Sunday, April 1, 2012

அவலம் அன்றோ

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(சென்னையில் ஆசிரியை கண்டித்ததற்காக மாணவன் கொலை செய்த கொடுமை கண்டு எழுதியது)

கல்வியை வணிகம் ஆக்கி
கருத்துமே கனியா வண்ணம்
நல்வழிப் படுத்த எண்ணா
நாட்டினர் இழிவுச் சிந்தை
பல்லூடகம் மோசம் காட்டி
பாதகம் கண்ட மோசம்
வெல்கதிர் மாணவன் இங்கே
வெட்டிய ஆசிரியை அந்தோ!

மழலையர் வளர்ப்பில் நம்மோர்
மாசிலா அன்பைத் தேரார்
உரம்தரும் தமிழக மண்ணில்
உலகினர் காணும் வேசம்
பலம்தரும் என்றே எண்ணி
பாசத்தை மறந்த போக்கால்
நலம்நிறை ஆசிரியை இங்கே
நசுங்கிடும் அவலம் அன்றோ!

கண்டிப்பு என்னும் வேலி
கருணையே துளியும் இன்றி
கொண்டிடும் வேக வீச்சால்
கொலைக்களம் சென்ற நாசம்
தண்டிக்கும் முறையை இன்றும்,
தலைமுறை ஏற்கா மாற்றம்
விண்டிடும் மாணவர் தம்மில்
விதைத்துள மோசம் தானே!

நல்லுள பெற்றோர் பெற்றார்
நாடுள சுற்றம் சூழ்ந்தார்
பள்ளியின் மேன்மை கண்டே
பாங்குடன் சேர்ந்தும் வென்றார்
உள்ளத்தால் சமூக மேன்மை
உன்னதம் மறந்த தன்மை
கள்ளமில் பிஞ்சு இன்றோ
கயமையர் சிறையில் அன்றோ

Saturday, March 31, 2012

திருக்குறள் திருத்தொண்டர் அவையம்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(11-3-2012 அனறு சென்னையில் கிராமபந்து கோட்டை சு முத்து நடத்திய திருக்குறள் திருத்தொண்டர் அவையம் நிகழ்ச்சியில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

திருக்குறள் திருத்தொண்டர் அவையம் என்ற அமைப்பை நிறுவி திருகுறளிற்காக அயராது பாடுபடும் கிராமபந்து கோட்டை சு முத்து அவர்களின் அழைப்பை ஏற்று உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி யடைகின்றேன். வருகை தந்திருக்கும் திருக்குறள் ஏழுமலை எனது ஆசான் சேச. இராசகோபாலன் நடைப்பயண அரிமா சி.மா.துரைராசு மற்றும் அனைவருக்கும் என் வணக்கத்தைக் தெருவித்துக் கொள்கிறேன்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் (466)

என்ற வள்ளுவர் வாய்மொழியை பின் பற்றாததாலேயே திருக்குறளே பைபில் குரானைப் போன்று தமிழர்கள் மறையாக நடைமுறைபடுத்த இயலாமல் உள்ளோம்.

பெருமக்களே அதைப் போக்கவே திருக்குறள் திருத்தொண்டர் அவையம் என்ற அமைப்பின் பெயரே மிகச் சிறந்த தொடராக உள்ளது. ஐயா கோட்டை சு முத்து மிகச் சிறந்த திருத்தொண்டர். தன் முதிர்ந்த நிலையிலும் எதையும் எதிர்பராது திருக்குறளிற்காக பாடுபடுகின்றார். இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் திருக்குறள் திருத்தொண்டர்களே. கிறித்தவர்கள் பங்குத்தந்தையாக உலகம் முழுமையும் உள்ளனர். மாவட்டம் வட்டம் என அனைத்துப் பகுதியிலும் முறையாக விவிலியத்தைப் பரப்புகின்றனர். அதைப் போன்று உலகம் முழுமையும் உள்ள திருக்குறள் திருத்தொண்டர்கள் ஒருங்கிணைந்து ஒரே சிந்த்னையாக திருக்குறளை பரப்பும் வழியைக் காணவேண்டும்.அதற்கு சரியான காலகட்டம் இதுவே.

செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்
செயற்கரிய செய்கலா தார் (26)

என்ற வள்ளுவப்பெருமானின் குறளிற்கேற்ப குறளிற்கே பெருமுயறசி கொண்டு உலகம் முழுமையும் பாடுபடுகின்றனர்.

அவ்வழியில் அமெரிக்காவில் வாழும் இராம் மோகன் அவர்கள் திருக்குறள் பதிப்பு 2000ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். மிகச்சிறந்த பதிப்பு பைபிளைப் போன்று வெளியிட்டுள்ளார். திருக்குறள் மூலம், உரை, ஆங்கில ஆக்கம், ஆங்கில் மொழியாக்கம், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் படங்கள் என உலகத் தரத்தில் வெளியிட்டுள்ளார்.. 1820 பக்கங்கள் கொண்ட தொகுப்பாகும். அப்பெருமகனும் அதற்கு துணைநின்ற அனைவரும் திருக்குறள் திருத்தொண்டர்களே.

மலேசியத்திருநாட்டில் ஐயன் திருவள்ளுவர் சிலையை நிறுவி திருமறை மாநாட்டை நடத்தி 1200 பக்க உலகளாவிய அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரை மலரை வெளியிட்ட முனைவர் பெரு.அ. தமிழ்மணி மிகச் சிறந்த திருக்குறள் திருத்தொண்டர். நான் மாநாட்டின் செயலராகப் பணியாற்றினேன். திருவள்ளுவர் சிலையை கொடை வழங்கியவர் செவாலியர் வி.சி சந்தோசம்.தமிழகத்திலிருந்து 160 பெருமக்கள் பங்கேற்றனர். பெருமக்கள் அனைவரும் திருத்தொண்டர்களே.

