Wednesday, March 13, 2024

 

தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களின் 89ஆம் அகவைத்திருநாள் நோபல் தவம் நூல் வெளியீட்டு விழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

 தந்தையார் பெருங்கவிகோ அவர்களின் 89ஆம் அகவைத்திருநாளும் நோபல் தவம் நூல் வெளியீட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வுக்கு சமூக நலக் காவலர் எங்கள் மண்ணின் மைந்தர் பிற்படுத்தப்பட்டோர்  உயர் கல்வித் துறை அமைச்சர் இராச கண்ப்பன அவர்களை தங்களி பலத்த கரவொளிக்கிடையில் வருக வருக என்று வரவேற்கிறேன். வீரம் செறிந்த மண்ணின் வெற்றி நாயகனாக நம் அமைச்சர் வலம் வருகிறார் அவர் வருகை யாம் பெற்ற பெரும் பேறு. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பட்டி தொட்டி எங்கும்பயணித்து  பேருரையாலும் எழுத்தாலும் இணையவழியிலும் புலன வழியிலும் பரப்பிவரும் திராவிட இயக்கப் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உலகில் எங்கு நோக்கினோம் திருவள்ளுவர் பெருமான் சிலைய நிறுவும் வி.ஜி.பி உலகத் தமிழ்ச்சங்கத் தலைவர் இதுவரை 165 சிலைகளை நிறுவியுள்ள செவாலியர் வி.ஜி.சந்தோசம் அவர்களை வரவேற்று மகிழ்கிறேன். மூன்று தலைமுறாகளாக தமிழ் வளர்க்கும் ஒள்வை நடராசனார் திருமகன் தமிழ்வளர்ச்சித் துறை இயக்கநர்  ஒள ந, அருள் நம் தமிழ் வள்ளல் சந்திரசேகர் வழித் தோன்றல் ச. ஆனந்த் மற்றும் வருகை தந்துள்ள பெருமக்கள் அனைவரை வருக வருக வரவேற்கிறேன்.

                     இன்று வெளியிடப்படும் நோபல் தவம் ஒரு மிகச் சிறந்த நூல் .தமிழகத்தில் நோபல் பரிசு பெறும் பெருமக்கள் பலர் உள்ளனர். அவர்களின் ஆற்றலை எந்த வித த்த்லும் குறைகூற முடியாது. இந்த நோபல் தவம் நூலை எழுத்தியுள்ள தந்தையார்  பெருங்கவிக்கோ அவர்கள் தம் வாழ்நாளை கவிதைக்காகவே அர்ப்பணித்தவர்.1981ஆம் ஆண்டு அமெரிக்காவில் சான்பிரான்சிசுக்க்கோ நகரில் நடந்த 5ஆம் உலகக் கவிஞர்கள் மாநாட்டிற்கு அமெர்க்கா கவிஞர் ரோசு மேரி வில்கின்சன் அவர்கள் பொறுப்புச்சான்று வழங்கி அழைத்தார்கள். இன்று அன்று எளிதாகச் செல்ல முடியாது அந்த காலத்திலேயே அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற 5ஆம் உலக க் கவிஞர்கள் மாநாட்டில் பங்கேற்றார். நாவுக்கரசர் ஒளவை நடராசன் அவர்களும் பங்கேற்றார்கள். அந்த  உலக க் கவிஞர்கள் மாநாட்டின் நாயகர் நம் கிருட்டிணா சீனிவாசன் மொழிபெயர்த்த தந்தையாரின் Flames of Thoughts  நூலையும்  மூன்னூறு தமிழ்க் கவிஞர்கள் கவிதைகளை மொழி பெய்ர்த்த Tamil Poets Today அந்த மாநாட்டில் வெளியிட்டார்கள் அங்கு மொழிபெயர்த்த பெருமை அறிஞர் ஒளவை நடராசன் ஆவார்.. 5ஆம் உலக க் கவிஞர்கள் மாநாடு முதல் இன்று வரை தொடர்ந்து உலக க் கவிஞர்கள் மாநாட்டில் பங்கேறு உலகப் பார்வையை அன்றே பெற்ற உலகக கவிஞர் பெருங்கவிக்கோ. இங்கும் கவிஞர்கள் மாநாடு நட த்தி ரோசுமேரி வில்கின்சன் பெருநாட்டு க் கவிஞர் பேதூரு பொன்ன்ற பல்வேற் நாட்டுக் கவிஞர்களை தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தியுள்ளோம்

       நோபல் தவம் நூல் சூவிடன் நாட்டு சுடாக்கோம்  ந்கர் சென்று அங்குநோபல் பரிசு வழங்கும் அலுவலகம் சென்று நோபல் சிலையை வருடிய வண்ணம் காட்சி தருகிறார் பெருங்கவிக்கோ. சூவீடன் நாட்டிற்கு செருமணி நாட்டில் ஈழத் தமிழரளின் அன்பில் திளைத்து பின் நண்பர்கள் உதவியோடு சூவிடன் சென்ற் பயண அனுபவத்தை இந்நூலில் பதிவு செய்துள்ளா.ர்

         கணினி உலகில் மாபெரும் புரட்சிசெய்த கணினி அறிஞர் யாழான் சண்முகலிங்கம் ஒப்பற்ற பேரறிஞர். தமிழுக்கு எழுத்துரு கண்டவர். பன்னாட்டுத் தம்மிழுறவு மன்றம் மூலம் தமிழகமெங்கும் அவர்க் எழுத்துருவை அறிமுகம் செய்தோம். அவருடை உற்ற நண்பர்தான் பேராசிரியர் பீட்டர் சல்க் அவரின் வழிதான் சுவீடம் செல்ல திட்டமிட்டு பிரான்சு பாரிசுலிருந்து எங்கள் நீண்ட கால நண்பர் பூபாள சோமசுந்தரம் அனுப்பிவைத்த தை நூலில் பதிவிட்டுள்ளார். சுடாக்கோம் விமான நிலையத்தில் வரவேற்று தம் பல்கலைக்கழகம் நோபல் அலுவலகம் என அனைத்துப் பகுதிக்கும் அழைத்துச் சென்றுள்ளதை அவரது மனிதநேயப் பண்பை சிறப்பாகப் பதிவிட்டுள்ளார். பேராசிரியர்  பீட்டர் சல்க் தமிழ் ஈழ ஆதரவாளர்.

          உள்ளியது எய்தல்  எளிதுமண் மற்றுந்தன்

          உள்ளத்தாள் உள்ளப் பெறின்   

       என்ற வள்ளுவப் பேராசான் குறள் வழி  தமிழ்க்கவிஞர்கள் நோபல் பரிசு பெற வேண்டும் என்பது பேரவா. அந்தக் குறிக்கோளோடு தம் பயணத்தையும் கவிதை ஆக்கத்தையும் உலகளாவிய தொண்டையும் தம் குறிக்கோளாக க் கொண்டு உள்ளியது எய்தும் உலக் மாக்கவியாக வலம் வருகிறார் பெருங்கவிக்கோ. மீண்டும் வருகை தந்த பெருமக்களை வரவேற்று மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment