Sunday, August 13, 2023

 பன்னாட்டுத் தமிழுறவு மன்ற தூத்துக்குடி கிளையும் மற்ற தமிழ் அமைப்புகளும் இணைந்து கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற தூத்துக்குடி கிளையும் மற்ற தமிழ் அமைப்புகளும் இணைந்து கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நத்துவது என்பது தமிழ் சார்ந்த பெருமக்கள் எந்த அளவுக்கு பற்றாக உள்ளோம் எனபதை இந்நிகழ்வு மூலம் அறியலாம்.

  கலைஞரின் திருமகள் போராளி கனிமொழி அவர்கள் இன்று மணிப்பூர் அவலத்திற்கு அனைத்துக் கட்சி குழுவோடு திமுக சார்பில் மணிப்பூர் சென்றுள்ளதால் அம்மையார் இங்கு வர இயலவில்லை. செயலலிதாவின் ஆணவத்தில் தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது சிறைவாயிலில் கலைஞர் அவர்கள் கைலியோடு உட்கார்ந்து போராட்டம் நடத்தினார் அப்போது கவிஞர் கனிமொழி உடன் தலைவரோடு நின்றதைக் கண்ட கண்கள் இன்றும் நெஞ்சோடு நிலைத்து உள்ளது. பாராளுமன்றத்தில் தமிழர் சிந்தனைகளையும் தமிழின் சிறப்புகளையும் மகளிர் பாதுகாப்புக்காக் வழங்கும் முழக்கம் இந்தியாவே உற்று நோக்குகிறது. கனிமொழி மிகச் சிறந்த கவிஞர்.தலைவர் கலைஞர் போன்று தமிழ் இலக்கியவாதியாக வாழ்பவர். தொண்டறத் தலைவியை போற்றி மகிழ்கிறேன்.


 தமிழ் இலக்கிய  இந்நிகழ்வுக்கு ஆதரவு நல்கிய அமைச்சர் கீத சீவன் அவர்களையும் தூத்துக்குடி மாநராட்சி தந்தை செகன் பெரியசாமி அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். ஐயாபெரியசாமி  அவர்கள் கலைஞரின்  முரட்டுப் பக்தர் . நெருக்கடி காலத்தில் கழகத்தை கட்டிக்காத்த பெருமகன்.அவர் உருவாக்கிய தொண்டர்கள் இன்று தூத்துக்குடியின் கழகத் தூண்களாக உள்ளீர்கள் உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள். 

மதுரையிலிலும் தூத்துக்குடியிலும்  ஒரே நாளில் ஒரே நேரத்தில்  நிகழ்வு இருந்தாலும் இன்று பொன்விழாக் காணும் தமிழ்ப்பணிக்கு  மதுரையில் பேராசிரியர் இரா. மோகன் நிரமலா அற்க்கட்டளை விருதைப் பெற்று விரைந்து இங்கு வந்துள்ளேன் என்றால்  தலைவர் கலைஞர் தமிழக் இந்தியா உலகம் எங்கு தொண்டாற்றிய தீரர்  அல்லவா நாம் தலைவரின் தட த்திலே பயணிக்கும் பாங்குதான்.

வருகை த்ந்துள்ள குறள்ஞானி மோகன்ராசு கலைஞரின் அருமை பெருமைகளை சிறப்பாகப் பேசிய நெல்லை செயந்தா அவர்கட்கும் மற்றும் பங்கேற்றுள்ள கருஞசட்டை வீர ரகள் தி.மு. க மகளிர் அணிபெருமக்கள் அனைவருக்கும்  என் வணக்கத்தை உரித்தாக்குகிறேன். கலைஞரின் நூற்றாண்டை சிறப்பக கொண்டாட பெருமுய்றசி மேற்கொண்ட தமிழ்ப்பணிச்செம்மல் முத்துநகர் அன்பழகன் அவர்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். கலைஞர் மேல் தீராப் பற்றுகொண்டவர். பல்வேறு இலக்கியப் பணிகளை தூத்துக்குடி நகரில் ஆற்றிவரும் அரும்பணி யாம் அறிந்ததே. கலைஞர் காலத்தில் சட்டன்றத் தேர்தலின்போது ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு தி.மு.கவில் விண்ணப்பம் செய்வார். நான் பலமுறை கேட்டுள்ளேன். அவருடைய பொருளாதார் நிலை நான் அறிவேன். ஏன் ;பணச்சுமையில் விண்ணப்பிக்கிகிறீர்கள் எனக் கடிந்துகொள்வேன். அதற்கு அவர் கூறிய் சொற்கள் என்னை நெகிழச் செய்த து. யான் வேட்பாளர் தேர்வின்போது கலைஞரைக் காணக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறதே ஐயா எனக் கூறினார். கலைஞர் மீது தீராப் பற்றுக் கொண்ட அன்பழகன் நூற்றாண்டு விழா நடத்துகிறார்.