மலேசியத்திருநாட்டில் பத்துமலையைச் சுற்றி திருக்குறளை சலவைக் கல்லில் பதிய வைத்துள்ளனர். அந்நாட்டில் தமிழ் தமிழர் மேன்மையைப் போற்றும் டத்தொசிறி சாமி வேலு, கூட்டுறவுக்கழக டான்சிறி சோம சுந்தரம், மற்றும் அனைத்துப் பெருமக்களும் திருக்குறள் திருத் தொண்டர்களே. திருக்குறள் தொண்டர் மலேசியக் கவிஞர் செங்குட்டுவன் திருக்குறள் பாடல் திரட்டு என்ற பெரும் நூலை வெளியிட்டுள்ளார்

சுவிட்டசர்லாந்தில் பெர்ன் நகரில் வள்ளுவன் பாடசாலை என்ற அமைப்பை நிறுவி திருவள்ளுவர் ஆண்டை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார் முருகவேள் நந்தினி இணையர். அவருக்கு துணையாக உள்ளார் கருணாகரமூர்த்தி மற்றும் பெருமக்கள்.சுவிட்சர்லாந்தில் திருக்குறள் தொண்டாற்றும் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

மியான்மரில் யான் சென்றிருந்த போது தட்டோன் நகரில் மாரிமுத்து அவர்கள் முயற்சியால் கட்டிய வள்ளுவர் கோட்டத்தைக் கண்டேன். இப்போது அவர் காலமாகிவிட்டார். கோட்டத்தில் திருவள்ளுவர் சிலை முன் திருக்குறள் ஓதி வரவேற்றார் ஓதுவார் குருசாமி. .தட்டோனில் வள்ளுவர் கோட்டம் கட்ட முனைந்த பெருமக்கள், இன்றும் காத்து வரும் மியான்மார் தமிழர்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (50)

என்றா குறள் வழி வாழ்ந்த பெருமகன் அமரர் வேலா. அரசாமாணிக்கம் குறாளயம் என்ற அமைப்பின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறந்த திருக்குறள் தொண்டாற்றியவர் திருக்குறள் வேலா அரசமாணிக்கம். குறளியம் என்ற இதழ் மூலமும் பல்வேறு மாநாடுகளையும் கூட்டங்களையும் நடத்தி பெருந்தொண்டாறியவர். ஒரு பெரும் பொருட்செலவில் அவரோடு இணந்து தொண்டாற்றிய அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

திருகுறளிற்காகவே தம் வாழ்நாளை ஒப்புவித்து வாரந்தோறும் வள்ளுவர் கோட்டத்தில் கூட்டங்கள் மாநாடுகள் நடத்தி தம் இல்லத்தில் திருவள்ளுவர் திருக்கோயில் கட்டி பெருந் தொண்டாற்றும் குறள்ஞானி மோகன்ராசு அவர்கள் அவரோடு இணைந்து தொண்டாற்றும் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

தமிழ் அறிஞர் பெருமக்களை அழைத்துச் சென்று அலகாபாத்தில் செவாலியர் வி.சி ச்ந்தோசம் அருமைத்தந்தையார் அவர்களோடு திருவள்ளுவர் சிலையை நிறுவிய பவள விழாக் காணும் தமிழாகர் ஆறு அழகப்பன் அவருக்குத் துணைநின்ற அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

தம் இல்லத்தின் முன் சிலையை நிறுவி தனி ஒரு பெண்ணாக சாதனை படைக்கும் செல்லம்மாள், ஆண்டுதோரும் திருவள்ளுவராண்டை கொண்டாடும் இலலிதாசுந்தரம், மார்கழி மாதாம் திருக்குறள் வீதி உலா வரும் வரலட்சுமி போன்ற மகளிர் பெருமக்கள் அவருக்குத் துணைநிற்கும் பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

அமிரிக்கா வாசிங்டனில் திருவள்ளுவர் சிலையை நிறுவி பெருந்தொண்டாற்றிய பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

கனடாவில் திருக்குறள் மாநாடு நடத்தி சிறப்புக் கண்ட செல்லையா வேலுபிள்ளை மற்றும் ஆதரவீந்த அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

அந்தமானில் தமிழர் சங்கத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவி அருந் தொண்டாற்றும் பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

என் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள். எனக்குத் திருவள்ளுவர் என்ற பெயரை வைத்து உங்கள் முன்நிற்கிறேன், தம் வாழ்நாள் திருக்குறள் நெறி வாழ்ந்து சாதனை படைத்து திருக்குறள் செம்மொழிஉரை தந்த பெருமகன் அவரைச் சார்ந்து உலகளாவிய பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

பெருமக்களே யான் அமெர்க்காவில் நீயூயார்க் ஃகட்சன் நதியில் சுதந்திரதேவி சிலையைக் காணும்போது என் நினைவில் வந்தது முத்தமிழறிஞர் கலைஞர் முக்கடல் சங்கமிக்கும் குமரியில் நிறுவிய ஐயன் திருவள்ளுவர் சிலையே. வள்ளுவர்கோட்டம் குறளோவியம் என் வள்ளுவத் தொண்டுக்கு சிகரம் கண்டபெருமகன் கலைஞர். பெங்களூரில் மூடியே வைத்திருந்த திருவள்ளுவர் சிலையை திறந்த சாதனைத் தலைவர்.

பெருமக்களே யான் சிந்தையில் தோன்றிய பெருமக்களையெல்லாம் கூறெனேன். தற்போது திருக்குறள் சிந்தனை உலகம் முழுமையும ஆட்கொள்வதை உணரலாம். யான் முன்னமே குறிப்பிட்டது போன்று அனைவரும் இணைந்து திருக்குறள் மாவாட்டங்களாக வட்டங்களாக பிரித்து அனைவரும் பங்குத் தந்தைகள் விவிலியத்தை பர்ப்புவதைப் போல் பரப்பவேண்டும் என்ற வேணாவாவைக் கூறி விடைபெறுகிறேன்.

Wednesday, March 28, 2012

கொடும் பாதக இலங்கை வீழ்க!

கவிமுரசு. வா.மு.சே.திருவள்ளுவர்

மனித உரிமை மன்றம்
மதிப்பாய் ஐ.நா தன்னில்
துணிந்து அமெரிக்கா நன்றாய்
தூக்கி நிறுத்தும் வாய்ப்பை
இனிது இந்தியா தம்மை
இளித்த வாயோர் நம்மோர்
பணிய இலங்கை இன்றே
பதமாய் இணைந்தே வெல்க!

போரின் நாசச் செய்கை
பொதியாய் மக்கள் கொன்றார்
வேரின் இந்தியா இங்கோ
வேதனை ஏதும் இல்லை
பாரில் நாடுகள் கூடும்
பயங்கரச் செயலை எண்ணி
பாரே கண்டனம் செய்யும்
பாதக இலங்கை வீழ்க!

படுகொலை கண்டும் பதறா
பாவியர் வாழும் மண்ணாய்
கெடுமதி நன்றே செய்த
கேடும் விதைத்த மோசம்
நடுங்கும் கொலைகள் செய்த
நாச இலங்கை நேயம்
விடுக இந்தியத் தாயே
விரைந்து கொலைக்களம் ஏற்று!

மனித நேயம் காக்க
மாண்பாய் தீர்மானம் வெல்க
துணிந்து நாடுகள் ஏற்று
திறமாய் கண்டனம் செய்க!
பிணியாம் இராச பக்சே
பிடறி தெறிக்க ஓட
கனியும் அந்த நாளை
காலம் இணைந்தே வெல்க!

சங்க இலக்கியத்தில் சமுதாயப் பார்வை

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(25-3-2012 அன்று மறைமலைநகர் வள்ளுவர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வி,ல் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

மறைமலைநகர் வள்ளுவர் மன்றத்தின் சார்பில் நடைபெறும் நிகழ்வி,ல் பங்கேற்பதை பெரும்பேறாகக் கருதுகிறேன். நிகழ்விற்கு தலைமைதாங்கும் நீதியரசர் பஞ்சாட்சரம் அவர்களே, திருக்குறள் ஓதிய மாணவி ஐசுவரியா அவர்களே திராவிடர் கழகதின் சார்பில் நூல் வழங்கிய முத்து, என்னைச் சிறப்பித்த செல்வராசு அவர்களே, நீதியரசர் அவர்கள் மூன்று செயற்செம்மல்கள் பழனி, சிம்சன் கண்ணன்,பற்றிச் சொன்னார்கள் மற்றுமொருவர் இங்கு இருக்கிறார் அவர்தான் பெரும்புலவர் புஞ்சையரசன்.
அப்பெருமகன் அருமைத் தந்தையார் தலைமையில் உண்ணாநோண்பு போராட்டம் நடந்தபொது முன்னோட்டப் பணிகளுக்கு தந்தையாயார் தில்லி சென்றார். அதுபோது அவரது மகன் தமிழாசிரியராகப் பணியாற்றும் கிருட்டிணமூர்த்தி இல்லத்திலேயே தங்க வைத்து இறுதிவரை தந்தையும் மகனும் ஆற்றிய தொண்டை எண்ணிப்பார்க்கிறேன். முதிர்ந்த நிலையிலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழும் பெருமகன்.

பெருமக்களே பல்லாண்டுகளாக தம் வாழ்நாள் பணியாக திருவள்ளுவராண்டை நடைமுறைப்படுத்தப் போராடி வரும் ஐவர் வழி வேம்பையனார் போன்ற காலத்திகால அறிஞர் பெருமக்களின் சிந்தனையை .கலைஞர் அரசு கொண்டுவந்தது இந்த அரசு தமிழாண்டை எடுத்தாலும் உணர்வோடு பரப்பி வரும் பெரியார் சிந்தனையாளருக்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பிலும் உலகத் தமிழர்கள் சார்பிலும் உங்களின் கரவொலிகளுக்கிடையில் பொன்னாடை போர்த்தி மகிழ்கிறேன்.

வருகைதந்துள்ள ஆன்றோர் சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும்எனது முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

அருமைப் பெரியார் வழிப் பெருந்தொண்டர் வேம்பையனார் எது குறித்துப் பேச வேண்டும் என்று கேட்டபோது சங்க இலக்கியத்தில் சமுதாயப் பார்வை எனும் தலைப்பில் பேசப் பணித்தார். சென்ற மாதம் கலைஞர் தொலைக்காட்சியில் என்னைப் பேட்டி கண்ட ஊடக அறிஞர் தம்பிராசா அவர்கள் தமிழகத்தில் நடந்து வரும் சல்லிக்கட்டு விளையாட்டின் அவசியம் குறித்து உரையாடினோம். மட்டைப்பந்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தமிழர்களின் வழிவழி சல்லிக்கட்டுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறினேன். அப்பொது சங்க இலக்கியத்தில் உள்ள காட்சிகளை விரிவாகக் கூற இயலவில்லை இருப்பினும் அவ்வாய்ப்பை வேம்பையானார் வள்ளுவர் மன்றம் வழி வழங்கியுள்ளார்.

மானிட வாழ்வு இரு கூறுகளைக்கொண்டது ஒன்று அகம் மற்றொன்று புறம்.ஒருவனும் ஒருத்தியும் கற்பு நெறியில் வாழ்ந்து துய்க்கும் அன்பு இன்ப நெறியே அகம். கல்வி கொடை வீரம் செங்கோலாட்சி அனைத்தும் புறத்தால் வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்தும் எல்லோராலும் உணரப்படுபவை புறம். இந் நெறிகளில் அமைந்தவைகளே சங்க இலக்கியங்கள்.இவை எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் ஆகும்.அவை ,முதல், கரு,உரி, என்ற முப்பொருள் அமைந்த அகப்பாடல்களாகவும் கொடை அளி செங்கோல் பற்றிய புறப்பாடல்களாகவும் பாடப் பெற்றவை . பாடல்கள் எண்ணிக்கை கொண்ட வகைகளைக் கொண்டே பதிற்றுப்பத்து, ஐங்குருநூறு அகநானூறு பு(13-31) புறநானூறு(13-31) எனப் பெயர்பெற்றன.அகப்பாடல்களில் குறுந்தொகை(4-8) நற்றினை அகநானூறு எனும் அடி வரையரையால் திட்டமிட்டுத் தொகுக்கப்பெற்றுள்ளன. பாவகையால் கலித்தொகை பரிபாடல் எனப் பெயர் பெற்றன.

தொகைநூல்களுள் குறுந்தொகை, நற்றினை, அகநானூறு ஐங்குறுநூறு கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன இவற்றுள் தினைவகையால் தனித்தனி புலவர்களால் பாடப்பெற்றவை ஐங்குறுநூறும் கலித்தொகையும் ஆகும்.

அகம் என்ற சொல்லால் குறிக்கப்படுவது அகநாநூறு மட்டுமே. இவை நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை நெடுந்தொகை என்றனர். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம் நித்திலக் கோவை என்ற மூன்று பிரிவுகளை உடைய தனிச் சிறப்பு அகநானூற்றுக்கு உண்டு.

கலித்தொகையில் முல்லைக்கலியில் சோழர் நல்லுருத்திரன் பாடிய பாடல் நம் தமிழர்கள் வீரத்தை செப்பும் முலலை நில மக்களின் மணக்கோலத்தை நம்முன் நிறுத்துகிறார்.

முல்லை நிலத்து ஆயர்குடி மக்கள் தம்மகள் பருவமெய்தியவுடன் ஒரு காளையையும் வளர்ப்பது மரபாம். இளைஞர்கள் ஏறுதழுவி அடக்கி பின் மங்கையை திருமணம் செய்வர் என்பதை முல்லைக் கலியில் கவிஞர் பாடியுள்ளார், முல்லைக் கலியில் உள்ள சில பாடல்கள்

அவ்வழி. முழக்கென இடியென முன்சமத்து ஆர்ப்ப
வழக்குமாறு கொண்டு வருபுவருபு ஈண்டி
நறையொடு துகள்எழ நல்லவர் அணிநிற்பத்
துறையும் ஆல்மும் தொல்வலி மராஅமும்
முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழுஉ (பாடல் 101- 10-15)

இளைஞர்கள் இடிமுமுழக்கமென ஆர்ப்பரித்து களத்தில் அடுத்து அடுத்து வந்து கூடினர் மணமும் தூசியும் சூழுமாறு பெண்கள் குழுமினர். மரபு வழி வணங்கி களத்தில் இளைஞர்கள் பாய்ந்தனர்.

மேற்பட்டு உலண்டின் திறன் ஒக்கும் புன்புருக்கண்
நோக்குஅஞ்சான் பாய்ந்த பொதுவனை சாக்குத்திக்
கொட்டிடைக் கொண்டு குலைப்பதன் தோற்றங்காண் (101 – 15-17)

சாம்பல் நிறம் கொண்ட காளையின் கடும் பார்வைக்கு அஞ்சாமல் பாய்ந்த பொதுவனை கொம்பால் குத்திக் குலைக்கும் காட்சியைப்பார்

வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்
சுடர்விரிந் தன்ன கரிநெற்றிக்காரி
விடரிஅம் கண்ணிப் பொதுவனைச் சாடிக்
குடர்சொரியக் குத்தி குலைப்பதன் தோற்றங்காண் (101 – 20-23)

காதுகளில் செம்புள்ளிகளையுடைய வெண்மை நிறக் காளை அஞ்சாமல் பாய்ந்த பொதுவனை தன் கொம்பின் முனையால் குத்தும் காட்சியைப் பார்

நாம் ஒரு ஏறுபுகதலை நம் கண்முன் காண்பது போன்ற உணர்வை சங்ககாலப் பாக்கள் உணர்த்துகின்றன.

இகுளை இஃதுஒன்று கண்டை! இஃதுஒத்தன்!
கொட்டினத்து ஆயர் மகனன்றோ? மீட்டுஓரான்
போர்புகல் ஏற்றுப் பிணர்எருத்தில் தத்துபு
தார்போல் தழீஇ யவன் (103 – 32-35)

போரை விரும்பும் ஏற்றின் கலுத்தை கையால் ஒரு மாலையைப் போன்று தழுவிக்கொண்ட ஆய குடும்பத்தான் வலிமையைப்பார். காளை மீண்டும் வலிமைபெறாமல் அதனை இருகப் பற்றிக்கொண்ட மாவீரனைப் பார்.
கோவினத்து ஆயர் மகனன்றோ! ஓவான்
மறையேற்றின் மேலிருந்து ஆடித் துறை அம்பி
ஊர்வான்போல் தோன்று மவன். (103 – 37-39)

மச்சத்தை உடைய ஏற்றின்மேல் ஏறி வீற்றிருக்கின்ற ஆயன் நீர்த்துறை தெப்பத்தில் அமர்ந்து அதனை செலுத்துபவன் போலத் தோன்றுகிறான். அவன் பெருவீரன் ஏற்றைவிட்டு எளிதாக இறங்க வில்லை

அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர்துறந்து
நைவராரா ஆயமகள் தோள்! (103 – 65-67)

காளையின் கொம்புக்கு அஞ்சும் இளைஞனை ஆயர் குலத்து மங்கை மறுமையிலும் கணவனாகக் கொள்ளமாட்டாள் என்றும் வெறுப்பாள்.

செவலைக் காளையின் திறம்:

மருப்பில் கொண்டும் மார்புறத் தழீஇயும்
எருத்திடை அடங்கியும் இமில்இறப் புல்லியும்
தோளிடைப் புகுதந்தும் துதைந்துபா டேற்றும்
நிறைமேற் சென்றாரை நீண்மருப் புரச்சாடிக்
கொளலிடம் கொளவிடா நிறுத்தன ஏறு.
கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக்குத்திக்
கொள்வார்ப் பெறாஅக் குரூஉச்செகில் காணிகா!
செயிரின் குறைநாளால் பின்சென்று சாடி
உயிருண்ணும் கூற்றமும் போன்ம். (105 – 30-39)

காளையின் கொம்பைப் பிடித்தும் மார்போடு தழுவியும் தமது தோளால் கழுத்தை அகப்படுத்திப் பிடித்தும் போரிட்ட வீரர்களை ஏறுகள் முட்டி கீழே தள்ளி அடக்கவிடாமல் விலக்கின தழுவியவரையெல்லாம் குத்திக் கொன்றன அவற்றை நெருங்குவோர் இல்லை அத்தைகைய செவலைக்களை எமனை ஒக்கும்.

ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று மாறா
இருபெரு வேந்தரும் இகலிக்கண் ணுற்ற
பொருகளம் போலும் தொழூஉ(105 – 47-49)

ஏறுகளும் வீரர்களும் இரு பெரிய அரசர்கள் மாறாத பகைமையோடு தம்முள் எதிர்த்துப் பொரும் போர்க்களத்தை ஒக்கும்.

இப்பேற்பட்ட பெருமையுடைய ஏறு தழுவவதால் தமிழர்களின் மறம் நம்மை மெலிர்க்க வைக்கிறது. இத்தணை சிறப்புடைய சல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்யாமல் அனைத்து உதவிகளும் செய்து முறைப்படுத்தி தமிழர்களின் வீர விளையாட்டாக உலகம் முழுமையும் காணும் தமிழர் விளையாட்டாக முறைப்படுத்தவேண்டும்.

