Sunday, December 10, 2023

 ஊட்டிடும் தாயைப் போன்றே  

ஊக்கமாய் முதல்வர் ஸ்டாலின் 


 காலத்தின் சூழல் எல்லாம்

  கோலத்தின் அழிவாய்ப் போச்சே 

ஞாலத்தைச் சுற்றி  மாசே

  ஞாயிறை மறைக்கும் வண்ணம்

 ஓலமாய் மழையின் உச்சம்

 ஓய்விலா சென்னை மண்ணில்

பேயென நகரம் சாய்க்கும் 

பேதமை ஏனோ ஏனோ 


படகினில் செல்லும் வன்ணம் 

  பெய்ததே வெள்ளம் எங்கும்

 தடமுள நீரின் போக்கில் 

அடுக்ககம் வின்னை முட்டும்

மடக்கிடும் நீரே இல்லம்  

மடையென பாய்ந்தே மாய்க்கும் 

திடமிலா மக்கள் ஊரில் 

தீமையாய் மாறும் மோசம்


ஆட்சியின் அசூர வேகம் 

ஆளுமைப் திட்டப் போக்கால்

 மாட்சிமை உயிர்கள் எல்லாம்  

மாதவப் பணியால் காத்தார்

ஊட்டிடும் தாயைப் போன்றே  

ஊக்கமாய் முதல்வர் ஸ்டாலின் 

காட்டிடும் கடமை வேகம்

காவலாம் திமுக அன்றோ


மனமாசு கருத்தைக் கூறும்  

மக்களின் துன்பம் அறியார்

 தினமுமே உளறும் நெஞ்சர்

 திண்ணியப் பணியை மெச்சார் 

வினைகளை ஆற்ற வேண்டும் 

 விருட்சமாய் வழங்க வேண்டும்

 சினத்துடன் உள்ள மக்கள்

 சீற்றத்தைப் போக்க வேண்டும்

Thursday, December 7, 2023

 

 

புலவர்க்கரசர் பொன்னரசன்  சு சந்திரா இணையரின் திருமணப் பொன்விழா

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்



புலவர்க்கரசர் பொன்னரசன்  சு சந்திரா இணையரின்திருமணப் பொன்விழா இன்று சிறப்பாக நடைபெறுகிறது. நிகழ்வுக்க்கு இணையர் மக்கள் பொறியாளர் அமுதா நடேசன் வரவேற்புரை வழங்கினார். தம் தந்தை தாயின் சிறப்பகைக் கூறி அனைவரையும் வரவேற்றார். வாழ்த்துகள். அமரிக்காவில் வாழும் மகன் அருளரசு தம் பெற்றோரின் பெருமையையும் அமெரிக்க தமிழகத் தமிழர்களில்  நிலையையும் ஆற்றொழுக்காகப் பேசினார் வாழ்த்துகள். மருத்துவர் செய்கணேசு தம் பெற்றோருக்குத் தெரியாமலேயே இந்த நிகழ்வை நட த்தி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார் சிறப்பு.

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மண்ணுயிர்க் கெல்லாம் இனிது

            என்ற வள்ளுவப் பேராசான் வாக்குப்படி இந்த இணையர் தம்பெருமையையும் காத்து உலகிற்கு நன் மக்களை ஈன்று சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். தங்களின் பலத்த கரவொலிக்கிடையில் பொன்விழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பொன்னரசனின் தம்பி இராசேந்திரன் தொடக்கம் முதல் இன்று வரை எம்மையெல்லாம் அழைத்து விழாவை சிறப்பாக நட த்திவருகிறார். இப்படி ஓர் தம்பி பவள விழா நேரத்தில் அமைவது சிறப்பு தம்பி உடையான் படைகஞ்சான் என்பது உண்மை போலும்.  வாழ்த்துகள். அனைவரும் அம்மா சந்திரா அவர்களின் பெருமையைப் பேசினீர்கள் மக்கள் உட்பட பேசினார்கள். யான் புலவர்கரசரின் ஈகத்தை பதிவிட விரும்புகிறேன், எந்த சராசரி மனிதனுக்கு பிள்ளையை முறையாக  வளர்க்கும் பெற்றோரும் பொறாமை வஞசனைஇல்லா உறவுகளும் இருந்தால் இயல்பாக பொன்விழா நட்த்துவார்கள். தங்களைச் சார்ந்த உறவுகள் கூடுவார்கள்.

