Wednesday, December 26, 2012

பெங்களூரு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கிளையின் சார்பில் அயல் நாட்டுப் பேராளர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் உரை



(பெங்களூருவில் 27-8-2012 அன்று   உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கிளையின் சார்பில் அயல் நாட்டுப் பேராளர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்  ஆற்றிய பாராட்டுரை)

பெங்களூரு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கக் கிளையின் சார்பில் அயல் நாட்டுப் பேராளர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பெங்களூருவில் பங்கேற்பதை பெரும் பேறாகக் கருதுகிறேன். நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கும் கவிஞர் இந்திய் ஆட்சித் துறையில் மிகப் பெரும் பொறுப்புக்களையெல்லாம் வகித்த ஐயா பெருமாள், அவர்களே நன்றிக்கு இலக்கணமாக வாழும் இரட்டையர்கள்வெற்றிவீரன், சுந்தரரவேல் அவர்களே தமிழ் நாட்டிலிர்ந்து வருகை தந்திருக்கும் உலகப் பதிப்பாளர் லேனா தமிழ்வாணன் அவர்களே மிகச் சிறந்த அரங்கில் கூடியிருக்கும் பெங்களூர்  வாழ் தமிழ் நெஞசங்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்

    பாராட்டுப் பெறும் உலகத்த்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் கனடா வேலுப்பிள்ளை, செயலாளார் நாயகம் செருமனி  துரை கணேசலிங்கம். பொருளாளர் பிரான்சு செல்வராசு தென் ஆப்ரிக்காத்தலைவர் மிகிசெட்டி செயலர் மேசுத்திரி, பாரிசு நிலா, திருமதி செலவராசா, இயத்தின் தூணாகவும் ஊடகத்துறை பொறுப்பாளாரகவ்வும் பொறுப்பேற்றுள்ள உதயன் ஆசிரியர் யோகேந்திர லிங்கம் உலகக கல்வி மாநாட்டின் தலைவர் கனடா துரைராச, திருமதி துரைராசா மற்றும் பங்கேற்றுள்ள அயல் நாட்டுப் பேராளர்களே உங்களைப் பாராட்டுவது உலகத்தமிழரைப் பாராட்டுவதற்கு ஒப்பாகும்.

    பண்பாட்டு இயக்கத்தின்பெங்கள்ளூர் கி    ளைத் தலைவர் பக்கதவக்சலம் மிகசிறந்த செயல்வீர்ராக உள்ளார், வந்துள்ள அனைவரையும் மைசூர் பிருந்தாவன் என அனைத்து ப்குதிகளுக்கும் அழைத்துச் சென்று மிகச்சிறந்த விருந்தோம்ம்பலை புலப்படுதியுள்ளார். பெங்களூர் போறுப்பாளர்களே உங்கள் அனைவருக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

    நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் இங்கு செல்லக் கூடாது எனச் சிலர் கூறினர். ஐயா மிக்கி செட்டி அவர்களும் தயங்க்கினார். நான்
உங்களின் உன்னதமான் அன்பழைப்பை ஏற்க வேண்டு என்றேன். மிக்கிசெட்டி அவர்கள் இங்கே குழுவோடு வருகை தந்துள்ளார்கல் பெருமகனாருக்கு
தலைதாழ்ந்த நன்ற்யை உரித்தாக்குகிறேன்.

    யாங்கள் ஆங்காங்கே சென்றுகொண்டிருந்தபோது அருமை பாரிசு செல்வாராசா அவர்கள் தம் தொபேபேசியில் பிரான்சில் அவர் நடத்தும்
வானொலிய்ல்யில் எங்களைப் பேட்டி கண்டு ஒலிபரப்பிக் கொண்டுவந்தார். பெங்களூர் தமிழ்ப் பெருமக்களின் கருத்துக்களெல்லாம் உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறது.செல்வாராசாவின் அற்புதத் தமிழ்த் தொண்டைப் பாரட்டுகிறேன்.

    கண்டாவில் அரியதொரு தொண்டாற்றும் உதயன் யோகேந்திரலிங்கம். கனடாவில் தின்மும் நடைபெறும் விழாக்களின் கதாநாயகராக விளங்குபவர். நமக்கும் கனடாவாழ் தமிழருக்கும் தன் உதயன் இதழ் மூலம் பாலமாக விளங்குபவர். பெருமகனாரை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

    ஐயா மிக்கிசெட்டி அவர்கள் தமிழாசிரியர்கள் தென் ஆப்ரிக்காவிற்கு வேண்டும் என்று கூறியுள்ளார் நாமெல்லாம் இணைந்து அவர்களின் தெவையைநிறைவு செய்வோம். தமிழ் உணர்வோடு ஒருகுழுவையே கூட்டி அவர்களது தமிழ் உணர்வை நிலைநாட்டியுள்ள பெருமனாரை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

    ஈழத் தமிழர்களின் தாங்கள் அளித்துவரும் உணர்வு உலகறிந்த்து. ஈழத்து மக்களுக்கு ஒரு விடிவுக்கு நாம் என்றும் போராடுவோம்

    அயலகத்திலிருந்து வருகை தந்துள்ளா உங்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன். நன்றி வணக்கம்

Tuesday, December 25, 2012

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க உலகக் கல்வி மாநாட்டில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை


( சென்னையில் ஆகஃசுடு 25,26- 2012 நாட்களில் நடைபெற்ற  உலகப் பண்பாட்டு இயக்கத்தின் உலகக் கல்வி மாநாட்டில் பங்கேற்று கவிமுரசு வா..மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை )

    உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் உலகக் கல்வி மாநாட்டை கண்டாவிலிர்ந்து இங்கு வந்து மிகசிறப்பாகநடத்தும் துரைராசா அவர்களையும் இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை.  கணேசலிங்கம் அவர்களையும் பாரிசுலிருந்து வந்துள்ள பொருளாளர் செல்வராசா அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் ஒரு ,மிகச் சிறந்த இயக்கம் உலகம் முழுமையும் நம் உணர்வுள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒப்பற்ற இயக்கம். உலக நாடுகல் முழுமையும் அனைத்து நாட்டுத் தமிழர்களும் அந்தந்த நாடுகளில் கிளைகள் அமைத்து மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.

 இங்கே பாருங்கள் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தி தென் ஆப்ரிக்காத் தலைவர்  மிக்கிசெட்டி அவர்கள் ஒரு பெருங்குழுவோடு இங்கே வந்திருர்கிறார்காள். எங்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க ஆசிரியர்  தேவை எனக் குறிபிட்டார்கள். இந்தியஅரசே இதைச் செய்யவேண்டும் அலல்து தமிழக அரசாவது செய்யவேண்டும்,

தென் ஆப்ரிக்கா மட்டுமல்லா ம்லேசியா சிங்கப்பூர் தவிர்த்த அதைதுப் நாடுகளிலும் இந்த அவலம் உள்ளாது. யாங்கள் பன்னாட்டுத்  தமிழுறவ மன்றத்தின் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோவின்  அயரா முயற்சியால்ல் ஆறு மாநாடுகள் நடத்தியுள்ளோம்.மூன்று மாநாடுகள் வெளிநாடுகளில் நடத்தியுள்ளதால் இந்த அவலத்தை
உணர முடிகிறது.அருமை வழ்க்கறிஞர் காந்தி அவர்கள் இங்கே இருகிறார்கள். அரசே தேவையில்லை நாமெல்லாம் ஒன்று கூடினால் இந்த அவலத்தைப் போக்க முடியும்.

   
உலகத் தமிழ்ப் பாட்டு இயக்கதின் முதல் மாநாட்டை  சென்னையில்தான் தலைவர் இரா.ந.வீரப்பன்,  தந்தையார் பெர்ருங்கவிக்கோஎழுகதிர் அருகோ இணைந்து நடத்தியது என் மனக் கண்முன் நிழாழாடுகிறது. தமிழ்ப்பணியின் சார்பில் ஒரு அரிய மலர் வெளியிடோம். இந்தப் பண்பாட்டு இயக்க புதுச்சேரி மாநாட்டை நாங்கள்தன் அரும்பாடுபட்டு நடத்தினோம். மலேசியாவில்  ப;கு.சண்முகம்  தலைமையில் நடைபெற்ற மாநாட்டிற்கு இங்கிருந்து என்னுடையா தலைமையில் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்த்தோம். ஆனால் பங்கேற்ற பெருமக்களெல்ல ஒருங்கிணைய வழியில்லாமல் இம்மாநாடு நடைபெறுகிறது. தடி எடுத்தவரகள்  தண்டல்காரர்கள் போல் அல்லாமல் அனைவரையும் ஒருங்கிணைக்கும் மன முதிர்ச்சியை நாம் பெற வேண்டும்.

    அண்ணன் கனடா யோகேந்திரலிங்கம் அவர்கள் இப் பண்பாட்டு இயக்ககதிற்கு வழ்ங்கியுள்ள பங்க்ளிப்புகள் எண்ணிப் போற்றத்தக்கது.
  அரசுகளை நம்பாமல் இயக்கவாதிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழாசிரியர்களை தேவையான நாடுகளுக்கு அனுப்ப அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

         வெளிநாட்டுத் தமிழர்களுக்கு ஒருபாட திட்டத்தை உருவாக்கி நம் பல்கலைக் கழகங்கங்களோடு ஒருங்கிணைத்து வெற்றி பெறவேண்டும். ஐயா துரைராசா அவர்கள் டொரோண்டோவில் கல்லூரி அமைத்துள்ளார்கள். ஆயிரக் கணக்காண மாணவர்கள் பயில்கிறார்கள். இங்கு திருநெல்வேலி மனோன்மணியும் சுந்த்ரனார் பல்கலைக் கழத்தின் வழி பட்டம் பெற்றுத் தருகிறார்கள். இந்த வழிகளை உலகத் தமிழர்கள் பின் பற்றவேண்டும்


நாம் அனைவரு ஒருங்கிணைந்து உலகத் தமிழர்களின்இன்னல்களைக் கலைவோம் என்ற உறுதி மொழி ஏற்போம் நன்றி வணக்கம்.

தமிழாகரர் பேராசிரியர் ஆறு. அழகப்பனார் பவள விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவருக்கு தமிழ்மாமணி பட்டம்



சென்னையில் தமிழாகரர் பேராசிரியர் ஆறு. அழகப்பனார் பவள விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவருக்கு தமிழ்மாமணி  பட்டம் தமிழக ப.ச.க. தலைவர் பொற்றாமரை இல. கணேசன் தலைமையில் பெருங்கவிக்கோ முன்னிலையில் முன்னாள் துணைவேந்தர்கள் முனைவர் க.ப. அறவாணன், முனைவர் பொற்கோ வழங்கினர்.

கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் தமிழ்ப்பணி இதழின் அரிய சேவையையும், உலகளாவிய தமிழ்த் தொண்டையும்., உரைவீச்சையும் பாராட்டி தமிழ்மாமணி பட்டம், வழங்கப் பட்டது.

 இவவிழாவில் அறிஞர் பெருமக்கள் தமிழ்மாமணி பட்டம் பெற்றனர். எழுகதிர் அரு.கோபாலன், கவிதைஉறவு ஏர்வாடி இராதாகிருட்டிணன்
கண்ணியம் குலோத்துங்கன், தென்மொழி பூங்குன்றன், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், கவிஞர் கடவூர் மணிமாறன், முகம் மாமணி உள்ளிட்ட பெருமக்கள் சிறப்பிக்கப் பட்டனர்.

Wednesday, December 12, 2012

அன்னை சேதுமதியின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் அன்னை சேது அறக்கட்டளை சார்பில் பொற்கிழி வழங்கு விழா





அன்னை சேதுமதியின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் மிகச்சிறப்பாக 6-11-2012 அன்று காலையில் உடைகுளம் சாலையில் உள்ள அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.   அன்னையின் நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திருகுறள் நாவை சிவம், புலவர் தமிழாளன்,திருச்சி நாகராசன்,இதழ்மாமணி பட்டாபிராமன்,செந்தமிழ்விரும்பி பார்த்தசாரதி செல்லம் பூசாரி, கோடையிடி குற்றாலம், சிறுகதைஆசிரியர் உடையார் சிந்தை கோ.சேகர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தந்தையார் பெருங்கவிக்கோ நெஞ்சுருக நிறைவுரையாற்றினார். வா.மு.சே.ஆண்டவர் அனனையின் நினைவுகளையும் சிறப்புகளையும் கூறினார். இலக்குமி மீனாட்சிசுந்தரம்  குத்துவிளக்கேற்றிஅன்னையின் பக்திப் பாடல் பாடினர். கவிமுரசு வாமுசே திருவள்ளுவர்நன்றிபாராட்டினார். கிராம மக்கள் அனைவருக்கும் ஆண்டநாயகபுரம் மடத்தில் உணவு வழங்கப்பட்டது. திரு பால் செந்தில்  அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட  ஏற்பாடு செய்திருந்தார்.

           05=11-2012 அன்று மாலை ஆண்டநாயகபுரம் முத்து இராமயி இல்லத்தில் திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது.

           11-11-2012 அன்று அன்னை சேது அறக்கட்டளை சார்பில் பொற்கிழி வழங்கு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முனைவர் அவ்வை நடராசன் தலைமையேற்று கவிச்சிங்கம் கண்மதியன், செந்தமிழ்முரசு செந்தமிழ் விரும்பி ஆகியோர்க்கு தலா ரூ.10,000 பொற்கிழி வழங்கினார்.செம்மொழி மத்திய நிறுன இராமசாம், முனைவர் மறைமலை இலக்குவனார், கவிக்கொண்டல் செங்குட்டுவன், வாழ்த்த்ரை வழங்கினர்.

        தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாறினார். முனைவர் ஆண்டவர் அறிமுகவுரையாற்றினார். நிறைவாக பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நன்றி பாராட்டினார். அனைவருக்கும் சரவண்பவண் உணவகத்தில் உணவு வழங்கப்பட்டது.

தமிழ்ப்பணி ஆசிரியர் ,தமிழ்மாமணி ,கவிமுரசு ,வா .மு .சே .திருவள்ளுவரின் "யாதும் ஊரே" நூல் வெளியீட்டு விழா !

"யாதும்  ஊரே"  நூல் வெளியீட்டு விழா ! 
தமிழ்ப்பணி ஆசிரியர் ,தமிழ்மாமணி ,கவிமுரசு ,வா .மு .சே .திருவள்ளுவரின் 53 வது பிறந்த நாளை முன்னிட்டு ,அவர் எழுதிய "யாதும்  ஊரே"  நூல் வெளியீட்டு விழா கல்லூரி விடுதி மதுரையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பிலும் உலகத் திருக்குறள் பேரவை சார்பிலும் நடைபெற்றது .கவிபாரதி அசோக்ராசு வரவேற்றார் , கவிஞர் மார்சல் முருகன் அறிமுக உரையாற்றினார் .முனைவர் இ.கி.இராமசாமி தலைமை  வகித்து   நூலை வெளியிட்டார்  .பேராசிரியர் ஞா .விக்டர் ,ஆசிரியர் கல்யாணி இருவரும் பெற்றுக்  கொண்டனர் .கவிஞர்கள் வீரபாண்டியத்  தென்னவன் ,கா .கருப்பையா ,இளங்கவின், அருட் தந்தை ஆனந்தராசு வாழ்த்துரை வழங்கினார்கள் .கவிஞர் இரா .இரவி நூல் ஆசிரியருக்கு பொன்னாடைப் போர்த்தி நூலினைப் பெற்று வாழ்த்துரை வழங்கினார் .நூல் ஆசிரியர் வா .மு .சே .திருவள்ளுவர்  ஏற்புரையாற்றினார் .கவிஞர் இராம பாண்டியன் நன்றி கூறினார். தேசியவலிமை வே .சுவாமிநாதன் ,திருமதி பரிமளா திருவள்ளுவர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !


   

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி பயிற்சி கல்லூரியில் நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ.எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .கவிஞர் இரா .கல்யாண சுந்தரம்முன்னிலை  உரையாற்றினார்  . திரு .ஜோதி மகாலிங்கம் ,
திரு .ஆ .முத்துக்கிருஷ்ணன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.  கவிமுரசு வா . மு .சே. திருவள்ளுவர் அவர்கள் "முயற்சி திருவினையாக்கும்" என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .ஆசிரியர்கள் பீட்டர் ,ரூபி பீட்டர் ஆகியோர் தன்னம்பிக்கை கருத்துக் கூறினார்கள் .
திரு.ஜோ .சம்பத்   நன்றி கூறினார் .தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தினர்   பலர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தார்.

--

யாதும் ஊரே !



நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

தமிழ்மணி புத்தகப் பண்ணை .281திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை .சென்னை .5. 
  விலை ரூபாய் 150.

அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு கட்டமைப்பு அனைத்தும் மிக அருமை .பாராட்டுக்கள் .நூலின் உள்ளே மின்னூர் சீனி வரைந்துள்ள பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் ஓவியம் அற்புதம் .

வணிகவியல் பட்டதாரியான நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் படித்த படிப்பிற்கு  ஏற்ற ஒரு வங்கி வேலை வாங்கி சராசரி மனிதனைப் போல வாழாமல் ,தந்தையின் வழியில் தமிழ்ப்பணி மாத இதழை  41 ஆண்டுகளாக தொய்வின்றி நடத்தி வருவது சாதனை .நல்ல உள்ளத்திற்கு எடுத்துக்காட்டு . 

திரைப்பட நடிகர், நடிகை கவர்ச்சிப் படங்கள் இன்றி இதழ் நடத்துவது பாராட்டுக்குரியது . நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் இரா. மோகன்அவர்கள் குறிப்பிட்டார்கள் .ஒருவர் கையில் உள்ள பணத்தை விரைவில்    கரைக்க வேண்டும் நிபந்தனை .சீட்டு விளையாண்டார் தோற்காமல் வென்றார் .குதிரை   மீது கட்டினார் அதுவும் வென்றது .ஒரு இதழ் தொடங்கினார் பணம் முழுவதும் கரைந்ததாம் .இது நகைச் சுவை அல்ல உண்மை .பல சிற்றிதழ்கள் மாதம் தோறும் சில ஆயிரங்களை இழந்துதான் வெளிவருகின்றன. இப்படி ஒரு இதழுக்கு ஆசிரிராக இருந்துக் கொண்டு கவிதை, கட்டுரை எழுதி நூலும் வெளியிட்டு வருகிறார் நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .தந்தையின் வழியில் மகன் நடக்க வில்லை என்பதுதான் இன்றைய குற்றச்சாட்டு .னால் தந்தையின் வழியில் நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர்நடப்பது பெருமை .
இந்த நூல் பயண இலக்கிய நூல் .முத்திரை பதித்துள்ள அற்புத நூல் .நூல்ஆசிரியர் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள வைர வரிகள் சிந்திக்க வைத்தது .
" ஈழத் தமிழர்கள் இன்னல்களுக்கு இ
ந்நூற்றாண்டில் வாழும் அனைத்துத் தமிழர்களும் பொறுப்பானவர்கள்தான் .அவர்கள் இந்தியாவின் வஞ்சத்தால் இன்றும் தொப்பூழ்க் கொடி உறவுகள் ஈழத்தைப் பெற்றுக் கொடுங்கள் என்றவர்களை  முள்வேலிகளில் முடங்கி விட்டனர் .கொடூரம் என் நெஞ்சைப்  பிழிகிறது .   .நூல்ஆசிரியர்  நெஞ்சை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களின் நெஞ்சையும் பிழிகிறது . ஈழத் தமிழர்கள் இன்னல்கள் நூலில் பதிவாகி உள்ளது .ஆனால் தனி ஈழத்தை என்றும் ஆதரிக்காத பேராயக் கட்சியை இன்று வரை தன் சுய நலத்திற்காக ஆதரிக்கும் கலைஞரை  நூல் ஆசிரியர் ஆதரித்து எழுதி உள்ள கருத்து மட்டும் முரண் பாடாக உள்ளது .

புலம் பெயர்ந்து வாழும் வலி மிகுந்த அகதி வாழ்விலும் வருமானத்தில் ஒரு பகுதியை தமிழுக்கும் ,  தமிழருக்கும் செலவு செய்து தமிழ் வளர்க்கும் உயர்ந்த உள்ளங்களின் அன்பை நன்கு ஆவணப் படுத்தி உள்ளார் .பாராட்டுக்கள்
.
குறிப்பாக இணையராக இருந்து விருந்தோம்பல் செய்து தமிழ்ப் பண்பாடு காத்து வருவதை நூலில் குறிப்பிட்டுள்ளார் .
வெளி நாட்டிற்கும் நம் நாட்டிற்கும் உள்ள வேற்றுமையை ஒப்பீடு செய்துள்ளார் .இன்றும் சென்னை தொடர் வண்டிகளில் வ
ண்டிக்குள் எந்த நிலையத்தில் நிற்கிறது என்ற  ஒலி வருவதில்லை .ஆனால் அயல் நாடுகளில் எந்த நிலையம் என்பதை ஒலியால் வண்டியின் உள்  உணர்த்துகின்றனர் .தேம்சு நதி போல சென்னை   கூவமும் மாற வேண்டும் என்ற ஆசையை எழுதி உள்ளார் .

இந்த நூலில் குறிப்பிட்டுள்ள ஈழத் தமிழர்களில் பலர் நான் அறிந்தவர்கள் .என் படைப்புக்களைப் பாராட்டியவர்கள் .லண்டன்  நல்ல மனிதர்கள் சம்பந்தன் ,பொன் பாலசுந்தரம் போன்றவர்கள் பற்றியும் எழுதி உள்ளார் .அய்யா பொன் பாலசுந்தரம் அவர்கள் அவராகவே சமைத்து மீன் குழம்பு வைத்து விருந்து  வைத்ததை எழுதி உள்ளார் .

" சொல்லொணாத் துயரைத்   தாங்கி வாடும் ஈழத்து மக்களின் தனி ஈழம் மலர்ந்தால் மட்டுமே ஈழத்துச் சோகம் நீங்கும் என்பதை உலகமே உணர முடிகின்றது "

இந்த வைர வரிகளை உலகம் உணர வேண்டும் .

லண்டன் ,கனடா ,பாரீசு ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து ஆய்ந்து அறிந்து நூல் எழுதி உள்ளார் .
நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் கவிஞர் என்பதால் சில இடங்களில் கவிதையாக நன்கு பதிவு செய்துள்ளார். பயணித்த வானுர்தி தடங்களின் விபரத்தை ஆங்கிலத்தில் நூலின் இறுதியில் எழுதி உள்ளார் .இனி பயணம் செய்ய இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் .பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் பற்றிய குறிப்பு விரிவாக உள்ளது .பல பரிசுகளும் விருதுகளும் பெற்று, புலிக்குப் பிறந்தது பூனையாகாது  என்ற பொன் மொழியை மெய்ப்பிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார் .பாராட்டுக்கள் .

இலக்கிய சுற்றுலா செல்லும்போது தான் மட்டும் செல்லாமல் தன் மனைவி பரிமளா அவர்களையும் உடன் அழைத்து சென்றது சிறப்பு .

தன் மனைவி பரிமளா பற்றி ஒரு கவிதையும் எழுதி உள்ளார் .

நங்கை பரிமளா நல்லாள்
நதியின் கரைபோல் இல்லாள்
மங்கையர் உலகம் போற்றும்
மகுடப் பொறுமையைச் சொல்லாள்
பொங்கும் வெள்ளம் தாங்கும்
புனித நதியின் பாதை
தங்கும் இன்பம் தவழ
தேம்சில் நடந்து சென்றோம் !
பயண இலக்கிய நூல்களில் சிறப்பிடம்  பெறும் நூலாக வந்துள்ளது .இந்த நூலிற்கு விருதுகளும் பாராட்டுக்களும் கிடைக்கும்