Wednesday, February 29, 2012

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக்கியோ சமூக இந்திய நற்பணிச் செயற்குழுவும் நடத்திய கவிச்சோலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் சொற்பொழிவு



[4-2-2012 அன்று சிங்கப்பூர் பெக்கியோ சமூக மன்றத்தில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் நடத்திய கவிச்சோலையில் ”எனது வெளிநாட்டுப் பயணங்கள் ”எனும் தலைப்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை]

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் நடத்தும் இந் நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்சி யடைகின்றேன். சென்ற முறை நான் சிங்கை தமிழ் எழுத்தாளார் கழக உலக மாநாட்டிற்கு வருகை தந்திருந்தேன். மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திய தலைவர் நா.ஆண்டியப்பன் அவர்களை சிறப்பிப்பதில் பேருவகை கொள்கின்றான். வருகை தந்திருக்கும் அருமைக் கவிஞர் கவிஞரேறு அமலதாசன் அவர்களை பொன்னாடை போர்த்தவும் எழுத்தாளர் கழகப் புரவலர் நாகை தங்கராசு அவர்களை மாலையணியவும் அன்போடு அழைக்கின்றேன். அருமைப்பெருமக்களே உலகத் தமிழ் எழுத்தாளர்களை சிங்கையில் கூட்டிய பெருமகனுக்கு உங்கள் கர ஒலிகளுக்கிடையே பாராட்டி மகிழ்கிறேன்.

கவிச்சோலையில் யான் சில ஆண்டுகளுக்கு முன் இதே மன்றத்தில் பங்கேற்று உரையாற்றி கவிஞர்களின் கவிதைப் பொழிவுகளைக் கேட்டு மகிழ்ந்து அக்கவிதைகளை தமிழ்ப்பணியிலும் வெளியிட்டுள்ளேன். அப்போது மிகச் சிறப்பாக கவிபாடியா கவிஞர் மாதங்கி மாநாட்டில் மிகச் சிறந்த பங்கேற்பாளராக இருந்தார். கவிஞர்களை உருவாக்கும் பணியில் கவிச்சோலையின் பங்கு மகத்தான பங்காகும்
.
இன்றும் கவிஞர் பெருமக்கள் மிகச் சிறப்பாகாக் கவிதை பாடினீர்கள். மரபுக்கவிதை, புதுக்கவிதை, கைஃகு சிறுவர் பாடல் என அனைத்துத் துறையிலும் பாடினீரகள். அதில் மூவருக்கு பரிசுத் தொகையை என்னை வழங்கப் பணித்தீர்கள். பெறாத பெருமக்களும் அடுத்த நிகழ்வில் பரிசு பெறும் கவிதை வழங்கிய பெருமக்களே என வாழ்த்தி மகிழ்கிறேன். தங்களின் கவிதைகளையும் தமிழ்ப்பணியில் வெளியிடுவேன்.

ஐயா ஆண்டியப்பன் அவர்களின் நூலினைப் படித்து மகிழ்ந்தேன். நூலைப் படித்தால் தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களின் மூன்று நாட்டு வரலாற்றை தம் வாழ்க்கையோடு இணைத்து நமக்குத் தந்துள்ளார் . வளரும் இலக்கியவாதிகள் அவசியம் படிக்கவேண்டிய நூல்.

அருமைத்தலைவர் ஆண்டியப்பன் அவர்கள் எனது வெளிநாட்டுப் பயணங்கள் எனும் தலைப்பில் உரையாற்றப் பணித்துள்ளார்கள். எனது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பது சிங்கைதான். தமிழுக்கு அனைத்து வகையிலும் தமிழுக்கு முதண்மை தந்துள்ள சிங்கைக்கு 1998 ஆம் ஆண்டு வருகை தந்தேன்.வானூர்தி நிலையமானாலும், தொடர்வண்டி நிலையமானாலும், பெருந்து நிலையமானாலும், மக்கள் கூடும் பகுதிகளிலும் அழகு தமிழ் எழுத்தும் ஒலிப்பும் என்னைக் கவர்ந்தவை. மற்ற நாடுகளுக்கு முன்னோடி அதற்கு வித்திட்ட தமிழவேள் கோ.சா அவர்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். அதனைக் காத்துவரும் உங்களையும் வணங்குகிறேன்.

மலேசியா, தமிழர்கள் பரவி வாழும் தமிழ் உணர்வாளர்களின் களம்.உலகத்தமிழ் மாநாட்டிற்கே வித்திட்ட இடம். இன்றுவரை பல்வேறு மாநாடுகளை நடத்தி சாதனை படைத்தநாடு மலேசியாவிற்கு .தற்போது கூட பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு கோலாலம்பூரிலும், பெரியார் சிலை திறப்பு பினாங்கு கப்பளா பத்தாசு பகுதியிலும் நடைபெற்றது.மலேசியாவின் அனைத்து அமைச்சர்களும் பெருமக்களும் பங்கேற்றனர். மாநாட்டின் தமிழக ஒருங்கிணைப்பாளரகப் பொறுப்பேற்று பங்கு பெற்று தற்போது தங்கள் முன் நிற்கிறேன்.

இராசேந்திர சோழன் வென்ற கடாரம் கெடாவாக மலேசியாவில் உள்ளது. அங்கு 11 ஆம் நூற்றாண்டுக் கோயில் உள்ளது அதில் இந்து கோயில் என் பொறித்துள்ளார்கள் சோழன் வந்ததற்கான பதிவு அங்கில்லை. நாமெல்லாம் வரலாற்றை வரலாறாகப் பதிவு செய்யவேண்டும். நம் தலைமுறைக்காவது பதிய செய்ய வேண்டிய பொறுப்பு எழுத்தளார்களாகிய நமக்கு உண்டு. மலேசியாவில் பயணிப்பது தமிழகத்தில் பயணிப்பது போன்றே தோன்றும். மலேசியாவின் 3 தினஇதழ்களும் தமிழகச் செய்திகளையும் தமிழக எழுத்தாளர்களின் செய்திகளையும் வெளியிடுவதில் முதன்மை அவர்களுக்கே. 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் வழி நம் மாணவர்கள் பயில்கின்றனர். பல பள்ளிகளில் பங்கேற்று மகிழ்ந்திருக்கின்றேன்.மலேசியத் திருநாடு அன்று பேரறிஞர் அண்ணா கூறியதுபோல் தமிழர்கள் மலேசியாவில் வாழ்கிறார்கள் என்பது இன்றும் உண்மை.

