Tuesday, January 12, 2010
மலேசிய மக்களின் நிலையான பேரன்பு
மலேசிய மக்களின் நிலையான பேரன்பு
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டிற்கு வருகை தந்த பெருமக்கள் சோழனின் கடாரம் கண்ட மகிழ்வோடு மலேசிய நாட்டில் தமிழர்களின்பெருமையை நிலைநிறுத்திய சாதனைத் தலைவர் சாமிவேலு அவர்கள் கட்டிய எய்ம்சு பல்கலைக் கழக த்தைக் கண்டடோம்.. கண்கவர் கட்டிடக் கலையின் உயர்கவைக் காண முடிந்தது. மிகப் பெரிய பரப்பளவில் பல்கலைக் கழகத்தை நிர்மாணித்துள்ளனர். ஆய்வரங்குகளும் அரங்குகளும்உலகத் தரத்தில் உள்ளன. யாங்கள் அனைவரும் இறங்கி வாயிலில் எய்ம்சு பலகலைகழகம் என தமிழில் பொறித்துள்ள வலைவுடன் படம் எடுத்துக் கொண்டொம். பின் உள்ளே சென்றோம் வாயிலில் இரு பேராசிரியர்கள் எங்களை வரவேற்றனர்.
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலகஅமைப்பாளரும் நிறுவனருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் வந்திருந்த பெருமக்கள் அனைவரையும் அவரவர்கள் சிறப்புக்களைக் கூறிஅறிமுகப்படுத்தினார்.கோலாலம்பூர் மாநாட்டு நிகழ்வில் மாண்பமை டத்தோசிறி சாமிவேலு அவர்கள் வந்திருந்த பெருமக்கள் சிலருக்கு தம் இல்லத்தில் காலைச்சிற்றுண்டியை தம் அன்புக் கரத்தாலேயே வழங்கினார்.எத்துனை பேர் வந்துள்ளிர்கள் என வினவினார் யான் 45 பெருமக்கள் என்று கூற்னேன். யாங்கள் காடாரம் செல்கிறோம் என்று கூறியவுடன்அங்கு அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்துள்ளார். டத்டோசிறி சாமிவேலரின் கருணை உள்ளத்தையும் மனிதநேயத்தையும் மனமாறப்போற்றினோம். ஆசிரியமணி மாணிக்கம் டத்தோசிறி அவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்கள் அவசியம் செல்லுங்கள் என தொலைபேசியில் நினைவுடுத்திய வண்ணமிருந்தார். மாநாட்டின் அச்சானியாகவும் இந்த பயணங்களுக்கே அடித்தளமாகவும் இருந்த அண்ணன் டாக்டர் சி தர்மலிஙகம். ஆர்வத்தோடு எங்களை அழைத்துச் சென்றது மலேசியத் தமிழர்கள் தாய்த்தமிழர்கள்பால் கொண்டுள்ள அன்பைப் புலப்படுத்தியது
பல்கலைக்கழக்த்தின் ஒர் அரங்கில் எங்களுக்கு வரவேற்புஅளித்தனர். பேராசியப் பெருமகன் ஒருவர் பல்கலைக்கழக்த்தின் தோற்றத்தைப்பற்றியும் அங்குள்ள துறைகளைப் பற்றியும் தமிழில் விளக்கினார்.யாங்களும் எங்களின் வினாக்களைத் தொடுத்து பல்வெறு செய்திகளைத்தெரிந்து கொண்டோம்.கடாரம் ஆயிரம் ஆண்டுககட்கு முன் இராசசாசசோழன் கண்டசாதனை. எய்ம்சு பல்கலைகம் நம் சாதனைத் தலைவர்சாமிவேலர் மலேசியாவில் இந்நூற்றாண்டில் கண்டசாதனை.
எய்ம்சு பல்கலைக் கழக மகிழ்வோடு யாங்கள் ஈப்போவிற்கும் சென்றோம். அங்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டின் தூணாகச் செயல்பட்ட ஆசிரியமணி மாணிக்கமும் செயலாளராக செயல்பட்ட பேராசிரியர் பாலாவும் ஈப்போவில் மிகப் ;பெரிய வரவேற்பை ஏற்பாடு செய்திருந்தனர் மகளிர் திருவிழாவாக நடத்தி பேராசிரியர் இந்திராணி மாணிக்கம்,மகளிர் மாமணி மாலா சந்திரசேகர், முனைவர் இலலிதா, முனைவர் வசுமதி, மருத்துவர் இராசேசுவரி அழகேசன், திருக்குறள் புலவர் செல்லம்மாள், ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்
தமிழிசைமாமணி தி,க.ச,கலைவாணன் அவர்களின் இன்னிசைநிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது ஆசிரியமணி மாணிக்கம் தொகுப்புரையில்மிகத்தேர்ந்தவர்.பன்னாட்டுத்மிழுறவுமன்ற மாநாடுகளில் மாணிக்கம் அவர்களே தொகுப்புரையாளராக இருப்பார்..உலகளாவிய தமிழர்களின் சிறப்பை அறிந்த பெருமகன் ஆசிரியமணி மாணிக்கம்.தந்தையரும் மற்ற மகளிர் பெருமக்களும் முன்கூட்டியே சென்றிருந்த்தனர். யாஙகள் சற்று தாமதமாகவே சென்றோம் ஆசிரியமணியின் தொகுப்புரையோடு அனைத்துப் பெருமக்களும் உரையாற்றினர்.
