Monday, May 30, 2011

கணினியூனூடே செம்மொழி

கணினியூனூடே செம்மொழி
கவிமுரசு வா,மு.சே.திருவள்ளுவர்

(வள்ளுவர் கோட்டத்தில் உலகத்திருக்குறள் மையத்தின் சார்பில் 28-05-2011 அன்று குறள்ஞானி மோகனராசு தலைமையில் இணையதளத்தில் நாங்கள் என்ற தலைப்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய சிறப்புரை)

கல்தொன்றி மந்தொன்றாக் காலத்தே மூத்த முதல் மொழியாம் அன்னைத் தமிழ் மொழிக்கு காலம் காலமாக அனைத்துத் தலைமுறையினரும் துறை சார்ந்தவர்களும் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.. ஒலைச்சுவடிகள், கல்வெட்டுகள், அச்சாக்கம் என பல்வேறு நிலைகளில் பல் நூற்றாண்டுகளாக வழங்கிய மொழி தற்போது இணையதளங்களில் வலைப் பூக்களாக வலம் வருகின்றன.

தற்பொது வெளிவரும் தின இதழ்கள். நமது சங்க இலக்கியங்கள் வாழும் சிந்தனைகள் அனைத்தும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் இணைய தளம் மூலம் கண்டு உலகத் தமிழர்களை ஒரு குடைக்கீழ் கொண்டு வந்துள்ளது. அறிவியல் வளர்ச்சியால் வந்த பயனை இந்திய மொழிகளில் தமிழ் மொழி இணையதளங்களில் பயன்பாட்டு மொழியாக முதல் இடத்தில் உள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் அவர்தம் சிந்தனைகள் வலைப்பூக்களை உருவாக்கி இணைய தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. வலைப்பூக்களின் வரும் சிந்தனைகளைக் கண்டு அவரவர் தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்கின்றனர்.
நாம் எழுதி அதைப் பதிப்பித்து பிறரை அடைந்து பின் அவரவர் கருத்துக்களைப் பதிவு செய்ய ஆகும் நேரத்தையும் வலைப்பூக்களின் கண்டவுடன் பதிவு செய்ய ஆகும் நேரத்தையும் கண்டால் நமக்கு இணையதளத்தின் பயன்பாடு புரியும்.

இணையதள பயன்பாட்டை அறிஞர்பெருமக்கள் வழக்கத்தில் கொள்ளவேண்டும். பொருளாதார மேம்பாடு உடையோர் ஒரு கணினியைப் பொருத்தி நம்மிடம் இருக்கும் தொலைபேசி இணைப்புகளைக் கொண்டே இணையதள வசதியை ஏற்படுத்தி நம் இடத்திலேயே பயன்படுத்தலாம். இயலவில்லையாயின் இணையதள சேவைகள் எல்லா இடங்களிலும் பரவலாக உள்ளன. அங்கு சென்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் நாடு இணய பல்கலைக்கழக இணையதளத்திற்குச் சென்றோமனால் இணையதளத்தில் தமிழின் வளர்ச்சியை அறியலாம். உலகத் தமிழர்கள் தமிழைப் பயில இணைய பல்கலைக் கழகம் பெருந்தொண்டாற்றி வருகிறது. சங்க இலக்கியங்கள் அனைத்தும் இவ் இணைய தளத்தில் காணலாம். தமிழ் அகராதி முழுமையும் இணையதளத்தில் கண்டு தெளிவு பெறலாம். உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் இணைய பல்கலைக் கழகத்தின் வழி பயின்று தேர்வுஎழுதி பட்டம் பெறுகின்றனர்.

உலகில் வாழும் கணினி ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து உத்தமம் என்ற அமைப்பை நிறுவி 10 மாநாடுகள் பல்வேறுநாடுகளில் நடத்தி வருகிறார்கள். சென்ற ஆண்டு செம்மொழி மாநாட்டோடு இணைந்து கணீனி மாநாடும் நடத்தினர். உலகம் முழுதும் அறிஞர் பெருமக்கள் கருத்துரைகளை வழங்கினர். இவ்வாண்டு உத்தமத்தின் பத்தாவது தமிழ் இணையா மாநாட்டின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்வமுள்ள பெருமக்கள் தொடர்புகொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம

உத்தம நிறுவனத்தின் செயற்குழு வருகிற 2011 சூன் மாதம் பதினேழாம் தேதி முதல் பத்தொன்பதாம் தேதி வரை உத்தமத்தின் பத்தாவது தமிழ் இணைய மாநாட்டை நடத்திட முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் இம்மாநாட்டினை நடத்திட இப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பணி செய்துவரும் பேராசிரியர் ஹெரால்டு ஷிஃப்மேன் அவர்களும் மற்றும் முனைவர் வாசு அரங்கநாதன் அவர்களும் இம்மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமையேற்று நடத்தித்தர இசைந்துள்ளனர். நமது முன்னாள் தலைவர் கு. கல்யாணசுந்தரம் இம்மாநாட்டின் நிகழ்ச்சிகள் குழுவுக்குத் தலைமையேற்கவும் இசைந்துள்ளார். உத்தமத்தின் தலைவர் வா.மு.சே. கவிஅரசன் தமிழ் இணையம் 2011 பன்னாட்டுக்குழுத் தலைவராகச் செயல்படுகிறார்.

மலேசியா : இளந்தமிழ், துணைத்தலைவர், உத்தமம் : vice-chair@infitt.org , Elantamil@infitt.org

இந்தியா : ஆண்டோ பீட்டர், செயற்குழு உறுப்பினர், உத்தமம் : antopeter@infitt.org

இலங்கை : மயூரன், செயற்குழு உறுப்பினர் உத்தமம் : mauran@infitt.org

ஐரோப்பா : சிவா பிள்ளை, செயற்குழு உறுப்பினர் உத்தமம் : sivapillai@infitt.org

ஆசுதிரேலியா : முகுந்த், செயற்குழு உறுப்பினர், உத்தமம் : Mugunth@infitt.org

சிங்கை : மணியம், செயலர்- இயக்குநர் உத்தமம், ed@infitt,org, maniam@infitt.org

அமெரிக்கா: கவிஅரசன் வா.மு.சே. தலைவர் உத்தமம், chair@infitt.org, kavi@infitt.org

கணினி அறிஞர்களின் கருத்துரைகளை அறிந்து தமிழக அரசு ஒருங்குறி தமிழ் எழுத்துகளை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஒருங்குறி முறையைக் கொண்டு வந்ததனால் உலகமெங்கும் ஒருங்குறி அச்சுருக்களை காண வழி பிறந்தது. ஒருங்குறி முறை இல்லையெனில் அவரவர்கள் வெவ்வேறு அச்சுருக்களை பயன்படுத்தும் போது அவரவர்கள் பயன்படுத்திய அச்சுருவை கணினிக்கு இறக்கம் செய்தே காண வேண்டும். தமிழக அரசின் ஒருங்குறி அச்சுருக்களே உலகின் எங்கும் காணக் கூடிய நிலையில் உள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ் ஒருங்குறி எழுத்துக்களை http://www.infitt.org என்ற இணயதளத்திலிருந்து கணினியில் இறக்கம் செய்து கொள்ளலாம்.தமிழக அரசு மாநடுகளின்போது அச்சுருக்கான குறுவட்டுகளையும் மக்களுக்கு வழங்கியது.
ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை உலகமெங்கும் காண்பது போல் நம் தமிழையும் காணமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. மின் அஞ்சல் அனுப்பும்போது ஒருங்குறியைப் பயன்படுத்தி தமிழிலேயே மின் அஞ்சல் அனுப்பி வருகின்றனர்.

