Sunday, August 13, 2023

 பன்னாட்டுத் தமிழுறவு மன்ற தூத்துக்குடி கிளையும் மற்ற தமிழ் அமைப்புகளும் இணைந்து கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற தூத்துக்குடி கிளையும் மற்ற தமிழ் அமைப்புகளும் இணைந்து கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நத்துவது என்பது தமிழ் சார்ந்த பெருமக்கள் எந்த அளவுக்கு பற்றாக உள்ளோம் எனபதை இந்நிகழ்வு மூலம் அறியலாம்.

  கலைஞரின் திருமகள் போராளி கனிமொழி அவர்கள் இன்று மணிப்பூர் அவலத்திற்கு அனைத்துக் கட்சி குழுவோடு திமுக சார்பில் மணிப்பூர் சென்றுள்ளதால் அம்மையார் இங்கு வர இயலவில்லை. செயலலிதாவின் ஆணவத்தில் தலைவர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது சிறைவாயிலில் கலைஞர் அவர்கள் கைலியோடு உட்கார்ந்து போராட்டம் நடத்தினார் அப்போது கவிஞர் கனிமொழி உடன் தலைவரோடு நின்றதைக் கண்ட கண்கள் இன்றும் நெஞ்சோடு நிலைத்து உள்ளது. பாராளுமன்றத்தில் தமிழர் சிந்தனைகளையும் தமிழின் சிறப்புகளையும் மகளிர் பாதுகாப்புக்காக் வழங்கும் முழக்கம் இந்தியாவே உற்று நோக்குகிறது. கனிமொழி மிகச் சிறந்த கவிஞர்.தலைவர் கலைஞர் போன்று தமிழ் இலக்கியவாதியாக வாழ்பவர். தொண்டறத் தலைவியை போற்றி மகிழ்கிறேன்.


 தமிழ் இலக்கிய  இந்நிகழ்வுக்கு ஆதரவு நல்கிய அமைச்சர் கீத சீவன் அவர்களையும் தூத்துக்குடி மாநராட்சி தந்தை செகன் பெரியசாமி அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். ஐயாபெரியசாமி  அவர்கள் கலைஞரின்  முரட்டுப் பக்தர் . நெருக்கடி காலத்தில் கழகத்தை கட்டிக்காத்த பெருமகன்.அவர் உருவாக்கிய தொண்டர்கள் இன்று தூத்துக்குடியின் கழகத் தூண்களாக உள்ளீர்கள் உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள். 

மதுரையிலிலும் தூத்துக்குடியிலும்  ஒரே நாளில் ஒரே நேரத்தில்  நிகழ்வு இருந்தாலும் இன்று பொன்விழாக் காணும் தமிழ்ப்பணிக்கு  மதுரையில் பேராசிரியர் இரா. மோகன் நிரமலா அற்க்கட்டளை விருதைப் பெற்று விரைந்து இங்கு வந்துள்ளேன் என்றால்  தலைவர் கலைஞர் தமிழக் இந்தியா உலகம் எங்கு தொண்டாற்றிய தீரர்  அல்லவா நாம் தலைவரின் தட த்திலே பயணிக்கும் பாங்குதான்.

வருகை த்ந்துள்ள குறள்ஞானி மோகன்ராசு கலைஞரின் அருமை பெருமைகளை சிறப்பாகப் பேசிய நெல்லை செயந்தா அவர்கட்கும் மற்றும் பங்கேற்றுள்ள கருஞசட்டை வீர ரகள் தி.மு. க மகளிர் அணிபெருமக்கள் அனைவருக்கும்  என் வணக்கத்தை உரித்தாக்குகிறேன். கலைஞரின் நூற்றாண்டை சிறப்பக கொண்டாட பெருமுய்றசி மேற்கொண்ட தமிழ்ப்பணிச்செம்மல் முத்துநகர் அன்பழகன் அவர்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். கலைஞர் மேல் தீராப் பற்றுகொண்டவர். பல்வேறு இலக்கியப் பணிகளை தூத்துக்குடி நகரில் ஆற்றிவரும் அரும்பணி யாம் அறிந்ததே. கலைஞர் காலத்தில் சட்டன்றத் தேர்தலின்போது ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு தி.மு.கவில் விண்ணப்பம் செய்வார். நான் பலமுறை கேட்டுள்ளேன். அவருடைய பொருளாதார் நிலை நான் அறிவேன். ஏன் ;பணச்சுமையில் விண்ணப்பிக்கிகிறீர்கள் எனக் கடிந்துகொள்வேன். அதற்கு அவர் கூறிய் சொற்கள் என்னை நெகிழச் செய்த து. யான் வேட்பாளர் தேர்வின்போது கலைஞரைக் காணக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறதே ஐயா எனக் கூறினார். கலைஞர் மீது தீராப் பற்றுக் கொண்ட அன்பழகன் நூற்றாண்டு விழா நடத்துகிறார்.

கலஞரின் கவிதைகள் குறித்துப் பேசப் பணித்துள்ளார்கள். இந்த கவிதை மழை நூலைப் பாருங்கள்1110 பங்கள் கொண்ட  நூல் .210 தலைப்புகளில் பாடியுள்ளார் தலைவர். 1938ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரை எழுதிய பாக்கள். தொடாத துறையே இல்லை எனும் அளவிற்கு அனைத்துத் தலைப்புகளிலும் பாடியுள்ளார் கலைஞர். தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையேறு பாடிய கவிய்ரங்கங்களில் தந்தையார் பெருங்கவிக்கோ கவிஞர் முடியரசன் கவிக்கோ அப்துல் இரகுமான் கவிப்பேர ரசு வைரமுத்து  பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் கவிவேந்தர் மேத்தா எண்ணற்ற கவிஞர்கள் பங்கேற்றுப் பாடியுள்ளனர். 

1938ஆம் ஆண்டு இந்திப் போராட்ட த்தின்போது கலைஞர் கவிதை அனைவரையும் சுண்டி இழுக்கிறார்.

வாருங்கள் எல்லோரும் இந்திப்                                 போருக்குச் சென்றிடுவோம் வந்திருக்கும      

இந்திப்பேயை  விரட்டித் திரும்பிடுவோம்  

ஓடிவந்த இந்திப்பெண்ணே கேள் நீ

தேடிவந்த கோழையுள்ள நாடிதல்லவே

 வீரத் தமிழ் கொஞ்சும் நாட்டிலே நாங்கள்

சாரமிலாச் சொற்கள்  ஏற்கமாட்டோ ஏட்டிலே.

 இந்திப் பேயை இன்று வரை தமிழ் நாட்டில் அண்ட விடாது செய்த பெருமைக்குரிய தலைவர் கலைஞர். 

சென்னை கலைவாணர் அரங்கில்15-9-1975 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்  கவியரங்கில் தாம் கண்ட அண்ணனை போற்றிப் புகழ்கிறார். 

அண்ணனை ஒரு துறவி என்பேன்

அவர் வாயெல்லம் காவி தரித்திருந்தார்        

அண்ணனை ஒரு தெய்வம் என்பேன்                                                 

 அவருக்கு துரோகிகளும் தூபதீபம் காட்டுகின்றனர்                                    அண்ணனை ஒரு கண்ணன் என்பேன்                                                        

   அவரைப் பூதகியும் தூக்கி பால் கொடுக்கின்றாள் 

அரியாசனமாய் அவர் நம் இதயத்தை ஆக்கிக் கொண்டார்                                        அரியாசங்கள் அவரை ஆரம்பத்தில்                                                                

புரியாமல் எதிர்த்த துண்டு                                                                   

 சரியாசனச் சமதர்ம ம் போதிக்க வந்த                                                 

   தென்னாட்டு மார்க்ஸ் என்று                                                                  

    பின்னால்தான் தெளிவடைந்தார்  

1975 ஆம் ஆண்டு அண்ணா குண நலன்களையும் அவர்தம் பெருமையையும் படம் பிடித்துக் காட்டுகிறார். நாம் இப்போது இந்தக் 


கவிதைகளைப் படித்தாலும்இளைய தலைமுறையினர் அண்ணாவின் பெருமையை உணரலாம். 

தாம் வாழும் காலம வரை உலகில் நடந்த அத்தனை நிகழ்வுக்கும் தம் கருத்தை வழங்கிய காலக் கரூவூலம் தலைவர் கலைஞர்.  1980 ஆம் ஆண்டு புதுவை வானொலி நிலையத்தார் விடுதலை நாள் கவியரங்கம் கலைஞர் தலைமையில் நட த்தினர். அங்கு அவர் பாடிய கவிதைகள் என்றும் நிலைத்து நிற்குக்

சரித்திரத்துப் பொன்னெழுத்தில்                                            

  சுதந்திரத்தை மின்னவிட்டுத்                                                                 

தரித்திரத்தைத் தலைமீது தாங்கி நிற்கும்                                           

  தாயகத்தை வாழ்த்துகின்றேன்

           இப்படி பாடிய கலைஞர் தான் நாட்டின் தரித்திரத்தை எல்லாம் மாற்றிய பெருமகைகுரிய பெருமகன். பிச்சைச்கார ர் மறுவாழ்வுத் திட்டம், குடிசை மாற்றுவாரியம், கைரிக்சா ஒழிப்புத் திட்டம் என்ற எண்ணற்ற திட்டங்களை தீட்டிய பெருமைகுரியவர்.

