Showing posts with label kkatturai. Show all posts
Showing posts with label kkatturai. Show all posts

Wednesday, February 29, 2012

மலேசியா தைப்பிங் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரைப் பொழிவு




[2-2-2012 அன்று மலேசியா தைப்பிங் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் தைப்பிங் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில்
கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின்உரை]

தைப்பிங் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் கவிஞர் பொன் சமுகம் நடத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்கு பெருமகிழ்ச்சியடைகிறேன். நான் நேற்று சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் உத்தம்மஞ்சோங் பகுதியில் உரையாற்றினேன். அங்கிருந்து செயல் வீரர் விசயன் அவர்கள் தாப்பாவில் பெரியார் பெருந்தொண்டர் வாசு அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அங்கிருந்து பெரியார் நெறியாளர் முனியரசன் அவர்கள் ஒரே தொடர் ஓட்டமாக தைப்பிங் நகருக்கு அழைத்து வந்துள்ளார்கள். இந்நிகழ்வில் யான் பங்கேற்பதற்கு உருதுணையாக இருந்த பெருமக்களுக்கு உங்களின் சார்பில் நன்றியை தெருவித்துக் கொள்கிறேன்.

நான் வாயிலில் நுழைந்த உடன் பெரியவர் முத்துசாமி அவர்கள் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களின் நலத்தை வினவி நூற்றாண்டு கண்ட தோட்டப்புறப் பள்ளியீன் மலரை வழங்கினார்கள். பெருமக்களே எங்களின் மலேசியத் தொடர்பு 1977ஆம் ஆண்டுமுதல் இன்றும் தொடர்கிறது. இங்கு வாழ்ந்து தமிழகத்தில் மறைந்த சுவாமி இராமதாசர் அவர்கள் தம்முடைய மணிவிழாவிற்கு தம் மாணவனான அருமைத் தந்தையாரை பயணச்சீட்டு வழங்கி அழைத்தார்கள். அது போது மலேசியாவின் பட்டிதொட்டியெல்லாம் தந்தையரை அழைத்துச் சென்றார்கள். ஆய கலைகள் 64 யையும் அறிந்த அந்தத் தமிழ் முனிவரின் வற்றாத பேரன்பே இந்த மலேசியச் சொந்தங்கள்.

இந்த இந்து வாலிப சங்க மண்டபத்தில் பெருந்திரளாக பெருமக்கள் கூடியுள்ளீர்கள். மலேசியாவில் தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் உணர்வையும் கட்டிக்காக்கும் உங்களை வணங்கி மகிழ்கிறேன். என்னோடு வருகைதந்துள்ள குடியாத்தம் குமணன்,செந்தமிழ்முரசு செந்தமிழ்விரும்பி அ.நாகேசுவரராவ் அவர்களுக்கும் வணக்கங்கள்.

பன்னாட்டுத் பகுத்தறிவு மாநாட்டின் தமிழகத்தின் ஒருங்கிணைப் பாளராகப் பொறுப்பேற்று 40 பேராளர் பெருமக்கள் கோலாலம்பூரில் உரையாற்றி மலேசியாவே பெரியார் கருத்துக் கள்மாக இருந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன்.

இன்று நாம் பெரியாரின் சிந்தனைகளால் எல்லா நிலைகளிலும் மேலோங்கி நிற்கிறோம் தந்தை பெரியார் நம்மிடம் புரையாடிப் போயிருந்த சீர்கேடுகளை நீக்கி மனிதனை மனிதானாக வலம் வரவைத்தவர். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாகுபாடுகளை நீக்க தம் வாழ்நாளையே தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கிய தீரர்.பெண் அடிமைத் தனத்தை வேரறுத்து பெண்சமுதாயம் தழைத்து ஓங்க புரட்சித் திட்டம் வழங்கியவர். பெண்கள் சொத்துரிமைக்கு முழக்கமிட்ட மாமேதை. அன்று குலக் கல்வித் திட்டத்திற்கு சாவுமணி அடித்ததால்தான் இன்று நம்மக்கள் மேல் நிலையில் உள்ளார்கள். மேல்நிலையில் உள்ளவர்களெல்லம் நன்றியோடு பெரியார் கொள்கைகளை நம் தலைமுறியிடம் பரப்பியியிருந்தால் மீண்டும் பல இழிவுகளுக்கு ஆளாயிர்க்க மாட்டோம்.

