Tuesday, November 12, 2024

 

ஓங்கிய நாதம் அந்தோ

 ஓய்ந்தாரே எசுறா சற்குணம் 

 

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்


புத்தொளிர் புரட்சித் தந்தை

புயலென விரட்டும் வறுமை

 வித்தகச் சமூக நீதி

வியப்பான அறங்கள் செய்தோன்

உத்தமத் தலைவர் கலைஞர்

 உரிமையாய் எழுத்தித் தோழர்

சத்தியம் காத்த வேதச்

சரித்திரம் எசுறா மறைந்தார்!

 

பாங்காக் மாநாடு வந்தேம் பன்னாட்டு உறவைக் காத்தார்

 தாங்கிடும் உயிர்மெய்த் தமிழைத்

 தகைமையாய் முழங்கிய தமிழர்

 ஏங்கிடும் எளியோர் உள்ளோம்

 ஏந்திய எசுறா சற்குணம்

 ஓங்கிய நாதம் அந்தோ

ஓய்ந்ததே அருளின் தேகம்

 

மரகதப் புத்தர் சிலையை

 மகிழ்வாய் அறிஞர் சேர்ந்தே

பெருங் கவிக்கோ  தலைமை  

பெற்றிமைக் கலைஞர் கரத்தில்

பெருமையாய் வழங்கினோம் அன்றே

அருந்தமிழ் உறவு காத்த

அருளாளர் நம்மை விட்டே

 அகன்றது சோகம் அந்தோ!

 

ஆளுமை எசுறா தொண்டை

அனைவரும் போற்றித் தொடர்வோம்

பேருடை கொள்கைக் கோமான்

 பேதமை நீக்கி வாழ்வோம்

 யாழியே மீட்டும் இசையாய்

 யாவரும் தோழமை காப்போம்

கோளிலே எசுறா புகழும்

குவளயம் தாண்டிக் காப்போம்!

 

 

 

 

Sunday, November 10, 2024

 

 

தமிழ்ப்பணிச்செல்வி அன்னை சேது 19ஆம் ஆண்டு நினைவு பொற்கிழி வழங்கு விழா

தமிழ்மாமணி வா,மு,சே,திருவள்ளுவர்

 

எங்கள் அன்னை சேத்வின் நினைவேந்தல் நிகழ்வை  நவம்பர் 6ஆம நாள் ஆண்டநாயகபுரம் அன்னை ஆலயத்தில் நட த்தினோம்.அறிஞர் பெருமக்கள் வருகை தந்து அன்னையைப் பற்றி நினைவுரையாற்றினர். இன்று நவம்பர் 9 ஆம் நாள் தமிழ்நாட்டு அரசின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து அரும்பணியாற்றிய தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மு. இராசாராம அவர்கள்  தம் இளவல் காலமானட்தல் மதுரை சென்றுள்ளார். தலைமைதாக்குகிறார்கள்.அண்ணா நல்கர் சட்டமன்ற உறுப்பினர் மனித நேயர் எம்.கே.மோகன் அவர்கள் உடல்நிலை சரியில்லாத்தால் வர இயாசில்லை நம்   தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் விருதுகளையும் பொற்கிழியையும் வழங்கி சிறப்பிக்கிறார்கள்.கவிஞர் கார்முகிலோன் பாவலர் கணபதி வாழ்த்துரை வழங்குகிறார்கள் மர்றும் வருகை த்ந்துள்ள அனைவரையும் வரவேற்று மகிழ்கிறேன்.

            விருது பெறும் பெருமக்கள் அனைவரும் தமிழ் தமிழர்க்காக போராடும் தமிழ் மறவர்கள். இலகிய உலகில் இணையற படைப்புகளை வழன்கியுள்ள படைப்பாளர்கள். தமிழ்ப் போராட்ட களத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட களவீர்கள்.அவ்ர்களைப்பற்ரி சில குறிப்புகளைப் பகிர்வதி பெருமகிழ்வு கொள்கிறேன்.

கவிஞர் ஆனைவரி ஆனந்தன் – செயந்தி

            பவள விழாக் காணும் ஆனைவாரியார் தமிழக முன்னணி கவிஞர்களில் ஒருவர். இந்திய தேசியப் பாடலை தமிழில் மொழிபயர்த்து எழுதி அதை இசியாகாவும் ஒலித்துள்ளார்.சிறந்த நூலாசியர் கவிஞர்களுக்கு உள்ள செருக்கும் செலுமையும் பெற்றுள்ள பெருமகன். அவர்தம் துணைவியார் முதுகலைப் பட்டம் பெற்ற தமிழாசிரியர். கணவரோடு இணைந்து பல்வேறு படைப்புகளை வழங்கியுள்ள படைப்பாளி. இணையருக்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

 