இறுதியில்                                                                                                

     மாறிவரும் பூமியிலே                                                                        

போலிகள் அசலாகும்                                                                                              

    பித்தளை பொன்னாகும் – இந்தப்                                                     

 பொய்மைகளை வீழ்த்திடவே                                                                            

  மாறிவரும் ஊரினிலே -தமிழில்                                                         

ஊறிவரும் கவிஞர்களை அழைக்கின்றேன்                                                          

   எனப் பாடியுள்ளார். 

சில நாடுகள் இருக்கின்றன என்ற தலைப்பில் 1-6-81 அன்று எழுதியுள்ளார். சர்வாதிகாரத்தை தோலுரித்துக் காட்டுகிறார்.   

சில நாடுகள் இருக்கின்றன                                                                     

  அங்கே ஊராட்சி முதல் பாராட்சி வரையில்                                         

  சனநாயக் குழந்தை சனிப்பதே இல்லை                                                

கருவில் ஒரு புழுவாய் நெளிந்துடும்போதே                             

  கலைத்து முடித்துக் களிப்பெய்திடுவர்

 அன்று வங்க தேசத்துக்காக எழுதியது இன்றும் தலைவர் கலைஞரின் வரிகள் உலகநாடுகளின் சனநாயக அழிப்பை சர்வாதிகார முனைப் பை தெளிந்து எழுதியுள்ள ஒப்பற்ற சனநாயகவாதி கலைஞர். 

உன்காலணியை வாழ்த்துகின்றேன் எனும் தலைப்பில் 3-6-1982 ஆம் ஆண்டு தம் பிறந்த நாளில் எழுதியுள்ளார்                                                        

   தண்டவாளத்தில் படுத்தபோதும்                                                                     

   தனிமைச் சிறையில் வறுத்தபோதும்                                                        

  கண்ட அண்ணன் வடித்த கண்ணீர்  என்                                                         களைப்பைத் தீர்க்க தஎளித்த பன்னீர்                                                               

 ஆண்டு இருபதைக் கடந்த வயதில்                                                    

  பாண்டியில் என்னை வதைத்த காலை                                                                       தந்தை பெரியார் தடவிய மருந்தே -என்                                                                       சிந்தை குளிர்ந்த அமுத விருந்தாம்.

            கலைஞர் தம் இளமைக்காலத்தில் அவரது போராட்டமும் தாக்குதலும் அவர் மொழியில் நாம் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. தம் தலைவர்கள் கலக்கம் அவர்மேல் கொண்டுள்ள நம்பிக்கையை நமக்கு உணர்த்துகிறது. அதை தம் வாழ்நாளில் மக்களுக்காகவே வாழ்ந்த மகானாக நம் உள்ளத்தில்மிளிர்கிறார். தம் பெற்றோரையும் 

அஞ்சுகத்தாய் முத்துவேலர்                                                                                              எனைப் பெற்றபோது                                                                                    

  இசைபாடி மகிழ்விப்பான்                                                                  

    இவனென்று காத்திருந்தார் இவனோ                                              

 வசைபாடும்  அரசியலின் மத்தியிலே                                                                            வசமாக சிக்கிக் கொண்டான்  

               தலைவர் கலைஞரை வசை பாடியது போன்று யாரையும் வசைபாடி இருக்க மாட்டார்கள் நம் அரசியல் ஆரியக் கூட்டங்கள். தம் கவிதையாலேயே தம் மனக் குமுறலைத் கலைஞர்  வெளியிடுகிறார்.

          நீதி கேட்டு  திருச்செந்தூருக்கு நடைப்பயணம் நடந்த நீதிமான் தலைவர் கலைஞர். 10 – 5-1982ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.   

  செந்தூர் கடற்கரையுடன் நமது பயணம்                                                                              முழுமை அடைந்து விடவில்லை                                                                                                   இது தொடர் பயணம்                                                                                               தொல்லைகள் தொகை தொகையாக வரினும்                                                                                  தூ என்றிகழ்ந்து விட்டுக்                                                                                                               கால் கொப்பளித்தாலும்                                                                                         காட்டாறுகள் குறுக்கிட்டாளும்                                                                                              கடும் சோதனைகள் எதிர்பட்டாளும்                                                                                 தூக்குமேடையே வரவேற்றாலும்                                                                                              அனைத்தையும் ஏற்க                                                                                                   

 அண்ணா வழியி அமைதி பூண்டு                                                                                                                                புயலின் வேகத்தைப்                                                                                              புன்னகையால் தடுத்திடும் பயணம்  

             தம் கால்கள் கொப்பளிக்க மக்கள் தலைவராக கலைஞர்மக்களோடு சென்ற நடைப்பயணம் சரித்திரச் சான்று.  தந்தை பெரியார்தான் தலைவர் கலைஞரின் பல்கலைக்கழ்கம். அந்தப் பல்கலைக் கழ்கம் பறி ஈரோட்டு எரிமலை எனும் தலைப்பில் 18-9-2003ஆம் ஆண்டு எழுதியுள்ளார்

          கோடிச் சூரிய வெப்பக் கொள்கைதனை ஏந்திக்கொண்டு                                                                  எரிமலைப் பெரியார் எழுந்து வந்தார்

    தந்தை பெரியாரை உலகின் உச்சமாய் உணர்த்துகிறார். இன்றும் அவருடைய ப்குத்தறிவு சூரியக்கதிர்கள் தமிழர்களை செம்மைப் படுத்துகிறது. 

   சாதி ஏதடா சரித்திரம் ஏதடா அவை                                                                                         பாதியில் வந்த சமுதாயக் கேடடா                                                                             மாதவதம் மாய்த்திட டா மனிதனை                                                                மடயனாக்கும் நம்பிக்கை வீழ்த்திட டா  

         சாதியையும் மத த்தையும் சாடி சமத்துவபுரங்களை நாடெங்கும் தொடங்கி சமுத்துவத்தை நடைமுறைப்படுத்தியவர் தலைவர் கலைஞர்.   

           கலைஞர் நூற்றாண்டில் நாம் அவர் இலக்கியங்களைப் பேசிவருகிறோம் அதைவிட தாம் கொண்ட கொள்கைக்கு ஒரு பெரும் படையை உருவாக்கி  காட்டுக்கோப்பாக காத்து நம் முதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை தம் காலத்திலேயே சிறிபியைப்போல் செதுக்கி இன்று திராவிட முன்மாதிரி அரசாக செம்மாந்து நடைபோட வழிகோ பன்னாட்டுத் தமிழுறவு மன்ற தூத்துக்குடி கிளையும் மற்ற தமிழ் அமைப்புகளும் இணைந்து கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா லியுள்ளார். தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைமுறைப்[படுத்தும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை நெஞ்சார்ப் போற்றுகிறேன். தலைவர் கலைஞர் அவர்க்ள் ஐயன் திருவள்ளுவருக்கு குமரிக்கடலில் சிலை வைத்து தமிழர் பெருமை உலகுக்கு உணர்த்தினார். நமது முதல்வர் கலைஞர் நூற்றாண்டை உலகெங்கும் நட த்தி கலைஞர் புகழை நிலைநாட்டுகிறார்.. உச்சமாக தருமிகு சென்னையில்  வங்க கடலில் நமது கலைஞர் பேனாவை பெரும் முய்ற்சிக்கிடையில்  அமைக்கிறார் முதல்வர் . 

         தாய்லாந்து பாங்காக் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் மாநாட்டில் கலைஞரின் பவள விழாவை ஒரு உலகத் தமிழர்களோடு நட த்தி சென்னையில் தலைவர் கலைஞரை தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் பங்கேற்ற அனைவரும் மரகத புத்தர் சிலையை வழங்கி வாழ்த்துப் பெற்றோம்.இன்று தூத்துக்குடிகிளை கலைஞர் நூற்றாண்டை      நட த்துகிறது. முதல்வரின் ஒப்பற்ற ஆட்சிக்கு அரணாக இருப்போம்.

      திராவிட முன்மாதிரி ஆட்சி வாழ்க. தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக

(30-7-2023 அன்றுபன்னாட்டுத் தமிழுறவு மன்ற தூத்துக்குடி கிளையும் மற்ற தமிழ் அமைப்புகளும் இணைந்து கலைஞர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்)

Wednesday, August 9, 2023

உலக நாடுகளில் உலகத்

 தமிழர்களின்  தமிழ்ப்பணி

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

ஆசியர் தமிழ்ப்பணி



முன்னுரை

தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடர்ந்து உல்களாவிய தமிழ்ப்பணிகளில் உச்சப் பணியாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு நடத்துவது  பெருமைக்குரிய ஒன்றாகும்.மாநாடு நடத்தும் சட்டக்கதிர் ஆசிரியர் சம்பத் உள்ளிட்ட பெருமக்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். உலக்மெங்கும் பயணித்துள்ள நான் சில நாடுகளின் உலகத் தமிழ் தமிழர்கள்  பற்றி கருத்து வழங்குவதில் பெருமையுருகிறேன்

முதல் தமிழ்ப் பிரதமர்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் எனப் பாடிய கனியன் பூங்குன்றனாரின் பாடல் இன்று உலகம் முழுமையும் வாழும் தமிழர்கள் வாழ்ந்து தமிழர்களின் பெருமையை நிலைநாட்டி வருகின்றனர். உலகத்தில் முதல் தமிழர் பிரதமாராக கயானா   நாட்டில் மோசஸ் நாகமுத்து பொறுப்பேற்றது தமிழர்பெருமையின் மைல் கல்லாகும். பிரதமரை தமிழகத்திற்கு உலகப் பொருளாதர மாநாட்டிற்கு வரவழைத்து தமிழகத்திற்கு அறிமுகப் படுத்திய பெருமை முனைவர் சம்பத் அவர்களைச் சேரும். பிரதமரின் நூலைப் படித்தால் கீழ் மட்டத்திலிருந்து  பிரதமர் வரை வர தம் வாழ்க்கை அனுபவத்தை பதிவு செய்துள்ளார், இன்றும் யான் அவரோடு முகநூல் தொடர்பில் உள்ளேன். பலமுறை என் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிக்கிறார்.