கலஞரின் கவிதைகள் குறித்துப் பேசப் பணித்துள்ளார்கள். இந்த கவிதை மழை நூலைப் பாருங்கள்1110 பங்கள் கொண்ட  நூல் .210 தலைப்புகளில் பாடியுள்ளார் தலைவர். 1938ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரை எழுதிய பாக்கள். தொடாத துறையே இல்லை எனும் அளவிற்கு அனைத்துத் தலைப்புகளிலும் பாடியுள்ளார் கலைஞர். தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையேறு பாடிய கவிய்ரங்கங்களில் தந்தையார் பெருங்கவிக்கோ கவிஞர் முடியரசன் கவிக்கோ அப்துல் இரகுமான் கவிப்பேர ரசு வைரமுத்து  பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் கவிவேந்தர் மேத்தா எண்ணற்ற கவிஞர்கள் பங்கேற்றுப் பாடியுள்ளனர். 

1938ஆம் ஆண்டு இந்திப் போராட்ட த்தின்போது கலைஞர் கவிதை அனைவரையும் சுண்டி இழுக்கிறார்.

வாருங்கள் எல்லோரும் இந்திப்                                 போருக்குச் சென்றிடுவோம் வந்திருக்கும      

இந்திப்பேயை  விரட்டித் திரும்பிடுவோம்  

ஓடிவந்த இந்திப்பெண்ணே கேள் நீ

தேடிவந்த கோழையுள்ள நாடிதல்லவே

 வீரத் தமிழ் கொஞ்சும் நாட்டிலே நாங்கள்

சாரமிலாச் சொற்கள்  ஏற்கமாட்டோ ஏட்டிலே.

 இந்திப் பேயை இன்று வரை தமிழ் நாட்டில் அண்ட விடாது செய்த பெருமைக்குரிய தலைவர் கலைஞர். 

சென்னை கலைவாணர் அரங்கில்15-9-1975 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்  கவியரங்கில் தாம் கண்ட அண்ணனை போற்றிப் புகழ்கிறார். 

அண்ணனை ஒரு துறவி என்பேன்

அவர் வாயெல்லம் காவி தரித்திருந்தார்        

அண்ணனை ஒரு தெய்வம் என்பேன்                                                 

 அவருக்கு துரோகிகளும் தூபதீபம் காட்டுகின்றனர்                                    அண்ணனை ஒரு கண்ணன் என்பேன்                                                        

   அவரைப் பூதகியும் தூக்கி பால் கொடுக்கின்றாள் 

அரியாசனமாய் அவர் நம் இதயத்தை ஆக்கிக் கொண்டார்                                        அரியாசங்கள் அவரை ஆரம்பத்தில்                                                                

புரியாமல் எதிர்த்த துண்டு                                                                   

 சரியாசனச் சமதர்ம ம் போதிக்க வந்த                                                 

   தென்னாட்டு மார்க்ஸ் என்று                                                                  

    பின்னால்தான் தெளிவடைந்தார்  

1975 ஆம் ஆண்டு அண்ணா குண நலன்களையும் அவர்தம் பெருமையையும் படம் பிடித்துக் காட்டுகிறார். நாம் இப்போது இந்தக் 


கவிதைகளைப் படித்தாலும்இளைய தலைமுறையினர் அண்ணாவின் பெருமையை உணரலாம். 

தாம் வாழும் காலம வரை உலகில் நடந்த அத்தனை நிகழ்வுக்கும் தம் கருத்தை வழங்கிய காலக் கரூவூலம் தலைவர் கலைஞர்.  1980 ஆம் ஆண்டு புதுவை வானொலி நிலையத்தார் விடுதலை நாள் கவியரங்கம் கலைஞர் தலைமையில் நட த்தினர். அங்கு அவர் பாடிய கவிதைகள் என்றும் நிலைத்து நிற்குக்

சரித்திரத்துப் பொன்னெழுத்தில்                                            

  சுதந்திரத்தை மின்னவிட்டுத்                                                                 

தரித்திரத்தைத் தலைமீது தாங்கி நிற்கும்                                           

  தாயகத்தை வாழ்த்துகின்றேன்

           இப்படி பாடிய கலைஞர் தான் நாட்டின் தரித்திரத்தை எல்லாம் மாற்றிய பெருமகைகுரிய பெருமகன். பிச்சைச்கார ர் மறுவாழ்வுத் திட்டம், குடிசை மாற்றுவாரியம், கைரிக்சா ஒழிப்புத் திட்டம் என்ற எண்ணற்ற திட்டங்களை தீட்டிய பெருமைகுரியவர்.