 திருவள்ளுவன் இலக்குவனார் 

            திருவள்ளுவர் இலக்குவனார் நாடறிந்த தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனாரின் திருமகன். இலக்குவனாரின் குடும்பமே தமிழ் தமிழர்க்குப் போராடும் குடும்பம். தமிழ் காப்புக் கழகம் அமைப்பை நிறுவி தமிழ் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர். இணைவழி தொடர் நிகழ்வுகளை நட த்தி உலகம் முழுமையும்  தமிழ் உணர்ச்சியைப் பரப்பும் தமிழ்ப் போராளி. தந்தையின் வழித்தட த்தில் தளராது தொண்டாற்றும் தமிழ் நெஞ்சர். தமிழ் தமிழர் வளர்சிக்கு நூல்களை எழுதி வெளியிட்டுள்ள படைப்பாளார். கணினித் தமிழுலகில் அயராது தொண்டாற்றும் கணினி அறிஞர். பல்வேறு படைப்புகளை வெளியிட்டுள்ள படைப்பாளிக்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

 கவிஞர் மதியரசு

            கவிஞர் மதியரசு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தொண்டாற்றி பொன்விழாக காண்பவர். கவிஞர் இதழாளர் திருக்குறள் கழகத்தின் நிறுவனர். அண்மையில் திடுக்குறள் கழகத்தின் 20ஆம் ஆண்டுவிழாவை நட த்தி அறிஞர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார். தமிழ்களப்  போராட்ட த்தில்சிறை சென்று தமிழ் காத்த பெருமைக்குரிய கவிஞர் மதியரசு அவர்கட்கு  அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

 பேராசிரிரியர் தாமரைக்கண்ணன்

            பேராசியர் தமரைக்கண்ணன் மாநிலக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர். விரைவில் முதல்வர் பொறுப்பேற்கவுள பெருமகன். இந்த நூற்றாண்டின் இணையற்ற தொண்டர் திலகம் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தை தொடர்ந்து நட த்திய  சாதனையாளர் பொறிஞர் பக்தவத்சலனார் திருமகன். தற்போது நம் பேராசிரியர் சிறப்பாக  நட த்திவருகிறார். ஆழ்ந்த படிப்பாளி செறிந்த க்ருத்துக்களை புலமைச் செருக்க்கோடு பகறும் வல்லமை பெற்றவர்.  ஆய்வுக் களஞ்சியமாக விளங்கும் பேராசிரியப் பெருமகன் தாமரைக்கண்ணன் அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

  பேராசிரியர் தமிழியலன்

 

            பேராசிரியர் தமிழியலன் மின்வாரியத்தில் மேட்டூரில் பொறிஞராகப் பணியாற்றி தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் தழிழ்த்  துறை ஒருங்கினைப்பாளராகப்  பணியாற்றுகிறார். இவ் விழா நடைபெறும் ஐ.ஏ.எஸ். அகடாமியின் நிறுவனர். கோரணா தீநுண்மி காலத்தில் முடங்கிப் போயிருந்த இக்கிய உலகிற்கு ஆய்ரத்திற்கு மேற்பட்ட இலக்கிய நிகழ்சிகள் முலம் உலகை இணைத்தவர். சிறந்த கவிஞர் மரபு வழிப் பாக்களை எழுதும் ஆற்றல் பெற்றவர். பல்நூலாசிரியரான தமிழியலன் அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்

 ஆய்வறிஞர் பிரான்சிசு

            தமிழ் தமிழர் சிந்தனைக்களை தொடர்ந்து பரப்பிவரும் தமிழ் மறவர்.  வரலாறு படைக்கிறது எனும் தலைப்பில் நாள் தோறும் திராவிடச் சிந்தனைகளி புலனம் மூலம் பரப்பிவரும் சிந்தனைச் சிற்பி. மிகச் சிறந்த ஆய்வறிஞர் இவர்தம் சிந்தனைகள் தமிழர் தம் தொண்மையின் சிறப்பை உலகிற்கு விளக்குகிறது . இவரது உடன் பிறப்புகள் அனைவரும் தமிழ்த் தொண்டர்கல் அண்மையில் காலமானச அருட்தந்தை  சேசுதாசன் நம் தமிழ்ப்பணி அன்பர்.ஆர்ப்பாட்டம் இல்லாமல் தொண்டுணர்வோடு கருத்துக்களை பரப்பி தமிழ் தொண்மையின் பெருமையை செப்பும் ஆய்வறிஞர் பிரான்சிசு அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

  கவிஞர் குறளடியான்   

            கவிஞர் குறளடியான் ஒரு பஞ்சாலைத் தொழிலாளி . தம் வறுமையிலும் சிறந்த தமிழ்தொண்டாற்றும் மதுரைக் கவிஞர். நடைப்பயணத்தின் போது தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் நடந்து வந்த நடைப்பயண அரிமா. தமிழ்மாமுனிவர் குன்றக்குடி அடிகளாரின் பாராட்டைப் பெற்றவர். திருக்குறளே விடிவெள்ளி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரான குறளடியான் அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம். 