மலேசியத் தமிழர்கள்

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள் ஆனால் மலேசியாவில்தான் வாழ்கிறார்கள் என்றார். இன்றும் அதுதான் உண்மை தமிழர்கள் தமிழ் மொழியையும் தமிப் பண்பாட்டையும் காத்து வருகின்றனர். எல்லா நிலைகளிலும் தமிழ்நாட்டுடன் போட்டி போடும் அளவிற்கு பங்காற்றிவருகின்றனர்.  மலேசிய நாளிதழ்கள் பருவ இதழ்கள் இயக்கங்கள் என தமிழ் தமிழருக்கு அரிய தொண்டாற்றி வருகின்றன. மலேசியத் திருநாட்டின் நீண்ட கால மூத்த அமைச்சராக இருந்த பெருமை அம ர ர் டான்சிறி சாமிவேலு அவர்கள். உலகத் தமிழர்களின்பேரன்பைப் பெற்ற திருமகன், அண்மையில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மநாட்டில் டான்சிறி சாமிவேலு அவர்கட்கு புகழஞ்சலி செலுத்தினார் பிரதமர் அன்வர் இப்ராகிம். மாநாட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கும்  பல்கலைக்கத் இந்தியத் துறைக்கும் 30 மில்லியன் ரிங்கட்களை வழம்க்கியுள்ளார். இன்றும் மாண்பமை சிவக்குமார் மலேசியத்திரு நாட்டின் அமைச்சராக உள்ளார். மலேசிய எங்கும் திருக்கோயில்கள் உள்ளன குறிப்பாக பத்துமலை திருக்கோயில் தமிழர்கள் பெருமையை செப்பும் திருக்கோயிலாகும். மலேசியாவில் 532 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன மலேசிய நாட்டில் பெரியார் கொள்கையாளர்களும் திராவிடக் கருத்துகளை மங்காமல் காத்து வருகின்றனர்.

சிங்கப்பூர் தமிழர்கள்

சிங்கப்பூர் தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடு. சிங்கப்பூரில்  எங்கு சென்றாலும் தமிழ் அன்னை ஆட்சி செய்கிறாள். தமிழ் நாளிதழை அரசாங்கமே நட த்துகிறது. மிகச் சிறந்த தமிழ் கவிஞர்கள் எழுத்தாளர்கள் இயக்கங்கள் என தமிழை முன்னெத்துச் செல்லும்  நாடுகளில் சிங்கப்பூர் பெருமைமிக்க நாடாக விளங்குகிறது.கணினித் துறை மாநாடுகளை நட த்திய பெருமை சிங்கப்பூருக்கு உண்டு. சிங்கப்பூர் லீக்குவான்யூ மறைந்தபோது தமிழகத்தில் படங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். நான் பலமுறை சென்று மாநாடுகள் விழாக்கள் என பல்வேற் நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறேன். தமிழர்களின் உழைப்பும் அந் நாட்டில் பெரும்பங்கு வகிக்கிறது . சிங்கப்பூரின் தந்தை லீகுவான்யூவே த்மிழர் பங்களிப்பை பாராட்டியிருக்கிறார்.  தமிழ் மொழி வளர்ச்சியில் சிங்கப்பூர் பணி மகத்தானது

 மியான்மர்(பர்மா) தமிழர்கள்

 மியானமாரில் வாழும் தமிழர்கள் நம் முகவை மாவட்ட பேச்சு மொழியாக தமிழைப் பேசுகின்றனர். 2002 ஆம் ஆண்டு அறிஞர் கலைச்செல்வன் அழைப்பில்  நானும் பேராசிரியர் ஆறு அழகப்பனும் சென்றிருந்தோம். மோன்லே தட்டோன் பர்மா முழுமையும் சென்று தமிழர்களோடு உறவாடினோம். தட்டோன் பகுதியில் வள்ளுவர் கோட்டம் அமைத்துள்ளனர். தலைவர் கலைஞரின் கரம் தொட்ட கல்லில் சிலை செதுக்கி வைத்துள்ளனர். நண்பர் அமர ர் மாரிமுத்து அவர்களின் பெரும் முயற்சி. நாங்கள் கோட்டம் சென்றபோது திருக்குறள் ஓதி மாலைஅணிவித்து வாழ்த்தினர். பர்மா இராணுவ புரட்சியின்போது பல தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். மணிப்பூர் வழியாக பலர் நடந்தே வந்து மாண்டு சிலர் சேர்ந்துள்ளனர். அறிஞர்சாமிநாத  சர்மாவின் நூலைப் படித்தால் அந்த அவலத்தை உணரலாம். திருக்குறளை பர்மீய மொழியில் மொழி பெயர்த்துள்ளனர்.மிக உயர்ந்த ஆலயங்கள் தற்போது புணரமைகப்பட்டுள்ளன. மிகச் சிறந்த தொழில் அதிபர்களாக உள்ளனர். இலக்கிய அமைப்புகள் செம்மையாக செயல் படுகின்றன. பல தமிழ் மாநாடுகளை நத்திய பெருமைக்குரிய தமிழ்ர்கள்.குடியுரிமை இல்லாத் தமிழர்களாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அல் ல லுறுகின்றனர், துரத்தப்பட்ட தமிழர்கள் சொத்துகள் பல நூறு கோடி இதுநாள் வரை மீட்கப் படவில்லை. 

தாய்லாந்தில் தமிழர்கள் 

தாய்லாந்தில் தமிழர்கள் செயற்கை கல் வணிகர்களாக உள்ளனர். அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் மாநாடு நட த்தினோம். கலைஞரின் பவள விழாவை ஒரு நாள் முழுவதும் உலகத் தமிழர்களோடு நட த்தி தலைவர் கலைஞரிடம் மரகத வண்ண புத்தர் சிலையை வழங்கினோம் இன்றும் கலைஞர் கரூவூலத்தில் உள்ளது. மாரியம்மன் திருக்கோயில் பாங்காக் நகரில் உள்ளது. தாய்லாந்து பெருமக்களும் வழிபடுகின்றனர். இசுலாமியத் தமிழர்கள் செயற்கை கல் வணிகத்தில் இங்கு சிறந்து விளங்குகின்றனர்.

.அரபு நாடுகளில் தமிழர்கள் 

அர்பு நாடுகளில் தமிழர்கள் வேலை நிமித்தம் சென்றவர்கள். அனைத்து அரபு நாடுளிலும் தமிழர்கள் தொழிலாளிகளக உள்ளனர். துபாய் கத்தார் போன்ற நாடுகளில் தொழில் அதிபர்களாக்வும் உள்ளனர்.அண்மையில் இறந்த குவைத் சேது பல அமைப்புகள் நிறுவி அருந்தொண்டு ஆற்றியுள்ளார். துபாய் தமிழர்கள் பல மாநாடுகள் நட த்திய பெருமைக்குரியவர்கள்.. முனைவர் சம்பத் அவர்களின் உலகப் பொருளாதார மாநாடு இருமாநாடுகள் நட த்திய சாதனையாளர்கள். அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் யான் கலந்துகொண்டேன் அங்கு வாழும் சாதனையாளர்களைக் காணும் நல் வாய்ப்பு கிட்டியது. பட்டயக் கணக்கர்கள் ஏராளமனோர் அங்கு தொழில் புரிகின்றனர். அரபு  நாடுகளில் திரைப்பட கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பக நடைபெறுகிறது.தமிழகத்தின் தினத்தந்தி நாளிதழ் அங்கு வெளிவருகிரது. சிறப்பாக அரபு நாடுகளின் செய்திகளை வெளியிருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள்

ஐரோப்பிய நாடுகளில் தமிழின் ஆளுமை மிகச் சிறப்பாக விளங்குகிறது. இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நட த்திய பெருமை பிரான்சு நாட்டிற்கு உண்டு.புதுவைப் பெரும்க்கள் பலர் குடியுரிமை பெற்று த்மிழர்கள் வணிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்குகின்றனர். பல்வேறு இன்னல்களில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆலயங்கள் வணிக நிறுவனங்கள் பண்பாட்டு விழாக்கள் என உச்ச நிலையில் பணியாற்றுகின்றனர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 3ஆம் மாநாடு செருமனி பெர்லினில் நட த்தினோம். 19993 ஆம் ஆண்டு 3 நாட்கள் செருமனியில் நட த்துவது என்றால் தமிழ் தமிழர்  எழுச்சியை எண்ணிப் பாருங்கள். ஐம்பது பெருமக்களை அழைத்துச் சென்றோம் கி.ஆ.பெ விசுவநாதம் நீதியசர் வேணுகோபால்  போன்ற முதிர்ந்த அறிஞர்கள் பங்கேற்றனர். ஈழத்தமிழர் குணரத்தினம் தலைமை தாங்கி நட.த்தினார். இன்றும் அங்கு தமிழ் தமிழர் இலகியம் பண்பாடு இசை என அனைத்துத் துறையிலும் மேலோங்கி உள்ளனர். அண்மையில் யான் பிரன்சு சுடார்பக்சு ந்கருக்கு பொங்கல் விழாவிற்கு அழைக்கப்பட்டேன். மிகச் சிற்ப்பாக அனைத்துத் த்மிழர்களும் கூடி விழார் நட த்தினர்.தமிழ்ச்சோலை எனும் அமைப்பின் மூலம் பிரான்சு வாழும் தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி வழங்குகின்றனர். திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும தமிழ் ஆசிரிய்ர்க்ளுக்கு விருதுகள் வழங்கினேன். ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் ஈழத்தமிழர்கள் மாநாகராட்சி சட்டமன்றம் என அனைத்துத் துறைகளிலும் பொறுப்பேற்று தமிழர் பெருமையை நிலை நாட்டியுள்ளனர்.

அமெரிக்கா தமிழர்கள்

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ச்சங்கங்கள் வைத்து அனைத்துச் சங்கங்களும் இணைந்து ஃபெட்னா அமைப்பைன் மூல ஒவ்வொரு மாநிலங்களின் தலைநகர்களிலும் மாநாடுகள் தமிழ்கத் தலைவர்கள் இலக்கியவாணர்கள் சிறந்த கலைஞர்களை அழைத்துசிறப்புடன்  நட த்தி  சிறபிக்கின்றனர். உலகெங்கும் தமிழர்கள் பங்கேற்ற மாநாடாக. பத்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் எங்கள் தமிழ்ப்பணியைப் பாராட்டி விருது வழங்கினர். சட்டக் கதிர் ஆசிரியர் ச்ம்பத் பங்கேற்றார். இங்கு நடக்கும் மாநாட்டின் சிறப்புஅங்கு வாழும்  கல்வியாளர்கள் மருத்துவர்கள் பொறிஞர்கள் களப்பணியாளர்களாக உள்ளதைக் கண்டு வியந்திருகிறேன் . பல சங்கங்க்ளில் தமிழ் இதழ்கள் நட த்தி தம் படைப்புகளை படைத்து சாதிக்கின்றனர் அமெரிக்கத் தமிழர்கள்.



கனடா தமிழர்கள்

கனடா நாட்டில் நம் தமிழர்கள் அமைச்சர்களாகவும் மாநகராட்சி உறுப்பினர்களாவும் சிற்ப்பாகப் பணியாற்றுகின்றனர். ஈழத் தமிழரளுக்கு குடியுரிமைகொடுத்து குடிமக்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையும் வழங்கி தமிழ் தமிழர் மேம்பாடு அடைய வழிகோலியுள்ளது. எண்ணற்ற தமிழ் இதழ்கள் வெளிவருகின்றன, எண்ணற்ற தமிழ் வானொலி தொலைக்காட்ட்சிகள் வலம்வருகின்றன. தமிழ் இயக்கங்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. ஈழத்தில் உள்ள ஆலயங்கள் அனைத்தையும் அங்கு உருவாக்கி வழிபட்டு வருகின்றனர். நாளும் நூல் வெளியீடுகள் நாட்டிய அரங்கேற்றங்கள் மாநாடுகளென தமிழர் பண்பாட்டுக் களமாக கனடா விளங்குகிறது. 

தென் ஆப்ரிக்கா தமிழர்கள்

ஆங்கிலேயர்களால் கூலிகளாக அழைடத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் இனறு தொழில் அதிபர்களாக கல்வியாளாராக பண்பாட்டுத் தூதர்களாக உள்ளனர்.முனைவர் சம்பத் பொருளாதார மாநாட்டிற்கு வருகை வந்த லோகிநாயுடு டர்பன் துணை மேயராக இருந்த பெருமைக்குரியவர். மிக்கி செட்டிஎனும் தென் ஆப்ரிக்கா தமிழர் தமிழைப் ப்யிற்றுவிக்க சென்னை இராமசாமி பல்கலைக்கழ்கத்தோடு இணைந்து 60 தமிழாசிரியர்கள் சென்னையில் பயிற்சி பெ’ற்றனர்.  டர்பன் நகர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் வழி அனைவருக்கும் பட்டம் வழங்கினார். தமிழ் அறிஞர்கள் உலகமெங்கும் பங்கேற்றதைக் கண்டு யான் வியந்துள்ளேன்.

சீனாவில் தமிழர்கள்

பேராசியர் நாகநாதன் அவர்களின் சினப் பயணம் நூலைப் பல்லாண்டுகளுக்கு முன் படித்டிருந்தேன். அதில் காங்காங் வழியில் சீனா பயணத்தை எழுதியிருந்தார். நானும் காங்காங்கில் வாழும் தமிழர்களை சந்தித்து விட்டு ச் சென்றேன் காஙகாங்கில் குழுவோடு பயணித்தவர்களுகு நம் எல்.கே.எ. சையத் அகமத் தம் நிறுவணத்தில் உணவு வழங்கினார். எம் தந்தையார் அவ்வை நடராசார் பயணத்தின் போது யாசின் அவர்கள் விருந்தளித்தார். நண்பர் அலெக்சு காங்காங் முழுமையும் சுற்றிக் காண்பித்து தொடர் வண்டியில் சீனா வழியனுப்பினார். நமது சென்னை செங்கல்பட்டு தூரம்தான் தொடர்வண்டியில் சென்றேன்.அங்கு ஒரு பகுதியில் தொடர்வண்டியை நிறுத்தி சீன விசா வழங்குகின்றனர் பின் சீனாவின் சன்சென் ப்குதிக்குச் சென்றேன். சன்செங்கிலிருந்து சீனாவின் அனைத்துப் ப்குதிகளுக்கும் செல்லாலாம்.. சென்சங்க் பகுதியில் தமிழர்கள் உணவு கடை வைத்துள்ளனர். தற்போது காங்காங் சீனாவுடன் இணைந்துள்ளது. தமிழ் வானொலி காங்கில் பல்லாண்டு காலமாக உள்ளது. அழகு தமிழில் சீனப் பெருமக்கள் பேசுகின்றனர். சீனாவிற்கும் தமிழகத்திற்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு. பயண முன்னோடி யுவான்சுவாங் இந்திய தமிழக பயணத்தை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் சீன்ப் பிரதமர் சின்பிங் இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் சந்திப்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. தமிழை சீன வளரும் தலைமுறைகள் பயில்கின்றனர். நம் ம்லேசியா வாழ் தமிழ்ப் பிள்ளைகள் சீனம் பயில் கின்றனர். 

சப்பானில் தமிழர்கள்

2002 ஆம் ஆண்டு சப்பான் ஒசாக்கா நகருக்குச் சென்றேன். அங்கு வளர்ச்சியின் சிகரமாக உள்ள சப்பான் கண்டு வியந்துள்ளேன்.ஒசாகா டோக்கியோ புல்லட் விரைவு வண்டியில் பயணித்த அனுபவம் இன்றும் பசுமையாக உள்ளது. இகேதா என்னும் பெருமகன் மிகச் சிறந்த கவிஞர். அவர் பெயரில் இகேதா பல்கலைக் கழகம் உள்ளது. அருமைத் த்ந்தையார் பெருங்கவிக்கோவின் அரிய முயற்சியால் நம் நாட்டு சேதுபாசுகரா கல்விக் குழும ம் மூலம் இகேதா மகளிர் அறிவியல் கல்லூரி நிறுவி சப்பான் தமிழகம் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெற்றுள்ளது. மயிலாடு துறையை சேர்ந்த செந்தில்குமார் பேரியார் கொள்கைகளில் பற்றுள்ள பெரும்கனாக சப்பானில் பணியாற்றுகிறார். சப்பானில் தமிழ்சங்கம் வைத்து பொங்கல் விழா ஆண்டு தோறும் நட த்துகின்றனர். அண்மையில் நம் முதல்வர் ஸ்டாலின் சப்பான் சென்ற்போது அனைவரும் குடும்பத்தோடு சந்தித்து தமிழர் பெருமையை உலகுக்கு பறைசாற்றினர். சப்பான்  தமிழ் ஆய்வுகளை உடன்பாடுகளை இரு நாட்டு அறிஞர்களும் தொடர்ந்து வழங்கியுள்ளனர்.

ஆசுத்ரேலியா தமிழர்கள்

ஆசுத்ரேலியா தமிழர்கள் மற்ற் நாடுகளைப் போன்றே ,மிகச் சிறந்த மாநாடுகள் நட த்தி தமிழ் உயர்வில் பெரும் பங்காற்றுகின்றனர். மிகச் சிறந்த கல்வியாளர்கள் நூலாசிரியர்கள் வாழும் நாடாக ஆசுத்ரேலியா விளங்குகிறது.