ஆனார் தெய்வத் தமிழ்ச்சங்கம் மருத்துவர் பாரி தகுதி திவாகர் பொறிஞர் சிறீதார் முனைவர் மல்லிகா எதிரில் அமர்ந்திருக்கும் கவிக்கோ வசந்தராசன் புலவர்குழு முனைவர் சோ. கருப்பாசாமி எண்ணற்ற தமிழ் உறவுகள் கூட முடியுமா. புலவர்க்கரசரின் தமிழ்த்தொண்டிற்காகவே அவருடை உலகளாவிய தமிழ் உரைகளுக்காகவே நாமெல்லம் கூடி வாழ்த்துகிறொம் . பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பிலும்  புலவரின் இளைமைக்க்கால நண்பர் பெரும்புலவர் செந்தமிழ்ச்செழியானார் சார்பிலும் பொன்விழா இணையரை வாழ்த்துகிறேன்

  புலவர்க்கரசர் தம் வாழ்வை தமிழுக்காகா வாழ்ந்து ஆற்றியுள்ள சிறப்பை நம் மருத்துவர் பாரி மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். தமது மருத்துவ்ப் பணிகளுக்கிடையில் எண்ணற்ற் உலகக் குறிப்புகளையெல்லாம் வழங்கி நம்மை சிந்திக்க வைத்துள்ளார். படிக்கும் காலத்திலேயே மாணவர் மன்ற தமிழ்த் தேர்வுகளிலேயெ மிகச் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் வேலை தேடி சென்னை வரும்ப்பொது மாணவர் மன்ற ஆட்ட்சிக்குழு உறுப்பினராக இருந்த புலவர் கோ, வில்வபதி புலவர் தணிகை உலகநாதன் இந்து தியாலசிகள் பள்ளியில் இருந்தபோது இரவது தமிழ்ப்பற்றை அறிந்து இவருக்கு தமிழாசிரியராக நியமித்துள்ளனர். அதே பள்ளியில் தலைமையாசிரியர் வரை சென்று சிறந்த நன்மாணாக்கர்களை உருவாக்கிய பெருமைக்குரிய ஆசிரியப் பெருமகன் தம் துணைவியாரையும் தமிழாசிரியராக உருவாக்கி   அளப்பரிய தமிழ்த் தொண்டாற்றியுள்ளனர். இவர் தொடக்க காலத்திலிருந்தே இதழாசிரியர். புன்னகை என்ற இதழை நட த்திய பெருமைக்குரியவர். .

 இலக்கியச் சோலை இதழின் ஆசிரியர் தமிழினியன் தம் இதழில் ஒரு செய்திவெளிய்ட்டுள்ளார். பொன்னரசன் பொங்கல்  மூன்று நாள் பள்ளி வ்டுமுறையில் கர்நாடாககோலர் தங்கவயல் பகுதிக்கு பட்டிமன்றப் பேச்சுக்காக சென்றுள்ளார் இவர் பேச்சின் திறத்தை அறிந்த பேராயக் கட்சியின் வேட்பாளரான புலீந்த்திரன் தம் தேரதல் பரப்புரைக்காக 10 நாள் தங்கி பரப்புரைசெய்யுங்கள்  என வேண்டியுள்ளார். பொன்னரசன் பள்ளி வேலையை எண்ணி சொல்லாமல் இரவோடு இரவாக சென்னை திரும்ப்பிவிட்ட்டார். இவர் மட்டு ம் அன்று பேராயக் கட்ட்சியின் பிடியில் சிக்கியிருந்தால் ஒரு மத்திய மந்திரியாகவே வந்திருப்பார். மிக ஆற்றல் பொறுந்தியவர் நம் புலவர்க்கரசர்.

மின்வாரியத்தின் அதிகாரி சிறீதர் அவர்கள் மிகச் சிறந்த உரையாற்றியுள்ளார். எல்ல நிலைகளிலும்  தமிழ் வரவேண்டும் என்று போராடிகொண்டிருக்கும் வேலையில் தமிழைப் பட்டி மன்றப் பேச்சுகளால். எழுத்துக்களால் தகுதியான் தமிழை மாணவர்களுக்கு ஆசானாக இருந்து கற்பித்தலால் தம் வாழ்நாளை வழங்கிய பொன்விழாக் காணும் இணையரை வாழ்த்தி  மகிழ்கிறேன்.உங்கள் தொண்டு மென்மேலும் தொடரவேண்டும் பாவேந்தர் குடும்ப விளக்கின் பாட்டுபோல் ”அவள் இருக்கிறாள் என்பதே இன்பம் ” என்ற கவிதை வழி நூற்றாண்டு கண்டு  வாழ்க வாழ்க என வாழ்த்தி விடைபெறுகிறேன்.

