
திருச்சியில் தமிழ்த்தாய் அறக்கட்டளை, எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்கள்,உலகத்தமிழ்க் கவிஞர் பேரவை இணைந்து உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு 22,23,-1-11 ஆகிய இருநாட்களில் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்சியில் அறிஞர் பெருமக்களுக்கு விருது வழங்கப் பட்டது. அதுபோது கவிமுரசுவா.மு.சே.திருவள்ளுவருக்கு மாணபமை மத்திய நிதி இணையமைச்சர் திருக்கரத்தால் தமிழ்ப்பணிச் செல்வர் எனும் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
மாநாட்டிற்கு செம்மொழி நிறுவன பொறுப்பு அலுவலர் க.இராமசாமி,பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தவத்திரு குன்றக்குடி அடிகளார், மாண்பமை வணிகவரித்துறை அமைச்ச சி.நா.மி.உபயதுல்லா,கடவூர் மணீமாறன் பனப்பாக்கம் சீத்தா, தாளாளர் யூனுசு, மற்றும் எழுத்தாளர் பெருமக்களும் கவிஞர் பெருமக்களும் ஆய்வாளர்களும் பெருமளவில் பங்கேற்றுச்சிறப்பித்தனர்.
இரண்டு நாள் மாநாட்டையும் உடையார்கோயில் குணா, முனைவர் மன்சூர் மிகச்சிறப்பாக நடத்தினர்.
No comments:
Post a Comment