பக்தியாம் போலி வேடம்
படித்தவன் போற்றும் ஈனம்
சக்தியாய் தனனைக் காட்டி
சாய்த்திடும் மனித நேயம்
வக்கிர நெறியில் வாழ்ந்தே
வனிதையர் கற்பை சாய்த்தே
முக்தியை காணும் மோக
மடமையைச் சாய்த்தல் என்றோ?
இயல்பினால் வாழ்க்கை வாழ
இயலாத மடமைச் சாமி
புயலென காமம் தேக்கி
புரிந்திடும் அவலம் ஏனோ?
செயல்நெறி உணரா மக்கள்
செறிந்துள அறிவை மாய்த்து
முயற்சியின் அருமை தன்னை
முயலாது செல்தல் தானே!
பெரியார் தோன்றிய மண்ணில்
பேதமை தொடரும் மோசம்
அறியாமை வீழ்த்திய அண்ணா
அகவழி வெல்தல் என்றோ?
நெறியிலா பக்திச் சாயம்
நிலையான உருவாய்ச் சேர்க்க
புரியாத மக்கள் தம்மை
புதைகுழி தள்ளல் நன்றோ?
நித்தியா நந்தன் லீலை
நீசத்தை நாளும் காட்டி
எத்திசை மக்கள் எல்லாம்
ஏசியே முகம் சுழிக்க
பத்தியம் குடும்பம் காக்கும்
பாவையர் கொதித்தல் வீணோ?
சத்தியம் வாழ்க்கை என்றே
சாக்கடைக் குளியல் அன்றோ!
பக்தியை விற்கும் வேடம்
பரத்தையர் சேர்க்கும் ஓலம்
சக்தியே தானே என்றே
சந்ததி அழிக்கும் மோசம்
புத்தியைக் கூர்மை ஆக்கி
புவியினில் மடமை சாய்த்தே
நத்திடும் இயல்பின் வாழ்க்கை
நாடிடும் நாள்தான் என்றோ?
Saturday, April 17, 2010
Wednesday, April 7, 2010
ஒர் தமிழனின் புலம்பல்
ஒர் தமிழனின் புலம்பல்
தமிழ் ஈழ மாயையில்
சிக்கியதால்….
தமிழர்;
மதியிழந்தனர்..
அறமிழந்தனர்..
கல்வியிழந்தனர்…
தனமிழந்தனர்…
தரமிழந்தனர்..
மானமிழந்தனர்..
பதியிழந்தனர்..
உயிரிழந்தனர்..
பாலரையிழந்தனர்..
தாரமிழந்தனர்..
தந்தையிழந்தனர்…
தாயையிழந்தனர்..
சகோதரனையிழந்தனர்…
துணையிழந்தனர்…
சுற்றமிழந்தனர்…
சூழலிழந்தனர்…
கதியிழந்தனர்…
நெறியிழந்தனர்…
நேர்மையிழந்தனர்…
கலையிழந்தனர்…
மறையிழந்தனர்…
பண்பிழந்தனர்….
தவமிழந்தனர்…
தானமிழந்தனர்..
நிலைகுலைந்தனர்…
ஆனால்……தமிழர்;
மறக்கக் கூடாத சரித்திரம் படைத்தனர்
விடுதலைக்காக
அடிமைகளாயினர்.
விடிவிற்க்காக…
இருட்டில் தள்ளப்பட்டனர்…
வழி தவறினர்.
பிள்ளைகள் கடத்தப்பட…
பெற்றோர் பதறினர்,
உற்றோர் வருந்தினர்;
தமிழர் தமிழனை தமிழின் பெயரால்
அழிப்பதை கண்டேங்கினர்;
போர் களத்தில்,
உயிர்க்கேடயம் ஆகினர்;
வாழ்விற்கும் சாவிற்க்கும்
இடையே விழிம்பில் பரிதவித்தனர்;
அழிவின் மத்தியில் ஆக்கம்
இறப்பின் மத்தியில் பிறப்பு
பாவத்தின் மத்தியில் புண்ணியம்
கோரத்தின் மத்தியில் கருணை
அகங்காரத்தின் மத்தியில் தெய்வீகம், கண்டனர்.
உயிரைப் பேணாக் கேவலம்;
பொய், பிரட்டு, சூது, வாது,
கொலை, கொள்ளை,
அகங்காரத்தின் கோரத்தாண்டவம்,
கண்டனர்.
மூத்தோர் இருக்க
இளையோர் மாண்டதை..
தம்முயிரைக்காக்க
காயமுற்றோரை கைவிட்டதை…
தம்முயிரின் மேலாக
மற்றயோரதை பேணியமையை
எதிரியின் கருணையை கண்டனர்.
இன்று,
அகதிகளாய்..
ஊனமுற்றோராய்…
விதவைகளாய்…
நடைபிணங்களாய்…
நாதியற்றோராய்….
கையேந்தி நிற்போராய்…
கைதியாய்….
இருக்கும் தமிழருக்கு
தீர்வு என்ன?
இது போதாதென்று
களம் இறங்கியுள்ளனர்
தமிழ் அரசியல் கழுகுகள்..
தேர்தல் பெயரில்
பிணந்தின்ன..
கடவுளே!
போதும் நாம் பட்டபாடு..
முதலில் காப்பாற்று எம்மை
இத்தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து….
கலாநிதி. இராஜசிங்கம் நரேந்திரன்.
தமிழ் ஈழ மாயையில்
சிக்கியதால்….
தமிழர்;
மதியிழந்தனர்..
அறமிழந்தனர்..
கல்வியிழந்தனர்…
தனமிழந்தனர்…
தரமிழந்தனர்..
மானமிழந்தனர்..
பதியிழந்தனர்..
உயிரிழந்தனர்..
பாலரையிழந்தனர்..
தாரமிழந்தனர்..
தந்தையிழந்தனர்…
தாயையிழந்தனர்..
சகோதரனையிழந்தனர்…
துணையிழந்தனர்…
சுற்றமிழந்தனர்…
சூழலிழந்தனர்…
கதியிழந்தனர்…
நெறியிழந்தனர்…
நேர்மையிழந்தனர்…
கலையிழந்தனர்…
மறையிழந்தனர்…
பண்பிழந்தனர்….
தவமிழந்தனர்…
தானமிழந்தனர்..
நிலைகுலைந்தனர்…
ஆனால்……தமிழர்;
மறக்கக் கூடாத சரித்திரம் படைத்தனர்
விடுதலைக்காக
அடிமைகளாயினர்.
விடிவிற்க்காக…
இருட்டில் தள்ளப்பட்டனர்…
வழி தவறினர்.
பிள்ளைகள் கடத்தப்பட…
பெற்றோர் பதறினர்,
உற்றோர் வருந்தினர்;
தமிழர் தமிழனை தமிழின் பெயரால்
அழிப்பதை கண்டேங்கினர்;
போர் களத்தில்,
உயிர்க்கேடயம் ஆகினர்;
வாழ்விற்கும் சாவிற்க்கும்
இடையே விழிம்பில் பரிதவித்தனர்;
அழிவின் மத்தியில் ஆக்கம்
இறப்பின் மத்தியில் பிறப்பு
பாவத்தின் மத்தியில் புண்ணியம்
கோரத்தின் மத்தியில் கருணை
அகங்காரத்தின் மத்தியில் தெய்வீகம், கண்டனர்.
உயிரைப் பேணாக் கேவலம்;
பொய், பிரட்டு, சூது, வாது,
கொலை, கொள்ளை,
அகங்காரத்தின் கோரத்தாண்டவம்,
கண்டனர்.
மூத்தோர் இருக்க
இளையோர் மாண்டதை..
தம்முயிரைக்காக்க
காயமுற்றோரை கைவிட்டதை…
தம்முயிரின் மேலாக
மற்றயோரதை பேணியமையை
எதிரியின் கருணையை கண்டனர்.
இன்று,
அகதிகளாய்..
ஊனமுற்றோராய்…
விதவைகளாய்…
நடைபிணங்களாய்…
நாதியற்றோராய்….
கையேந்தி நிற்போராய்…
கைதியாய்….
இருக்கும் தமிழருக்கு
தீர்வு என்ன?
இது போதாதென்று
களம் இறங்கியுள்ளனர்
தமிழ் அரசியல் கழுகுகள்..
தேர்தல் பெயரில்
பிணந்தின்ன..
கடவுளே!
போதும் நாம் பட்டபாடு..
முதலில் காப்பாற்று எம்மை
இத்தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து….
கலாநிதி. இராஜசிங்கம் நரேந்திரன்.