இறுதியில்                                                                                                

     மாறிவரும் பூமியிலே                                                                        

போலிகள் அசலாகும்                                                                                              

    பித்தளை பொன்னாகும் – இந்தப்                                                     

 பொய்மைகளை வீழ்த்திடவே                                                                            

  மாறிவரும் ஊரினிலே -தமிழில்                                                         

ஊறிவரும் கவிஞர்களை அழைக்கின்றேன்                                                          

   எனப் பாடியுள்ளார். 

சில நாடுகள் இருக்கின்றன என்ற தலைப்பில் 1-6-81 அன்று எழுதியுள்ளார். சர்வாதிகாரத்தை தோலுரித்துக் காட்டுகிறார்.   

சில நாடுகள் இருக்கின்றன                                                                     

  அங்கே ஊராட்சி முதல் பாராட்சி வரையில்                                         

  சனநாயக் குழந்தை சனிப்பதே இல்லை                                                

கருவில் ஒரு புழுவாய் நெளிந்துடும்போதே                             

  கலைத்து முடித்துக் களிப்பெய்திடுவர்

 அன்று வங்க தேசத்துக்காக எழுதியது இன்றும் தலைவர் கலைஞரின் வரிகள் உலகநாடுகளின் சனநாயக அழிப்பை சர்வாதிகார முனைப் பை தெளிந்து எழுதியுள்ள ஒப்பற்ற சனநாயகவாதி கலைஞர். 

உன்காலணியை வாழ்த்துகின்றேன் எனும் தலைப்பில் 3-6-1982 ஆம் ஆண்டு தம் பிறந்த நாளில் எழுதியுள்ளார்                                                        

   தண்டவாளத்தில் படுத்தபோதும்                                                                     

   தனிமைச் சிறையில் வறுத்தபோதும்                                                        

  கண்ட அண்ணன் வடித்த கண்ணீர்  என்                                                         களைப்பைத் தீர்க்க தஎளித்த பன்னீர்                                                               

 ஆண்டு இருபதைக் கடந்த வயதில்                                                    

  பாண்டியில் என்னை வதைத்த காலை                                                                       தந்தை பெரியார் தடவிய மருந்தே -என்                                                                       சிந்தை குளிர்ந்த அமுத விருந்தாம்.

            கலைஞர் தம் இளமைக்காலத்தில் அவரது போராட்டமும் தாக்குதலும் அவர் மொழியில் நாம் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. தம் தலைவர்கள் கலக்கம் அவர்மேல் கொண்டுள்ள நம்பிக்கையை நமக்கு உணர்த்துகிறது. அதை தம் வாழ்நாளில் மக்களுக்காகவே வாழ்ந்த மகானாக நம் உள்ளத்தில்மிளிர்கிறார். தம் பெற்றோரையும் 

அஞ்சுகத்தாய் முத்துவேலர்                                                                                              எனைப் பெற்றபோது                                                                                    

  இசைபாடி மகிழ்விப்பான்                                                                  

    இவனென்று காத்திருந்தார் இவனோ                                              

 வசைபாடும்  அரசியலின் மத்தியிலே                                                                            வசமாக சிக்கிக் கொண்டான்  

               தலைவர் கலைஞரை வசை பாடியது போன்று யாரையும் வசைபாடி இருக்க மாட்டார்கள் நம் அரசியல் ஆரியக் கூட்டங்கள். தம் கவிதையாலேயே தம் மனக் குமுறலைத் கலைஞர்  வெளியிடுகிறார்.

          நீதி கேட்டு  திருச்செந்தூருக்கு நடைப்பயணம் நடந்த நீதிமான் தலைவர் கலைஞர். 10 – 5-1982ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.   

  செந்தூர் கடற்கரையுடன் நமது பயணம்                                                                              முழுமை அடைந்து விடவில்லை                                                                                                   இது தொடர் பயணம்                                                                                               தொல்லைகள் தொகை தொகையாக வரினும்                                                                                  தூ என்றிகழ்ந்து விட்டுக்                                                                                                               கால் கொப்பளித்தாலும்                                                                                         காட்டாறுகள் குறுக்கிட்டாளும்                                                                                              கடும் சோதனைகள் எதிர்பட்டாளும்                                                                                 தூக்குமேடையே வரவேற்றாலும்                                                                                              அனைத்தையும் ஏற்க                                                                                                   

 அண்ணா வழியி அமைதி பூண்டு                                                                                                                                புயலின் வேகத்தைப்                                                                                              புன்னகையால் தடுத்திடும் பயணம்  

             தம் கால்கள் கொப்பளிக்க மக்கள் தலைவராக கலைஞர்மக்களோடு சென்ற நடைப்பயணம் சரித்திரச் சான்று.  தந்தை பெரியார்தான் தலைவர் கலைஞரின் பல்கலைக்கழ்கம். அந்தப் பல்கலைக் கழ்கம் பறி ஈரோட்டு எரிமலை எனும் தலைப்பில் 18-9-2003ஆம் ஆண்டு எழுதியுள்ளார்

          கோடிச் சூரிய வெப்பக் கொள்கைதனை ஏந்திக்கொண்டு                                                                  எரிமலைப் பெரியார் எழுந்து வந்தார்

    தந்தை பெரியாரை உலகின் உச்சமாய் உணர்த்துகிறார். இன்றும் அவருடைய ப்குத்தறிவு சூரியக்கதிர்கள் தமிழர்களை செம்மைப் படுத்துகிறது. 

   சாதி ஏதடா சரித்திரம் ஏதடா அவை                                                                                         பாதியில் வந்த சமுதாயக் கேடடா                                                                             மாதவதம் மாய்த்திட டா மனிதனை                                                                மடயனாக்கும் நம்பிக்கை வீழ்த்திட டா  

         சாதியையும் மத த்தையும் சாடி சமத்துவபுரங்களை நாடெங்கும் தொடங்கி சமுத்துவத்தை நடைமுறைப்படுத்தியவர் தலைவர் கலைஞர்.   

           கலைஞர் நூற்றாண்டில் நாம் அவர் இலக்கியங்களைப் பேசிவருகிறோம் அதைவிட தாம் கொண்ட கொள்கைக்கு ஒரு பெரும் படையை உருவாக்கி  காட்டுக்கோப்பாக காத்து நம் முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை தம் காலத்திலேயே சிறிபியைப்போல் செதுக்கி இன்று திராவிட முன்மாதிரி அரசாக செம்மாந்து நடைபோட வழிகோ பன்னாட்டுத் தமிழுறவு மன்ற தூத்துக்குடி கிளையும் மற்ற தமிழ் அமைப்புகளும் இணைந்து கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா லியுள்ளார். தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைமுறைப்[படுத்தும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை நெஞ்சார்ப் போற்றுகிறேன். தலைவர் கலைஞர் அவர்க்ள் ஐயன் திருவள்ளுவருக்கு குமரிக்கடலில் சிலை வைத்து தமிழர் பெருமை உலகுக்கு உணர்த்தினார். நமது முதல்வர் கலைஞர் நூற்றாண்டை உலகெங்கும் நட த்தி கலைஞர் புகழை நிலைநாட்டுகிறார்.. உச்சமாக தருமிகு சென்னையில்  வங்க கடலில் நமது கலைஞர் பேனாவை பெரும் முய்ற்சிக்கிடையில்  அமைக்கிறார் முதல்வர் . 

         தாய்லாந்து பாங்காக் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் மாநாட்டில் கலைஞரின் பவள விழாவை ஒரு உலகத் தமிழர்களோடு நட த்தி சென்னையில் தலைவர் கலைஞரை தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் பங்கேற்ற அனைவரும் மரகத புத்தர் சிலையை வழங்கி வாழ்த்துப் பெற்றோம்.இன்று தூத்துக்குடிகிளை கலைஞர் நூற்றாண்டை      நட த்துகிறது. முதல்வரின் ஒப்பற்ற ஆட்சிக்கு அரணாக இருப்போம்.

      திராவிட முன்மாதிரி ஆட்சி வாழ்க. தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக

(30-7-2023 அன்றுபன்னாட்டுத் தமிழுறவு மன்ற தூத்துக்குடி கிளையும் மற்ற தமிழ் அமைப்புகளும் இணைந்து கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்)

No comments:

Post a Comment