மருத்துவர்  பாக்கம் தமிழன்

            மருத்துவர் பாக்கம் தமிழன் மிகச் சிறந்த சித்த மருத்துவர். சித்த மருத்துவ வழி பல மாநாட்டை நட த்தி தமிழ் மருத்துவம் உலகில் தழைக்கச் செய்பவர். தமிழக அரசோடு இணைந்து சித்த மருத்துவம் பயிற்றுவித்து பட்டம் வழங்கும் பெருமைக்குரியவர். சிறந்த மரபுக் கவிஞர் சித்த ம்ருத்துவத்திற்கென்றா ஒரு நூலை கவிதைவடிவில் வழங்கிய சிறப்புக்குரியவர். ஒரு சிறந்த களபோராளி பல தமிழ் அன்பர்களையும் அழைத்து பெருங்கவிக்கோ தலைமையில் போராட்டங்களை முன்னெடுத்தவர். பூவை தமிழ்ப் பண்பாட்டுச் சங்கத்தை நிறுவி திருவள்ளுவர் சிலையை நிறுவி திருகுறளுக்கு தெளிவுரை வழங்கி மதுரையில் வா.மு. சே. திருவள்ளுவர் வெளியிடச் செய்த பாக்கம் தமிழன் அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

 கவிஞர்  சிந்தைவாசன்

            கவிஞர் சிந்தைவாசன் சிந்தாரிபேட்டையிலிருந்தே நம் தமிழ்ப்பணியோடு தொடர்பு உள்ளவர். சென்னைத் துறைமுகத்தில் பணியாற்றி அனைத்து இலக்கிய அமைப்புகளிலும்  கவியரங்கம் பட்டிமன்றம் தொகுப்பாளர் என எண்ணற்ற மேடைகள் கண்டவர். கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவையின் எண்ணற்ற பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்த பெருமக்குரியவர். தொகுப்பு நூல்களை பதிப்புத்து எழுத்தாளர்களின் அன்பைப் பெற்ற கவிஞர் சிந்தைவாசன் அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம். 

மதுரகவி மறத்தமிழன்

மதுரகவி மறத்தமிழன் சிறந்த கவிஞர். பதிப்பாளர். முதுகலைப் பட்டம் பெற்ற துடிப்பான இலக்கிய ஆர்வலர்.. இணையவழி நிகழ்ச்சிகள் நட த்தும் வல்லுனர். தமிழ்க்களப் போராட்டங்களில் பங்கேற்று களப்போராளியாக விளங்குபவர். அனைத்து இலக்கிய அமைப்புகளிலும்  கவியரங்கம் பட்டிமன்றம் தொகுப்பாளர் என எண்ணற்ற மேடைகள் கண்ட மதுரகவி மறத்தமிழன் அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

 கவிஞர் சலாலுதின்

            கவிஞர் சலாலுதின் நாடறிந்த பாவலர். தம் ஒளிப்படக் கருவி மூலம் இலக்கிய நிகழ்வுகளில் வலம் வரும் கவிஞர், இன்று கவிக்கோ அப்துல் இரகுமான் பிறந்தநாள் இந்த நன்நாளின் கவிக்கோவிற்கு துணையாக நின்ற  கவிஞர் சலாலுதீன் அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

 பேராசிரியர் மகேந்திரன்

            பேராசிரியர் ம்கேந்திரன் அடக்கமே உருவாக வாழ்பவர். எல்லா நிகழ்வுகளிளும் பேராசிரியர் மகேந்திரன் பங்கேற்று  தம் பங்களிப்பை வழங்குவார். எங்கும் முன்னணியில் மேடைகளில் பங்கேற்கும் ஆர்வம்கொண்ட பெருமகன்.  முன்னணியில் வரத்துடிக்கும் பேராசிரியார் மகேந்திரன் எல்லா நிலைகளிலும் மேலோங்க வாழ்த்துகிறேன். அடக்க்மே உருவான் பேராசிரியர் மகேந்திரன் அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

கவிஞர் மங்கலம் இளம்பரிதி

            கவிஞர் மக்கலம் இளம்பரிதி  நாடறிந்த பாவலர். சிலம்பொலித் தரணி மூலம் கவிஞர் வீரமுத்து அவர்களோடு இணைந்து அரியகூட்டங்கள் நட த்துவர். முல்லைச்சரம் கவிஞர் பொன்னடியான் கடற்கரைக் கவியர்ங்கம் போன்று சிலம்பொலித்தரணி  கூட்டங்கள் நடைபெறும் அறிஞர் கானவன் போன்ற பெருமக்கள் பங்கேற்று ஊக்குவிப்பர் நானும் பல நிகழ்வுகள் பங்கேற்றுள்ளேன். சிறந்த பாவலர் மங்கலம் இளம்பரிதி அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