வலைப்பூக்கள் பல்வேறு பெருமக்கள் உருவாக்கியுள்ளனர். பேராசிரியர் மறைமலை தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களுக்கு வலைப்பூ உருவாக்கி அவரது கவிதைகளை வழங்கியுள்ளார். வாழும் மரபுக் கவிஞர்கள் 35 கவிஞர்கட்கு அவரவர் பெயர்களில் வலைப்பூ உர்வாக்கி அவர்களது வாழ்க்கைக் குறிப்பு கவிதைகளை பதிவு செய்துள்ளார்.

ABDUL RAHMAN
amuthabarathy
ARATTAI
ARIVUMATHI
E.S.MUTHUSWAMI
Erode Tamilanban
Ilangkannan
K.C.S.ARUNACHALAM
Maa.Sengkuttuvan
manimaran
manivendhan
Naaraa Nachiyappan
PICHINIKKAADU ILANGO
Poet Amallathasan
Poet Kalaimathiyan
POET SIRPI
Poet Minnoor Seenivasan
POET PONNADIYAN
Poet Va.Mu.Sethuraman
POET VEZHAVENDHAN

உலகளாவிய நிலையில் நார்வே பிரபு, சுவிட்சர்லாந்து முருகவேள், செர்மணி சுபா, சிங்கப்பூர் மணியம், அமெரிக்கா வாழ் தமிழர்கள் பலர் வலைப்பூ உருவாக்கியுள்ளனர்.
வருகை தந்துள்ள ஆன்றோர் பெருமக்களே அச்சில் பல்வேறு இலக்கியங்களை படைத்துள்ள நீங்கள் இணையத்திலும் தங்களின் பங்களிப்பை வழங்கி உலகத்தமிழர்களோடு பயணிக்க வேண்டுகிறேன்

Thursday, May 5, 2011

கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாடு



கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாடு

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் நடைபெறும் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாட்டில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை)

கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் நடைபெறும் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாடு ஆய்வரங்கில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். விழாவிற்கு தலைமை வகிக்கும் உலகத் தமிழ்க்கவிஞர் பேரவைத் தலைவர் புலவர் கு சீத்தா, தன்னுடைய மனைவி இறந்தும் சோகம் கலையாமல் இம்மாநாட்டிற்கு வருகை தந்துள்ள கொள்கை மறவர் தமிழ்மறையான், விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்ப்பணி வாசகர் வட்டத்தை கூட்டி தமிழ்ப்பணீக்கு உரமூட்டிய கவிமாமணி சி.விக்கிரமன், முத்தமிழறிஞர் கலைஞரின் திருவாருரிலிருந்து அரிய தொண்டாற்றும் புலவர் வெற்றிப்பேரொளி, திருக்குறள் பணியையே தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு பணீயாற்றும் மூத்தபெருமகன் கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வரதராசனார், அவர்தம் வழியில் தொண்டாற்றும் மக்கள் மதிவாணர், இராமானுசம் பாவேந்தர் பாடல்களைப் பாடி மகிழ்வித்த சித்ராமணி அம்மையார் , இசுரேல் நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் பொறியாளர் எய்தான் டொரான் மற்றும் பெருமக்களையெல்லாம் காணும்போது சென்னையிலிருந்து வந்த களைப்பு நீங்கி களீ பேருவகை கொள்கின்றேன்.

. மனமோகனதாசனின் ஆசிரியர் பேசும்போது அவர் தொடக்கப்பள்ளி படிக்கும் காலத்தில் மோகன்தாசுகரம்சந்த் காந்தி எனும் பெயரை மனமோகனதாசன் என மாற்றியதாகக் கூறினார்கள். அண்ணல் அவர்களின் பெயராலேயே மனமோகனதாசன் என செந்தமிழிலே நாமெல்லாம் அழைத்து வருகிறோம். தமிழ் உணர்வோடும், போராட்ட எண்ணத்தோடும் தொண்டாற்றும் அன்புநெஞ்சர். நம் குடியரசு என்ற இதழை செம்மொழி தழைக்க அரும்பாடுபட்டு நடத்தும் பெருமைக்கு உரியவர். ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற கருத்துக்குச் சொந்தக்காரர். இந்த மாபெரும் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி என்னை தமிழறிஞர்கள் படத்தை திறந்து வைத்து சிற்ப்புரையாற்ற அழைத்தமைக்கு மனமோகனதாசனுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத் தமிழ் அன்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்