பெரியாரின் திராவிடர் கழகம் மிகச் சிறப்பாக தமிழகத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் வெற்றிநடைபோடுகிறது. இந்தியாவெங்கும் உலகம்மெங்கும் பெரியார் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். தில்லியிலேயே பெரியார் மையத்தை நிறுவி பெரியாரின் கருத்துக்கு உரம் சேர்த்துள்ளார்கள். நம் தன்மான இயக்கத்தின் தலைவரும் மாநாட்டின் தலைவருமான எழுத்தாண்மை ஏந்தல் முனைவர் பெரு.அ தமிழ்மணி அவர்கள் மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில் கப்பளா பத்தாசு பகுதியில் பெரியார் சிலையை நிறுவியுள்ளார்கள். மலேசிய மக்கள் பெரியார் இருமுறை வந்தபோது காட்டிய அன்பு மகத்தானது அதனது தொடர்ச்சிதான் மாநாடும் சிலை திறப்பும்.பெரியார் கொள்கைகளை இன்று நாம் மறந்து நம்மை மாற்றான் ஆளும் ஏளனத்திற்கு ஆளாகியுள்ளாம். இந்நிலையைத் தகர்க்க பட்டிதொட்டியெல்லாம் அவர் வழியில் நின்று தமிழன் தன்மானத்தை நிலைநாட்டுவோம்.

அன்புப் பெருமக்களே தமிழர்கள் தலைகுனியச் செய்யும் செயல்கள் தமிழ் நாட்டில் நடைபெற்றுவருகின்றன. தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள் தலைமையில் திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட்டு அறிவித்தார்கள். முந்தைய கலைஞர் அரசு தமிழாண்டாக் அறிவித்தது. இப்போது உள்ள தமிழக அரசு தமிழாண்டை நீக்கி உத்தரவு போட்டுள்ளது.தமிழனின் இளித்தவாய்த் தனத்தால் வந்த இழப்பு.

தமிழ் ஆண்டை நான் அனைவரும் நடைமுறையில் கொண்டு வரவேண்டும். தாங்கள் அடித்துள்ள அழைப்பிதழ் அழகு தமிழில் அழகாக உள்ளது, இன்மேல் தாங்கள் அச்டிக்கும் அழைப்பிதழ்களில் தமிழ் ஆண்டை நடைமுறைப்படுத்த வேண்டும்..

பெரியார் வழிவந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னை இராசதானி என்ற்றிருந்ததை சட்டமன்றத்தில் தமிழ்நாடு என அனைவரது ஒப்புதலோடும் மாற்றிய பெருமைக்குரியவர்.அறிஞர் வழி வந்த கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் ஒருமன்தாகக் கொண்டுவந்த தமிழாண்டு தீர்மாணத்தை புறந்தள்ளுவது திருவள்ளுவரைப் புறந்தள்ளுவதாகும். ஆகையால் பெருமக்களே நம் ஆண்டு தை தமிழாண்டு திருவள்ளுவர் ஆண்டுதான் என்ற சிந்தையில் கொண்டு நடைமுறைப் படுத்துவோம்.எங்களது தமிழ்ப் பணி இதழ் தமிழாண்டு திருவள்ளுவராண்டு 2043 மலராகவே வெளியீட்டு வருகிறோம். தாங்களும் திருவள்ளுவராண்டை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துங்கள்.

ஐயன் திருவள்ளுவர் சிந்தனையையும், திருவள்ளுவர் ஆண்டையும் இரு கண்களாகக் காப்போம் காப்ப்போம் எனக் கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.