(26 -11-23 அன்று சென்னையில் புலவர்க்கரசர் பொன்னரசன்  சு சந்திரா இணையரின்திருமணப் பொன்விழாவில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

Friday, December 1, 2023

  •  உலக் கவிஞர் தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானார் சென்னையில் நினைவேந்தல்

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்




தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானதை நம் சேது பாட்கரா குழுமத்தின் தலைவர் சேதுகுமணன அவர்கள் இந்து நாளிதழில் ஒரு இரங்கல் விளம்பரம் வெளியிட்டிருந்தார். இகேதா அவர்கள் மறைந்தை நன்றி உணர்ச்சியோடு இந்தியத் திருநாட்டில் வெளியிட்டது அவரது நன்றியுணர்ச்சியைக் காட்டுகிறது. பின் தந்தையார் இசுரேல் கவிஞருடன்   இருக்கும் பட த்தை எனக்கு புலனத்தில் அனுப்பி ஐயாவை தேடிக் கொண்டிருக்கிறார்கள் கவிஞர்கள் எனப் பதிவிட்டிருந்தார்.  பின் என்னை தொலைபேசியில் அழைத்தர் குமணன். நான் இகேதா அவர்களுக்கு ஒரு நம் கவிஞர்களை அழைத்து நினைவேந்தல் நட த்த வேண்டுமே என்றேன். நான் நாளை சென்னை வருகிறேன் நட த்திவிடுவோம் என்றார். இன்று நாம் இகேதா நினைவைப் போற்றும் வகையில் கூடியுள்ளோம்.

என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

 செய்நன்றி கொன்ற  மகற்கு

வள்ளுவப் பேராசான் கருத்துப்படி இன்று செய்நன்றியாக உலக் கவிஞருக்கு நினைவேந்தல் நட த்துகிறோம்.

இங்கு நாம் இகேதா என்ற கவிஞரை எண்ணுகிறோம் என்றால் அதற்கு மூல காரணம் கவிதை ஞாரி கிருட்டிணா சீனிவான். தமிழ்க் கவிஞர்களுக்கு உலகப் பார்வையை தொடக்கியவர் கவிதை ஞானி கிருட்டிணா சீனிவாசன். அவர் நட த்திய பொயட்ரி ஆங்கில மாதப் பத்திரிக்கை உலகப் புகழ் பெற்றது தாம் இறக்கும் வரை தொடர்ந்து நட த்தியவர். இகேதா அவர்களின் கவிதைகளை தொடர்ந்து பொயட்ரி ஆங்கில இதழில் வெளியிட்டு இந்திய மக்களுக்கு அறிமுகப் படுத்திய பெருமகன். இகேதாவின் கவிதைகளை மட்டுமே முழு இதழிலும் வெளியிட்டு பெருமை சேர்தவர். த்ந்தையார் பெருங்கவிக்கோவை 5ஆம் உலக க் கவிஞர்கள் மாநாட்டிற்கு அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்ற பெருமை  கவிதைஞானி கிருட்டிணா அவர்களையே சாரும். 1980ஆம் ஆண்டே அமெரிக்க கவிஞர் ரோசுமேரி வில்கின்சன் சான்று வழங்கி அழைத்தமை வரலாற்று நிகழ்வாகும். அந்த மாநாட்டில் 300 கவிஞர்களின் கவிதைகளை கவிதைஞானி மொழிப்யர்க்க நாங்கள் அதை  வெளியிட்டு அதை அமெரிக்கா மாநாட்டில் அறிஞர் அவ்வை நடராசன் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்ட து தமிழ்க் கவிஞர்களின் பெருமைக்குரிய நிகழ்வாகும். 43 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.

குமணன் அவர்கள் சப்பான் மொழி ஆசிரியை கியோமி அவர்களின் எண்ணை கொடுத்டிருந்தார். நான் ஆங்கிலத்தில் பேசினேன் அவர் அழகு தமிழில் பேசினார் நான் அவரிடம் நினைவேந்தல் நிகழ்வில் தமிழில் பேசுங்கள் என்றேன் சிற்ப்பாக தமிழில் பேசினார். அவர் தமிழில் பேசுப்போது அழகாக மிளிர்கிறார்.  