காலம் காலமாக தமிழ் தமிழரை எண்ணும் வண்ணம் ஐயன் திருவள்ளுவர்,ஒளவையார், சி.இராமகிருட்டிணன்,இலக்குவனார், தாளமுத்து நடராசன்,முத்துக்குமார் ஆகியோர் படங்களைத் திறந்து அவர்களது தொண்டுகளையும் அவற்றைத்தொடர்ந்து நாம் தொடர வேண்டிய பணிகளையும் அறிஞர் பெருமக்களும் கவிஞர்களும் ஆய்வறிஞர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள மொழிகளில் தமிழ் முதன்மையான மூத்த மொழி. காலத்தால் அழியாத முன்னோடி இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்ட மொழி. இரசியா சென்ற பாரதப் பிரதமர் அன்னை இந்திரா அவர்கள் “யாதும் ஊரே யாவரும் கேளிர்; என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடலைப் பாடி இந்திய இலக்கியக் கூற்றாகக் கூறிய பெருமைக்குரிய மொழி தமிழ் மொழி. முன்னாள் குடியசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்ற கூட்டத்தில் பூங்குன்றனாரின் பாடலையும் திருக்குறளையும் பாடி இந்திய இலக்கியமாகக் கூறிய பெருமைக்குரிய மொழி நம் தமிழ்மொழி. அண்ணல் காந்தியடிகள் திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழைப் பயின்றதாக அவரே குறிப்பிட்டுள்ளார். யான் செருமனி நாடு சென்றிருந்தபோது சகோதரர் கணேசலிங்கமும் நண்பர்களும் ரெய்னே நகரை சுற்றிக்காண அழைத்துச் சென்றனர். அதுபோது ஒரு பாலத்தில் தமிழில் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரியை செதுக்கி வைத்துள்ளனர். இது என்ன விந்தை என வினவியபோது உலகின் சிறந்து கருத்துக்களை ஆங்காங்கே செர்மனியில் பதிய வைத்துள்ளனர் என நண்பர்கள் கூறினர்.

தமிழகத்திற்கு மதத்தைப் பரப்பவந்த அறிஞர் சி.யூ.போப்., தமிழ் இலக்கியங்களில் ஊறித் திளைத்து தன்னைத் தமிழ் அன்பராக நீக்கமற நிறைந்து அருந்தொண்டாற்றினார். இலண்டனில் உள்ள அவரது கல்லறையில் ”தமிழ் மாணவர் இங்கே உறங்குகிறார்” என பொறித்து வைத்து தமிழின் மேன்மையை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.யான் இலண்டன் சென்றபொது கண்டு மெய் சிலிர்த்தேன். அதே போன்று பெசுக்கி எனும் பாதிரியார் தன்னை வீரமாமுனிவர் எனப் பெயரை மாற்றி தமிழுக்கு சதுராகராதியையும் எண்ணற்ற நூல்களையும் படைத்து தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்தினார். அறிஞர் கால்டுவெல். எல்லிசு போன்ற பெருமக்கள் தமிழின் தொன்மையை ஆய்ந்து நிலைநாட்டியுள்ளனர்.

காலம் காலமாக அடிமைப் பட்டிருந்த தமிழர்கள் தந்தை பெரியாரின் எழுச்சியால் தன்மான உணர்வைப் பெற்று சிலிர்த்தெழுந்தனர்.பெரியாரின் வழித் தோன்றல் பேரறிஞர் அண்ணா தமிழாலேயே ஆட்சியைப் பிடித்தார். தமிழ்நாடு எனப் வரலாற்றுப் பெருமைமிக்க பெயர் மாற்றம் கண்டார். அவர் வழி வந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெரியார் அண்ணா சிந்தனைகளையெல்லாம் செயல் வடிவமாக்கினார்.அனைத்திற்கும், முத்தாய்ப்பாக காலாதிகாலம் நாம் போராடிய தமிழுக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தார், உலகே வியக்கும் வண்ணம் கோவையில் செம்மொழி மாநாட்டைக் கூட்டி தமிழ் தமிழரின் பெருமையின் சிகரம் கண்டார்.