எங்களது பன்னாட்டுத்தமிழுறவு மன்ற மாநாடு 6 நடத்தியுள்ளோம் அதில் மூன்று வெளிநாடுகளில் நடத்தியுள்ளோம். 3ஆம் மாநாடு செருமணி பெர்லினில் நடத்தினோம் அதில் முத்தமிழ்க்காவலர், கி.ஆ.பே.வி, நீதியரசர் வேணுகோபால், முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன்,பெரியார் பெருரையாளர் இறையன் போன்ற 50 பெருமக்கள்பங்கேற்றனர். குறிப்பிட்ட்டுள்ள நால்வரும் தற்போது இல்லை. 50 பெருமக்களும் 50 ஈழக் குடும்பங்களில் தங்கி மாநாட்டில்பங்கேற்றனர் இன்றும் பங்கேற்ற பெருமக்களோடு தமிழ்கத் தொடர்பு தொடர்கிறது.

1999 ஆன் ஆண்டு தாய்லாந்தில் பாங்க்காக் நகரில் மூன்றாம் மாநாடு நடத்தினோம் இலங்கை அமைச்சர் பெரியவர் தொண்டைமாண் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். தமிழகத்திலிருந்து 100 பெருமக்களும் மலேசியவிலிருந்து 40 பெருமக்களும் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பங்கேற்றனர். உலகத்தமிழர்களை ஒரு குடைக்கீழ் அமர்த்திய மாநாடு. அதற்கு அருமைத் தந்தையார் அவருகளும் யானும் ஏற்ற சோதனைகள் ஏராளம்.விரிக்கின் பெருகும்.

2006ஆம் ஆண்ட்டு மலேசியா கோலாலம்பூர் நகரில் மலேயாப் பல்கலைக் கழகத்தில் 6 ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினோம். மலேசியா அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். மலேசிய தேசியத் தலைவர் டத்தோ சாமிவேலு அவர்கள் பிரதமர் துறையின் அமைச்சர் பங்கேற்றது நினைவில் நிழலாடுகிறது. தமிழகத்திலிருந்து 70 பெருமக்கள் பங்கேற்றனர். சிங்கையிலிருந்தும் உலக நாடுகளில்ருந்தும் அறிஞர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர் அதுபோதுதான் அனைத்துப் பெருமக்களையும் சோழன் வென்ற கடாரம் பகுதிக்கு அழைத்துச் சென்று சாதனை படைத்தோம்.

ஐரோப்பாவில் இலண்டன், ப்ரான்சு,செருமணி, சுவிட்சர்லாந்து நாடுளில் தமிழர்களின் அன்பில் நனைந்திருக்கிறேன் நேரம் கருதி விரிக்க இயலாது. ஒமன், கத்தார், அபுதாபி,சப்பான், அமெரிக்கா,கனடாபோன்ற நாடுகளில் பயணித்திருகிறேன்.

ஐரோப்பிய நாடுகளிலும் கண்டாவிலும் ஈழத்தமிழர்கள் வியக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளனர்.தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை நாட்டியம் நடனம் என அனைத்துத் துறையிலும் மேலோங்கி உள்ளனர். விடுதலை வேட்கையில் எள்ளளவும் குறையா வண்ணம் ஈழமே குறிக்கோளாய்க் கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் நம்மவர்கள் செல்வச்செழிப்பில் உள்ளனர். அமெரிக்காவின் அனைத்து சங்கங்களும் இணைந்து பெட்னா என்ற அமைப்பை நிறுவி மாநாடுகள் நடத்துகின்றனர். பெரும்பாலான சங்கங்கள் பத்த்ரிக்ககைகள் நடத்தி தமிழை நாட்டியத்தை வளர்க்கின்றனர்.

மியான்மரில் தமிழர்கள் எல்லா நிலையிலும் மேலோங்கி உள்ளனர். அங்கு உள்ள கோயில்களெல்லாம் சிங்கப்பூரில் உள்ள கோயில்களைப் போல் புதுப்பித்துள்ளனர். தமிழ் படிப்பதற்கு எந்த வாய்ப்பும் வசதியும் இன்றி உள்ளனர். அறிஞர் மு.வ. பிறகு எழுத்தாளர்களே அங்கு உள்ளவர்களுக்குத் தெரியவில்லை.தமிழ்த் தொலைக்காட்சிகள் தெரிந்தாலும் இருக்கும் தமிழையே கெடுகின்றது என் வறுந்தினர்.

உலகெங்கும் வாழும் நம்மவர்கள் திரைப்படத்திற்கு முன்னுரிமை வழங்குகின்றனர். திரைப்படம் பார்ப்பதை தவறு என்று கூறவில்லை. மாநாடு நடத்துபவர்கள்கூட திரைப்பட சார்ந்தவர்களுக்க்கே முத்ன்மை வழங்குகின்றனர். மொழிக்காகவும் இனத்திற்காகவும் பாடுபட்டவர்களை இனம் காண்பதில்லை.குறைந்த அளவு இலக்கிய அமைப்பு நடத்தும் எம்மைப் போன்றவர்களிடம் கருத்தும் கேட்பதில்லை. தமிழ்கத்தில் தமிழுக்காகப் போராடும் பெருமக்களை அழைத்து அறிந்தால்தான் நம் மொழி நம் மேன்மையுறும்.
மிகக் குறுகிய காலத்தில் எனது வருகையைக் கூறியவுடன் நிகழ்வை ஏற்பாடு செய்த சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன் அவர்கட்கும்,செயாலாளர் அருணாச்சலம் அவர்கட்கும் வருகை தந்துள்ள பெருமக்கள் கவிஞரேறு அமலதாசன், தமிழாசிரியர் சிவசாமி, புரவலர் நாகை தங்கராசு கவிதைபாடிய கவிஞர் பெருமக்கள் மற்றும் அனைத்துப் பெருமக்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

மலேசியா கிள்ளானில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ப.கு.சண்முகம் ஏற்பாட்டில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரோடு தமிழ் தமிழர் சிந்தனை



[7-2-2012 அன்று கிள்ளானில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் தலைவர் ப.கு.சண்முகம் ஏற்பாட்டில்கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரோடு நடந்ததமிழ் தமிழர் சிந்தனை கலந்துரையாடலின்போது கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரின் உரை]


கிள்ளானில் உலக்த் தமிழ்ப்பண்பாடு இயட்க்கத்தின் சார்பில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரோடு தமிழ் தமிழர் சிந்தனை சந்திப்பு. நடைபெற்றது..தலைவர் ப.கு.சண்முகம் அவர்களும் அறிஞர் முரசு நெடுமாறன் அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.கிள்ளான் நகர தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்றனர்.