இலங்கை தேர்தல் பற்றி சுவிசு முருகவேள்
யாழ்தேர்தல் மாவட்டத்தில் கிளிநொச்சித்தொகுதிக்கு .த.தே.கூட்டமைப்பு நிறுத்தியிருக்கும் வேட்பாளர் திரு.சிவஞானம்.சிறிதரன் (அதிபர்.கிளி.மகாவித்தியாலயம்.)அவர்களை தெரிவு செய்வதன் மூலமே பொது எதிரியின் கைக்குள் கிளிநொச்சி பறிக்கப்படுவதை தடுக்கலாம். கிளிநொச்சித் தொகுதி மக்கள் வீட்டுச்சின்னத்திற்கும் முதல் விருப்புவாக்கை 10ஆம் இலக்கத்திற்கும் வழங்கவேண்டும். யாழ்ப்பாணத் தொகுதிகளிலும் வீட்டுச்சின்னத்திற்கும் உங்கள் தொகுதிவேட்பாளருக்கும் கொடுப்பதுடன் இன்னும் இரண்டு விருப்பு வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கலாம் .அதில் ஒன்றை 10ஆம் இலக்கத்திற்கு இடுவதின் மூலம் கிளிநொச்சி பறிபோவதை தடுக்கலாம்.
இதை செய்யாது விடுவோமேயாயின் அங்கே சக்கரைப் பொங்கலுக்குப் பதிலாக அடுத்தபொங்கலுக்கு பால்பொங்கலே(கிரிபத்) பொங்கலாம். இது உண்மை யாழின் உணவுக்களஞ்சியமாக விளங்கிய நிலங்கள் பறிபோவதை நீங்கள் விரும்புகின்றீர்களா? கண்டாவளை பரந்தன் கிளிநொச்சி கரச்சி பளை பூநகரி போன்ற இடங்களில் குடியேறிய மக்கள் எல்லோருக்கும் வாக்காளர் அட்டைகள் முழுமையாகக் கிடைக்கவில்லை ஆகையால் மீதிவாக்குகளையும் அரசஅதிகாரிகளால் வெற்றிலைக்கு கிடைக்க ஏற்பாடாக பிரச்சாரங்கள் நிகழ்ந்துள்ளது. அமைச்சர் டக்ளசு தேவானந்தாவும் ஆனந்தசங்கரி அவர்களும் பழையசெல்வாக்கைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதனால் மிகச்சொற்பமான வாக்குகளும் பிரிக்கப்படவிருப்பதை உணரவேண்டும்.
திரு .சி.சிறிதரன்அவர்களின் தெரிவு தடைப்பட்டு கிளிநொச்சியில் தாம்விரும்பியதைச் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகுவதைத் தடுக்கவேண்டும். இது அந்தமண்ணில் பிறந்ததற்காக கற்ற தற்காக தேசப்பற்றோடு நாம் செய்யவேண்டிய கடமையாகும்.மிகவும் நொந்தமக்கள் மீளவாழ முடியாத மக்களாக இருப்பதால் வெறுப்போடு எமக்கு தேர்தல் வேண்டாம் என்று இருப்பார்கள். அதிகாரத்திற்க்கு பயந்து இருப்பார்கள். இவர்களை வாக்களிக்குமாறு உற்சாகப்படுத்துவது உங்கள்
தொலைபேசிகளும் குறுந்தகவல் செய்திகளுமாகும். வட்டக்கச்சி கிளிநொச்சி பரந்தன் பளை பூநகரி கண்டாவளையைச் சேர்ந்த மக்கள் புலம் பெயர்ந்தநாடுகளிலிருந்து செய்யக்கூடிய முதல்கட்டாய கடமையாகும். அதன்பின் அங்குள்ள மக்களுக்கும் சிறுசிறு உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். இது எமிடையே ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்தும். உங்கள் பிரதிநிதியை நீங்களே தெரிவு செய்யவேண்டும்.
எமக்கெதிரான குடியேற்றத்தை நாமே தடுக்க வேண்டும். சில அரச அதிகாரிகள் தமது உறவினர்கள் மூலம் பூநகரியில் இருக்கின்ற சில ஊர்களிலுள்ள குமுழமுனை விநாசியோடை தட்டுவங்கொட்டித் தமது உறவினர்கள் மூலம் அரசுக்குவாக்களிக்க வேண்டுமென்ற திட்டத்தை முடுக்கியுள்ளார்கள். ஆகையால் கிளிநொச்சித்தொகுதி மக்களும் யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்துத்தொகுதி மக்களும் தமது மூன்று வாக்குகளையும் பயன்படுத்தும் போது கிளிநொச்சித்தொகுதி வேட்பாளரான திரு.சி.சிறிதரனின் 10 ஆம் இலக்கத்தை கவனத்தில் கொள்ளவேண்டிய சாணக்கியம் வேண்டும்.
பொ.முருகவேள் ஆசிரியர் - பூநகரி
இதை செய்யாது விடுவோமேயாயின் அங்கே சக்கரைப் பொங்கலுக்குப் பதிலாக அடுத்தபொங்கலுக்கு பால்பொங்கலே(கிரிபத்) பொங்கலாம். இது உண்மை யாழின் உணவுக்களஞ்சியமாக விளங்கிய நிலங்கள் பறிபோவதை நீங்கள் விரும்புகின்றீர்களா? கண்டாவளை பரந்தன் கிளிநொச்சி கரச்சி பளை பூநகரி போன்ற இடங்களில் குடியேறிய மக்கள் எல்லோருக்கும் வாக்காளர் அட்டைகள் முழுமையாகக் கிடைக்கவில்லை ஆகையால் மீதிவாக்குகளையும் அரசஅதிகாரிகளால் வெற்றிலைக்கு கிடைக்க ஏற்பாடாக பிரச்சாரங்கள் நிகழ்ந்துள்ளது. அமைச்சர் டக்ளசு தேவானந்தாவும் ஆனந்தசங்கரி அவர்களும் பழையசெல்வாக்கைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதனால் மிகச்சொற்பமான வாக்குகளும் பிரிக்கப்படவிருப்பதை உணரவேண்டும்.
திரு .சி.சிறிதரன்அவர்களின் தெரிவு தடைப்பட்டு கிளிநொச்சியில் தாம்விரும்பியதைச் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகுவதைத் தடுக்கவேண்டும். இது அந்தமண்ணில் பிறந்ததற்காக கற்ற தற்காக தேசப்பற்றோடு நாம் செய்யவேண்டிய கடமையாகும்.மிகவும் நொந்தமக்கள் மீளவாழ முடியாத மக்களாக இருப்பதால் வெறுப்போடு எமக்கு தேர்தல் வேண்டாம் என்று இருப்பார்கள். அதிகாரத்திற்க்கு பயந்து இருப்பார்கள். இவர்களை வாக்களிக்குமாறு உற்சாகப்படுத்துவது உங்கள்
தொலைபேசிகளும் குறுந்தகவல் செய்திகளுமாகும். வட்டக்கச்சி கிளிநொச்சி பரந்தன் பளை பூநகரி கண்டாவளையைச் சேர்ந்த மக்கள் புலம் பெயர்ந்தநாடுகளிலிருந்து செய்யக்கூடிய முதல்கட்டாய கடமையாகும். அதன்பின் அங்குள்ள மக்களுக்கும் சிறுசிறு உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். இது எமிடையே ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்தும். உங்கள் பிரதிநிதியை நீங்களே தெரிவு செய்யவேண்டும்.
எமக்கெதிரான குடியேற்றத்தை நாமே தடுக்க வேண்டும். சில அரச அதிகாரிகள் தமது உறவினர்கள் மூலம் பூநகரியில் இருக்கின்ற சில ஊர்களிலுள்ள குமுழமுனை விநாசியோடை தட்டுவங்கொட்டித் தமது உறவினர்கள் மூலம் அரசுக்குவாக்களிக்க வேண்டுமென்ற திட்டத்தை முடுக்கியுள்ளார்கள். ஆகையால் கிளிநொச்சித்தொகுதி மக்களும் யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்துத்தொகுதி மக்களும் தமது மூன்று வாக்குகளையும் பயன்படுத்தும் போது கிளிநொச்சித்தொகுதி வேட்பாளரான திரு.சி.சிறிதரனின் 10 ஆம் இலக்கத்தை கவனத்தில் கொள்ளவேண்டிய சாணக்கியம் வேண்டும்.
பொ.முருகவேள் ஆசிரியர் - பூநகரி
Saturday, April 3, 2010
முத்துவிழாக் கண்ட கூட்டுறவுக் காவலர் டான்சிறி சோமசுந்தரம் புவான்சிறி உலகநாயகி இணையர்
டான்சிறி அவர்கள் முத்துவிழாவின் நிறைவுவிழா பிப்ரவரி 29ஆம் நாள் காலை 9-30 மணியளவில் சென்னை சாசுத்திரி நகரில் உள்ள திருமணமண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.மலேசியத் தமிழர்களின் ஒப்பற்ற தமிழர், ம.இ.க.வின் தேசியத் தலைவர் டத்தோசிறி ச.சாமிவேலு அவர்கள் வருகை தந்திருந்தது முத்துவிழாவிற்கு மகுடம் வைத்தாற்போல் இருந்தது.டத்தின்சிறீ இந்திராணி அம்மையார் அவர்களும் வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர்
மலேசியத் திருநாட்டிலிருந்து கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டத்தோ சகாதேவன்,கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி என்றும் டான்சிறியின் துணையாக விளங்கும் நாடகக்கலைஞர் பதி.கூட்டுறவு இதழில் தமிழகத்திலிருந்து செல்லும் பெருமக்களைப் பற்றி எழுதும் மாணிக்கம் மற்றும் பெருமக்கள் பலர் இணையராக வந்து டான்சிறியின் முத்துவிழாவில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
.
டான்சிறியின் மேல் பேரன்பு கொண்ட அருமைத் தந்தையார் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற உலகஅமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களும் யானும் நிறைவுவிழாவிற்குச் சென்றிருந்தோம் அருளாளர் இராம வீரப்பனார்,முன்னாள் நகரத்தந்தை சா.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எசு.இளங்கோவன் மலர்மாமணி இளஞ்செழியன், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், கவிஞர் யுவராச அமிழ்தன், எழுத்தாளர் இறையெழிலன்,சட்டக்கதிர் ஆசிரியர் சம்பத் மற்றும் தமிழகத்தின் புகழ்வாய்ந்த பெருமக்களெல்லாம் முத்துவிழா நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
தந்தையார் அவர்கள் எழுதிய வாழ்த்துப்பா டான்சிறியின் கொடையுள்ளத்தையும், தொண்டுணர்வையும் பறைசாற்றுவதாக இருந்தது. அந்த வாழ்த்துப்பாவை யான் மேடையில் பாடினேன்.வந்திருந்த அனைவருக்கும் அச்சான படிகளையும் வழங்கி மகிழ்ந்தோம்.
மலேசியத் திருநாட்டின் மாசிலா மாணிக்கம் கூட்டுறவு சங்கத் தலைவர் டான்சீறி சோமசுந்தரம் புவான்சிறி உலகநாயகி இணையரின் முத்துவிழா சென்னையில் அவரது இல்லத்திலும் மிகச் சிறப்பாகநடைபெற்றது.28-2-20010 ஆம் நாள் காலை யானும் துணைவியார் பரிமளாவும் முத்துவிழா நிகழ்வில் பங்கேற்கும் பேறு[பெற்றோம்.
டான்சிறியின் இல்லறக் கொடையான மக்களும் மருமக்களும் வழியினரும் சுற்றத்தாரும் சூழ்ந்து நிகழ்வை மகிழ்வாகக் கொண்டாடினர்
டான்சிறி சோமசுந்தரம் அவர்கள் மலேசியத் தமிழர்களின் வாழ்வைச் செழிப்புறச் செய்த பெருமகன். தோட்டப்புறத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர்.உலகத் தமிழர்கள் வியக்கும் வண்ணம் கோலாலம்பூர் நகரில் 26 மாடி கட்டிடத்தை கட்டி விசுமான் துன் சம்பந்தன் என தமிழில் பொறித்து தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தவர்.மலேசியா முழுமையும் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கி தொழிலாளர்களின் வாழ்வு மலரச்செய்த மனிதநேயமாமணி. ஆண்டுதோறும் இலக்கியப் போட்டிகள் நடத்தி கவிதை கட்டுரை அனைத்துத் துறைப் பெருமக்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பெருமைப்படுத்தும் பெருமகன். கூட்டுறவு இதழை நடத்தி எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் கேஆர்எசு பதில்களில் மக்களை தெளிவுபடுத்தும் இதழாளர்.
என்றும் இளமைத்துடிப்போடு பணியாற்றும் டான்சிறிக்கு 80 அகவை என்பது வியப்பிற்குரிய ஒன்றுதான் ஆனால் புவான்சிறி உலகநாயகி பக்கத்தில் அமர்ந்து அன்புசெலுத்தும் பாங்ககைக் கண்டபோது இளமையின் உண்மை புரிந்தது..உறவினர் பெருமக்களெல்லாம் டான்சிறியின் முத்துவிழாக் கோலத்தை சூழ்ந்திருந்து மிகச் சிறப்பாக நடத்தினர். டான்சிறி பிறந்த ஊர் தமிழகத்தின் திருக்கோட்டியூர்.திருகோட்டியூரில் தொடங்கி மலேசியத் திருநாட்டின் மாண்புரு மன்னராக விளங்கும் மாமணி டான்சிறி சோமசுந்தரம்.
ஆன்மீக முறைப்படி புனித நீரைக் கொண்டு முத்துவிழா இணையர்கள் மேல் ஊற்றி நீராட்டினர்.வந்திருந்த பெருமக்கள் அனைவரும் முத்துவிழாப் பெருமக்களிடம் வாழ்த்துப் பெற்றனர்.யானும் என்னுடைய துணைவியார் பரிமளாவும் முத்துவிழா இணையருக்கு பொன்னாடை போர்த்தி வணங்கி வாழ்த்துப் பெற்றோம். வந்திருந்த பெருமக்களோடு உணவருந்தி மகிழ்ந்தார் டான்சிறி.
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் உலகத் தமிழ் மாநாட்டை பாங்காக்கில் நடத்தினோம்.அதுபோது மாநாடு நடத்த பொறுப்பேற்றவர் பின்வாங்கினார் தந்தையார் அவர்கள் பல்வேறு சுமைகளை தன் தோள்மேல் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.சென்னையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பெருமக்களை யான் பாங்காக் அழைத்துச் சென்று மாநாட்டில் பங்குபெறச் செய்தேன்.மாநாட்டை வெற்றியுடன் நடத்த யானும் தந்தையும் இன்னலுற்றபோது டான்சிறி சோமசுந்தரம் அவர்கள் மாநாட்டில் பங்கேற்று இரண்டாம் நாள் உணவுச் செலவை தாமே ஏற்று மாநாடு வெற்றிபெற வழிவகுத்தவர். அப்போது அவரிடம் தொகை இல்லை இருப்பினும் தன் கடன் அட்டையைக் கொடுத்து அதில் அவர் செலுத்திய பாங்கை எண்ணும்போது டான்சிறி அவர்களின் பேருள்ளத்தை உணரமுடியும்.
உலகப் பொதுமறை மாநாடு மலேசியா கோலாலம்பூர் நகரில் டாக்டர் தமிழ்மணி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.அம் மாநாட்டின் இந்தியச் செயலாளராகப் யான் தொண்டாற்றினேன். தமிழகத்திலிருந்து 160 பேராளர்கள் பங்கேற்றனர். அதுபோது கோலாலம்பூர் நகரின் முதன்மைச்சாலையில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் தோட்டப்புற மாளிகையின் முன் ஐயன் திருவள்ளுவர் சிலையை டத்தோசிறி அவர்களும் டான்சிறி அவர்களும் நிறுவிய பாங்கு தமிழ் கூறு நல்லுலகம் எண்ணி எண்ணி மகிழத் தக்கதாகும்.
உலத்தமிழ்ப் பணபாட்டு இயக்கத்தின் 10ஆம்மாநாட்டை கோலாலம்பூரில் நடத்தினர் அதுபோதும் டான்சிறி அவர்களின் பங்களிப்பு மகத்தானது..சென்னையிலிருந்து என்னுடைய தலைமையில் பேராளர்கள் பங்கேற்றனர். தமிழர்கள்பால் டான்சிறி கொண்டுள்ள பற்றை உணரமுடிந்தது.
அண்மையில் யாங்கள் நடத்திய பன்னாட்டுத்திமிழுறவு மன்ற 6ஆம் மாநாட்டில் அவர் தமிழகத்தில் இருந்ததால் பங்கேற்க இயாலா நிலையில் இருந்தார். இருப்பினும் தந்தையார் அவர்களும் அருளாளர் விகடர் சுப்பையா, டாடக்டர்.சி.தர்மலிங்கம் ஆகியோர் சென்றபொது மாநாட்டிற்கு உதவி புரிந்த பாங்கு போற்றத்தக்கது.
மலேசியாவில் நடைபெறும் புத்தக வெளியீட்டிற்கு டான்சீறியின் பங்களிப்பு இல்லாத நிகழ்வே இல்லை என்ற பெருமைக்குரிய எழுத்தாளர்களின் ஏந்தல் டான்சிறி சோமா.
முத்துவிழாக் கண்ட இணையர்கள் நூற்றாண்டு விழாக்கண்டு தமிழினம் தழைத்தோங்க பன்னாட்டுத் தமிழர்கள் சார்பிலும் உலகத் தமிழர்கள் சார்பிலும் நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறோம்.
மலேசியத் திருநாட்டிலிருந்து கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டத்தோ சகாதேவன்,கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி என்றும் டான்சிறியின் துணையாக விளங்கும் நாடகக்கலைஞர் பதி.கூட்டுறவு இதழில் தமிழகத்திலிருந்து செல்லும் பெருமக்களைப் பற்றி எழுதும் மாணிக்கம் மற்றும் பெருமக்கள் பலர் இணையராக வந்து டான்சிறியின் முத்துவிழாவில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
.
டான்சிறியின் மேல் பேரன்பு கொண்ட அருமைத் தந்தையார் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற உலகஅமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களும் யானும் நிறைவுவிழாவிற்குச் சென்றிருந்தோம் அருளாளர் இராம வீரப்பனார்,முன்னாள் நகரத்தந்தை சா.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எசு.இளங்கோவன் மலர்மாமணி இளஞ்செழியன், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், கவிஞர் யுவராச அமிழ்தன், எழுத்தாளர் இறையெழிலன்,சட்டக்கதிர் ஆசிரியர் சம்பத் மற்றும் தமிழகத்தின் புகழ்வாய்ந்த பெருமக்களெல்லாம் முத்துவிழா நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
தந்தையார் அவர்கள் எழுதிய வாழ்த்துப்பா டான்சிறியின் கொடையுள்ளத்தையும், தொண்டுணர்வையும் பறைசாற்றுவதாக இருந்தது. அந்த வாழ்த்துப்பாவை யான் மேடையில் பாடினேன்.வந்திருந்த அனைவருக்கும் அச்சான படிகளையும் வழங்கி மகிழ்ந்தோம்.
மலேசியத் திருநாட்டின் மாசிலா மாணிக்கம் கூட்டுறவு சங்கத் தலைவர் டான்சீறி சோமசுந்தரம் புவான்சிறி உலகநாயகி இணையரின் முத்துவிழா சென்னையில் அவரது இல்லத்திலும் மிகச் சிறப்பாகநடைபெற்றது.28-2-20010 ஆம் நாள் காலை யானும் துணைவியார் பரிமளாவும் முத்துவிழா நிகழ்வில் பங்கேற்கும் பேறு[பெற்றோம்.
டான்சிறியின் இல்லறக் கொடையான மக்களும் மருமக்களும் வழியினரும் சுற்றத்தாரும் சூழ்ந்து நிகழ்வை மகிழ்வாகக் கொண்டாடினர்
டான்சிறி சோமசுந்தரம் அவர்கள் மலேசியத் தமிழர்களின் வாழ்வைச் செழிப்புறச் செய்த பெருமகன். தோட்டப்புறத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர்.உலகத் தமிழர்கள் வியக்கும் வண்ணம் கோலாலம்பூர் நகரில் 26 மாடி கட்டிடத்தை கட்டி விசுமான் துன் சம்பந்தன் என தமிழில் பொறித்து தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தவர்.மலேசியா முழுமையும் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கி தொழிலாளர்களின் வாழ்வு மலரச்செய்த மனிதநேயமாமணி. ஆண்டுதோறும் இலக்கியப் போட்டிகள் நடத்தி கவிதை கட்டுரை அனைத்துத் துறைப் பெருமக்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பெருமைப்படுத்தும் பெருமகன். கூட்டுறவு இதழை நடத்தி எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் கேஆர்எசு பதில்களில் மக்களை தெளிவுபடுத்தும் இதழாளர்.
என்றும் இளமைத்துடிப்போடு பணியாற்றும் டான்சிறிக்கு 80 அகவை என்பது வியப்பிற்குரிய ஒன்றுதான் ஆனால் புவான்சிறி உலகநாயகி பக்கத்தில் அமர்ந்து அன்புசெலுத்தும் பாங்ககைக் கண்டபோது இளமையின் உண்மை புரிந்தது..உறவினர் பெருமக்களெல்லாம் டான்சிறியின் முத்துவிழாக் கோலத்தை சூழ்ந்திருந்து மிகச் சிறப்பாக நடத்தினர். டான்சிறி பிறந்த ஊர் தமிழகத்தின் திருக்கோட்டியூர்.திருகோட்டியூரில் தொடங்கி மலேசியத் திருநாட்டின் மாண்புரு மன்னராக விளங்கும் மாமணி டான்சிறி சோமசுந்தரம்.
ஆன்மீக முறைப்படி புனித நீரைக் கொண்டு முத்துவிழா இணையர்கள் மேல் ஊற்றி நீராட்டினர்.வந்திருந்த பெருமக்கள் அனைவரும் முத்துவிழாப் பெருமக்களிடம் வாழ்த்துப் பெற்றனர்.யானும் என்னுடைய துணைவியார் பரிமளாவும் முத்துவிழா இணையருக்கு பொன்னாடை போர்த்தி வணங்கி வாழ்த்துப் பெற்றோம். வந்திருந்த பெருமக்களோடு உணவருந்தி மகிழ்ந்தார் டான்சிறி.
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் உலகத் தமிழ் மாநாட்டை பாங்காக்கில் நடத்தினோம்.அதுபோது மாநாடு நடத்த பொறுப்பேற்றவர் பின்வாங்கினார் தந்தையார் அவர்கள் பல்வேறு சுமைகளை தன் தோள்மேல் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.சென்னையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பெருமக்களை யான் பாங்காக் அழைத்துச் சென்று மாநாட்டில் பங்குபெறச் செய்தேன்.மாநாட்டை வெற்றியுடன் நடத்த யானும் தந்தையும் இன்னலுற்றபோது டான்சிறி சோமசுந்தரம் அவர்கள் மாநாட்டில் பங்கேற்று இரண்டாம் நாள் உணவுச் செலவை தாமே ஏற்று மாநாடு வெற்றிபெற வழிவகுத்தவர். அப்போது அவரிடம் தொகை இல்லை இருப்பினும் தன் கடன் அட்டையைக் கொடுத்து அதில் அவர் செலுத்திய பாங்கை எண்ணும்போது டான்சிறி அவர்களின் பேருள்ளத்தை உணரமுடியும்.
உலகப் பொதுமறை மாநாடு மலேசியா கோலாலம்பூர் நகரில் டாக்டர் தமிழ்மணி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.அம் மாநாட்டின் இந்தியச் செயலாளராகப் யான் தொண்டாற்றினேன். தமிழகத்திலிருந்து 160 பேராளர்கள் பங்கேற்றனர். அதுபோது கோலாலம்பூர் நகரின் முதன்மைச்சாலையில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் தோட்டப்புற மாளிகையின் முன் ஐயன் திருவள்ளுவர் சிலையை டத்தோசிறி அவர்களும் டான்சிறி அவர்களும் நிறுவிய பாங்கு தமிழ் கூறு நல்லுலகம் எண்ணி எண்ணி மகிழத் தக்கதாகும்.
உலத்தமிழ்ப் பணபாட்டு இயக்கத்தின் 10ஆம்மாநாட்டை கோலாலம்பூரில் நடத்தினர் அதுபோதும் டான்சிறி அவர்களின் பங்களிப்பு மகத்தானது..சென்னையிலிருந்து என்னுடைய தலைமையில் பேராளர்கள் பங்கேற்றனர். தமிழர்கள்பால் டான்சிறி கொண்டுள்ள பற்றை உணரமுடிந்தது.
அண்மையில் யாங்கள் நடத்திய பன்னாட்டுத்திமிழுறவு மன்ற 6ஆம் மாநாட்டில் அவர் தமிழகத்தில் இருந்ததால் பங்கேற்க இயாலா நிலையில் இருந்தார். இருப்பினும் தந்தையார் அவர்களும் அருளாளர் விகடர் சுப்பையா, டாடக்டர்.சி.தர்மலிங்கம் ஆகியோர் சென்றபொது மாநாட்டிற்கு உதவி புரிந்த பாங்கு போற்றத்தக்கது.
மலேசியாவில் நடைபெறும் புத்தக வெளியீட்டிற்கு டான்சீறியின் பங்களிப்பு இல்லாத நிகழ்வே இல்லை என்ற பெருமைக்குரிய எழுத்தாளர்களின் ஏந்தல் டான்சிறி சோமா.
முத்துவிழாக் கண்ட இணையர்கள் நூற்றாண்டு விழாக்கண்டு தமிழினம் தழைத்தோங்க பன்னாட்டுத் தமிழர்கள் சார்பிலும் உலகத் தமிழர்கள் சார்பிலும் நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறோம்.
Sunday, March 21, 2010
மன்றம் வென்ற பெண்கள் உரிமை வாழ்க
ஒதுக்கீடு கண்ட எங்கள்
ஒப்புயர் கலைஞர் தம்மின்
புதுக்கிய புதுமைப் பெண்கள்
புத்தொளிர் வெற்றி வெல்க!
பதுக்கிடும் பெண்கள் தம்மின்
பண்புள உயர்வை நன்றாய்
செலுத்திய சோனியா அன்னை
செரிவுடை ஆட்சி வெல்க!
ஒளிபுகழ் மன்மோகன் சிங்
ஒப்பமாய் உரைத்த பாங்கு
நளினமாய் பாசக நன்றாய்
நாட்டிய பெண்கள் ஊக்கம்!
தெளிவுடை கலைஞர் கோவின்
தேர்ந்த நல்மகளாம் நம்மின்
பொழிவுடை கனிமொழி பேச்சின்
பெற்றிமை கண்ட வெற்றி!
மண்மகள் செயந்தி வென்ற
மாசிலா சொல்லின் ஆக்கம்
கண்மணி பெண்கள் நன்றாய்
காட்டிய பிருந்தா வெற்றி
மன்றமே திரண்டு நன்கு
மாண்புயர் பெண்கள் தாங்கும்
வென்றிடும் முழக்கம் கண்ட
வேங்கையாம் சுசுமா வாழ்க!
இந்திய மன்றம் தன்னில்
இணையிலா உரிமை கண்ட
சந்ததி வாழ்த்தி ஒன்றாய்
சாதித்த ஒதுக்கீடு வாழ்க!
முந்தைய நாளில் பெண்கள்
முடக்கிய மோசம் வீழ்க
சொந்தமாய் இணையாய் என்றும்
சோர்விலாப் பெண்கள் வெல்க!
ஒப்புயர் கலைஞர் தம்மின்
புதுக்கிய புதுமைப் பெண்கள்
புத்தொளிர் வெற்றி வெல்க!
பதுக்கிடும் பெண்கள் தம்மின்
பண்புள உயர்வை நன்றாய்
செலுத்திய சோனியா அன்னை
செரிவுடை ஆட்சி வெல்க!
ஒளிபுகழ் மன்மோகன் சிங்
ஒப்பமாய் உரைத்த பாங்கு
நளினமாய் பாசக நன்றாய்
நாட்டிய பெண்கள் ஊக்கம்!
தெளிவுடை கலைஞர் கோவின்
தேர்ந்த நல்மகளாம் நம்மின்
பொழிவுடை கனிமொழி பேச்சின்
பெற்றிமை கண்ட வெற்றி!
மண்மகள் செயந்தி வென்ற
மாசிலா சொல்லின் ஆக்கம்
கண்மணி பெண்கள் நன்றாய்
காட்டிய பிருந்தா வெற்றி
மன்றமே திரண்டு நன்கு
மாண்புயர் பெண்கள் தாங்கும்
வென்றிடும் முழக்கம் கண்ட
வேங்கையாம் சுசுமா வாழ்க!
இந்திய மன்றம் தன்னில்
இணையிலா உரிமை கண்ட
சந்ததி வாழ்த்தி ஒன்றாய்
சாதித்த ஒதுக்கீடு வாழ்க!
முந்தைய நாளில் பெண்கள்
முடக்கிய மோசம் வீழ்க
சொந்தமாய் இணையாய் என்றும்
சோர்விலாப் பெண்கள் வெல்க!
Tuesday, January 12, 2010
மலேசிய மக்களின் நிலையான பேரன்பு
மலேசிய மக்களின் நிலையான பேரன்பு
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டிற்கு வருகை தந்த பெருமக்கள் சோழனின் கடாரம் கண்ட மகிழ்வோடு மலேசிய நாட்டில் தமிழர்களின்பெருமையை நிலைநிறுத்திய சாதனைத் தலைவர் சாமிவேலு அவர்கள் கட்டிய எய்ம்சு பல்கலைக் கழக த்தைக் கண்டடோம்.. கண்கவர் கட்டிடக் கலையின் உயர்கவைக் காண முடிந்தது. மிகப் பெரிய பரப்பளவில் பல்கலைக் கழகத்தை நிர்மாணித்துள்ளனர். ஆய்வரங்குகளும் அரங்குகளும்உலகத் தரத்தில் உள்ளன. யாங்கள் அனைவரும் இறங்கி வாயிலில் எய்ம்சு பலகலைகழகம் என தமிழில் பொறித்துள்ள வலைவுடன் படம் எடுத்துக் கொண்டொம். பின் உள்ளே சென்றோம் வாயிலில் இரு பேராசிரியர்கள் எங்களை வரவேற்றனர்.
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலகஅமைப்பாளரும் நிறுவனருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் வந்திருந்த பெருமக்கள் அனைவரையும் அவரவர்கள் சிறப்புக்களைக் கூறிஅறிமுகப்படுத்தினார்.கோலாலம்பூர் மாநாட்டு நிகழ்வில் மாண்பமை டத்தோசிறி சாமிவேலு அவர்கள் வந்திருந்த பெருமக்கள் சிலருக்கு தம் இல்லத்தில் காலைச்சிற்றுண்டியை தம் அன்புக் கரத்தாலேயே வழங்கினார்.எத்துனை பேர் வந்துள்ளிர்கள் என வினவினார் யான் 45 பெருமக்கள் என்று கூற்னேன். யாங்கள் காடாரம் செல்கிறோம் என்று கூறியவுடன்அங்கு அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்துள்ளார். டத்டோசிறி சாமிவேலரின் கருணை உள்ளத்தையும் மனிதநேயத்தையும் மனமாறப்போற்றினோம். ஆசிரியமணி மாணிக்கம் டத்தோசிறி அவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்கள் அவசியம் செல்லுங்கள் என தொலைபேசியில் நினைவுடுத்திய வண்ணமிருந்தார். மாநாட்டின் அச்சானியாகவும் இந்த பயணங்களுக்கே அடித்தளமாகவும் இருந்த அண்ணன் டாக்டர் சி தர்மலிஙகம். ஆர்வத்தோடு எங்களை அழைத்துச் சென்றது மலேசியத் தமிழர்கள் தாய்த்தமிழர்கள்பால் கொண்டுள்ள அன்பைப் புலப்படுத்தியது
பல்கலைக்கழக்த்தின் ஒர் அரங்கில் எங்களுக்கு வரவேற்புஅளித்தனர். பேராசியப் பெருமகன் ஒருவர் பல்கலைக்கழக்த்தின் தோற்றத்தைப்பற்றியும் அங்குள்ள துறைகளைப் பற்றியும் தமிழில் விளக்கினார்.யாங்களும் எங்களின் வினாக்களைத் தொடுத்து பல்வெறு செய்திகளைத்தெரிந்து கொண்டோம்.கடாரம் ஆயிரம் ஆண்டுககட்கு முன் இராசசாசசோழன் கண்டசாதனை. எய்ம்சு பல்கலைகம் நம் சாதனைத் தலைவர்சாமிவேலர் மலேசியாவில் இந்நூற்றாண்டில் கண்டசாதனை.
எய்ம்சு பல்கலைக் கழக மகிழ்வோடு யாங்கள் ஈப்போவிற்கும் சென்றோம். அங்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டின் தூணாகச் செயல்பட்ட ஆசிரியமணி மாணிக்கமும் செயலாளராக செயல்பட்ட பேராசிரியர் பாலாவும் ஈப்போவில் மிகப் ;பெரிய வரவேற்பை ஏற்பாடு செய்திருந்தனர் மகளிர் திருவிழாவாக நடத்தி பேராசிரியர் இந்திராணி மாணிக்கம்,மகளிர் மாமணி மாலா சந்திரசேகர், முனைவர் இலலிதா, முனைவர் வசுமதி, மருத்துவர் இராசேசுவரி அழகேசன், திருக்குறள் புலவர் செல்லம்மாள், ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்
தமிழிசைமாமணி தி,க.ச,கலைவாணன் அவர்களின் இன்னிசைநிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது ஆசிரியமணி மாணிக்கம் தொகுப்புரையில்மிகத்தேர்ந்தவர்.பன்னாட்டுத்மிழுறவுமன்ற மாநாடுகளில் மாணிக்கம் அவர்களே தொகுப்புரையாளராக இருப்பார்..உலகளாவிய தமிழர்களின் சிறப்பை அறிந்த பெருமகன் ஆசிரியமணி மாணிக்கம்.தந்தையரும் மற்ற மகளிர் பெருமக்களும் முன்கூட்டியே சென்றிருந்த்தனர். யாஙகள் சற்று தாமதமாகவே சென்றோம் ஆசிரியமணியின் தொகுப்புரையோடு அனைத்துப் பெருமக்களும் உரையாற்றினர்.
யான் தற்போது 45 தமிழ் அறிஞர், முனைவர், பேராசிரியர், கவிஞர், புலவர், மருத்துவர், பொறிஞர்,ஆசிரியர், மகளிர் மாமணிகள், மூத்த பெருமக்களோடு மலேசிய மண்ணின் முழுப்பகுதியையும் வலம் வரும்போது என் எண்ணங்கள் பின்நோகிக்ச் சென்றது. அருமைத் தந்தையார் அவர்கள் 1977 ஆம் ஆண்டு அமரர் இரா நா. வீரப்பனாரின் உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாட்டை சென்னையில் மயிலை கற்பகாம்பாள் திருமணமண்டபத்தில் எழுகதிர் ஆசிரியர் முனைவர் அரு.கோபாலன் அவர்களின் துணையோடு நடத்தினார்கள்.தமிழ்ப்பணியின் சார்பில் சிற்ப்பு மலர் ஒன்றும் வெளியிட்டோம்.அப்போது என் வயது 18.. அந்த மாநாட்டிற்கு மாணிக்கம் அவர்கள் ஒரு குழுவோடு சென்னைவந்தது நினைவிற்கு வந்தது..பளபளக்கும் நீல நிற மலேசிய பூப்போட்ட பட்டுச் சட்டை இளமைத் துடிப்பான முகம் கையில் ஒரு ஒளிப்படக்கருவி அவர் தலைமையில்தன் குழுவினர் வருகைதந்திருந்தனர். அதில் திருமதி கமலாட்சி ஆறுமுகம், திரு.ஆறுமுகம், போன்ற பெருமக்களெல்லாம் வருகை தந்திருந்தனர். அவர்களை வரவேற்ற நிகழ்வுகளெல்லாம் என் முன் நிழலாடின.
அதற்குப்பின் பன்முறை பல்வேறு பெருமக்கள் வருகை தந்து வரவேற்பு நடத்தியுள்ளோம். ஆசிரியமணி மாணிக்கம் ஆர்வம் குன்றாது இன்றும் மாநாட்டின் தொடர்நிகழ்வாக ஈப்போ நகரின் புகழ்பெற்ற அரங்கில் அதே பளபளக்கும் பட்டுச் சட்டையோடு நிகழ்வை நடத்துவது மலேசியத்தமிழ்ர்களின் மாறா அன்பைப் புலப்படுத்தும்
நாம் வாழும் காலத்தில் தமிழ் உண:ர்வையும் தமிழகத்தில் பேயாட்சியை ஓழித்து நல்லாட்சியைக் கண்டவர் நம் முதல்வர், வறுமையைக் களைய ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கிய பெருவள்ளல் நம் கலைஞர். உலக்மே வியக்கும் வண்ணம் செம்மொழித் தகுதியை இந்தியப் பேரரசில் போராடிப் பெற்ற பெருமகன். உலகமே வியக்கும் வண்ணம் உலகச் செம்மொழி மாநாட்டை நடத்தும் முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞருககு வாழ்நாள் சாதனையாளர் விருதை மலேசிய மக்களின் சார்;பில் ஆசிரியர்மணி மாணிக்கமும், பேராசிரியர் கு.பாலசுப்பிரமணீயமும் வழங்கினர், மான்பமை கலைஞரின் சார்பில் அருமைத் தந்தையார் ருங்கவிக்கோ,முன்னாள்நகரத் தந்தை சா. கணேசன்,கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன், தென்சென்னை தி.மு.க.இலக்கிய அணித்தலைவர் மாம்பலம் சந்திரசேகர், யானும் இணைந்து வரலாற்று நாயகரின் பட்டத்தைப் பெற்றுக்கொண்டோம்.
என் வாழ்க்கையில் விபரம் தெரிந்த நாள்முதல் வாழ்நாளில் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற உணர்வோடு தொண்டாற்றிவருபவன்.பன்னாட்டு அன்பர்களின் பேரன்பையே வாழ்வாகக் கொண்ட எனக்கு தந்தையரின் முன்னிலையில் தந்தை பாலாவும் ஆசிரியமணி மாணிக்கமும் செந்தமிழ்த் தொண்டர் சிகரம் எனும் பட்டம் வழ்ங்கி சிற்ப்பித்தனர். வந்திருந்த பெருமக்கள் அனைவருக்கும் ஆடவருக்கு சட்டைத்துணியும் மகளிருக்கு புடவையும் வழங்கி சிறப்பித்தனர்.மலேசிய மண்ணில் கோலாலம்பூர், ஈப்போ, கெடா, பினாங்கு, மலாக்கா நகர்களில் தமிழ்கத்துப் பெருமக்களுக்குச் சிறப்பும், தமிழ் உறவும் கைகோர்த்த காட்சி பன்னாட்டுத் தமிழுறவின் வலிமையையும் பெருமையையும் உணர்த்தியது.
.
Monday, December 14, 2009
கடாரம் வென்ற சோழனின் கெடா பூசாங் பகுதியை வணங்கினோம்
கடாரம் வென்ற சோழனின் கெடா பூசாங் பகுதியை வணங்கினோம்
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு மலேசியாவில் மலயாப் பல்கலைக்கழக்த்தில் 25,26-9-2009ஆம் நாட்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது, இந்நூற்றாண்டிற்குத் தேவையான ஐந்து தலைப்புகளில் அறிஞர் பெருமக்கள் ஆய்வுரை வழங்கினர்.மாநட்டிற்குப் பிறகு செப்டம்பர் 28ஆம் நாள் தமிழகதிலிருந்து வருகை தந்த பெருமக்கள் பினாங்கு கெடா நோக்கிப் பயணமானோம். முன்னாள் செனனைமாநகரத் தந்தை சா.கணேசன், தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், திருச்சி அறந்தை திருமாறன்,மற்றும் 45 பெருமக்கள் அனைவரும் பெருந்தில் பண்மானோம். பேருந்தில் அருட்பா பாடகி அன்னபூரணி, தமிழிசைமாமணி தி.க.ச.கலைவாணன், திருக்குறள் கோ.பா.செல்லம்மாள், திருவேஙகடவன் பலக்லைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் மனுவல் ஆகியோர் தஙகள் இனிய குரலால் பாடி மகிழ்வித்தனர். நமது நிறுவனர் பெருஙகவிக்கோ பாவேந்தரின் பாடலைப் பாடி மகிழ்வித்தவாறு யாங்கள் பேருந்தில் பயணித்தோம். நமது மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் டாகடர்.சி.தருமலிஙகம் மலேசியத் தமிழர்கள் பற்றியும் மலேசிய நாட்டைப் பற்றியும் விவரித்தார்.ஆங்காங்கே யான் என் கருத்துக்களைக் அறிஞர்களுக்குக் கூறி தமிழுறவுப் பயணம் பினாங்கு கெடா நோக்கி பயணமானது.
பினாங்கில் 27 இரவு பினாங்கு மாநில துணைமுதல்வர் பேராசிரியர் இரா. இராமசாமி அவர்களுடன் கலந்துரையாடலை முடித்து சிறப்பான விருந்தும் அளித்தனர். 28ஆம் நாள் காலை யாங்கள் கெடாநோக்கிப் பயணமானோம்..வந்திருந்த அறிஞர் பெருமக்கள் அனைவருக்கும் இராசேந்திர சோழன் வென்ற கடாரப் பகுதியைக் காணப்போகிறோம் என்ற ஆவல் மீக்கெழுந்து இருந்தது. அனவரும் பேருந்தில் சுங்கைப் பட்டானியைக் கடந்து கெடா பகுதியை அடைந்தோம். அறிஞர் பெருமக்கள் அனைவரும் இராசேந்திர சோழன் காலடி பட்ட மண்ணை வணங்கினர்.
லெம்பாங் பூசாங் பள்ளத்தாக்கில் உள்ள அக்ழ்வாராய்சி அரங்கைக் கண்டு வியந்தோம்.கெடாமாநிலத்தில் குருன் நகருக்கு அருகில் மெர்போக் அருகே குனோங்செராய் மற்றும சுங்கை முடாவுக்கு மத்தியில் உள்ள 224 ச.கி.மி பரப்பளவில் உள்ள பூசாங் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட பழமையான சின்னங்களும் தெய்வஉருவச் சிலைகளும், கலைப்பொருட்களும் காட்சிக்கு வைத்துள்ளனர்.1500ஆண்டுகட்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடாரம் என ஆயிரம் ஆண்டுகட்குமுன் அழைக்கப்பட்ட கெடா சுங்கை பூசாங் ஆற்று முகத்துவாரத்தில் அங்கு அமைந்திருந்த குனோங்சேராய் எனும் கடாரத் துறைமுகத்தில் சோழப்பேரரசின் கப்பல் நங்கூரமிட்டுபுலிக்கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டிருந்தை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த கடலோடிகளும் கடாரம் பகுதிக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வருகைதந்தபோது தங்களின் மதச்ச்டங்குகளையும் பரப்பியுள்ளனர்.அதனுடைய தாக்கத்தை அருங்காட்சி அர்ங்கில் காண முடிகிறது.தமிழகத்திலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் புருவக்காற்று மாற்றத்திற்காகவும், பாதுகாப்பு கருதியும் ஓய்வெடுக்க பூசாங் பள்ளத்தாக்குப் பகுதி துறைமுகத்தை பயன்படுத்தியுள்ளனர்.
பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவிற்கு தமிழகத்தை ஆண்ட சோழ அரச்ர்களுக்கும் தொடர்பு இருந்தது சோழ அரசர்கள் சீனாவிற்கு தஙகளுடைய தூதுக்குழுக்களை அனுப்பினர். அத்தகைய தூதுக்குழுக்களில் ஒனறு இராசராசனுடைய ஆட்சிக்காலத்திலன் இறுதியாண்டுகளிற் புறப்பட்டு வழியில் மூன்றாண்டு கழித்த பின்னர் 1015ஆம் ஆண்டில் சீனாவை அடைந்தது.பின் முதலாம் இராசேந்திரன் காலத்தில் 1033ஆம் ஆண்டில் மற்றொரு குழு சீன அரசவையையை அடைந்த வரலாற்றுக் குறிப்பு உள்ளது. நீண்ட தொலைவுள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணிபத் தொடர்பு மிகச்சிறப்பாக நடந்துள்ளது. அளவில் சிறியவையாகவும் மதிப்பில் உயர்ந்தவையாகவும் இருந்த பொருட்கள் வாணிபத்தில் பயண்பட்டன. .சோற்றுக்கற்றாழை, அம்பர், கற்பூரம்,விலைமதிப்புள்ள கற்கள், மூங்கில், யானைத்தந்தம், கருங்காலி மரம், காகிதம், சந்தனக்கட்டை, நறுமணப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் பொன்றவை வாணிபத்தில் பயண்பட்ட பொருட்களாகும்.
யாங்கள் அனைவரும் அருங்காட்சியகத்தைக் கண்டோம். சிவன்,, வினாயகர், துர்ககை சிதைந்த நிலையில் பார்வைக்கு வைத்துள்ளனர். தமிழர்கள் பயன்படுத்திய பழங்காலப் பொருட்களையெல்லாம் அருங்காட்சியகத்தில் காணமுடிந்தது. பெருமக்கள் அனைவரும் தங்களின் ஒளிப்படக் கருவியில் பட்மெடுத்தவண்ணம் இருந்தனர். எங்களுடைய குழுவில் வருகைதந்த கட்டிடக் கலைஞர் தமிழ்வள்ளல் சந்திரசேகரும் அவரது துணைவியார் மாலதியும் ஆர்வத்தோடு அனைத்தையும் கண்டு படமெடுத்தனர். திருமதி மாலதி ச்ந்திரசேகர் எல்லோரிடமும் அன்பும் பரிவும் காட்டிய பாங்கைக் கண்டபோது வியப்பு மேலோங்கியது. சந்திரசேகர் அவர்கள் இல்லத்தில்க தம் மனைவியை பாட்டாளி என அழைப்பதின் ஆழம் புரிந்த்து.தலைசிறந்த கவிஞர் முனைவர் சவகர்லால் தன் துணைவியரோடு கண்டு குறிப்பெடுத்தார்.
செம்மொழிவாரியத்தின் அலுவலராகப் பணியாற்றும் கோ.புண்ணியமூர்த்தி மிகச்சிறந்த ஆராய்சிக் கட்டுரையை மலருக்கு வழங்கியுள்ளார். அவர் அனைத்துத் தகவல்களையும் ஆர்வத்தோடு பதிவுசெய்தவண்ணமிருந்தனர். நகர்ப்புற வடிவமைப்பின் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஞானநவனீதன் ஆர்வத்தோடும் வியப்போடும் கண்டு குறிப்பெடுத்தார்.கவிச்சிங்கம் கண்மதியன் தன் 85 வயது தாயோடு கண்டது எமக்குப் பெரு மகிழ்வைத் தந்தது.
அருங்காட்சியகத்தைக் கடந்து மலைமேல் சென்று கண்டோம். இந்துக் கோயிலின் வடிவமைப்பு அங்கே உள்ளது..கருங்கற்கலாளான சுற்றுச்சுவரும் மேற்பகுதியில் கருவரையும் உள்ளன. குறிப்புப்பலகையில் 11ஆம் நூற்றாண்டின் கோயில் என குறிப்பிட்டுள்ளனர் தஞ்சைப் பெரிய கோயில் காலமும் ஆயிரம் காலப் பழமையானது. அதை நாம் பாதுகாத்துவருவதால் இராசராசனின் பெயர் இன்றும் நிலை பெற்றுள்ளது. பன்னெடுங்காலம் கழித்து இங்கே கண்பிடித்தமையால் முழுமையாக இல்லாமல் உள்ளதை உணரலாம். தமிழகக் கோயில்களில் நாம் பயன்படுத்தும் கற்கலாளான உடைந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அங்கு காணமுடிகிறது.
யாங்கள் பெருந்தில் பயணித்தபோது சாலையின் இரு புறங்களிலும் நெல்வயல்கள் பச்சை வண்ணத்தில் காட்சியளித்தன.தஞ்சை தமிழகத்தின் நெற்களஞ்சியம் அதைப்போன்றே கெடா மாநிலமும் காட்சி தந்தன.எம்மோடு வந்த மறக்குணத்து பிரபாகரன் இராசேந்திர சோழன் காலத்தில் வந்தவர்கள் இங்கு விவசாயம் செய்திருக்கின்றனர் என்ற செய்தியையும் தெருவித்தார். திருக்குறள் தொண்டில் தன் வாழ் நாளையே ஒப்புவித்த வேங்கடேசனும் தி.மு.க. இலக்கிய அணிச்செயலாளர் தேவராசும் ,ஓய்வுபெற்ற சென்னை மாநகராட்சிவருவாய்த்துறை அதிகாரி சி.முனிசாமியும் எவ்வித களைப்பும் இன்றி மலையின் உச்சி வரை எம்மோடு வந்தனர். மலையின் முன்பகுதி கடல்வெளி இந்தக் கடல் வழிதான் சோழர்கள் கடாரத்தை வென்றுள்ளனர்.
சோழம்ன்னர்கள் கெடாவையும்,சயாமையும் ஆண்ட செய்தியும்,முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட குறிப்பும், சோழன் கரிகாலன் இலங்கையை கைப்பற்றி ஆண்ட வரலாறும் நம் பழம்பெரும் இலக்கியங்களாலும், கல்வெட்டுக்களாலும் உணரமுடிகிறது..
மாநாட்டிற்கு வருகைதந்த பெருமக்களெல்லாம் ஆய்ந்தறிந்த அறிஞர்கள். அச் சான்றோர் பெருமக்களை இஙுகு அழைத்துவந்ததன் நோக்கம் இன்னும் வரலாற்றுப் பதிவுகளை பதிவு செய்யவேண்டும் என்ற ஆவலே ஆகும். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் நடத்திய ஆறு மாநாடுகளில் மூன்று செர்மனி,தாய்லாந்து,தற்போது மலேசியாவிலும் நடத்தியுள்ளது.அனைத்தும் தமிழுறவை இருகப் பிணைக்கும் மாநாடுகளாகும்.கங்கை கொண்டான் கடாரம் வென்றான் எனற பழம்பெரும் தமிழர்கள் பெருமையை 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு உணர்த்தியுள்ளது.
.
பினாங்கில் 27 இரவு பினாங்கு மாநில துணைமுதல்வர் பேராசிரியர் இரா. இராமசாமி அவர்களுடன் கலந்துரையாடலை முடித்து சிறப்பான விருந்தும் அளித்தனர். 28ஆம் நாள் காலை யாங்கள் கெடாநோக்கிப் பயணமானோம்..வந்திருந்த அறிஞர் பெருமக்கள் அனைவருக்கும் இராசேந்திர சோழன் வென்ற கடாரப் பகுதியைக் காணப்போகிறோம் என்ற ஆவல் மீக்கெழுந்து இருந்தது. அனவரும் பேருந்தில் சுங்கைப் பட்டானியைக் கடந்து கெடா பகுதியை அடைந்தோம். அறிஞர் பெருமக்கள் அனைவரும் இராசேந்திர சோழன் காலடி பட்ட மண்ணை வணங்கினர்.
லெம்பாங் பூசாங் பள்ளத்தாக்கில் உள்ள அக்ழ்வாராய்சி அரங்கைக் கண்டு வியந்தோம்.கெடாமாநிலத்தில் குருன் நகருக்கு அருகில் மெர்போக் அருகே குனோங்செராய் மற்றும சுங்கை முடாவுக்கு மத்தியில் உள்ள 224 ச.கி.மி பரப்பளவில் உள்ள பூசாங் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட பழமையான சின்னங்களும் தெய்வஉருவச் சிலைகளும், கலைப்பொருட்களும் காட்சிக்கு வைத்துள்ளனர்.1500ஆண்டுகட்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடாரம் என ஆயிரம் ஆண்டுகட்குமுன் அழைக்கப்பட்ட கெடா சுங்கை பூசாங் ஆற்று முகத்துவாரத்தில் அங்கு அமைந்திருந்த குனோங்சேராய் எனும் கடாரத் துறைமுகத்தில் சோழப்பேரரசின் கப்பல் நங்கூரமிட்டுபுலிக்கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டிருந்தை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த கடலோடிகளும் கடாரம் பகுதிக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் வருகைதந்தபோது தங்களின் மதச்ச்டங்குகளையும் பரப்பியுள்ளனர்.அதனுடைய தாக்கத்தை அருங்காட்சி அர்ங்கில் காண முடிகிறது.தமிழகத்திலிருந்து சீனாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் புருவக்காற்று மாற்றத்திற்காகவும், பாதுகாப்பு கருதியும் ஓய்வெடுக்க பூசாங் பள்ளத்தாக்குப் பகுதி துறைமுகத்தை பயன்படுத்தியுள்ளனர்.
பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் சீனாவிற்கு தமிழகத்தை ஆண்ட சோழ அரச்ர்களுக்கும் தொடர்பு இருந்தது சோழ அரசர்கள் சீனாவிற்கு தஙகளுடைய தூதுக்குழுக்களை அனுப்பினர். அத்தகைய தூதுக்குழுக்களில் ஒனறு இராசராசனுடைய ஆட்சிக்காலத்திலன் இறுதியாண்டுகளிற் புறப்பட்டு வழியில் மூன்றாண்டு கழித்த பின்னர் 1015ஆம் ஆண்டில் சீனாவை அடைந்தது.பின் முதலாம் இராசேந்திரன் காலத்தில் 1033ஆம் ஆண்டில் மற்றொரு குழு சீன அரசவையையை அடைந்த வரலாற்றுக் குறிப்பு உள்ளது. நீண்ட தொலைவுள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணிபத் தொடர்பு மிகச்சிறப்பாக நடந்துள்ளது. அளவில் சிறியவையாகவும் மதிப்பில் உயர்ந்தவையாகவும் இருந்த பொருட்கள் வாணிபத்தில் பயண்பட்டன. .சோற்றுக்கற்றாழை, அம்பர், கற்பூரம்,விலைமதிப்புள்ள கற்கள், மூங்கில், யானைத்தந்தம், கருங்காலி மரம், காகிதம், சந்தனக்கட்டை, நறுமணப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் பொன்றவை வாணிபத்தில் பயண்பட்ட பொருட்களாகும்.
யாங்கள் அனைவரும் அருங்காட்சியகத்தைக் கண்டோம். சிவன்,, வினாயகர், துர்ககை சிதைந்த நிலையில் பார்வைக்கு வைத்துள்ளனர். தமிழர்கள் பயன்படுத்திய பழங்காலப் பொருட்களையெல்லாம் அருங்காட்சியகத்தில் காணமுடிந்தது. பெருமக்கள் அனைவரும் தங்களின் ஒளிப்படக் கருவியில் பட்மெடுத்தவண்ணம் இருந்தனர். எங்களுடைய குழுவில் வருகைதந்த கட்டிடக் கலைஞர் தமிழ்வள்ளல் சந்திரசேகரும் அவரது துணைவியார் மாலதியும் ஆர்வத்தோடு அனைத்தையும் கண்டு படமெடுத்தனர். திருமதி மாலதி ச்ந்திரசேகர் எல்லோரிடமும் அன்பும் பரிவும் காட்டிய பாங்கைக் கண்டபோது வியப்பு மேலோங்கியது. சந்திரசேகர் அவர்கள் இல்லத்தில்க தம் மனைவியை பாட்டாளி என அழைப்பதின் ஆழம் புரிந்த்து.தலைசிறந்த கவிஞர் முனைவர் சவகர்லால் தன் துணைவியரோடு கண்டு குறிப்பெடுத்தார்.
செம்மொழிவாரியத்தின் அலுவலராகப் பணியாற்றும் கோ.புண்ணியமூர்த்தி மிகச்சிறந்த ஆராய்சிக் கட்டுரையை மலருக்கு வழங்கியுள்ளார். அவர் அனைத்துத் தகவல்களையும் ஆர்வத்தோடு பதிவுசெய்தவண்ணமிருந்தனர். நகர்ப்புற வடிவமைப்பின் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஞானநவனீதன் ஆர்வத்தோடும் வியப்போடும் கண்டு குறிப்பெடுத்தார்.கவிச்சிங்கம் கண்மதியன் தன் 85 வயது தாயோடு கண்டது எமக்குப் பெரு மகிழ்வைத் தந்தது.
அருங்காட்சியகத்தைக் கடந்து மலைமேல் சென்று கண்டோம். இந்துக் கோயிலின் வடிவமைப்பு அங்கே உள்ளது..கருங்கற்கலாளான சுற்றுச்சுவரும் மேற்பகுதியில் கருவரையும் உள்ளன. குறிப்புப்பலகையில் 11ஆம் நூற்றாண்டின் கோயில் என குறிப்பிட்டுள்ளனர் தஞ்சைப் பெரிய கோயில் காலமும் ஆயிரம் காலப் பழமையானது. அதை நாம் பாதுகாத்துவருவதால் இராசராசனின் பெயர் இன்றும் நிலை பெற்றுள்ளது. பன்னெடுங்காலம் கழித்து இங்கே கண்பிடித்தமையால் முழுமையாக இல்லாமல் உள்ளதை உணரலாம். தமிழகக் கோயில்களில் நாம் பயன்படுத்தும் கற்கலாளான உடைந்த நிலையில் உள்ள சிற்பங்கள் அங்கு காணமுடிகிறது.
யாங்கள் பெருந்தில் பயணித்தபோது சாலையின் இரு புறங்களிலும் நெல்வயல்கள் பச்சை வண்ணத்தில் காட்சியளித்தன.தஞ்சை தமிழகத்தின் நெற்களஞ்சியம் அதைப்போன்றே கெடா மாநிலமும் காட்சி தந்தன.எம்மோடு வந்த மறக்குணத்து பிரபாகரன் இராசேந்திர சோழன் காலத்தில் வந்தவர்கள் இங்கு விவசாயம் செய்திருக்கின்றனர் என்ற செய்தியையும் தெருவித்தார். திருக்குறள் தொண்டில் தன் வாழ் நாளையே ஒப்புவித்த வேங்கடேசனும் தி.மு.க. இலக்கிய அணிச்செயலாளர் தேவராசும் ,ஓய்வுபெற்ற சென்னை மாநகராட்சிவருவாய்த்துறை அதிகாரி சி.முனிசாமியும் எவ்வித களைப்பும் இன்றி மலையின் உச்சி வரை எம்மோடு வந்தனர். மலையின் முன்பகுதி கடல்வெளி இந்தக் கடல் வழிதான் சோழர்கள் கடாரத்தை வென்றுள்ளனர்.
சோழம்ன்னர்கள் கெடாவையும்,சயாமையும் ஆண்ட செய்தியும்,முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட குறிப்பும், சோழன் கரிகாலன் இலங்கையை கைப்பற்றி ஆண்ட வரலாறும் நம் பழம்பெரும் இலக்கியங்களாலும், கல்வெட்டுக்களாலும் உணரமுடிகிறது..
மாநாட்டிற்கு வருகைதந்த பெருமக்களெல்லாம் ஆய்ந்தறிந்த அறிஞர்கள். அச் சான்றோர் பெருமக்களை இஙுகு அழைத்துவந்ததன் நோக்கம் இன்னும் வரலாற்றுப் பதிவுகளை பதிவு செய்யவேண்டும் என்ற ஆவலே ஆகும். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் நடத்திய ஆறு மாநாடுகளில் மூன்று செர்மனி,தாய்லாந்து,தற்போது மலேசியாவிலும் நடத்தியுள்ளது.அனைத்தும் தமிழுறவை இருகப் பிணைக்கும் மாநாடுகளாகும்.கங்கை கொண்டான் கடாரம் வென்றான் எனற பழம்பெரும் தமிழர்கள் பெருமையை 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு உணர்த்தியுள்ளது.
.
Subscribe to:
Posts (Atom)