 தனசிங் மனோகர்

            தனசிங்க் மனோகரன் தலைசிறந்த தொண்டர் மதுரை பன்னாட்டுத் தமிழுறவு மன்றச் செயலாளர். . மதுரைக்கு தந்தையார் சென்றபோது கலைஞர் காவியம் நூலுக்கு ரூபாய் 2000  கொடுத்த புரவலர். மிகச் சாதாரன உடற்பயிற்சி கூடம் வைத்திருப்பவர். நான் பேச்மாட்டார் என் நினைத்தேன் மதுரையில் ஒரு நிகழ்வில் மிகச் சிறப்பாக  கவிதைகளை கையாண்டு பேசினார். ஐயா கவிதைகளைக் கூறுங்கள் ஏனக்கூறினேன். தொண்டர் திலகம் தனசிங் மனோகரன் அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

 கவி சுரபி சுப. சந்திரசேகரன்

            கவிச்சுரபி சுப. சந்திரசேகரன் மிகச் சிறந்த தொண்டர் சிகரம். இன்று சென்னையில் பல இதழகள் வருவதற்கு பின்புலமாம இருப்பவர். நம் தமிழ்ப்பணிக்கு சிந்தை சேகர் ஆற்றும் பணியைப்போன்று மகத்தான் பணியைச் செய்து வருபவர். கவிச்செம்மல் அருகோ அவர்களை பாதுகாத்து வருபவர். அருகோ நமக்கு புறம்பான செய்திகளை எழுதினாலும் அவள் இருக்கிறாள் என்பதே இன்பம் என்ற பாவேந்தர் வரிக்கொப்ப அவர் இருப்பதே இன்பமனைமிக்ச் சிறந்த கவிஞர் சென்னையில் எல்லா அமைப்புகளின் மேடைகளிலும் இவர் கவிதை எதிரொலிக்கும். மின்னல் தமிழ்ப்பணியின் ஆசிரியரான கவிச்சுரபி அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

 இராம வாசுதேவன்.

            அருளாளர் இராம வாசுதேவன் 120 ஆண்டு கால சித்தரின் பணியை தொடர்ந்து செய்து  வரும் அருளாளர். இம்முறை ஐயா அவர்கள்ட்கு ஓட்டுநர் வரவில்லை உடனே தம் நண்பர் ஆய்வாளர் இராச்கோபால் வரவழைத்து  அன்னை உழவார்ப் பணிக்கு துணைநின்றவர். தொண்டே தம் வாழ்வாக் கொண்ட இராம வாசுதேவன் அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

 தொண்டர்திலகம்  மாடசாமி

            தொண்டர் திலகம் மாடசாமி குமரியிலிரூந்து இமய மலை புதுதில்லி  தமிழை இந்திய ஆட்சி மொழியாக ஆக்கவும் திருக்குறளை தேசிய நூலாக ஆக்கவும் ஊர்திப் பயணம் த்ந்தையார் தலைமையில் சென்றபோது எம்மோடு பயணித்த பெருமைக்குரியர்.  இந்தியா முழுமையும் சென்று இமயம் சென்று புது தில்லியில் பிரதம அமைச்சில் அறிக்கை வழங்கினோம். இந்திய ஊர்திப்  பயணத்தில் பங்கேற்ற   தொண்டர் திலகம் மாடசாமி அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

 தண்ணீர்மலை

            அருமைப் பெருமகன் தண்ணீர் மலை எந்த நிகழ்வுகளிலும் அடக்கத்தோடு அமர்ந்து தொண்டுக்கு பெருமை சேர்ப்பவர். அதிர்ந்து பேசாது தொண்டாற்றும் தொண்டறம் செம்மல் தண்ணீர்மலை அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

காவல் ஆய்வாளர் இராச்கோபால்

            காவல் ஆய்வாளர் இராச்கோபாலன் அன்னையின் ஆலயத்திற்கு செல்வதர்கு ஓட்டுநர் வர இயலாமையால் தாமே ஓட்டுராக வந்து அன்னையின் உழவாரப் பணிக்கு அருந் தொண்டாற்றியவர். காவலர் பதிவியில் இருந்தாலும் நம் தமிழ்ப்பணிக்கு துணை புரிந்த இராசகோபால் அவர்கட்கு அன்னை சேதுவின் நினைவாக விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கிறோம்.

            இப்பஎஉமக்களுக்கு விருது வழங்கும் நிகழ்வுக்க்கு திர்ளாக வருகை த்ந்துள்ள அனைவரையும் வர்வேற்று மகிழ்கிறேன்.