முரசு நெடுமாறன் அவர்கள் தமிழகத்தில் தமிழ் ஆண்டு எடுத்துள்ளார்கள். தமிழகமே கொதித்து எழுந்திருக்க வேண்டாமா அங்கு தமிழ் அறிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற மன் வேதனையைத் தெருவித்தார்.

தமிழக மக்கள் மாற்றம் எனக் கூறி மக்கள் வழங்கிய தீர்ப்பே இந்த மோசமான நிலைக்குக் காரணம் என்றேன்,எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் அருமைத்தந்தையார் அவர்கள் தலைமையில் பிப்ரவர் 12 முதல் 23 வரை தமிழாண்டை மீண்டும் கொணர்ந்திட ஊர்திப் பயணமாக ஊர்தோறும் தெருமுனைக்கூட்டங்கள் தமிழ் ஆர்வலர்கள் எழுச்சியை ஏற்படும் வண்ணம் அமைத்துள்ளோம். தமிழ்ப்பணியில் வெளியிட்ட அடவணையையும் காண்பித்தேன்.

கலைஞர் தொலைக்காட்சியில் சிற்ப்புச் செய்தியாளர் தம்பி ராசா அவர்கள் என்னைப் பேட்டி கண்டார்கள். தமிழ் ஆண்டை இந்த அரசு எடுத்ததற்கு உலகத் தமிழினமே வெட்கித் தலைகுனிகிறது எனக் கூறினேன். அதை மெய்ப்பிக்கும் வண்ணம் மலேசியத் தமிழர்களாகிய தாங்கள் கடுமையாகச் சாடியுள்ளீர்கள். இதை தமிழ்கம் முழுமையும் பப்புவோம்

மலேசியாவைச் சார்ந்தவர்களுக்கு எந்தப் பரிசும் வழங்குவதில்லை இதை தமிழகம் நடைமுறைப் படுத்தவேண்டும் என தலைவர் ப கு சண்முகம் வினவினார்.

அறிஞர் முரசு நெடுமாறன் அவர்கட்கே தமிழக அரசு பரிசு வழங்கியுள்ளதை நினைவில் கொள்ளவேண்டுகிறேன் . செம்மொழி மாநாட்டின்போது உலகம் முழுமையும் உள்ள தமிழ் அறிஞர்களை கலைஞர் அரசு அழத்ததையும் வெளிநாட்டு அறிஞர்களுக்கே செம்மொழி விருது வழங்கியதையும் குற்ப்பிட்டேன். தமிழுக்கு ஆற்றிய ஒப்பற்ற செயல்களைப் போற்ற வேண்டும் அவ்வாறு நாம் போற்றாத்த போது செய்திகள் திரிக்கப்படுகின்றன. செய்திகள் திரிக்கப்படும்போது நாம் தமிழ் ஆட்சியை இழக்கிறொம் என்பதை நினைவிகொள்ள வேண்டும்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினோம். திரளாகப் பங்கேற்று. மலேசிய மக்கள் மிகச் சிறப்பாக நடத்தினீரகள். இந்தத் தருணத்தில் மலேசிய மக்களுக்கும் அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

இலண்டனிலிருந்து வருகை தந்துள்ள டாக்டர் சுடான்லி செயராசு குடும்பதினருக்கு என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன். பெருமகன் ஈழ மக்கள் இலண்டனில் பணியாற்றும் வேகத்தைக் கூறினார். அவர்களோடு இணைந்து உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழ விடுத்லைக்குப் பாடுபடுவோம்.

இறுதியாக செயராசு அவர்கள் சிறந்த பாடகர் என நிருபித்துள்ளார். ஐயா சண்முகம் அவர்கள் சந்திரபாபு பாடலை வேண்டியவுடன் பம்பரக் கண்ணாலே பாடலைப் மிகச் சிறப்பாகப் பாடி இலண்டனுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பெருமனாருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

அரும்பாடுபட்டு இந் நிகழ்வை அமைத்த தலைவர் ப.கு. சண்முகம் அவர்கட்கும், அறிஞர் முரசு நெடுமாறன் அவர்கட்கும். இங்கு என்னை அழைத்து வந்த கவிஞர். கோ.வி. பெருமாள் அவர்கட்கும் கலந்து கொண்ட பெருமக்கட்கும் எனது நன்றி கூறி விடைபெறுகிறேன்.

மலேசியா தைப்பிங் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரைப் பொழிவு




[2-2-2012 அன்று மலேசியா தைப்பிங் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் தைப்பிங் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில்
கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின்உரை]

தைப்பிங் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் கவிஞர் பொன் சமுகம் நடத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்கு பெருமகிழ்ச்சியடைகிறேன். நான் நேற்று சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் உத்தம்மஞ்சோங் பகுதியில் உரையாற்றினேன். அங்கிருந்து செயல் வீரர் விசயன் அவர்கள் தாப்பாவில் பெரியார் பெருந்தொண்டர் வாசு அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அங்கிருந்து பெரியார் நெறியாளர் முனியரசன் அவர்கள் ஒரே தொடர் ஓட்டமாக தைப்பிங் நகருக்கு அழைத்து வந்துள்ளார்கள். இந்நிகழ்வில் யான் பங்கேற்பதற்கு உருதுணையாக இருந்த பெருமக்களுக்கு உங்களின் சார்பில் நன்றியை தெருவித்துக் கொள்கிறேன்.

