Sunday, March 10, 2024

 புண்ணியர் காந்தி  வணங்கி பிரான்சினில் பெருமை பெற்றோம்

தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர்


காந்தியின் நினைவுநாள் இன்றே 

   கடும்பணி சுடார்சுபர்க் நகரில்

ஏந்திடும்  பிரான்சு நாட்டின் 

   எழிலினைக் கண்டே வியந்தேன் 

மாந்திடும் மனித நேயம் 

  மக்களின் உறவாய்க் கண்டேன் 

பூந்திடும் பனியின் துகல்கள்

     பொழிவுடன் பொழியும் உடலில் 


 கடமையின் சிகரம் கிருபா 

    கலைகளின் காக்கும் நேயர் 

உடைமையாய் ஊர்தி ஏறி

    உலவியே நகரில் சென்றோம்

 தடையெலாம் உடைத்தே காந்தி

    தன்னிகர் அகிம்சை ஏற்றே

  விடையென  விடுதலை பெற்ற

     வித்தகர் சிலையைக் கண்டேன் 


 ஊர்தியை நிறுத்தி நடந்தே

   உத்தமர் காந்தி காண

 பார்புகழ் தொண்டின் சின்னம் 

    பணிவுடன் அருகில் சென்றோம்

 வேரென இந்திய மக்கள்

    ஈழத்தார்  இணைந்து இங்கெ 

 தேரெனெ இந்தியா போற்றும்  

   தெளிந்த நல்உறவைச் செப்பும்

அண்ணலின் பெருமை தன்னை   

   அணிபுகழ் நினைவு நாளில் 

கண்ணென இந்தியா காத்த

 கருணையர் திருக்குறள் அறிய 

தன்நிகர் தமிழைக் கற்ற  

   தலம் போற்றும் எம்மான்

 புண்ணியர் சிலையை வணங்கி 

   பிரான்சினில் பெருமை பெற்றோம்


 


No comments:

Post a Comment