நிதம்பாடும் வானம்பாடி இகேதா வாழி
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்
புத்தனைக் கண்ட தில்லை
புரியுமன ஞானத் தேடல்
சித்தமுடன் உலகை ஆளும்
சீராளன் வழியில் இகேதா
வித்தகன் விரிஉலக மன்றம்
விரிவாக்க கவிச் சித்தன்
நித்தமும் அமைதி வேண்டி
நிதம்பாடும் வானம் பாடி
கவிதையாம் களத்தில் கண்டார்
கவிஞானி சீனீ வாசன்
புவித்தலத் தொடர்பை நாட்டி
புத்தெழுச்சி இகேதா தந்தார்
தவித்தாரைத் தாங்கி நிற்கும்
தலம்வெல் பத்ம நாபர்
குவித்தபுகழ் பெருங்க விக்கோ
குவலயம் கண்ட இகேதா
கொத்துக் கொத்தாய் மாய்ந்த
கொடுமை நாகசாகி கிரோசிமா
செத்ததுவும் பவனி வரும்
செழுமைவளர் சப்பான் மண்ணில்
புத்தமுதாய் வந்த அண்ணல்
புரிஞான வள்ளல் கோவாம்
எத்திக்கும் புகழ் ஓங்கும்
ஏந்தலாம் இகேதா வாழி
போங்சாய் வளர் நுட்பம்
பொதியும் தனிச் சான்றாய்
எங்குமே பரவி நிற்கும்
எழுச்சியாம் சோகா கக்காய்
தங்குதடை துன்பம் எல்லாம்
தகர்த்துஎழும் இன்பம் இகேதா
பொங்கும்நற் கல்வி ஞானம்
போதிக்கும் ஞானி இகேதா
Subscribe to:
Post Comments (Atom)
nalla thamizh thottathil pirantha neengal
ReplyDeletearputha kaviyaththulleer
polurdhayanithi
http;//polurdhayanithi.blogspot.com