டததைசாகு இகேடாஅ சனாவரி2 1928 ஆம் ஆண்டு  சப்பான் ஓட்டா  டோக்கியோ நக்ரில் எட்டுக்க் குழந்தைகளில் ஐந்தாம் மகனாகப்  பிறந்தார். நவம்பர் 15ஆம் நாள் 2023சின்சுக்கு டோக்கியோ நகரில் 15 நவம்பர் 2023 அன்று இறந்தார். தம் பெற்றோருக்கு  எட்டு மக்களில் ஐந்தாம் மகனாகப் பிறந்தவர். தம் 30ஆம் அகவையில் காச நோயால் பாதிக்கப்பட்டு உயிர் மீண்டு வந்தவர் உல்க நாடுகளின் பல்வேரு சிறப்பு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர் இகேதா. தேசாய் இகேதா புத்த அருள்ஞானி. மனித குல அமைதிக்காகப் பாடுபட்டவர் சோகா அக்காய் அமைப்பின் மூன்றாம் தலைவர். உலக் சோகா அக்காய் அமைப்பி  நிறுவனத் தலைவர்.  1957ஆம் ஆண்டு 50.000 சோக்கா அக்காய்இளைஞர்களைத் திரட்டி மனித குல் அழிவிற்கான 

 அனுஅயுத்தை எதிர்த்துப் போராட்டம் நட த்தியுள்ளார்.தம் 32ஆம் வய்தில் அமைரிக்கா கண்டா பிரேசில் போன்ற நாடுகளுக்கு நிச்சிரன் புத்த மத கொள்கைகளுக்கும் உலக அமைதிக்கும் பயணம் மேற்கொண்டார். இவரது துணைவியார் கோனெக்கோ இகேடா இணையருக்கு மூன்று மக்கள். இவர் புகைப்படம் த த்துவம் கவிதை இசை என அனைத்துத் துறையிலும் நூல்கள் வெளியிட்டுள்ளார்.இகேதா கல்லூரியின் நூலகர் பேசும்போது இகேதாவின் நூல்கள் அனைத்தும் கல்லூரியில் உள்ளதை குறிப்பிட்டார். பேராசிரியர்கள் அனைவரும் இகேதா பற்றி கவிதை தம்ழிலும் ஆங்கிலத்திலுக் பாடினீர்கள். இறுதியாக வள்ளியம்மாள் கல்விக்  குழுமத்தின் தலைவர் குமணன் உரை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கவிதையால் அனைத்தும் முடியும் என்பதை சேது குமணன் சாதித்துள்ளார். 

(உலகக் கவிஞர் தைசாகு இக்கேடா அவர்கள் தம் 95ஆம் அகவையில் காலமானார்30 /11/2023 சென்னையில் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

Wednesday, November 15, 2023

 


நேசமிலா இசுரேல் எங்குமே  

நெடுக பிணமாய் எண்ணுதே

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

குண்டு மழைகள் பொழிவதா

குவலயம் அமைதி காப்பதா

கண்டும் காணா மனிதமே

 கடமை உடைமை இழப்பதா 

 உண்டு உறங்கும் வாழ்விதா 

உரிமை பறித்தல் நியாயமா 

மண்டும் உலக மாண்பினை

 மண்ணில் புதைக்தல் அடுக்குமா 


அமாசு தொடுத்த அழிவுமே 

அடுத்த இசுரேல் வேகமும் 

எமனாய் மக்கள் உயிரையே

 எங்கும் ஒழிக்கும் போரிதே 

விமானம் குண்டுகள் போடுதே 

விரிவான் போர்க்களம் ஆனதே

 சமரசம் காணாஅ மெரிக்கா 

சதிவலை பிண்ணி அழிக்குதே 


மதத்தின் பெயரால் மக்களை

 மண்ணில் பிரித்தல் அவலமே

 குதர்க்க பிரிட்டன் ஆளுமை 

குழப்பிப் பிரித்த சூழ்ச்சியே

 எதற்கும் அஞ்சா வேகமாய்

 எதிரெதிர் துருவம் ஆனதே

  பதறியே மக்கள் அகதியாய் 

பரவியே எங்கும் மாய்வதோ


காசா மருத்துவ மனையிலே

 கொடுமைக் குண்டு விழுந்ததே 

 நேசமிலா இசுரேல் எங்குமே  

நெடுக பிணமாய் எண்ணுதே

 யாசர் அரபாத் ஈகமும்

 இந்திய கனிவுப் போக்குமே

 இணைந்தே செல்லும் வழியிலே 

இனிமைத் தீர்வு காண்கவே


Sunday, November 12, 2023

 தமிழ்ப்பணிச்செல்வி அன்னை சேது 18ஆம் ஆண்டு நினைவு பொற்கிழி வழங்கு விழா

தமிழ்மாமணி வா,மு,சே,திருவள்ளுவர்


(11-11-2023அன்று அன்னை சேதுவின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் சிறப்பாக 19 அறிஞர் பெருமக்களுக்கு விருது வழங்கி  பொற்கிழி வழங்கிபோது தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை. )