நாமெல்லாம் கூடி கூட்டம் நடத்தி, மாநாடுகள் கண்டு தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப் போராடி வருகிகிறோம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தம் தேர்தல் அறிக்கையிலேயே தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என வலியிறுத்தியுள்ளார். செம்மொழித் தகுதியை பெற்றதைப் போல் முத்தமிழறிஞர் கலைஞரின் கரத்தை வலுப்படுத்தி தமிழை ஆட்சி மொழியாக்குவோம் எனச் சூளுரை மேற்கொள்வோம்,தமிழை ஆட்சிமொழியாக்கினால் இந்தியாவிற்கே பெருமை இந்தியாவின் கூட்டாட்சி கொள்கைக்குப் பெருமை பயப்பதாக இருக்கும்,

நமது அடுத்த கோரிக்கை திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிப்பது. திருக்குறள் மனித குலத்திற்கே திருவள்ளுவரால் படைக்கப்பட்ட மறை நூல். உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் மறை. தமிழர்கள் வாழும் பகுதியெல்லாம் போற்றிவணங்கும் மறை நூல். யான் பர்மா சென்றபோது தட்டோன் பகுதிக்கு நமது அறநெறிக்கழகத் தலைவர் கலைச்செல்வன் அழைத்துச் சென்றார்.அங்கே அமரர் மாரிமுத்து அவர்களின் அயரா முயற்சியால் வள்ளுவர் கோட்டம் அமைத்துள்ளார்.அங்கு யாங்கள் சென்ற போது திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து ஓதுவாராக உள்ள குருசாமி அவர்கள் திருக்குறளை ஓதி எங்களை வாழ்த்தினார். பர்மாவிற்கும் நமக்கும் 40 ஆண்டுகள் தொடர்பற்ற நிலையிலிருந்தாலும் உணர்வுகள் நீங்காமல் நிலைத்திருப்பதை அறியமுடிந்தது.

திருக்குறள் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல நகரங்களில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு வருகின்றன. மனித குலத்திற்கே பேரோளியாம் திருக்குறள் குறித்த மாநாடுகள் உலகில் தமிழர்கள் வாழும் பகுதியெல்லாம் நடைபெற்று திருக்குறள் உலகப் பொதுமறையாக உள்ளது. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது பாராளுமன்றத்தில் திருக்குறளைக் கூறியே நிதி அறிக்கையை தாக்கல் செய்தார். முத்தமிழறிஞர் கலைஞர் சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் ஐயன் சிலையை நிறுவி உலகையே உற்று நோக்க வைத்துள்ளார்.

உலகறிந்த நாடறிந்த பொதுமறையாம் திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க மாநாட்டின் சார்பில் கோரிக்கை வைப்பதில் இறும்பூதெய்துகின்றேன்

Wednesday, April 13, 2011

செம்மொழித் தமிழில் கிரந்த எழுத்துக்களை எதிர்ப்போம்



செம்மொழித் தமிழில் கிரந்த எழுத்துக்களை எதிர்ப்போம்
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(சென்னையில் 25-2-11 அன்று செம்மொழித் தமிழில் கிரந்த எழுத்துக்களை நீக்க ஆர்ப்பாட்டம் தமிழ் பண்பாட்டுச் சங்கம் தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றபோது கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை)

செம்மொழித் தமிழில் கிரந்த எழுத்துக்களை நீக் ஓர் ஆர்ப்பாட்டம் தமிழ் பண்பாட்டுச் சங்கம் தமிழ் மீட்பு படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறுவது மகிழத்தக்க ஒன்றாகும். இப் போராடத்தை முன்னின்று நடத்தும் பாக்கம் தமிழனையும் அவரைச் சார்ந்த பெருமக்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