இந்தோனிசியா தமிழர்கள்

இந்தொனோசியாவில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் மேடான் பகுதிக்குச் செல்லாலம். அங்கு கோயில்கள் தேவாலயங்கள் என வழிபாட்டு நிலையில் உள்ளனர். பலர் தொழில் துறையிலும் சிற்ந்து விளங்குகின்றனர். இந்தோனியாவின் பணத்தாளில் விநாய்கர் படம் அச்சடிக்கப் பட்டுள்ளது.


மொரிசுயசு ரீயூனியன் தீவுகள்

மொரிசுயசு தீவு பல தமிழர்கள் வாழும் பகுதி. உல்கத் தமிழராய்ச்சி மாநாடு நடத்திய பெருமைக்குரிய நாடு. திருவள்ளுவரின் எழில் பொங்கும் சிலையை நிறுவியுள்ளனர்.பரசுராமன் மொரிசுயசின் சனாதிபதியாக இருந்து உலகத் தமிழ் மாநாடுகள் பலவற்றில் பங்கேற்று தமிழர் பெருமையை பறைசாற்ரியுள்ளார். ரியீனியன் தீவுகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். யோகாச்சாரி நீலமேகம் தமிழர் வழிபாடு முறைகள் என 600 பக்க நூலை வெளியிட்டுள்ளார். சென்னையில் அவரது வெளியிட்டோம்.


நிறைவுரை

ஒட்டு மொத்தமாக தமிழ் உலக் மொழியாகியுள்ளது . தமிழர்கள் உலக இனமாக வலம் வருகிறது. உலகத் தமிழர்கள் ஒருங்கிணைந்து தமிழ் பண்பாட்டை தமிழர் சிந்தனைகளை மேலும் மெரூகூட்ட கலைஞர் நூற்றாண்டில் ஒன்றுபடுவொம் தமிழால் வெல்வோம்.

(12/8/2023 அன்று முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாட்டில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வழங்கிய ஆய்வுக் கட்டுரை)


Tuesday, July 25, 2023

 பூமியை ஆளும் குறளோன்

காற்றுள உயிர்மை போன்று   

        கண்ணிமை காத்தல் போல

 உற்றுயிர் உரிமைக் குறளே 

உலகினை ஆளக் கண்டேன் 

 கற்றலில் தமிழைக் கொண்டோர் 

கவின்மிகு குறளின் ஆசான் 

நற்றவ வள்ளுவர் அமர்ந்தார் 

நயத்தகு பள்ளக் கில்தான்


உரிமையாய் உயிராய் எண்ணி

உன்னத குறளை ஓதி 

விரிமன பெர்னின் தந்தை  

வித்தகத் தமிழர் கூடி

  உரித்தநல் பெண்கள் எங்கும் 

உ:ளமகிழ் சேலைக் கோளம் 

கருத்தினில் தமிழர் மாட்சி

களிப்பினில் சுவிசில்  நின்றேன்


பள்ளக்(கைத்} தூக்கிய இளையோர் 

பல்லாண்டு தமிழைப் பாடும்

 தள்ளாத முதியோர் சேர்ந்தே 

தகுதியாம் குறளைப் போற்றும்

 வில்லினில் பாயும் அன்பாய் 

வலம்வரும் சுவிசும் தாண்டி 

சொல்லினில் வென்ற குறளோன் 

சுழற்சியாய் பூமிப் பந்தில்




வள்ளுவர் பள்ளி கண்ட 

வான்நிகர் விழாவின் மாட்சி

 அள்ளிய அமுத ஊற்றை 

ஆசான் முருக வேளும்                                                                                     

தெள்ளிய தமிழர் தேர்ந்த

தொல்தமிழ் விழாவில் யானும்

 உள்ளொளி பொங்க நன்றாய் 

உறவாடி ந்ன்றேன் வென்றேன்


4-2-2023 அன்று சுவிடசர்லாந்து திருவள்ளுவர் ஆண்டு திருவிழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் பங்கேற்றபோது எழுதிய பாடல்ஆ


Tuesday, May 2, 2023

 துன் சாமிவேலு புகழ் வாழி 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


மலேசியத் தமிழர் மாண்பே 

 மாசிலா தொண்டுச்  செல்வ

 உலகினில் தமிழர் வாழ்வில்  

எண்டிசை சாமி வேலு 

கலையினில் வேந்தன் சாமி

 கற்றலில் உயர்ந்த பொறிஞர்  

மலெயெனப் புகழின்  உச்சம் 

மன்னனே  சென்ற தெங்கே  !


அதிருமே உன்றன் பேச்சு 

அக்கங்காரம் அடக்கும் மூச்சு

 விதியிலா மக்கள் தம்மில் 

வியத்தகு மாற்றம் கண்டோய் 

மதியென மலேசிய மண்ணில்  

மாண்புடன் மூத்த அமைச்சாய் 

விதிகளை  வென்ற எங்கள் 

சரித்திரச் செம்மல் எங்கே! 


மந்திரம் ம இ க  நாதம் 

மாத்தமிழ் தமிழர் தலைவர் 

முந்திடும் சாலை மாற்றம் 

முனைந்துமே கண்ட தீரர்  

உந்தியே தமிழ் நேசன் 

உயர்த்திய இதழின் ஆசான் 

நொந்துன் சாமிவேலு புகழ் வாழி 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


மலேசியத் தமிழர் மாண்பே 

 மாசிலா தொண்டுச்  செல்வ

 உலகினில் தமிழர் வாழ்வில்  

எண்டிசை சாமி வேலு 

கலையினில் வேந்தன் சாமி

 கற்றலில் உயர்ந்த பொறிஞர்  

மலெயெனப் புகழின்  உச்சம் 

மன்னனே  சென்ற தெங்கே  !


அதிருமே உன்றன் பேச்சு 

அக்கங்காரம் அடக்கும் மூச்சு

 விதியிலா மக்கள் தம்மில் 

வியத்தகு மாற்றம் கண்டோய் 

மதியென மலேசிய மண்ணில்  

மாண்புடன் மூத்த அமைச்சாய் 

விதிகளை  வென்ற எங்கள் 

சரித்திரச் செம்மல் எங்கே! 


மந்திரம் ம இ க  நாதம் 

மாத்தமிழ் தமிழர் தலைவர் 

முந்திடும் சாலை மாற்றம் 

முனைந்துமே கண்ட தீரர்  

உந்தியே தமிழ் நேசன் 

உயர்த்திய இதழின் ஆசான் 

நொந்திடும் எழுத்தின் வாழ்வே 

நோன்பே எங்கு சென்றாய்! 


சாதனைத் தலைவர் எங்கள் 

சந்ததி  கண்ட சான்றோன் 

பாதகம் போக்கி தமிழ்ப் 

பள்ளியை காத்த கோவே 

ஓதிடும் கோவில் கண்டாய் 

ஓய்விலா மாந்த நேயா

 மேதினி  பல்கலைக் கழகம்

 மேவிய அறமே எங்கே!திடும் எழுத்தின் வாழ்வே 

நோன்பே எங்கு சென்றாய்! 


சாதனைத் தலைவர் எங்கள் 

சந்ததி  கண்ட சான்றோன் 

பாதகம் போக்கி தமிழ்ப் 

பள்ளியை காத்த கோவே 

ஓதிடும் கோவில் கண்டாய் 

ஓய்விலா மாந்த நேயா

 மேதினி  பல்கலைக் கழகம்

 மேவிய அறமே எங்கே!

Monday, May 1, 2023

 உலகத் திருக்குறள் மையம் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலைஞரின் கவிதைமழை நூல் ஆய்வுரை

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் 

ஆசிரியர் தமிழ்ப்பணி

 இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

முன்னுரை

முத்தமிழறிஞர் தலைவர் தலைவர் கலைஞர் அவர்கள் நூற்றாண்டு விழாவை உலகத் திருக்குறள் மையம்  கொண்டாடுவது சாலச்  சிறந்ததாகும். ஐயன் திருவள்ளுவரை குமரியில் நிறுவி உலகப் பார்வையை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர். சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை நிறுவி திருக்குறள் முழுமையும  சலவைக் கற்களால் பொறித்துவைத்து அழியாப் புகழை நிறுவியுள்ளார்  தலைவர் கலைஞர். வள்ளுவர் கோட்டத்திலேயே தொடர்ந்து உலகத் திருக்குறள் மையம் திருக்குறள் சான்றோர்களின் முழக்கங்கள் 1006 நிகழ்வுகளைத் தாண்டி நடைபெறுவது தமிழர்கள் பெற்ற பெரும்பேறு இன்று  தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி தலைவர் கலைஞரின் நூல்களை ஆய்வு செய்வது பெருமைக்குரிய ஒன்றாகும்.

கலைஞரின் கவிதை மழை

 அதில் தலைவர் கலைஞரின் கவிதை நூலை ஆய்வு செய்வதில் பெருமையுறுகிறேன். உலகத் திருக்குறள் மையத்திற்கு நன்றியை உரித்தாக்குகிறேன். 