நான் வாயிலில் நுழைந்த உடன் பெரியவர் முத்துசாமி அவர்கள் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களின் நலத்தை வினவி நூற்றாண்டு கண்ட தோட்டப்புறப் பள்ளியீன் மலரை வழங்கினார்கள். பெருமக்களே எங்களின் மலேசியத் தொடர்பு 1977ஆம் ஆண்டுமுதல் இன்றும் தொடர்கிறது. இங்கு வாழ்ந்து தமிழகத்தில் மறைந்த சுவாமி இராமதாசர் அவர்கள் தம்முடைய மணிவிழாவிற்கு தம் மாணவனான அருமைத் தந்தையாரை பயணச்சீட்டு வழங்கி அழைத்தார்கள். அது போது மலேசியாவின் பட்டிதொட்டியெல்லாம் தந்தையரை அழைத்துச் சென்றார்கள். ஆய கலைகள் 64 யையும் அறிந்த அந்தத் தமிழ் முனிவரின் வற்றாத பேரன்பே இந்த மலேசியச் சொந்தங்கள்.

இந்த இந்து வாலிப சங்க மண்டபத்தில் பெருந்திரளாக பெருமக்கள் கூடியுள்ளீர்கள். மலேசியாவில் தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் உணர்வையும் கட்டிக்காக்கும் உங்களை வணங்கி மகிழ்கிறேன். என்னோடு வருகைதந்துள்ள குடியாத்தம் குமணன்,செந்தமிழ்முரசு செந்தமிழ்விரும்பி அ.நாகேசுவரராவ் அவர்களுக்கும் வணக்கங்கள்.

பன்னாட்டுத் பகுத்தறிவு மாநாட்டின் தமிழகத்தின் ஒருங்கிணைப் பாளராகப் பொறுப்பேற்று 40 பேராளர் பெருமக்கள் கோலாலம்பூரில் உரையாற்றி மலேசியாவே பெரியார் கருத்துக் கள்மாக இருந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன்.

இன்று நாம் பெரியாரின் சிந்தனைகளால் எல்லா நிலைகளிலும் மேலோங்கி நிற்கிறோம் தந்தை பெரியார் நம்மிடம் புரையாடிப் போயிருந்த சீர்கேடுகளை நீக்கி மனிதனை மனிதானாக வலம் வரவைத்தவர். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாகுபாடுகளை நீக்க தம் வாழ்நாளையே தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கிய தீரர்.பெண் அடிமைத் தனத்தை வேரறுத்து பெண்சமுதாயம் தழைத்து ஓங்க புரட்சித் திட்டம் வழங்கியவர். பெண்கள் சொத்துரிமைக்கு முழக்கமிட்ட மாமேதை. அன்று குலக் கல்வித் திட்டத்திற்கு சாவுமணி அடித்ததால்தான் இன்று நம்மக்கள் மேல் நிலையில் உள்ளார்கள். மேல்நிலையில் உள்ளவர்களெல்லம் நன்றியோடு பெரியார் கொள்கைகளை நம் தலைமுறியிடம் பரப்பியியிருந்தால் மீண்டும் பல இழிவுகளுக்கு ஆளாயிர்க்க மாட்டோம்.

பெரியாரின் திராவிடர் கழகம் மிகச் சிறப்பாக தமிழகத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் வெற்றிநடைபோடுகிறது. இந்தியாவெங்கும் உலகம்மெங்கும் பெரியார் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். தில்லியிலேயே பெரியார் மையத்தை நிறுவி பெரியாரின் கருத்துக்கு உரம் சேர்த்துள்ளார்கள். நம் தன்மான இயக்கத்தின் தலைவரும் மாநாட்டின் தலைவருமான எழுத்தாண்மை ஏந்தல் முனைவர் பெரு.அ தமிழ்மணி அவர்கள் மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில் கப்பளா பத்தாசு பகுதியில் பெரியார் சிலையை நிறுவியுள்ளார்கள். மலேசிய மக்கள் பெரியார் இருமுறை வந்தபோது காட்டிய அன்பு மகத்தானது அதனது தொடர்ச்சிதான் மாநாடும் சிலை திறப்பும்.பெரியார் கொள்கைகளை இன்று நாம் மறந்து நம்மை மாற்றான் ஆளும் ஏளனத்திற்கு ஆளாகியுள்ளாம். இந்நிலையைத் தகர்க்க பட்டிதொட்டியெல்லாம் அவர் வழியில் நின்று தமிழன் தன்மானத்தை நிலைநாட்டுவோம்.

அன்புப் பெருமக்களே தமிழர்கள் தலைகுனியச் செய்யும் செயல்கள் தமிழ் நாட்டில் நடைபெற்றுவருகின்றன. தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள் தலைமையில் திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட்டு அறிவித்தார்கள். முந்தைய கலைஞர் அரசு தமிழாண்டாக் அறிவித்தது. இப்போது உள்ள தமிழக அரசு தமிழாண்டை நீக்கி உத்தரவு போட்டுள்ளது.தமிழனின் இளித்தவாய்த் தனத்தால் வந்த இழப்பு.

தமிழ் ஆண்டை நான் அனைவரும் நடைமுறையில் கொண்டு வரவேண்டும். தாங்கள் அடித்துள்ள அழைப்பிதழ் அழகு தமிழில் அழகாக உள்ளது, இன்மேல் தாங்கள் அச்டிக்கும் அழைப்பிதழ்களில் தமிழ் ஆண்டை நடைமுறைப்படுத்த வேண்டும்..

பெரியார் வழிவந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னை இராசதானி என்ற்றிருந்ததை சட்டமன்றத்தில் தமிழ்நாடு என அனைவரது ஒப்புதலோடும் மாற்றிய பெருமைக்குரியவர்.அறிஞர் வழி வந்த கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் ஒருமன்தாகக் கொண்டுவந்த தமிழாண்டு தீர்மாணத்தை புறந்தள்ளுவது திருவள்ளுவரைப் புறந்தள்ளுவதாகும். ஆகையால் பெருமக்களே நம் ஆண்டு தை தமிழாண்டு திருவள்ளுவர் ஆண்டுதான் என்ற சிந்தையில் கொண்டு நடைமுறைப் படுத்துவோம்.எங்களது தமிழ்ப் பணி இதழ் தமிழாண்டு திருவள்ளுவராண்டு 2043 மலராகவே வெளியீட்டு வருகிறோம். தாங்களும் திருவள்ளுவராண்டை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துங்கள்.

ஐயன் திருவள்ளுவர் சிந்தனையையும், திருவள்ளுவர் ஆண்டையும் இரு கண்களாகக் காப்போம் காப்ப்போம் எனக் கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.