இங்கு அமர்ந்திருக்கும் தமிழியக்கப் போராளி புலவர் கி.த. பச்சையப்பனார் தமிழ் காக்கும் தொண்டராகவே இன்றும் களப் பணியாற்றுகிறார். எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் 1993 ஆம் ஆண்டு உலக அமைப்பாளர் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் அறிஞர்பெருமக்கள் குமரி முதல் சென்னை வரை எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழக்கமிட்டு 1330கி.மி நடந்து வந்தோம். கட்சி மதம் சாதியை மறந்து தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி மூத்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களோடு கோட்டைக்குச் சென்றபோது காணவே மறுத்தார் அன்றைய முதல்வர் செயலலிதா அம்மையார். அது போது தம்முடைய தமிழாசிரியப் பெருமக்களையெல்லாம் ஒருங்கிணைத்து நடைப்பயணம் வெற்றிபெற ஒத்துழைத்த பெருமகன் கி.த.ப.

பேரறிஞர் பாவாணர் வழி தமிழகத்தில் மிகப் பெரும் தனித்தமிழ்ப் புரட்சியே நடத்தியுள்ளனர். முறம்பில் புலவர் நெடுஞ்சேரலாதன் பாவாணர் கோட்டம் அமைத்து பாவாணர் சிந்தனைகள் குறித்த கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வழியில் அறிஞர் இறைக்குருவனாரின் தென்மொழி, கவிச்செம்மல் அருகோவின் எழுகதிர் புதுவை தெளிதமிழ் நமது தமிழ்ப்பணி மற்றும் பல இதழ்கள் தனித்தமிழ் இதழ்களாகவே வெளிவநது உலகை வலம் வருகின்றன.

நமது உணர்வுகளுக்கெல்லாம் தலைமை தாங்கும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழைச் செம்மொழிப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தி, செம்மொழிக்கென மேம்பாட்டு வாரியம் அமைத்து கோவையில் செம்மொழி மாநாடு நடத்தி நமது பெருமையை உலகறியச் செய்து நிலைக்க வைத்துள்ளார். தமிழாகவே வாழும் கலைஞரின் காலத்தில் நமது கோரிக்ககைகளெல்லாம் வழி வகை காணப்படும்.

தமிழ் கல்வெட்டு ஒலைச்சுவடி அச்சு என பல் நிலையைத் தொடர்ந்து கணினியிலும் உலகளாவிய நிலையில் வலம் வருகிறது. தமிழக அரசின் ஒருங்குறி தமிழ் பதிவர்களிடையே மிகப் பெரும் புரட்சியை ஏறபடுத்தியுள்ளது. தமிழக அரசும் உத்தமம் அமைப்பும் இணைந்து இணைய மாநாட்டை உலகளாவிய அறிஞர் பெருமக்களைக் கூட்டித் கணினித் தமிழில் மிகப் பெரும் ஏற்றத்தை வழங்கியது.

ஒப்புயர்வுள்ள இக் கால கட்டத்தில்தான் ஆண்டாண்டு காலமாக நம்மையும் நம் மொழியையும் அடிமைப் படுத்திய கூட்டம் தமிழ் ஒருங்குறியில் ஏற்கெனவே உள்ள 5 எழுத்துக்களோடு மேலும் 26 கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கச் சதி செய்கின்றனர்.
பன்னெடுங்காலம் போராடி தமிழிலேயெ அனைத்தும் நடைமுறையில் உள்ள இந்த கால கட்டத்தில் கிரந்த தினிப்புக்கு முயற்சி செய்யும் நய வஞ்சகர்களை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழுக்கென்று நம் முன்னோர் உருவாக்கியுள்ள நெடுங்கணக்கு வகையே போதுமானது. கிரந்தத்தை திணித்து மீண்டும் மணிப்பிரவாள நடையைத் தடுக்க நம்மைப் போன்ற தமிழ் அமைப்பின் பொறுப்பாகும். தற்போது ஆங்கிலம் கலந்த தமிங்கிலத்திடமிருந்து நம்மொழியைக் காப்பதும் நமது தலையாய கடமையாகும்.