கவிதை மழை நூலிற்கு அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் சின்னக் குத்தூசி அவர்கள் “தட்டிக் கொடுக்காமலே பூரணத்துவத்தை நோக்கி வளரக் கூடியவன் முதல்தரக் கவிஞன்” என்று ஒரு கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் அதை அரூப் தருமோ சிவராமு என்கிற பிரமிள்  எழுதியுள்ளதாக என்கிறார். இந்த உண்மையை கவிதை மழை படிப்போர் உணரலாம். 

கலைஞரின் சாதனை

தலைவர் கலைஞரின் மொத்த கவிதைகளையும் தொகுத்து கலைஞரின் கவிதைகள் நூலை தமிழ்க்கனி பதிப்பகம் உரிமையில் சென்னை சீதை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.இந்நூல் 210 தலைப்புகளில் 1107 பக்கங்கள் வெளியாகியுள்ளது. சிறந்த கட்டி அட்டையோடு மிகச் சிறந்த செம்பதிப்பாக உள்ளது. ஒவ்வொரு கவிதையும் எந்த ஆண்டு நிகழ்வு விபரம் குறிப்பிடப் பட்டுள்ளது. தலைவர் கலைஞர் உ;லகம் தழுவிய அளவில் தொடாதா துறை இல்லை என்னும் அளவிற்கு கவிதை மழை பொழிந்துள்ளார். தம் வாழ்க்கையே திருக்குறள் வாழ்வாக வாழ்ந்த பெருமகன் தலைவர் கலைஞர். 

திருக்குறள் பணி

 கவிதை மழை நூலில் 1-1-2000ஆம் ஆண்டு குமரியில் ஐயன் திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்து வரலாற்றுச் சாதனை இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்கள் உலகம் முழுமையும் பங்கேற்ற பெருவிழா. அவ்விழாவில் உலகத்திருக்குறள் மையமும் தங்கள் பங்களிப்பு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐயன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் 31-12-1999 அன்று அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர் தலைமையில் சிறப்பான கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்தில் தலைவர் கலைஞர் அவர்களின்  கவிதை திருக்குறள் காட்டிய பரிமாணங்களை தம் சிம்மக் குறளால் குறளைக் கூறி தம் மொழியையும் சிறப்பாகப் பாடியுள்ளார். தலைவர் கலைஞரின் முழக்கத்தில் சில

கலைஞரின் திருக்குறள் சிந்தனைகள்

“ஆதி பகவன் மைந்தன் ஆணை வழி நடப்போம்

அதை தடுக்க முனைவோரின் செயல்களை முடிப்போம்” (பக்.691) அன்னத்தின் தூவியிலே கறுப்பின் சின்னத்தைக் காணப்போமொ அதனால்தான் குறையிலாக் குறள் என்றும்

அணுக்கூடக் கறையில்லா மறை என்றும் கூறுகின்றோம் சமத்துவப் பேரொளியாய் சமுதாயப் புரட்சி செய்யும்

 தத்துவப் பெரு ஞானியாய் 

மகத்துவம் மிக்க் கொண்ட மனித குலத் திருவிளக்காய் 

பூமிக்கே புனித உரை வகுத்தளித்துப்  

புத்தெழுச்சி பெற்றுத் தந்த புனிதனவன் 

அருளாதாரம் வழங்கிப் போற்றியவன்  அரசியல் பொருளாதாரம் என ஆய்வுரை ஆற்றியவன் 

–ஆளும் காலச்சாரம் எதுவெனக் காட்டியவன்!

 வள்ளுவன்! வள்ளுவன் வள்ளுவன்! (பக்.693) 

ஆதிபகவனாக திருவள்ளுவரைக் கூறி அவர் கருத்துக்களை முடக்குவோரை முடிப்போம் என புரட்சிக் கனலாக முழங்கியுள்ளார். தத்துவப் பெருஞானி சமுத்துவப் போராளி புத்தெழுச்சிப் புனிதன் அருளாதரம் வழங்கியோன் என புகழாரம் சூட்டியுள்ளார் கலைஞர்.

தம் கவியரங்க தலைமைக் கவிதையில் 36 திருக்குறட்பாக்களை மேற்கோளாக்க் காட்டி தம் நடையில் விளக்கமும் தந்து மெய்சிலிர்க்க வைக்கிறார் தலைவர் கலைஞர். அதற்குச் சான்றாக ஒருகுறள் 

 ”பொழியும் மழையில் பொல்லாக் கோடையில்

புற்றுகள் வளரினும் புதர்கள் மூடினும் – கடவுள் 

புலப்படும் வரையில் கடுந்தவம் புரிவேனென்று 

பலப்பல சொல்வதெல்லாம் தவமன்று என்பார் 

 எந்த உயிர்க்கும் தீங்கு இழைக்காதிருப்பதும் 

எதையும் தாங்கு இதயம் பெற்றிருப்பதுமே

 தவமெனப் படுமென்று  தகைவாய்ச் சொல்வார்

 தாரணிக்கே மறை தந்த தமிழ் மறை ஞானி” (பக்.703) 

அதற்கான குறள் பாடல்

 உற்றநோய் நோன்றல் உயிர்குறுகண் செய்யாமை 

அற்றே தவத்திற் குரு

 குமரியில் சிலையைத் திறந்து வைத்து அந்த சிலையை திறந்த வைக்க உலகத் தமிழர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்வை தம் கவியரங்க உரையில் உணர்ந்து குறட்பாக்களை பதிவிட்டுள்ளார் தலைவர் கலைஞர்..

கையாளும் உத்திகள்

 13-4-1968 ல் நடந்த வானொலி கவியரங்கில் கலைஞர் பதிவு வள்ளுவரை தந்தையாக்க் கூறுகிறார்.

”ஒத்தவயது ஒத்தகுணம் ஒத்தமுகம் 

உள்ள நல்லீர் உமைப் பெற்றெடுத்த தாய் யார் என்றேன்

 தமிழ் என்றார் தந்தையோ வள்ளுவராம்! (பக்150)

அண்ணா எனத் தழுவிக்கொண்டார். 

“யாகவராயினும் நாகாத்தல் முதற்படியாம் 

வாய்க்குள் வெறி நாய் காத்தல் ஆணவத்தின் மேற்படியாம் அங்கிருந்து உருண்டு விட்டால் உருவின்றி 

சுழன்று போகும் நெஞ்சழுத்தம் (பக்.152) என் வள்ளுவரின் நாகாக்கும் நயத்தை தம் மொழியில் கூறியுள்ளார். 

அரசு கட்டில் மணிமகுடம் அணிமணிகள் துறந்துவிட்டு 

ஆர்ண்யம் சென்ற விசுவாமித்தர்ரும் 

மேனகையின் விசுவாமித்தராரய் ஆன கதை அறியீரோ

 ”நீட்டலும் மலித்தலும் வேண்டா உலகம் 

பலித்தது ஒழித்து விடின் ”

இதனை மறுப்பார் கயவரில் ஒரு வகையாம் அதில் பல்வகையும் பாடுதற்கு திருச்சிற்றம்பலம் வருகின்றார் என குறள் கூறி கவிஞரை அழைக்கின்றார். (பக்.182) 

திருக்குறள் கருத்துகள்

அன்றைய சிறுவர் அரங்கில் ( கலைவாணர் அரங்கம்)16-9-1968அன்று திருவள்ளுவர் திருநாள் கவியங்கில் வள்ளுவப் பேராசானை வாயார மனதார உலகறிய மொழிந்துள்ளார் 

”தலைவர் கலைஞர்.இருள்சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை என்று அருளுடைமை அருள்கின்றார் குறள் அறிஞர் அன்புடைமை, அறிவுடைமை ஆள்வினையுடைமை பண்புடைமை நாணுடைமை பொறையுடைமை ஒழுக்கமுடைமை ஊக்கமுடைமை இப்படி பத்துடை இயற்றிக் காட்டி எனைத் தேற்ற முயல்கின்றார் ” (பக்.200) 

என கவிதை மழை பொழிகிறார் தலைவர் கலைஞர்.

 கையாளப்படும் முறைமை

வள்ளுவர்க்கு சிலை வைத்துச் சிறப்புச் செய்யும் தமிழ் நாடு 

அதை எதிர்த்துத் துள்ளுவோர்க்கு 

மூக்காணாங் கயிறு மாட்டும் மறவர் வீடு 

ஐந்தெழுத்தில் வள்ளுவர் அறிக என்போம்

 அறியாதார் இரண்டெழுத்தில் வள் என்று குரைப்பர் 

மூன்றெழுத்தை குறைப்பார். வள்ளுக்கு இடையே கால் போட்டு 

வாள் எடுத்தால் வாள் வாள் என்பர்! (பக்.202) 

என போர்முரசம் கொட்டுகிறார். திருவள்ளுவரின் படத்தையும் குறளியும் பேருந்தில் மாட்டியதை நயம்பட உரைக்கிறார் தலைவர் கலைஞர்

.28-7 2002 அன்று கழகம் தமிழரின் அறம் என்ற தலைப்பி.ல் ஐயன் நெறிபோற்றி எனக் குறிப்பிடுகிறார். 

