Friday, December 1, 2023

  •  உலக் கவிஞர் தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானார் சென்னையில் நினைவேந்தல்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்




தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானதை நம் சேது பாட்கரா குழுமத்தின் தலைவர் சேதுகுமணன அவர்கள் இந்து நாளிதழில் ஒரு இரங்கல் விளம்பரம் வெளியிட்டிருந்தார். இகேதா அவர்கள் மறைந்தை நன்றி உணர்ச்சியோடு இந்தியத் திருநாட்டில் வெளியிட்டது அவரது நன்றியுணர்ச்சியைக் காட்டுகிறது. பின் தந்தையார் இசுரேல் கவிஞருடன்   இருக்கும் பட த்தை எனக்கு புலனத்தில் அனுப்பி ஐயாவை தேடிக் கொண்டிருக்கிறார்கள் கவிஞர்கள் எனப் பதிவிட்டிருந்தார்.  பின் என்னை தொலைபேசியில் அழைத்தர் குமணன். நான் இகேதா அவர்களுக்கு ஒரு நம் கவிஞர்களை அழைத்து நினைவேந்தல் நட த்த வேண்டுமே என்றேன். நான் நாளை சென்னை வருகிறேன் நட த்திவிடுவோம் என்றார். இன்று நாம் இகேதா நினைவைப் போற்றும் வகையில் கூடியுள்ளோம்.

என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

 செய்நன்றி கொன்ற  மகற்கு

வள்ளுவப் பேராசான் கருத்துப்படி இன்று செய்நன்றியாக உலக் கவிஞருக்கு நினைவேந்தல் நட த்துகிறோம்.

இங்கு நாம் இகேதா என்ற கவிஞரை எண்ணுகிறோம் என்றால் அதற்கு மூல காரணம் கவிதை ஞாரி கிருட்டிணா சீனிவான். தமிழ்க் கவிஞர்களுக்கு உலகப் பார்வையை தொடக்கியவர் கவிதை ஞானி கிருட்டிணா சீனிவாசன். அவர் நட த்திய பொயட்ரி ஆங்கில மாதப் பத்திரிக்கை உலகப் புகழ் பெற்றது தாம் இறக்கும் வரை தொடர்ந்து நட த்தியவர். இகேதா அவர்களின் கவிதைகளை தொடர்ந்து பொயட்ரி ஆங்கில இதழில் வெளியிட்டு இந்திய மக்களுக்கு அறிமுகப் படுத்திய பெருமகன். இகேதாவின் கவிதைகளை மட்டுமே முழு இதழிலும் வெளியிட்டு பெருமை சேர்தவர். த்ந்தையார் பெருங்கவிக்கோவை 5ஆம் உலக க் கவிஞர்கள் மாநாட்டிற்கு அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்ற பெருமை  கவிதைஞானி கிருட்டிணா அவர்களையே சாரும். 1980ஆம் ஆண்டே அமெரிக்க கவிஞர் ரோசுமேரி வில்கின்சன் சான்று வழங்கி அழைத்தமை வரலாற்று நிகழ்வாகும். அந்த மாநாட்டில் 300 கவிஞர்களின் கவிதைகளை கவிதைஞானி மொழிப்யர்க்க நாங்கள் அதை  வெளியிட்டு அதை அமெரிக்கா மாநாட்டில் அறிஞர் அவ்வை நடராசன் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்ட து தமிழ்க் கவிஞர்களின் பெருமைக்குரிய நிகழ்வாகும். 43 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.

குமணன் அவர்கள் சப்பான் மொழி ஆசிரியை கியோமி அவர்களின் எண்ணை கொடுத்டிருந்தார். நான் ஆங்கிலத்தில் பேசினேன் அவர் அழகு தமிழில் பேசினார் நான் அவரிடம் நினைவேந்தல் நிகழ்வில் தமிழில் பேசுங்கள் என்றேன் சிற்ப்பாக தமிழில் பேசினார். அவர் தமிழில் பேசுப்போது அழகாக மிளிர்கிறார்.  

டததைசாகு இகேடாஅ சனாவரி2 1928 ஆம் ஆண்டு  சப்பான் ஓட்டா  டோக்கியோ நக்ரில் எட்டுக்க் குழந்தைகளில் ஐந்தாம் மகனாகப்  பிறந்தார். நவம்பர் 15ஆம் நாள் 2023சின்சுக்கு டோக்கியோ நகரில் 15 நவம்பர் 2023 அன்று இறந்தார். தம் பெற்றோருக்கு  எட்டு மக்களில் ஐந்தாம் மகனாகப் பிறந்தவர். தம் 30ஆம் அகவையில் காச நோயால் பாதிக்கப்பட்டு உயிர் மீண்டு வந்தவர் உல்க நாடுகளின் பல்வேரு சிறப்பு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர் இகேதா. தேசாய் இகேதா புத்த அருள்ஞானி. மனித குல அமைதிக்காகப் பாடுபட்டவர் சோகா அக்காய் அமைப்பின் மூன்றாம் தலைவர். உலக் சோகா அக்காய் அமைப்பி  நிறுவனத் தலைவர்.  1957ஆம் ஆண்டு 50.000 சோக்கா அக்காய்இளைஞர்களைத் திரட்டி மனித குல் அழிவிற்கான 

 அனுஅயுத்தை எதிர்த்துப் போராட்டம் நட த்தியுள்ளார்.தம் 32ஆம் வய்தில் அமைரிக்கா கண்டா பிரேசில் போன்ற நாடுகளுக்கு நிச்சிரன் புத்த மத கொள்கைகளுக்கும் உலக அமைதிக்கும் பயணம் மேற்கொண்டார். இவரது துணைவியார் கோனெக்கோ இகேடா இணையருக்கு மூன்று மக்கள். இவர் புகைப்படம் த த்துவம் கவிதை இசை என அனைத்துத் துறையிலும் நூல்கள் வெளியிட்டுள்ளார்.இகேதா கல்லூரியின் நூலகர் பேசும்போது இகேதாவின் நூல்கள் அனைத்தும் கல்லூரியில் உள்ளதை குறிப்பிட்டார். பேராசிரியர்கள் அனைவரும் இகேதா பற்றி கவிதை தம்ழிலும் ஆங்கிலத்திலுக் பாடினீர்கள். இறுதியாக வள்ளியம்மாள் கல்விக்  குழுமத்தின் தலைவர் குமணன் உரை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கவிதையால் அனைத்தும் முடியும் என்பதை சேது குமணன் சாதித்துள்ளார். 

(உலகக் கவிஞர் தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானார்30 /11/2023 சென்னையில் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

No comments:

Post a Comment