Friday, October 30, 2009

சென்னையில் உத்தமம் 2009 மாநாடு - கருத்துரை

எட்டாவது தமிழ் இணைய மாநாடு- சென்னையில் கருத்துரை.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், சென்னையில் உத்தமம் துணைத் தலைவர் வெங்கடரங்கன், மற்றும் கவிஅரசன் அவர்களுடன் 29- 10 2009 அன்று ஓர் சந்திப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தது. கொலோன், செர்மனியில் எட்டாவது தமிழ் இணைய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த உத்தம உறுப்பினர்கள் கருத்துரை வழங்கினர். மாநாடு குறித்த சிறப்புச் செய்திகளை சென்னை வாழ் தமிழறிஞர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில் இரு பெருமக்களும் கொலோன் மாநாடு குறித்து விளக்கினர். கொலோன் மாநாடு உத்தம உறுப்பினர்களின் ஒட்டுமொத்த
முயற்சி எனக் குறிப்பிட்டனர்.

தமிழக அரசின் உலகச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து 9 ஆம் தமிழ் இணைய மாநாட்டை கோவையில் நடத்த முத்தமிழறிஞர் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளதை உத்தமத்தின் ஆலோசகர் முனைவர் அனந்தகிருட்டிணன் அறிவித்ததை வெங்கடரங்கனும் கவியரசனும் கூறினர்.

மன்றத்தின் உலக அமைப்பாளரும் நிறுவனத் தலைவருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், மாம்பலம் சந்திரசேகர் பெருமக்களுக்கு மாலை அணிவித்து சிறப்பித்தும் அமைப்பிற்கும் வாழ்த்துரைத்தனர்.


முனைவர் மறைமலை, முனைவர் ஆண்டவர்,இலக்குவனார் திருவள்ளுவன்,
வாழ்த்துரைத்தனர். மன்ற இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரை ஆற்றினார். செயலர் கண்மதியன் நன்றி நவின்றார்.

No comments:

Post a Comment