“அறிவுக்குத் தெளிவேற்றி ஒளியேற்றி 

ஐயன் திருவள்ளுவரின் நெறிபோற்றி 

அகழ்ந்திட அகழ்ந்திட நிறைந்து வழிந்திடும் 

அன்பின் ஊற்றாகும் அமுதப் பெருக்காகும்” (பக்.793)

ஆய்வு முடிவு 

கவிதை மழை தமிழர்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் நூலாக உள்ளது. ஒவ்வொரு தலைப்புகளும் ஆய்வுக்குரிய அகண்டப் பெருவெளியாக உல்ளது. இவ்வாய்வில் திருக்குறள் சார்ந்ததே ஆய்ந்துள்ளேன்.ஆய்வாளர்கள் மூழ்கி முத்தெடுக்க ஒரு பெருங்கடலாக கவிதை மழை உள்ளது. 

நிறைவுரை

இறுதியாக ஒருபதிவை செய்வது என் கடமையாகும். தலைவர் கலைஞரை அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோவோடு அடிக்கடி செனறு காண்பது வழக்கம். ஒருமுறை பன்னாடுத் தமிழ் நடுவம் நிகழ்ச்சிக்கு அமெரிக்க மருத்துவர் பஞ்சாட்சரம் அவர்களோடு அழைக்கச் சென்றிருந்தேன். அன்று தலைவர் கலைஞர் தேனீர் வழங்கி தாம் எழுதிய கவிதையை படித்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். 

அது யான் பெற்ற பெரும்பேறு இன்று தலைவர் கலைஞர் கவிதைகள் அனைத்தையும் படிப்பது அவனருளாலே அவன் தாள் வணங்கி என கலைஞர் பெருமானை எண்ணிப் பெருமையுறுகிறேன். கவிதைகளின் வள்ளுவப் பெருமான் பற்றியது மட்டும் குறிப்பிட்டுள்ளேன். கவிதை மழை படியுங்கள் தமிழர் வரலாற்றை அறியுங்கள். 


Monday, March 13, 2023


ஈழத்துப் போராட்டங்களால்  பிரான்சில் புலம் பெயர்ந்த   உங்களோடுஅடுத்த தலைமைமுறைகளோடு 2054 திருவள்ளுவர் ஆண்டு பொங்கல் விழா

அருமை நண்பர் கிருபானந்தன் அவர்கள் சென்னை வருகை தந்தபோது சென்னையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் ஒரு வரவேற்பு வழங்கினோம். அந்த வரவேற்பின் தன் தம்பி மகன் திருமணம் ஈழத்திலிருந்து தம் தாய் தன்னோடு படித்த நண்பர் முரளி குடும்பம் பிரான்சில் தம் மகனோடு படிக்கும் பிரான்சு மாணவர்கள் என உலகச் சுற்றத்தையே கூட்டியிருந்தார் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் பட்டம் வழங்கி சிறப்பித்து மகிழ்ந்தோம்.1993ஆம் ஆண்டு ஐரோப்ப்பிய மண்ணின் செருமணி பெர்லின் நகரில் மாநாடு நட்த்தினோம். தமிழகத்திலிருந்து 50 பெருமக்க்கள் ஈழக் குடும்பங்களில் த்ங்கியிருந்து இன்றும் அந்த்த் தொடர்புகள் பல்லிப் பெருகி தோப்பாக உள்ளது. அந்த காலக்கட்ட்த்தில் எத்தனையோ எம் ஈழத்துச் சொந்தங்கள் இங்கு வருவதற்கு மன்றம் பெரும்ப்பணியாற்றியுள்ளது. ஈழத்து போராட்டங்களால் புலம் பெயர்ந்த நீங்க்ள் இன்று அடுத்த தலைமைமுறைகளோடு திருவள்ளுவர் ஆண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறீர்கள். அந்த தமிழ்ப் பெரும விழாவிற்கு என்னை அழைத்துள்ளீர்கள். பிரான்சு வாழ் எம் தமிழ்ச் சொந்தங்களே உங்கள் அனைவருக்கும் தமிழக மக்களின் சார்பிலும் உலகத் தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டு பொக்கள் வாழ்த்துக்களை தெருவித்துக் கொள்கிறேன். நான் வருவதை கிருபா அவர்களுக்கு தெரிவித்து சூரிச் விமான நிலையம் நேற்று வந்தடைந்தேன். கிருபா தம் தங்கை மக்னோடு என்னை பூங்கொத்து கொடுத்து வரவேற்று இரவொடு இரவாக சுடாபர்க் நகர் அழைத்து வந்துள்ளார். கடுமையான குளிர் இந்தக் குளிரும் இருப்பினும். தங்கள் அன்பால் மிக வெதுவெதுப்பாக உள்ளது. காலை எழுந்தவுடன் கிருபா என்னை ஓய்வெடுங்கள் என்று கூறினார் இல்லை நான் அரங்கம் வருகிறேன் என்று காலையில் அவரோடே வந்துவிட்டேன். என்னை. ஊர்தியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றபோது ஒரு அழைப்பு கிருபா கைப்பேசிக்கு வந்த்த்து நான் எடுத்துப் பேசினேன் நான் உசா அக்கா பேசுகிறேன் என்ற் ஒரு குரல் வந்த்து நானும் திருவள்ளுவர் பேசுகிறேன் என்றி உரையாடினேன் நான் அரங்கம் வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார். கிருபாவுடன் கூறுங்கள் என்று கூறினார். அரங்கம் வந்தவுடன் அனைவரும் பம்ம்பரமாகச் சுழன்று கூட்ட் நிகழ்வை நட்த்த தாங்கள் மேற்கொண்ட உழைப்பை தமிழ் உணர்வை பண்பாட்டை  காக்கும் பாங்கை நெஞ்;சார[ப் போற்றுகிறேன். இந்த மேடை தமிழ்ப் பண்பாட்டைக் காக்கும் மேடை இந்த அரங்கம் தமிழ்ப் பண்பாட்டும் சுரங்கம். என் அருகில் ஒரு நண்பர் அமர்ந்தார் தான் சுந்தர் என அறிமுகப் படுத்திக் கொண்டார். கிருபா என் மைத்துனர் என்றார் அவர் தங்கையைத்தான் மண்ந்துள்ளேன் என்றார். நானும் கிருபாவின் தங்கை ருக்குமணியும் ஈழத்தில் ஒருவர் ஒருவர் விரும்பினோம் திருமண்ந்திற்கும் குடும்பத்தார் ஒப்பவில்லை. போராட்ட காலம் நான் கடும் போராட்ட்த்திற்கிடையில் இன்னலின் உச்சத்திற்கு சென்று ப்ல்வேறு நாடுகளைக் கடந்து செருமணிக்கு அகதியாக வந்து செருமனி சட்ட நடவடிக்களையெல்லாம் தாங்கி இந்த சுடார்பெர்க் நகர் வந்தேன். மீண்டும் எட்டு ஆண்டுகள் கழிந்து எவ்வித்த் தொடர்பும் இன்றி எனையே நினைத்து மணமாகாமல்இருந்த என் அருமைக் காதலி ருக்மணியை  ஈழம் சென்று பெற்றோர் ஒப்புதலோடு அழைத்து வந்து இஙுகு திருமணம் செய்து கொண்டேன் என்றார். நான் ஒரு நிமிடம் மலைத்து விட்டேன். ருக்குமணி அம்மா எந்திருங்க அருமை நண்பர்களே இந்த இணையருக்கு ஒரு பலத்த கரஒலி தட்டுங்கள். 

ஞாயும் ஞாயும் யாராகியரோ எந்தைய்ம் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்றா புறநானூறுப் பாடலின் இலக்கணம் இந்த இணையர். அவர்கள் வந்த்து மட்டுமல்ல தம் குடும்பங்களையே இந்த மண்ணிற்கு வரவழைது தமிழ்ச் சுற்றத்தைக் காத்துள்ளனர். கிருபாவின் மனைவி கலையரசி சுந்தரின் தங்கை. அண்மையில் தமிழ்நாடு வருகை த்ந்தனர் நாங்கள் உறவாடி மகிழ்ந்தோம். குற்ற மிலனாய் குடிசெய்து வாழ்வானை சுற்றமாய்ச் சுற்றும் உலகு என்ற குறளுக்கு இலக்ணமாக வாழும் உங்கள் அனைவரையும் நெஞ்சார்ப் போற்ற்கிறேன்.