இன்று எங்கள்  அன்னை சேதுவின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் சிறப்பாக 19 அறிஞர் பெருமக்களுக்கு விருது வழங்கி  பொற்கிழி வழங்கி மகிழ்கிறோம்.6-11-2023 அன்று  ஆண்ட நாயகபுரம்  உள்ள எங்கள் அன்னையின் நினைவிட த்தில் உரையாற்றிய அபிராம ம் மேனாள ஊராட்சி மன்றத் தலைவர் மருத்துவர் குமணன் பேசும்போது  கடந்த 18 ஆண்டுகளாக அன்னையின் நினைவிட த்திற்கு வருகை த்ந்து கொண்டிருக்கிறேன் பெருங்கவிக்கோ நூற்றாண்டு காணவேண்டும் அம்மா நினவேந்தலுக்கு நாமெல்லாம் வருவோமென்று  நெகிழ்ச்சியுடன் கூறினார். உலமெல்ளாம் அளந்த தந்தையார் பெருங்கவிக்கோ தம் சிந்தையில் தோன்றிய  பெருமக்களுக்கு திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் திருக்கரத்தால் வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். நிகழ்ச்சிக்கு தலைமைதாங்கும்    பேராசிரியர் மகாலிங்கம் காஞ்சி மணிமொழியார் குடித் தோன்றல் தொடக்க உரை ஆற்றும் எனது ஆசான் பேராசிரியர் இ.செ.சுந்தர் வாழ்த்துக் கவிதை வழங்கும் கவிச்சிங்கம் கண்மதியன் வருகைதந்துள்ள பெருமக்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்கிறேன். விருது பெருமக்களை அறிமுகப் படுத்துவதில் பேருவகை கொள்கிறேன்.

முதுபெரும் புலவர் வே.பதுமனார் 

புலவர் பதுமானார் 2-41936ஆம் ஆண்டு வேலூர் குடியேற்றம் பகுதியில் பிறந்து அரும்பணியாற்றி வருபவர். 33ஆண்டுகள் முதுகலைத் தமிழாசிரியராக பணியாற்றியவர். பல்வேறு குழுக்களில் பங்கேற்று மிகச்சிறந்த மலர்களை உருவாக்கியவர். வானொலி  தொலைக் காட்சிகளில் பங்கேற்ற பெருமைக்குரியவர். மலேசியா சிங்கப்பூர் இலங்கை தாய்லாந்து நாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணியாற்றியவர். தமிழியக்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவராகப் பங்கேற்று அளப்பரிய தொண்டாற்றும் புலவர் பெருமகன். தமிழ்ப்பணியில் சிறந்த ஆய்வியல் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.

கவிஞர் சுரதா கல்லாடன்

உவமைக் கவிஞர் சுராதாவின் திருமகன் கல்லாடன். தந்தையைப் போன்று சிறந்த கவிஞர். தந்தை வழி தொண்டாற்றும் தமிழ்ப்பணித் தொண்டர். பாவேந்தர் பாரதிதாசன் கவிதைக்கள் முழுமையும் தொகுத்து வெளியீடு செய்த  சாதனையாளர். தந்தை தொடங்கிய உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையை சிறப்பாக நட த்தி வருபவர். அண்மையில் பேரவையின் சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்புடன நட த்தி அறிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். தந்தை சிலையை சென்னையில் கலைஞர் திருக்கரத்தால் திறந்துவைத்து அழியாப் புகழை உருவாக்க்கிய திருமகன் கவிஞர் சுரதா கல்லாடன்.

தமிழ்த்திரு சாய் இரவிச்சந்திரன்

உலகெங்கும் ஆன்மீகம் பரப்பும் அருளாளர். சாய் திருக்கோயில்கள் வழி உணவு வழங்கும் அறப் பணியை திறம்பட செய்து வருபவர். மலேசியாவில் ஆசிரியமணி மாணிக்கம் நட த்தும் பாரதியார் திருவிழாவிற்கு ஆண்டுதோறும் சென்று அரும்பணியாற்றுபவர். உலக்த் தமிழ் மாநாடுகளில் பங்கேற்ற பெருமைகுரியவர். உணவை வீணாக்க கூடாது என முழங்கி ஏழைகளுக்கு வழங்கும் பசிப்பிணி மருத்துவர் சாய் இரவிசந்திரன். தமிழ்வழியே வழிபாடுகளை நட த்தும் தமிழ் நெறித்த்தொண்டர்.