யான் தற்போது 45 தமிழ் அறிஞர், முனைவர், பேராசிரியர், கவிஞர், புலவர், மருத்துவர், பொறிஞர்,ஆசிரியர், மகளிர் மாமணிகள், மூத்த பெருமக்களோடு மலேசிய மண்ணின் முழுப்பகுதியையும் வலம் வரும்போது என் எண்ணங்கள் பின்நோகிக்ச் சென்றது. அருமைத் தந்தையார் அவர்கள் 1977 ஆம் ஆண்டு அமரர் இரா நா. வீரப்பனாரின் உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாட்டை சென்னையில் மயிலை கற்பகாம்பாள் திருமணமண்டபத்தில் எழுகதிர் ஆசிரியர் முனைவர் அரு.கோபாலன் அவர்களின் துணையோடு நடத்தினார்கள்.தமிழ்ப்பணியின் சார்பில் சிற்ப்பு மலர் ஒன்றும் வெளியிட்டோம்.அப்போது என் வயது 18.. அந்த மாநாட்டிற்கு மாணிக்கம் அவர்கள் ஒரு குழுவோடு சென்னைவந்தது நினைவிற்கு வந்தது..பளபளக்கும் நீல நிற மலேசிய பூப்போட்ட பட்டுச் சட்டை இளமைத் துடிப்பான முகம் கையில் ஒரு ஒளிப்படக்கருவி அவர் தலைமையில்தன் குழுவினர் வருகைதந்திருந்தனர். அதில் திருமதி கமலாட்சி ஆறுமுகம், திரு.ஆறுமுகம், போன்ற பெருமக்களெல்லாம் வருகை தந்திருந்தனர். அவர்களை வரவேற்ற நிகழ்வுகளெல்லாம் என் முன் நிழலாடின.
அதற்குப்பின் பன்முறை பல்வேறு பெருமக்கள் வருகை தந்து வரவேற்பு நடத்தியுள்ளோம். ஆசிரியமணி மாணிக்கம் ஆர்வம் குன்றாது இன்றும் மாநாட்டின் தொடர்நிகழ்வாக ஈப்போ நகரின் புகழ்பெற்ற அரங்கில் அதே பளபளக்கும் பட்டுச் சட்டையோடு நிகழ்வை நடத்துவது மலேசியத்தமிழ்ர்களின் மாறா அன்பைப் புலப்படுத்தும்
நாம் வாழும் காலத்தில் தமிழ் உண:ர்வையும் தமிழகத்தில் பேயாட்சியை ஓழித்து நல்லாட்சியைக் கண்டவர் நம் முதல்வர், வறுமையைக் களைய ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கிய பெருவள்ளல் நம் கலைஞர். உலக்மே வியக்கும் வண்ணம் செம்மொழித் தகுதியை இந்தியப் பேரரசில் போராடிப் பெற்ற பெருமகன். உலகமே வியக்கும் வண்ணம் உலகச் செம்மொழி மாநாட்டை நடத்தும் முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞருககு வாழ்நாள் சாதனையாளர் விருதை மலேசிய மக்களின் சார்;பில் ஆசிரியர்மணி மாணிக்கமும், பேராசிரியர் கு.பாலசுப்பிரமணீயமும் வழங்கினர், மான்பமை கலைஞரின் சார்பில் அருமைத் தந்தையார் ருங்கவிக்கோ,முன்னாள்நகரத் தந்தை சா. கணேசன்,கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன், தென்சென்னை தி.மு.க.இலக்கிய அணித்தலைவர் மாம்பலம் சந்திரசேகர், யானும் இணைந்து வரலாற்று நாயகரின் பட்டத்தைப் பெற்றுக்கொண்டோம்.
என் வாழ்க்கையில் விபரம் தெரிந்த நாள்முதல் வாழ்நாளில் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற உணர்வோடு தொண்டாற்றிவருபவன்.பன்னாட்டு அன்பர்களின் பேரன்பையே வாழ்வாகக் கொண்ட எனக்கு தந்தையரின் முன்னிலையில் தந்தை பாலாவும் ஆசிரியமணி மாணிக்கமும் செந்தமிழ்த் தொண்டர் சிகரம் எனும் பட்டம் வழ்ங்கி சிற்ப்பித்தனர். வந்திருந்த பெருமக்கள் அனைவருக்கும் ஆடவருக்கு சட்டைத்துணியும் மகளிருக்கு புடவையும் வழங்கி சிறப்பித்தனர்.மலேசிய மண்ணில் கோலாலம்பூர், ஈப்போ, கெடா, பினாங்கு, மலாக்கா நகர்களில் தமிழ்கத்துப் பெருமக்களுக்குச் சிறப்பும், தமிழ் உறவும் கைகோர்த்த காட்சி பன்னாட்டுத் தமிழுறவின் வலிமையையும் பெருமையையும் உணர்த்தியது.
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment