர் பேச்சின் திறத்தை அறிந்த பேராயக் கட்சியின் வேட்பாளரான புலீந்த்திரன் தம் தேரதல் பரப்புரைக்காக 10 நாள் தங்கி பரப்புரைசெய்யுங்கள்  என வேண்டியுள்ளார். பொன்னரசன் பள்ளி வேலையை எண்ணி சொல்லாமல் இரவோடு இரவாக சென்னை திரும்ப்பிவிட்ட்டார். இவர் மட்டு ம் அன்று பேராயக் கட்ட்சியின் பிடியில் சிக்கியிருந்தால் ஒரு மத்திய மந்திரியாகவே வந்திருப்பார். மிக ஆற்றல் பொறுந்தியவர் நம் புலவர்க்கரசர்.

மின்வாரியத்தின் அதிகாரி சிறீதர் அவர்கள் மிகச் சிறந்த உரையாற்றியுள்ளார். எல்ல நிலைகளிலும்  தமிழ் வரவேண்டும் என்று போராடிகொண்டிருக்கும் வேலையில் தமிழைப் பட்டி மன்றப் பேச்சுகளால். எழுத்துக்களால் தகுதியான் தமிழை மாணவர்களுக்கு ஆசானாக இருந்து கற்பித்தலால் தம் வாழ்நாளை வழங்கிய பொன்விழாக் காணும் இணையரை வாழ்த்தி  மகிழ்கிறேன்.உங்கள் தொண்டு மென்மேலும் தொடரவேண்டும் பாவேந்தர் குடும்ப விளக்கின் பாட்டுபோல் ”அவள் இருக்கிறாள் என்பதே இன்பம் ” என்ற கவிதை வழி நூற்றாண்டு கண்டு  வாழ்க வாழ்க என வாழ்த்தி விடைபெறுகிறேன்.

(26 -11-23 அன்று சென்னையில் புலவர்க்கரசர் பொன்னரசன்  சு சந்திரா இணையரின்திருமணப் பொன்விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

No comments:

Post a Comment