பெருங்கவிஞர் இளமாறன் 

புரட்சி கவிஞர் புகழ் பரப்பும் அருந்தமிழ்க்கவிஞர். பாவேந்தர் பாசறை அமைப்பை  நிறுவி தொடர்ந்து பாவேந்தர் நிகழ்வு நட த்தி வரும் சாதனையாளர். முகம் இதழ் வழி அருந்தமிழ்த் தொண்டாற்றும் இதழாளர். தம் இல்லத் திருமணவிழாவில் சிற்றிதழ் நட த்தும் இதழாளர்களுக்கு 75 பெருமக்களுக்கு தொகை வழங்கிய புரவலர் பெருமகன். மிகச் சிறந்த மரபுப் பாவலர். பன்னூல்களைப் படைத்த பெருமைக்குரியவர். 

 வழக்கறிஞர் தி.ச.சிவகுமார்

திராவிட இயக்கத்தைச் சார்ந்த பெருமகன் . தம் தந்தை திராவிட முன்னேற்றக் கழத்தின் பொறுப்பாளராக பணியாற்றதை பெருமைபட கூறும் சிந்தனையாளர். வறியோருக்கு வழங்கும் புரவலர் பெரும்கன். உயர் நீதி மன்ற வழக்கறிஞராக அரும்பணியாற்றி வருகிறார். 

கவிஞர் முருகையன் 

திருவாரூர் மாவட்ட த்தில் 1-7- 1941 ஆம் ஆண்டு பிறந்தவர் சென்னைத் துறைமுகத்தில் நிருவாக அலுவலராகப் பணியாற்றிவர். சட்டமன்ற  உறுப்பினர் சித்தமல்லி சோமசுந்தரம் அவர்களால் ஈர்க்கப்பட்டு ஏற்றம் பெற்றவர். தி.மு.க இலக்கிய அணியின் உறுப்பினர். கலைஞர் விருது பெற்றவர். பாவேந்தர் பாசறை பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் கவிக்கொண்டல்  போன்ற அமைப்புகளில் பங்கேற்று அரும்பணி ஆற்றி வருபவர். மிகச் சிறந்த மரப்புப் பாவலர் அந்த நினைவுகள் யாழிசை போன்ற நூல்களைப் படைத்துள்ளார். நான் மலேசியா ப்ன்னாட்டுப் பகுத்தறிவும் மநாட்டின் அயலக் குழுத் தலைவராக  இருந்தபோது மலேசியா பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாட்டில் பங்கேற்று பகுத்தறிவுச் சிந்தைனையை உலகெங்கும் பரப்பியவர்.  மலேசிய சிங்கப்பூர நாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணியாற்றியவர். 

புலவர் குடியாத்தம் குமணன்

புலவர் குடியாத்தம் குமணன் நாடறிந்த பட்டிமன்றப் பேச்சாளர். கோவையில் தமிழாசிரியாகப் பணியாற்றிய இலக்கணப் புலவர். மரபுக் கவிதை நூல் வெளியிட்டு தமிழுக்கு அணி சேர்த்தவர். நான் மலேசியா ப்ன்னாட்டுப் பகுத்தறிவும் மநாட்டின் அயலக் குழுத் தலைவராக  இருந்தபோது பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாட்டில் பங்கேற்று பகுத்தறிவுச் சிந்தைனையை உலகெங்கும் பரப்பியவர்.  மலேசிய சிங்கப்பூர நாடுகளுக்குச் சென்று தமிழ்ப்பணியாற்றியவர். மிகச் சிறந்த திராவிட இயக்கச் சிந்த்னையாளர் சூம் இணைய வழி நாள்தோறும் உரையாற்றும் நாவுக்கரசர்.

திருக்குறள்தொண்டர் வை.மா.குமார்

திருவள்ளுவர் கழகம் அமைத்து சென்னையில் பெரும்விழாக்கள் நட த்தும் சாதனையாளர். கவியரங்கம் பட்டிமன்றம் விருது வழங்கல் என தொடர்ந்து சலிப்பின்றி நட த்தும் சாதனை சிகரம்.

கவிஞர் எழில்வேந்தன் 

மிகச் சிறந்த பன்மொழிக் கவிஞர் பல்வேறு கவிதை அமைப்புகளில் பங்கேற்று கவிதை வழங்கியவர். இந்திய மொழிகள் பலவற்றில் இவர் கவிதைகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.1995 ஆம் ஆண்டு தில்லியில்  குடியரசு தினக் கவியரங்கில் பங்கேற்றார். இந்திய மொழிகள் உலக மொழிகளிலும்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

மகளிர் மாமணி பாலமீரா 

பேராயாக் கட்சியில் தொண்டாற்றி தற்போது வாசன் அவர்களின் வழியில் தொண்டாற்றும் பெருமாட்டி. தம் வாழ்க்கையை பொது வாழ்க்கைக்கௌ அர்ப்பணித்த மகளிர் மாமணி.