இங்கே வருகை த்ந்துள்ள அருட் தந்தை கெலன் பிராட்சிசு அவர்கள் பிரஞ்சு மொழி இதழில் பொங்கல் திருவிழா குறித்து தாம் எழுதிய கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள். எனுற்ம் தமிழைக் காக்கும் அறிஞர் சி.யூ.போப்,  அறிஞர் விராமாமுனிவர் இன்றும் உலகத் தமிழ் மாநாடுகளுக்கு காரணமாக விளங்கும் அருட்தந்தைகள் வழியில் தொண்டாற்றும் கெலன் அவர்களின் பணி ஓங்குக.  இங்கு அடுத்த தலைமுறைகள் பிரான்சு நாட்டில் பிரஞ்சு மொழி பண்பாட்டோடு வளர்ந்தாலும் நம் மொழி பண்பாடு மொழி அழியா வண்ணம் தமிழ்ச்சோலை மிகச்சிறப்பக மொழியையும் பண்பாட்டையும் காத்து வருகிறது தமிழ்ச்சொலை அமைப்பினர் அனைவருக்கும் எம்  நென்ச்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழ்ப்பணி பொன்விழா ஆண்டை முன்னிட்டு உலகெங்கும் எம்ம்மோடு இணைந்து பணியாற்றும் பெருமக்களுக்கு தமிழ்ப்பணிச்செம்மல் விருது வழங்கினோம். அப்போது கிருபானந்தம் கலையரசி இணைய்ருக்கு வழங்கினோம், தாம் பெற்ற் இன்பம் பெறுக் இவ்வையகம் என்ற கிருபாவின் வேண்டுகோளை ஏற்று தமிழ்ப்பணியாற்றும் பெருமக்களுக்கு பன்னாட்டுத் தமிழுறவு தமிழ்ப்பணிச் செம்மல் விருது வழங்ச்கி சிறப்பிப்பதில் பெரும்கிழ்ச்சியடைகிறேன். விழா தொடக்கத்தில் மகளிர் பெருமக்கள் பொங்கல் வைத்து மிகச் சிற[ப்பாக்க் கொண்டாடினீர்கள். அப்போது நான் குலவையிடுங்கள் எனக் கூறினேன் நீங்கள் அனைவரும் மிகச்சிற்ப்பாக்க் குலவையிட்டீர்கள். எங்கல் பாட்டிகள்  இராமாயி பூவாயி போன்ற பெருமக்கள் எல்லாம் மங்கல ஒலியாக எழுப்பிய ஒலி இன்று பிரான்சு ந்கரிலும் ஒலித்த்து. இங்கு நடந்த பேச்சுப் போட்டி திருக்குறள் போட்டி இசைப் போட்டி என அனைத்துப் போட்டிகள்லும் பங்கேற்ற பரிசு பெற்ற மாணவச் செல்வங்களையும் அவர்களை தமிழ்ப் பண்பாட்டோடு வளர்த்த பெற்றோர்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன். 


Saturday, January 7, 2023

 இந்திய முசுலீம்லீக் நடத்திய மீலாது தொடர்சொற்பொழிவு  சமய 

நல்லிணக்க விழா


தமிழ்மாமணி வா.முசே.திருவள்ளுவர்   

              இந்திய முசுலீம் லீக் வடக்கு மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பில் நடைபெறும் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன.  இந்த நிகழ்வுக்கு நான் வருவதற்கு காரணமான் என் பள்ளி நண்பர் குலாம் உசேன் அவர்களுக்கு எஅன் நன்றியை உரித்தாக்குகிறேன். என் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் எங்கள் தமிழாசிரியர். தந்தையார் அவர்கள் தம் பூசை அறையில் எல்லா தெய்வங்களையும் வணங்குவர். அறையில் கிறித்தவர்களின் கர்த்தரும் இந்துக்களின் பல் தெய்வங்களும்இசுலாமியரின் மக்காமதினாவும் ஆசையைத் துறந்த புத்தரும் அருட்பிரகாச வள்ளலாரும் அருட்குநாதர் சாதுகுருசாமிகளும் உள்ளார்கள். அனைவருக்கும் கற்பூர தீபம் காட்டி வழிபடுவார். சுத்த் சன்மார்க்க நெறி எம் தந்தையார் அவர்களின் வழிபாட்டில் இருக்கும். அவர் வழிபடும் முறை இசுலாமிய முறை போன்று ஐந்துமுறை முட்டியிட்டு மண்ணில் முட்டி வழிபடுவார். தற்போது எம் தந்தையாரின் நெற்றி முட்டிய வடு திராவிட இயக்கத் தலைவர்கள் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அருமை முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று குறுகிய காலத்தில் பொற்கால ஆட்சியைத்த் தரும் பெரும்க்கள் வழியில் அரிய தொண்டாற்றும் அருமைப் பெருமகன் நாஞ்சில் சம்பத் அவர்கள் வருகை தந்துள்ளார்கள். உங்களைப் போன்றே நானும்  பேச்சைக் கேட்க ஆவலாய் உள்ளேன். பெருமகனுக்கு வணக்கமநிகழ்வுக்கு தலைமைதாங்கியுள்ள ஆலம்கான் சிறப்பாக நிகழ்ச்சியை தொடர்ந்து செம்மையாக் ஒருங்கிணைத்து அனைவரையும் அரவணைத்து நட்த்தும் தொகுப்புரையாற்றும் நிசாமுதின், தொடர்ந்து  உரையாற்றவுள்ள மவுலவி அப்துல் காதர்சிராசு, முகமது அபுபக்கர் வருஅனவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதே சாலையில் உள்ள முசுலீம் மேல்நிலைப் பள்ளியில்தான் படித்தேன்.அந்தப் பள்ளியில் பணியாற்றிய அருளாளர் அப்துல் சலாம் மிக இனிமையான குரலில் ஓதுவார் அது இனிமை நாதமாக ஒலிக்கும். அருமை நண்பர் குலாம் உசேன் அவர்கள் நன்கு அறிவார்கள். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் பள்ளியில் நபிகள் நாயகம் பிறந்தநாள் கொண்டாடுவார்கள். இன்றும் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியர் பெருமகன் அப்ப்துல் சலாம் அவர்கள் நபிகள் நாயகம் சல்ல்லாகு அலைகுவ சல்லம்  அவர்களைப் பற்றிப் பேச மேடை ஏற்றினார்கள். அதுதான் எனது முதல் மேடை. இன்று உலகம் முழுமையும் மேடை ஏறி முழங்கிக் கொண்டிருக்கிறேன். 

நம் வள்ளுவப் பேராசான் எழுதிய குறளுக்கு மண்ணில் சான்றாக வாழ்ந்து வழிகாட்டிய அருளாளர் நபிகள் நாயகம் சல்ல்லாகு அலைகுவ சல்லம் அவர்கள்.. நாயகம் அவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது ஒரு அம்மையார் குப்பையை அவர் தலைமேல் வீசிக் கொண்டிருந்தார்.  ஒரு நாள் குப்பை விழவில்லை உடனே நபிகள் நாயகம் சல்ல்லாகு அலைகுவ சல்லம் அவர்கள் அந்த அம்மையாரைப் பற்றி விசாரிக்க அவர் உடல் நலமில்லை என் அறிந்து அவரைக் காணச் சென்றார். அந்த  அம்மையார் மனம் திருந்தி மார்க்கத்தின் இணைந்தார்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 

நன்நயம் செய்து விடல் 

தனக்கு தீமை செய்தவரையும் அவர் நாண நன்நயம் செய்த குறள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

நாயகம் அவர்கள் தாயின் காலடியில் சொர்க்கம் எனக் கூறி தாயின் பெருமையை நிலைநாட்டியுள்ளார். நம் உண்ணும் உணவு நா சுவைக்கும் முன் தந்தை  சுவைத்திருக்க வேண்டும் என்ற தந்தை பேணலை உணர்த்தியுள்ளார். நபிகள் நாயகம் சல்ல்லாகு சலைகுவ சல்லம் அவர்கள் ஒட்டகத்தைக் கட்டிவிட்டுத் தூங்குங்கள். உங்கள் கடமையை செய்து இறைவனைக் கும்பிடுங்கள். என தன் சீடர்களுக்கு கூறியுள்ளார்.

 ஏழைகளின் பசியை உணர இரமலான் மாத்த்தி. நோண்பு இருக்கப் பணித்தார்.. தன் உணவை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பண்பை நெறியாக்கியுள்ளார்.


 நாயகம் அவர்கள் தம் மெக்கா மதினா குர்துப் போரின்போது மக்காவை அடைந்து விட்டார் அப்போது மக்கா அரசர்மூன்று கட்டளைகள் விதித்தார்.  குறிப்பிட்ட  நாள் மதினா விலிருந்து மக்காவிற்கு நுழையக்கூடாது. மீறி யாரும் நுழைந்தால் தாங்களே அவர்களை ஒப்படைக்க வேண்டும் அவர்கட்கு  இங்கு மரண தண்டணை வழஙகப்ப்படும்அதற்கான உடன்ப்டிக்கை தயாரானது அந்த உடன்படிக்கையில் நபி இறைத்தூதர் என்ற் சொல்லை மறுத்தனர்.அப்துல்லா முகமது என்ற பெயரே இருக்கவேண்டும் என்றனர். சீடர்கள் மறுத்தனர். ஆனால்  என் பெயர் முக்கியமல்ல உடன்படிக்கைதான் முக்கியம் என ஒப்பினார்.   நபிகள் நாயகம் அவர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அவர்கள் ஒப்புதலோடு மக்கா  நுழைந்தார என்பது வரலாறு.

 இன்றைய மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தைப் போட்டு கடந்த ஒராண்டாக போராடி வருகிறார்கள். அனைத்து எதிர்க் கட்சிகளும் எதிர்க்கின்றனர். ஆனால் அவர்களின் போராட்ட உணர்வை மதிக்க்காத அரசாக உள்ளது. நான் தில்லி சென்றபோது போராட்டக் களத்தைக் கண்டு அதிர்ந்து போனேன். குடும்பத்தோடு விவசாயிகள் போராடி வருகின்றனர். நானும் பங்கேற்று சன் தொலைக்காட்சியில் ஆதரித்து பேட்டி கொடுத்தேன்.. மனித நேயம் முற்றிலும் இங்கு தவிர்க்கப் படுவதைக் காணலாம்.