Thursday, September 9, 2010

தடைகள்

சென்னை சாசுத்தா பொறியியல் கல்லூரியில் 9-9-2010அன்று கல்லூரியின் டீன் முனைவர் வைத்தியநாதன் தலைமையில் அரிமா கோசுவாமி முன்னிலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய சிறப்புரை

மனித சமுதாயத்தில் செய்தித் தொடர்புத் தடைகள் ஏராளமாக உள்ளன. தடைகளினாலேயே பல்வேறு வளர்ச்சிகள் தடைபட்டும் நிறகின்றன.மனித சமூகத்தில் வளர்ச்சிக்கான தடைகள் சாதி மதம் இனம் மொழி நாடு உலக மாந்தர்கள் ஒருகுடைக்கீழ் வாழ்வதற்கு தடையாகவே உள்ளது.

உலகின் மாந்தர்கள் வாழ்வதற்கும் மற்றவர்ளை உயர்த்தி தானும் உயரவே பிறப்பெடுக்கிறார்கள். பிறக்கும் குடி, சமூகம், நாடு போன்ற சூழல்களே அவர்களை வழிப்படுத்துகின்றது. பிறகு கல்வி கடமைளை உணர்ந்து தன் நாட்டிற்கும் மனித சமூகத்திற்கும் தொண்டு செய்கிறான்
.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது

என்ற குறள்வழி வழி வழி வரும் மனித சமுகம் தன்னுடைய அறிவால் ஆற்றலால் மனித குல வளர்ச்சிக்கு வித்தாகிறான். அந்த வித்துகள் எல்லாம் விருட்சமாகி உலகின் பல்வேறு துறைகளும் வளர்சியின் சிகரத்தை அடைந்துள்ளன.

இன்று இணைய தளமும், கைப்பேசி, தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்புகள் உலகத்தை நம் கைக்குள் கொண்டு வந்துள்ளது. உலகின் எப்பகுதியில் எது நடந்தாலும் நொடியில் அறியக் கூடியா வாய்ப்பைப் பெற்றுள்ளோம். தற்போது வாழும் தலை முறை தகவல் தொடர்பால் தலைநிமிர்ந்து நிற்கும் தலைமுறை.

சங்க கால புறநாநூற்றுப் புலவன் கனியன் பூங்குன்றனார்

”யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா”

என உலகத்து மக்களையெல்லாம் உறவினர்களாகவே கருதியுள்ளான். மனித குலத்தில் பிறந்தவர்கள் அனைவரும் நம் சுற்றத்தாரே. நாம் காணும் இன்பமும் துன்பமும் அவரவர் செயர்பாட்டு வினைகளே என்று ஆணித்தரமாக எழுதிச் சென்றுள்ளனர். இன்றுள்ள தகவல் தொடர்பையே நன்மைக்குப் பயன்படவேண்டியவற்றை தீய வழிகளிலும் பயன்படுத்துவதை அன்றாடச் செய்திகளில் காண்கிறோம்..

உலகின் வளர்ச்சியும் முன்னோர்களின் கருதுக்களும் கொட்டிக் கிடந்தாலும் மனிதன் பல்வேறு தடைகளுக்கு ஆளாகிறான். பரந்துபட்ட உலகில் வளர்ச்சியையும் இலட்சியத்தையும் நோக்கிச் செல்பவனுக்கு பல்வேறு தடைகள் வரும் அதைத் தகர்த்தெறிந்து செல்பவனே வெற்றியாளனாக வலம் வருவான்.

வளர்ச்சிகு முதல்தடை தன்னம்பிக்கை இன்மையே. என்னால் முடியும் என்ற நம்பிக்கை நமக்குள் வரவேண்டும்.அந்த நம்பிக்கையே அவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.

ஒருசெயலைச் செய்யும் நிறை குறைகளை முற்றும் அறிந்து தொடங்க வேண்டும். தொடங்கியபின் அதன் நிறைவேற்ற செயலாக்கம் காண்பதே சிறந்த வழி என்கிறார் திருவள்ளுவர்.