தமிழ்நடைச்செம்மல் சிவசாமி

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தி தாராபுரம் கிளையின் பொறுப்பாளார். தந்தையார் தலைமியில் தமிழூர்த்திப் பயணத்தில் அருந்தமிழ்த் தொண்டராக வந்தவர்.  

 பாவாணர் கோட்டம் இளங்கண்ணன்

முறம்பு பாவாணர் கோட்ட த்தின் பொறுப்பாளர். மிகச் சிறந்த பேச்சாளார். பாவாணர் கொள்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு அளப்பரிய தொண்டாற்றும் தனித்தமிழ் அன்பர். அன்னை சேது அருள்மங்கல் விழாவில் சிறந்த உரையாற்றிய செந்தமிழ்ச்செல்வர்.

ஈரோடு கவிஞர் இளையகோபால் 

திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக பேச்சாளர் ஈரோடு தெற்கு மாவட்ட  தி.மு.க. அமைப்பாளர்.  தமிழ்ப்பணி பொன்விழா ஆண்டில் தமிழ்ப்பணிச்செம்மல் என்ற விருதினைப் பெற்ற உலகளாவிய பெருமக்களில் இவரும் ஒருவர். முகநூலில் சிறந்த கவிதைகளைப் படைக்கும் படைப்பாளர்.  பல்வேறு அமைப்புகளில் அமைப்புகளில் பட்டங்கள் பெற்ற பெருமைக்குரியவர். மிகச் சிறந்த தமிழ்த்தொண்டர். ஈரோட்டில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற கலைஞர் நூற்றாண்டுவிழாக் கவியரங்கின் அமைப்பாளர். ஈரோடு திராவிடர் கழகத்தின் பொறுப்பாளரிகளில் ஒருவர்.

நற்றமிழ்த்தொண்டர் அ.சி.சின்னப்பாத்தமிழர்  

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நற்றமிழைப் பரப்பிவரும் தொண்டர் செம்மல். எண்னிலடங்கா தமிழ் வளர்க்கும் நூல்களை வெளியிட்டு மக்களைச் சென்றடைய அயராது பாடுபடும் படைப்பாளார். மானம் கருதாது தமிழுக்காக உழைத்துவரும் ஒப்பற்ற மாவீர ர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் தில்லியில்  நட த்திய செம்மொழிப் போராட்ட த்தில் பக்கேற்ற தமிழ்ப்போராளி.

முனைவர் சபீராபீவி அல்மீன்

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அளப்பரிய தொண்டாற்றும் தொண்டறச் செல்வி முனைவர் சபிரா பேகம் அல் அமீன். சமூக அவலங்களை துடைத்தெறிய எளிய மக்களின் காவலரக செயல்படும் பெருமாட்டி. தமிழ்ப்பணி  பொன்விழா ஆண்டில் தமிழ்ப்பணிச்செம்மல் என்ற விருதினைப் பெற்ற உலகளாவிய பெருமக்களில் இவரும் ஒருவர். மதுரையில் பல்வேறு அமைப்புகளில் பங்கேற்று சிறந்த தமிழ்த்தொண்டாற்றும் மகளிர் திலகம். மூன்று முறை தலாக் செய்யப்பட்ட பெண்ணை வாழவைத்து மக்களை அவர்களோடு இணைத்த மனிதநேயச் செம்மல். 

 பட த்துறைப்பாவலர் நல்ல அறிவழகன்

முனைவர் பட்டம் வரை பயின்று பட்டம் பெற்ற கல்வியாளர்.  தொடக்கப் பள்ளி  மேல்நிலைப்பள்ளி கல்லூரிகளில் பணியாற்றிய ஆசிரியர் செம்மல். திரைப்பட த் துறையில் பல படங்களில் திரைப்படப் பாடல்களை யாத்து இன்றும் முயற்சித் திலகமாக இருப்பவர். மெய்யழகி திரைப்பட த்தில் இவரது பாடலை எசு.பி. பாலசுப்பிரமணிய்ம் பாடியுள்ளார் என்பது தனிச்சிறப்பு. மலேசியா சென்று தம் நூல்களையும் குறுந்தகடையும் வெளியிட்ட பெருமைக்குரியவர். பல்வேறு பட்டங்களைப் பெற்ற சாதனைச் செம்மல்.

 மாட்சியர் இரா.மோகன சுந்தரம் 

மிகச் சிறந்த பேச்சாளர். ஆற்றல் மிகுந்த ஆய்வுக் கட்டுரைகளை  வழ்ங்கும் ஆய்வுச் செம்மல். தஞ்சை தமிழ்ப் பலகலைக் கழகத்தில் பணியாற்றிய ஆய்வறிஞர்

இதழாளர் வேலன் தளபதி.