”வட சொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ எழுத்தோடு புணர்ந்த சொல்லாகுமமே” என்பது தொல்காப்பியம் எந்த சொற்களையும் தமிழ் மரபுக்குத்தகுந்த வடிவமைக்கக முடியும். தமிழ் எழுத்துக்கள் சொற்களின் பொருளுக்கு தக ஒலிக்கும் ஒலிப்பான தன்மையுடையன.
செம்மொழித் தமிழில் கிரந்த எழுத்துக்கள் கூடாது கூடாது என உங்களோடு இணைந்து முழங்கி பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் எம்முடைய எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் திரளாக பங்கேற்றுள்ள அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

Wednesday, March 16, 2011

கண்ணீர்சிந்தி திருவடி போற்றினோம் !


கண்ணீர்சிந்தி திருவடி போற்றினோம் !
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

புறநாநூற்றுப் பாவின் மெய்மைப்
புலியை ஈன்ற தாயே
மறுவிலா மாசிலா மாவீரன்
மண்ணில் ஈன்ற பார்வதி
வெறுவாய் மெல்லும் நம்மோர்
வெட்டியாய் வாழ்வோர் தம்மில்
உருவிலா எம்மின உருவாம்
உன்னதத் தலைவனின் தாயே !

உலகுள தமிழர்கள் கலங்கி
உத்தமக் கருவறை போற்றும்
பழுதிலா ஈழம் காணா
பார்வதித் தாயும் சாய்ந்ததே
விழுதுகள் ஆயிரம் விதைத்த
வீரத்திருமகன் போர்க்கள மண்ணில்
தொழுவோம் தெய்வீகத் தாயே
தொல்குடி நாளும் எண்ணுமே !

ஈழத்துப் போரினில் மாய்ந்த
இன்னுயிர் மக்கள் பின்னே
தாழாப்பெருமைத் தலைவரின் தாயின்
தன்னுயிர் மாத்தவம் ஈந்ததே
காலம்காலம் கண்போல் காத்த
கணவனை இழந்தாய் களத்தில்
ஓலக்குரல் மக்களின் மக்களாய்
ஒண்டமிழ்த் தாயும் சாய்ந்ததே !

மீளாத்துயரைத் தந்த கயவன்
மிருகராச பட்சே ஒழிக
காலம்காலம் போற்றிய தாய்மை
கயமைச் சிங்களம் சாய்க
வேழக்கூட்டம் தமிழாராம் எம்மின்
வேதனை மாய்ந்தே மீக்கெழ
காலஅமுதத் பார்வதித் தாயே
கண்ணீர்சிந்தி திருவடி போற்றினோம் !

Tuesday, February 22, 2011

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் சேதுகாப்பியம் 2 நிலை உயர் காண்டம் வெளியீட்டு விழா



சென்னையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் 76ஆம் அகவையில் 9-2-2011 அன்று சேதுகாப்பியம் 2 நிலை உயர் காண்டம் வெளியீட்டுவிழா சந்திரசேகர் திருமணமண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

மன்ற இயக்குநர் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார். பத்மசிறீ ஒளவை நடராசன் வெளியிட காவியக்கவிஞர் வாலி பெற்றுக்கொண்டார். இருவரும் பெருங்கவிக்கோவின் காவியச் சிறப்பைக் கூறி வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் சிலம்பொலி செல்லப்பனார், முன்னாள் மேயர் சா.கணேசன் கவிவேந்தர் மேத்தா, பேராயக் கட்சியின் தலைவர் இதயதுல்லா, பேராசிரியர் ச.முத்துக்குமரன், முனைவர் அ.இராமசாமி, மாம்பலம்.ஆ.சந்திரசேகர், புலவர் செந்தமிழ்ச்செழியன், முனைவர் வா.மு.சே.ஆண்டவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முனைவர் மறைமலை, தலைமையில் சேதுகாப்பியம் ஆய்வரங்கம் நடைபெற்றது. முனைவர் இராசகோபாலன், முனைவர் பேராசிரியர் குமாரவேலு, உலகநாயகி பழநி, கவிஞர்.நவநித கிருட்டிணன் ஆய்வுரை வழங்கினர்.

கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் தொகுப்புரை வழங்கினார்.மன்றச் செயலர் கவிச்சிங்கம் கண்மதியன் நன்றியுரை வழங்கினார்

Saturday, February 19, 2011

சென்னையில் அறிஞர் இலக்குவனார் நூற்றாண்டு விழா தமிழர்தலைவர் கி.வீரமணி திருக்கரத்தால் நூறு தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கினர்



தமிழ்ப்போராளி அறிஞர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவை அண்ணாநகர் தமிழ்ச்சங்கமும் இலக்கிய்வ வீதி அமைப்பும் சென்னையில் வள்ளியம்மாள் மேல்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்புடன் நடத்தப்பட்டது.

இலக்கியவீதி இன்யவன் அனைவரையும் வரவேற்று உரயாற்றினார்.அண்ணாநகர் தமிழ்ச்சங்க புலவர் இராமலிங்கம் முன்னுரை வழங்கினார்.பேராசிரியர் க.திருமாறன் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி திருக்கரத்தால் நூறு தமிழ் அறிஞர்கட்கு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன்,தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமி,முன்னாள் ஆட்சியர் இலட்சுமிகாந்தன் பாரதி, சிலம்பொலி செல்லப்பனார்,பெருங்கவிக்கோ.வா.மு.சேதுராமன், கவிமுரசு வா.சே.திருவள்ளுவர் உள்ளிட்ட பெருமக்கட்கு வழங்கப்பட்டது.

இலக்குவனாரின் திருமக்கள் பொறிஞர் திருவேலன்,முனைவர் மறைமலை,தமிழ்க்காப்பு திருவள்ளுவன் உள்ளிட்ட பெருமக்கள் தமிழ் அறிஞர்களை வரவேற்று விருது வழங்கி், விருந்து படைத்து மகிழ்ந்தனர்.

Friday, February 18, 2011

திருச்சியில் நடைபெற்ற எழுத்தாளர்கள் மாநாட்டில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவருக்கு தமிழ்ப்பணிச்செல்வர் விருது


திருச்சியில் தமிழ்த்தாய் அறக்கட்டளை, எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்கள்,உலகத்தமிழ்க் கவிஞர் பேரவை இணைந்து உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு 22,23,-1-11 ஆகிய இருநாட்களில் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்சியில் அறிஞர் பெருமக்களுக்கு விருது வழங்கப் பட்டது. அதுபோது கவிமுரசுவா.மு.சே.திருவள்ளுவருக்கு மாணபமை மத்திய நிதி இணையமைச்சர் திருக்கரத்தால் தமிழ்ப்பணிச் செல்வர் எனும் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

மாநாட்டிற்கு செம்மொழி நிறுவன பொறுப்பு அலுவலர் க.இராமசாமி,பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தவத்திரு குன்றக்குடி அடிகளார், மாண்பமை வணிகவரித்துறை அமைச்ச சி.நா.மி.உபயதுல்லா,கடவூர் மணீமாறன் பனப்பாக்கம் சீத்தா, தாளாளர் யூனுசு, மற்றும் எழுத்தாளர் பெருமக்களும் கவிஞர் பெருமக்களும் ஆய்வாளர்களும் பெருமளவில் பங்கேற்றுச்சிறப்பித்தனர்.

இரண்டு நாள் மாநாட்டையும் உடையார்கோயில் குணா, முனைவர் மன்சூர் மிகச்சிறப்பாக நடத்தினர்.