மிகச்சிறந்த அறிவாளியாக இருப்பார்கள் மனித உறவில் இறுக்கமாகக் காணப்படுவார்கள். வளர்சிக்குப் இது ஒரு பெரும் தடை. சக மனிதர்களை புன்முறுவல் பூக்கக் கூட மறுப்பது பெரும்தடை. குழு உணர்வோடு செயல்பட இவர்களால் இயலாது புண்ணகை என்பது மனிதர்களால் மட்டுமே உரிய ஒன்று அது மனித உறவைப் பேணும் மந்திரம். இந்தியன் வானுர்தில் விற்பனை மேலாளரகப் பணியாற்றிய சந்திரன் என்பவர் என் கண்முன் வருகிறார் 30 ஆண்டுகளுக்கு முனபு என் தந்தை பெருங்கவிக்கோ அவர்கட்கு உலகப்பயணத்திற்கு பயணச்சீட்டு வாங்க சந்தித்தோம்.சந்திரன் முகம் சிரித்தால் மல்லிகை மலர்தோட்டம் போன்றே இருக்கும் அவர் அமரராகிவிட்டாலும் இன்றும் என் நினைவில் நிற்கிறார்.

தான் எண்ணியதைத் சொல்லத் தயங்குதல் ஒரு பெரும் தடை. நாம் கூறும் கருத்து தவறாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் சொல்வதற்கு அச்சப்படக் கூடாது. தாங்கள் எண்ணியிருக்கும் கருத்தைக் கூறாமல் இருந்தால் தவறான கருத்தே தங்களிடம் நிலைகொண்டுவிடும்.

நல்ல செயல்களைச் செய்யும் மனிதர்களைப் பாராட்டாமல் இருப்பது ஒரு தடை. நம்மில் ஒருவர் சிறந்த செயலாக்கம் காணும் போது அவரை மனம் திறந்து பாராட்டவேண்டும். பாராட்டே அவர் மேலும் துறையில் மேம்பட மாமருந்தாக இருக்கும். துறை மேம்படும்போது வளர்ச்சியைக் காணலாம்.

நாம் செய்த செயல்களை விளக்கக் கூடிய ஆற்றலின்மை பெருந்தடையாகும். அதற்கு மொழியும் பெருந்தடையாக இருக்கும். தமிழ் மக்கள் கூடியுள்ள பகுதியில் ஆங்கிலத்தில் பேசுவதும்.ஆங்கிலத்தில் பேசவேண்டிய இடத்தில் மறுப்பதும் பெரும் தடையாகும். உலகின் தொழில் வளர்ச்சியில் தலைசிறந்து விளங்கும் சப்பான் சப்பானிய மொழியையே அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்துகின்றனர். உலகின் எம் மொழியில் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தலூம் அடுத்த சில மணிநேரங்களில் சப்பானிய மொழியில் அரசே சப்பானிய மொழியில் மொழிபெயர்த்து சப்பானிய மக்களுக்கு வழங்குகிறது.வளரும் நாடுகளில் மொழி ஒரு தடைக்கல்லாகும்.

நம்மைப் போன்ற நாடுகளில் ஏழ்மையும் மிகப்பெரும் தடைக்கல்லாகும். இந்தியாவில் மிகச் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணாக்கர்கள் எல்லாம் உயர் கல்வி பயில இயாலாமல் சிதைந்து போகின்றனர். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ஏழ்மை மாணவர்கள் அறியாத காரணமும் ஒன்றாகும்.ஏழ்மை மாணவர்களுக்குள்ள உரிமைகள் தகுந்த காலத்தில் அறியாமையும் தடையே.

மிகப் பெரும் தகவல் புரட்சி வந்துள்ள காலத்தில் அதைப்பற்றி அறியா மை மிகப் பெரும் தடைக்கல்லாகும். அறியாமை என்ற பேதமை நம்மைப் பின்னோக்கித் தள்ளும்.
யாம் எந்த கருத்து குறித்து பேசுகின்றோமே அது குறித்தே பேச வேண்டும் அதைவிடுத்து தேவையற்றவற்றை பேசுவதும் ஓரு தடைக்கல்லாகும்.

சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்.

என திருவள்ளுவர் பயனுடைய சொல்லைப் பேசாமை மடமை எனக் கூறியுள்ளார்.

மாணவச் செல்வங்களே தடைகளையெல்லாம் தகர்த்து நம் நாட்டின் தளபதிகளாக உயர்ந்து உங்களை பல்வேறு இன்னல்களில் பெரும் பொருட்செலவில் படிக்கவைக்கும் பெற்றோர்க்கும், நயமான கல்வி வழங்கும் கல்லூரிக்கும், நம் நாட்டுக்கும் பெருமையை நிலை நாட்டுங்கள்.

No comments:

Post a Comment