முற்றம் இதழின் ஆசிரியர். ஊடகத் துறையில் அயராது பாடுபட்டு வரும் ஊடகச் செம்மல். பல்வேறு அறிஞர் பெருமக்களை தம் ஊடகம் மூலம் பதிவெடுத்து உலகெங்கும் பரப்பும் தொண்டறச் செம்மல் . 

தமிழ்த் தொண்டர் பூபாளன்

பூபாளன் சென்னையில் எந்த நிகழ்விலும் கலந்து கொண்டு பெருந்தொண்டாற்றும் பெருமகன். நலிந்த குழந்தைகுளுக்கு ஆண்டு தோறும் விழா எடுத்து அறப்பணியாற்றும் தொண்டறச் செம்மல். எளியோர் நலம் பேணும் சமூகப் புரட்சியாளாரக வலம் வருகிறார்.


Monday, October 16, 2023

  இருநூறு ஆண்டு காணும் அருட்பேரொளி வள்ளலார் 


அருட்பெருஞ் சோதி வள்ளல்

           அன்பினால் உலகை ஈர்த்தார் 

நெறியிலா  வஞ்ச நெஞ்சர் 

            நிந்தனை செய்தே மாய்த்தார் 

வறுமையின் பிடியில் மக்கள்  

           வெந்திடும் துயரை சாய்க்க  

     கருவறை காக்கும் தாயாய் 

                      கருணையாய் உணவை ஈந்தார்

   

          

         உருவமே இல்லா ஒளியை

                   உன்னத இறையாய்த் தந்தார் 

          மறுவிடும் சாதி மதத்தை 

                    மண்ணிலே புதைத்த நேயர் 

          தெருவெலாம் அருட்பா பாடி 

                      திக்கெலாம் நிலையாய் உள்ளார் 

      அருளொளி அண்ணல் எம்மான்  

               அணிபுகழ் பேறே வாழ்க        


 தமையன்  வாரா நிலையால்

         தளிராக உரையைத் தந்தார்  

எமைஆளும் பேறு பெற்ற    

             எண்ணிலாப் பாக்கள் யாத்தார் 

 சமற்கிரு தம்தாய் மொழி                       

         சங்கரர்    சொன்ன போது

இமைபோல தமிழைக் காக்க 

        இனியதந் தைமொழி என்றார்


இருநூறு ஆண்டு காணும்

         இன்னலைப் போக்கும் வள்ளல்

 தருமம்  காக்கும் சென்னை 

           தகுதியாய் மொழிந்தார் அன்றே 

பெருமையாம்  முதல்வர் ஸ்டாலின்

             பெற்றிமை விழாவைக் கண்டார் 

 அருள்நெறி காக்கும் பாதை

            அருட்சன் மார்க்கம் வாழ்க



Thursday, September 14, 2023

 நிகரிலா கோடி மகளிர்  நிம்மதி காக்கும் ஸ்டாலின்!

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்.

வறுமை விரட்டிய கலைஞர் 

வாஞ்சையாய் அடியை ஒட்டி

 பொறுமையின் சிகரம் பெண்கள் 

பொழிவான வா4ழ்க்கை வாழ 

திறமாக நிதியைத் திரட்டி 

திண்ணிய நெறியில் நன்றே

 உரமென தமிழகம் காக்கும் 

உன்னத முதல்வர் ஸ்டாலின்!


மகளிர் நலனைப் பேணும்

 மகத்துவக் திட்டம் காணும் 

சிகரமாய் ஆயிரம் வழங்கும்

 சரித்திரத் தலைவர் ஸ்டாலின் 

தகர்ந்திடும் வஞ்சம் எல்லாம்  

தகுதியாம் ஊக்கம் ஸ்டாலின் 

நிகரிலா கோடி மகளிர் 

           நிம்மதி காக்கும் ஸ்டாலின்!


திட்டம் முழங்கிய அன்றே

 திறத்தினை ஆய்ந்து அறிந்து 

மட்டிலா ஏழ்மை மக்கள் 

மதிவழி உண்மை கண்டு 

தட்டிய கதாவாய்த் திறக்கும் 

தகுதியர்  எம்மான் ஸ்டாலின் 

சிட்டென அண்ணா நாளில் 

செழிப்பின் ஆயிரம் அன்றோ! 


சனாதானம் என்றும் பேசி 

சதிவலை பிண்ணும் கீழோர்

  மனிதருள் சமத்துவம் காண 

மணுவினை மண்ணில் மாய்த்து 

 பண்ணீ ராயிரம் கோடி 

பகலவன் ஒளியைப் போன்று 

கனியென வழங்கும் ஸ்டாலின் 

கற்பகத் தருவே வாழ்க