Monday, January 1, 2024

 உலகக் கவிஞர் பேரவையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு

 தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

உலக க் கவிஞர் பேரவையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நடப்பது பொறுத்தமான ஒன்று.தலைவர்  கலைஞரும் உவமைக் கவிஞரும் இணைபிரியாத நண்பர்கள். தலைவர் கலைஞர் நன்றி உணர்ச்சியின் வடிவம். சுரதா வாழும் காலத்திலேயே அவர் நிகழ்வுகளில் பங்கேற்று புகழ்ந்து பெருமைப்ப்டுத்தியுள்ளார். சுரதா இறந்தபின் அவர் சிலையை அசோக் நகரில் திறந்து கவிஞருக்கு நிலையான புகழைத் தந்துள்ளார். அந்த்ச் சிலையை திறப்பதற்கு சுரதாகல்லாடன் எடுத்த முயற்சிகள் அளப்பரியது தந்தைக்க்கு செய்யவேண்டிய்  பணியை சுரதா கல்லாடன் ஆற்றியுள்ளார் வாழ்த்துகள். வாழும்காலத்தில் சுரதா இணையரை அன்போடு கவனித்த இராசேசுவரி கல்லாடன் இணையரை நெஞ்சார்ப் போற்றுகிறேன்.

புதுவை தமிழ்ச்ச்ங்கத் தலைவர் வி.முத்து தலைசி’றந்த தமிழ்ப் புரவலர்.தமிழ் நிகழ்வுகள் அனைத்திலும் சிறப்பாக பங்கேற்று சிறப்பிக்கிறார். இன்று கலைஞர் நூற்ராண்டு விழாவில் தலைமையேற்று  கவிஞர் இராசேசுவரிக்கு வழங்கிய விருது தகுதியான் விருது, நூறு எழுத்தாளர் பெருமக்கள் விருது பெறுகிறீர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். விழாக் குழுவினரை நெஞ்சாரப் போற்றுகிறேன். 

கலைஞரின் நூற்றாண்டு விழா என்பது கலைஞருக்குப் பெருமையல்ல தமிழினத்திற்கு கிடைக்கும்  பெருமை. அருமைக் கவிஞர் கடவூர் மணிமாறன் அவர்கள் சுரதா 100 நூறு கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து நூலை தொகுத்துள்ளார். அந்த நூலை புதுவைத் தமிழ்சங்கத்  தலைவர் முத்து வெளியிட நான் பெற்றுக் கொண்ட தை பெரும் பேறாகவே கருதுகிறேன். கடவூர் மணிமாறன் சுரதா நூற்றாண்டுச் சிறந்த பதிவாக கொண்டு வந்துள்ளார்.

தலைவர் கலைஞர் அவர்களை ஆண்டுதோறும் பலமுறை நானும் தந்தையாரும் சென்று காண்பது வழக்க்கம். பலமுறை தலைவரிடம் உரூபா 50 உரூபா 10 நோட்டுகள் பெற்றுள்ளேன். தலைவர் கலைஞரைப் போல் எளிமையாக அனைவரையும் கண்டு அளவளாவும் அரசியல் தலைவரை காண்பது அரிது. ஒருமுறை தமிழ்க் கவிஞர்கள் அனைவரையும்  ப்ன்னாட்டுத் தமுழுறவு மன்றம் சார்பில் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில்  அழைத்துச் சென்றோம், அப்பொது இங்கே உள்ள கவிஞர் சிந்தைவாசன் செங்கரும்பு ஆசிரியர் கவிஞர் தாமரைப் பூவண்ணன் ஆகியோர் இங்கு விருது பெறுகின்றனர். விருது பெறும்  பெருமக்கள் அனைவரும் கலைஞரின் ஆற்றலை பெருமையை  உலகம்  பின்பற்றச் செய்யவேண்டும். 

தலைவர் கலைஞர் முதல்வர் பொறுப்பில் இருக்கும்போது  நானும் தந்தையும் பொங்கல் திருநாளன்று  தலைவர் கலைஞர அவர்களைக் காணச் சென்றோம். அப்போது செம்மொழி வாரியப் பெருமக்கள்  வருகை தந்திருந்தனர். அறிஞர் பெருமக்கள் பலர் சூழ்ந்திருந்தனர். செம்மொழி பொறுப்பு அதிகாரி செமொழி இராமசாமி  அந்த ஆண்டு செயல் சாதனை அட்ட்டவனைகளை காண்பித்தார். அதைக் கண்டு தம ஆட்சியில்  தமிழைச் செம்மொழியாக்கி செம்மொழி வாரியச் சாதனைகளை பெருமைதமடைந்து முதல்வர் கூறிய வார்த்தைகள் என் செவியிலும் நெஞ்சிலும் நிலையாக நிற்கிறது. தலைவர் சம்ற்கிருத த்திற்கு தனித்துவம் என்று ஓன்று கிடையாது அனைத்தும் நம்மிடம்மிருந்து எடுத்து  தன்வயமாக்கி கொண்டார்கள் அவற்றையெல்லாம் நம் ம்ழொயின் சிறப்பு என்பதை உறுதிபட நிலைநாட்ட வேண்டும் எஎன்று கூறினாரா. செம்மொழியின் அடையாளமாக வாழ்ந்த  தலைவர் கலைஞர் அவர்கள்  நூற்றாண்டு விழா உலகம் ம்ழுமையும் கொண்டாடி வருகிறார்கள்  தலைவரின் சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் பணியை உலகத் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும்

அண்மையில் யான் திருவாரூர் சென்றிருந்தேன் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்ட த்தைக் காணவேண்டும்  திருவாரூர் மாவட்ட  தமிழ்ப்பணி அன்பர் மடப்புரம் தங்கவேல் அவர்களைக் தொடர்புகொண்டு கூறினேன் உடனெ அவர் வருகை தந்து காட்டூர் கோட்டம் அழைத்துச் சென்றார். கலைஞரின் வாழ்க்கையை மிகச் சிறப்பாக அங்கு கலையம்சத்தோடு நிறுவியுள்ளனர். கல்லக்குடி போராட்டம்  அனைத்து கலைஞரின் போராட்டங்களையும் நிலையாக கலை ஒவியமாக வைத்துள்ள்னர். தயாளு அம்மையார் அறக்கட்டளை வழி கலைஞர் குடும்பம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர் அனைவரும் காணவேண்டும். நம் முதல்வர் இளைஞர்கள் தந்தை பெரியார் பேர றிஞர் அண்ணா தலைவர் கலைஞர்  தட த்தைப் பின்ற்றும் திராவிடப் பல்கலைக்கழகமாக உருவாக்கியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அரும் திராவிடப் பணியை போற்றுவோம்.

தமிழக அரசின் அகவைமுதிர்ந்த  தமிழறிஞர்கள் உதவி பெறுவோர் சங்கத்தின் பொறுப்பாளர் துரைமுருகன் பம்பரமாக சுழன்று பணியாற்றும் முனைவர்  அருணா தொல்காப்பியன் ஆகியோரின்   பேருழைப்பை இங்கு காண்கிறேன்.  இணைந்து பணியாற்றும் அனைத்த்ப் பெருமக்களுக்கும் வாழ்த்துகள். 

கலைஞர் வ்ழியில் தமிழ் தமிழரை உயர்த்துவோம் ஓங்குக கலைஞர் புகழ். 

No comments:

Post a Comment